யிரை இயக்குவதே காற்று தான் என்றாலும், இலைகள் அசையும்வரை காற்றின் இருப்பை அறியமுடியாது. அதேபோல், எதிர்பாராத நிகழ்வுகள் நடக்கும்வரை கர்மாவின் விளைவை உணரமுடிவதில்லை. மகிழ்ச்சியைத் தாலாட்டும் தென்றலும் காற்றுதான்; வேரோடு சாய்க்கும் புயலும் காற்றுதான். கர்ம ஸ்தானமாகிய பத்தாமிடத்திற்கு லாப ஸ்தானமாக விளங்கும் எட்டாம் பாவத்தில் மறைந்திருப்பதே கர்மாவின் பலனாகிறது. அதனாலேயே அது ஆயுள் பாவமாகிறது என்பதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார் கிருஷ்ணன் நம்பூதிரி.

வெளிறிய முகத்தில், வெறித்த பார்வையில், பிரசன்னம் பார்க்க வந்தவரின் அச்சம் தெரிந்தது. தனக்கு அஷ்டமாதிபதி தசையில் ஆறாமதிபதி புக்தி நடப்பதால் கெடுதி நேருமோ என்னும் அச்சத்திலிருப்பதாகத் தெரிவித்தார். பிரசன்னம் பார்த்து, தன் அச்சத்தை நீக்கவேண்டுமென்று விண்ணப்பித்தார். பந்தல்லூர் பகவதியைத் தொழுது பிரசன்னத்தைத் தொடங்கினார் கிருஷ்ணன் நம்பூதிரி.

dd

Advertisment

சோழி லக்னத்திற்கு இரண்டு, நான்கு, பதினொன்றாமதிபதிகள், ஒன்பதாம் வீட்டிலிருந்ததால், பிரசன்னம் கேட்க வந்தவருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் வரப்போவதாகத் தெரிந்தது. எட்டாமதிபதி நின்ற வீட்டின் அதிபதி கேந்திர திரிகோணங்களில் வலுப்பெற்று சுபர்களின் தொடர்பைப் பெற்று, எட்டாமதிபதியும் சுப கிரகங்களால் பார்க்கப்படும்பொழுது, எட்டாமதிபதி தசையில் ஆறாமதிபதி புக்தியில், விபரீத ராஜயோகத்தின் பலன் கிடைக்குமென்று கூறப் பட்டது. விபரீத ராஜயோகத்தால் எதிர்பாராத வழியில் அதிகாரம் மற்றும் அந்தஸ்தை அடையலாமென்ற நல்ல பலனே சொல்லப்பட்டது. ஜோதிட விதிகளை ஆராயும்போது சூட்சமத்தை அறியாதவரை, கயிறு பாம்பாகவே தெரியும் என்பதும் தெளிவாக்கப்பட்டது. ஒருசில மாதங்களில், பிரசன்னம் பார்க்க வந்தவர் எதிர்பாராத பதவி உயர்வு கிடைத்து, வெளிநாடு சென்றார். பிரசன்ன ஆரூடத்தின் சிறப்பை யுணர்ந்தார்.

கேரள ஜோதிடத்தின் சிறப்பு

ஒரு ஜாதகருக்கு பலன் சொல்லுவதற்கு முன், அந்த ஜாதகரின் ஆயுளைப் பற்றி அறியவேண்டியது அவசியமாகிறது. பிறக் காத குழந்தைக்குப் பெயர் வைப்பது போல், வாழாத வாழ்க்கைக்கு வழி சொல்லிப் பயனில்லை. ஜாதகத்தில் பலவித யோகங்கள் இருந்தாலும், அந்த யோகதசை வரும்வரை, ஜாதகர் உயிரோடு இருப்பாரா என்பதை அறிவதே முக்கியம். ஆயுர்த்தாயம் செய்தபின்பே கர்மப்பலனைக் காண்பது கேரள ஜோதிடத்தின் சிறப்பு.

பிண்டாயுர்த்தாயம், நைசர்க்கிக ஆயுர்த் தாயம், அம்சக ஆயுர்த்தாயம், ஜீவ ஆயுர்த்தாயம் என்று பல்வேறு முறைகள் உள்ளன. சூரியன் வலுத்தால் பிண்டதசை முறை, சந்திரன் பலம்பெற்றால் நைசர்க்கிக தசை முறை, லக்னம் வலிமையுடனிருந்தால் அம்சக தசை முறையில் கணிதம் செய்யவேண்டும். லக்னாதி பதியும் நைசர்க்கிக சுபகிரகங் களும் கேந்திரங்களில் (1, 4, 7, 10) இருந்தால் தீர்க்காயுள்; பணபரங்களில் (2, 5, 8, 11) இருந்தால் மத்திமாயுள்; ஆபோக்லீயங்களில் (3, 6, 9, 12) இருந்தால் தீர்க்காயுள் என்பதே கேரள ஜோதிடர்களின் கருத்து.

இழந்த பதவி மீண்டும் கிடைக்குமா?

கேள்வி: நான் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்தேன். சக உழியர்களின் சதிச்செயலால் பதவியிறக் கம் செய்யப்பட்டுவிட்டேன். இழந்த பதவி மீண்டும் கிடைக்குமா?

-ஜெயகுமார், சென்னை.

(எண்: 9; கிருத்திகை-1; நட்சத்திராதிபதி- சூரியன்; ராசியாதிபதி- செவ்வாய்.)

* சோழி லக்னத்தின் திரிகோணத்தில் பிரசன்ன காலத்து லக்னம் அமைந்திருப்பது சிறப்பு.

* லக்னம் நின்ற நட்சத்திர மாகிய கிருத்திகையின் அதிபதி, சூரியன் நீசத்திலிருப்பது, பதவியிறக்கத்தைக் காட்டுகிறது.

* லக்னத்தில் ராகுவும், ஏழில் நான்கு கிரகங்களும் இருப்பது, சூழ்ச்சியால் வீழ்ச்சியுண்டானதை உறுதிப்படுத்துகிறது.

* பத்து மற்றும் பதினொன் றாம் வீட்டதிபதியாகிய சனிபகவான், பத்தாம் வீட்டில் ஆட்சிபெறுவது நன்மையே.

* ஆறாமதிபதி ஏழிலிருப்பதால், கடுமையான போராட்டத்திற்குப்பிறகே வெற்றி கிடைக்கும்.

* குருபகவானும் சூரியனும் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் இழந்த பதவியை மீண்டும் பெறலாம்.

பரிகாரம்

திண்டுக்கல்லில்- ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் ருத்ரா பிஷேகம் செய்தால் இழந்த பதவி கிடைக்கும்.

சென்னை- வேளச்சேரியிலுள்ள தண்டீஸ் வரம் கோவிலில், சிவனை திங்கட்கிழமைகளில் வழிபட்டால் மறுவாழ்வு கிடைக்கும்.

(தொடரும்)

செல்: 63819 58636