குரு நல்லவரா- கெட்டவரா? இது அனைவர் மனதிலும் எழும் கேள்விதான்.
குரு ஒரு முழு சுபத் தன்மை கொண்டவர். அவர் இருக்கும் இடத்தை விடப் பார்க்கும் இடம் பலம்பெறும் என்பது உண்மையே. தனித்த குரு செயல்திறன் வெளிப்பாடு குறைவு. குருவோடு சேர்ந்த கிரக காரகர் ஒரு செயலை சீக்கிரம் செய்ய முற்படுவார். இவர் ஒரு பொருளின் முக்கிய மூலப் பொருளாகச் சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக வடிவமைக்காத சுத்த தங்கம் குரு ஆவார். கட்டித் தங்கத்தை உருக்கி அழகுற மாற்றினால் அங்கு சுக்கிரன் சேர்ந்து விடுவார். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட தசா புக்தி காலம் வரை தேவையானதைக் கொடுத்து பின்பு ஆன்மிக பிரபஞ்சத்தை நோக்கி அவர் களை நகர்த்திச் செல்லுவார்.
குரு- குழந் தைச் செல்வத் தைக் குறிக்கும் கிரகம். சுப நிகழ்வுக்கு உரிமையானவன், ஆசான், ஆசைகளுக்குக் கொஞ்சம் தடை விதிப்பவன், ஆடம்பரம் பிடிக்காது, கடவுளுக்கு மதிப்பு கொடுப்பவன்.
தேவ குருவின் ஆசீர்வாதம் பெற்றவன் எவனோ அவன் யோகவான் ஆவான். அவனுக்கு என்ன தேவையோ அவற்றைச் சரியாக யோகர்கள் வாயிலாகக் குரு கொடுத்துவிடுவார். எல்லையற்ற தானதர்மம் செய்யும் மனிதனுக்கு என்ன தேவையோ, அவற்றை அளவுக்குமேல் அதாவது- அபரிமித மான பணம், பொருள் சேர்க்கை, தொழிலில் லாப உயர்வு, மன அமைதி கலந்த சந்தோஷம் என்று கொடுத்து விடுவார்.
இவர் குறிப்பிட்ட நோயை வெளிக் காட்டிக்கொடுக்கும் கிரகமும் கூட. எடுத்துக்காட்டாக பலநாள் ஒருவருக்கு என்ன நோய் என்று தெரியாவண்ணம் இருந்தால் கூட அதனை
குரு நல்லவரா- கெட்டவரா? இது அனைவர் மனதிலும் எழும் கேள்விதான்.
குரு ஒரு முழு சுபத் தன்மை கொண்டவர். அவர் இருக்கும் இடத்தை விடப் பார்க்கும் இடம் பலம்பெறும் என்பது உண்மையே. தனித்த குரு செயல்திறன் வெளிப்பாடு குறைவு. குருவோடு சேர்ந்த கிரக காரகர் ஒரு செயலை சீக்கிரம் செய்ய முற்படுவார். இவர் ஒரு பொருளின் முக்கிய மூலப் பொருளாகச் சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக வடிவமைக்காத சுத்த தங்கம் குரு ஆவார். கட்டித் தங்கத்தை உருக்கி அழகுற மாற்றினால் அங்கு சுக்கிரன் சேர்ந்து விடுவார். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட தசா புக்தி காலம் வரை தேவையானதைக் கொடுத்து பின்பு ஆன்மிக பிரபஞ்சத்தை நோக்கி அவர் களை நகர்த்திச் செல்லுவார்.
குரு- குழந் தைச் செல்வத் தைக் குறிக்கும் கிரகம். சுப நிகழ்வுக்கு உரிமையானவன், ஆசான், ஆசைகளுக்குக் கொஞ்சம் தடை விதிப்பவன், ஆடம்பரம் பிடிக்காது, கடவுளுக்கு மதிப்பு கொடுப்பவன்.
தேவ குருவின் ஆசீர்வாதம் பெற்றவன் எவனோ அவன் யோகவான் ஆவான். அவனுக்கு என்ன தேவையோ அவற்றைச் சரியாக யோகர்கள் வாயிலாகக் குரு கொடுத்துவிடுவார். எல்லையற்ற தானதர்மம் செய்யும் மனிதனுக்கு என்ன தேவையோ, அவற்றை அளவுக்குமேல் அதாவது- அபரிமித மான பணம், பொருள் சேர்க்கை, தொழிலில் லாப உயர்வு, மன அமைதி கலந்த சந்தோஷம் என்று கொடுத்து விடுவார்.
இவர் குறிப்பிட்ட நோயை வெளிக் காட்டிக்கொடுக்கும் கிரகமும் கூட. எடுத்துக்காட்டாக பலநாள் ஒருவருக்கு என்ன நோய் என்று தெரியாவண்ணம் இருந்தால் கூட அதனைப் படம்போட்டு வெளிக் காட்டுபவர்.
சுக்கிர தசை வந்தாலே அனைவருக்கும் ஒரு வகை சந்தோ ஷம். களத்திர காரகன், வாகன யோகாதிபதி, ஆடம்பரம் மற்றும் சுக போக அதிபதியாக சுக்கிராச்சாரியார் (சுக்கிரன்) ஆவார். ஒருவருக்கு சுக்கிரன் நன்றாக இருந்தால் நல்ல உணவு, அழகிய கட்டிய வீடு, முகத்தில் பொலிவு கலந்த புத்துணர்ச்சி, ஆசையை நோக்கிய ஒரு வேகம், நிறைவான வாழ்க்கை என்று எல்லாம் வரக்கூடும். பாவ கிரகங்களின் சேர்க்கை சுக்கிரனுக்கு இருந்தால் பல்வேறு தவறான நட்பு, முக்கியமாகப் பெண்களிடம் அவமானம், ஏமாற்றம் என்று நிகழும்.
