பொதுவாக இந்த பிரபஞ்சத்தின் சக்தி பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் அந்த நாட்களில் பூஜைகள், புனஸ்காரங்கள், விசேஷங்கள், பரிகாரங்கள் கூட வெகுவாக செய்யப்படுகின்றது. மேலும் எதிர்மறை விஷயங்களாக இருக்கக்கூடிய பில்லி, சூனியம், ஏவல் போன்றவைகூட அந்தநாளில் செய்வதை நாம் பார்த்திருப்போம். அதைவிட சக்தி வாய்ந்த நாளாக இருக்கக்கூடியது சனிக் கிழமை!

இந்த சனிக்கிழமையில் எலுமிச்சை பழத்தை வைத்து இதை செய்யும்பொழுது நம்மை பிடித்த திருஷ்டிகள், பீடைகள், தரித்திரங்கள் அனைத்தும் ஒழியும் என்பது நம்பிக்கை. அந்தவகையில் சனிக்கிழமையில் நாம் செய்யவேண்டியது என்ன என்பதைத்தான் இந்த ஆன்மிகம் சார்ந்த பதிவின்மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ளப்போகிறோம். பொதுவாக சனிக்கிழமை ஹரிநாராயணருக்கு உகந்ததாக சொல்லப்படுவது உண்டு. சனிக்கிழமையில் பெருமாள் கோவிலுக்கு சென்று அங்கு தரும் தீர்த்தத்தை பருகிவந்தால் உடலில் நோய் நொடிகள் எல்லாம் தீரும் என்பது நம்பிக்கை.

dd

தொடர்ந்து ஒவ்வொரு சனிக் கிழமையிலும் துளசிமாலை சாற்றி வழிபட்டு வருபவர்களுக்கு தடைகள் விலகும் என்பது ஐதீகம். அதுபோல வீட்டில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்துக்கொள்ளவேண்டும். எலுமிச்சை பழத்தில் கரும்புள்ளிகள்மேலே இல்லாதவாறு சுத்தமாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அது தோஷம் அற்றதாக இருக்கும். இந்த எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டிக் கொள்ளவேண்டும். இதை பூஜையறையில் ஒரு பித்தளை தாம்பூலத்தில் வைத்து நறுக்குங்கள். பின்னர் வெட்டிய பழங்களை வீட்டில் நான்கு மூலைகளிலும் பிழிந்து அதன் சாற்றை தெளியுங்கள்.

Advertisment

பிறகு கையில் இருக்கும் எலுமிச்சை பழத்தை வெளியில் தூக்கி எறிந்துவிடுங்கள். வலதுகையில் இருப்பதை இடதுபுறத்திலும் இடதுகையில் இருப்பதை வலது புறத்திலும் மாறிமாறி தூக்கி எறியவேண்டும். திருஷ்டி கழிப்பதுபோலவே இதை செய்வதாலும் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய தரித்திரங்கள், பீடைகள் ஒழிவதாக சாஸ்திர நம்பிக்கை உண்டு. பின்னர் கையை அலம்பிக்கொண்டு திரும்பி பார்க்காமல் உள்ளே வந்து விடுங்கள்.

இதுபோல ஒவ்வொரு சனிக்கிழமைகளும் நீங்கள் எலுமிச்சை பழத்தை பூஜை அறையில் வைத்து வெட்டி எடுத்துக்கொண்டு வந்து நான்கு மூலைகளிலும் தெளித்து வெளியில்போட்டு வரவேண்டும். கண்ணுக்கு தெரியாத திருஷ்டிகள், வாஸ்து தோஷங்கள், தீயசக்திகள், துர்தேவதை கள் விரட்டப்படுவதாக இதன்மூலம் சொல்லப்படுகிறது. தீராத வியாதிகளால் அவதிப்படுபவர்களும் இதுபோல வீட்டில் செய்துபார்க்கலாம். மந்திர, மாந்திரீக, தாந்த்ரீகங்கள்கூட இந்த எலுமிச்சை பழத்தின்முன்பு தோற்றுவிடும். அந்த அளவிற்கு எலுமிச்சை பழம் தேவ கனியாக இருப்பதால் மகத்துவம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது.

எலுமிச்சை பழத்தை எப்பொழுதும் பூஜையறையில் இருக்குமாறு வைத்துக் கொள்ளவேண்டும். எலுமிச்சை பழம் வீட்டில் தீர்ந்து போகக்கூடாது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிறு, செவ்வாய்க்கிழமைகளில் எலுமிச்சை பழம் வீட்டில் இருப்பது ரொம்ப விசேஷமானது. இதைவைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு, கடை, அலுவலகம், குழந்தைகள், குடும்பத்திற்கு என்று திருஷ்டி சுற்றி கழுத்து முச்சந்தியில் சென்று போட்டுவந்தால் பல தடைகளை தாண்டி வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்.

Advertisment

செல்: 98425 50844.