குரு- சுக்கிரன்
குரு 90% சுபர், அதுவே சுக்கிரன் 80% சுபத் தன்மை கொண்டவர். குரு ஒருசில நேரங்களில் ஜாதகரின் தவறான நோக்கத்தைப் படம் போட்டுக் காட்டி, ஜாதகருக்கு அவமானத்தைக் கொடுத்து விடுவார். ஒருவர் ஒழுக்கத்தையும், நற்செயலையும் செய்து, நல்வழியில் நடந்தால் குருவுடன் சேர்ந்த சுக்கிரன் நற்பலன்களைத் தரவல்லவரவார். குருவும் சுக்கிரனும் ஒன்றோடு ஒன்றுசேர்ந்தால் நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் அதுவே சிலசமயம் திகட்டும் அளவுக்குச் சென்று விடும். அதாவது "அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு' என்ற நிலைக்குத் தள்ளப்படும். இரு கிரகங்களின் சுப- அசுபத் தன்மையைப் பொறுத்து ஜாதகருக்கு பலன்கள் மாறுபடும்.
ஒருவனுக்கு உலகில் வாழக் கொஞ்சம் பேங்க் பேலன்ஸ், பொன்னும் பொருளும் தேவை. இந்த சேர்க்கை உள்ளவர்களுக்கு இவை அனைத்தும் கிட்டும். முக்கியமாகத் தங்கக் கட்டிகளாகவோ, அழகிய வடிவம் கொண்ட நகையாகவோ, வெள்ளிப் பாத்திரங் களாவோ சேர்க்கும் ஆசை கொண்டவர்கள். வங்கிக் கணக்கில் பணம் இருந்துகொண்டே இருக்கும். முடிந்தவரை ஜாதகர் முறையாகச் சேர்த்துவைத்த பணம் என்றால் கட்டாயம் நல்வழியில் பாதுகாக்கப்படும். ஏனென்றால் குரு ஒழுக்கத்திற்கு முதலிடம் கொடுப்பார். குரு தன் கையில் மறைத்துவைத்த குச்சியுடன் இருக்கும் ஒரு வழிகாட்டியாக நமக்குப் பின்னே நிற்பார்.
சுக்கிரன் அதிக சுபத்தன்மையுடன் இருந்து அவரோடு குரு சேர்க்கை பெற்றால் ஆடம்பரம்கூடிய அழகிய வீட்டின்மீது அதிக ஆசை இருக்கும். ஆனால் வீடு வாங்குவதை விட அதன் உட்புறத்தை வடிவமைப்பதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர்கள். ஆசையுடன் அதற்கென்று செலவுசெய்வதை விரும்பு வார்கள். கொண்ட குறிக்கோளுக்கான பாதையைத் தேர்வு செய்து வெற்றிக்கு வழி வகுப்பார்கள். இவர்கள் மனம் மட்டும் திடமாக இருந்தால் வெற்றியும் சாதனையும் நிச்சயம் உண்டு. யார் பேச்சையும் ஏற்க மாட்டார்கள், அவர்கள் நினைத்த பாதையில் செல்வார்கள். அதேசமயம் இந்த சேர்க்கையுடன் பாவிகள், அசுபர்கள் சேர்க்கை பெற்றால் வெற்றிப் பாதை மாறி தவறான வேறு பாதையில் நகர்ந்தும் செல்லக் கூடும்.
இந்த அமைப்பில் இருக்கும் ஆண்- பெண் இருவரும் எதிர் பாலினத்தவரைக் கவரும் வசீகரத் தன்மை மிக்கவர்கள்.
இவர்கள் தன்னைத்தானே மேலும் அழகுபடுத்திக்கொள்வார்கள். எடுத்துக் காட்டாக உடலில் பச்சை குத்திக் கொள்வது, முடியில் பல்வேறு நிறங்கள், மற்றும் சிகை அலங்காரங்கள் அல்லது சினிமா நடிகர் போல வடிவமைக்கப்பட்ட ஆடையில் அழகான மாற்றங்கள் செய்து கொள்வது, வெவ்வேறு வடிவில் மூக்குத்தி அல்லது காது ஓரங்களில் குத்திக்கொள்வது என்று தங்கள் முகத்தில் அழகு சேர்த்துக் கொள்ள மெனக்கெடுவார் கள் எடுத்துக் காட்டாக குரு பார்வையில் செவ்வாய், சுக்கிரன் அமையப்பெற்றவர் கள் உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் சென்று தங்கள் உடலைக் கட்டுக்கோப்பாக வைக்க முயற்சிப்பார்கள் குரு சுக்கிரன் சம்பந்தப்படும்பொழுது ஜாதகருக்கு வயிற்றுப்பகுதியில் வீக்கம், சிறுநீரகத்தில் பெரிய கற்கள், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், வாத நோய், கபம், கன்னத்தில் கொப்பளங்கள், தோல்களில் மாற்றம், பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோனில் ஏற்றத்தாழ்வு மற்றும் கர்ப்பப்பை வீக்கம்- கட்டி, கர்ப்பப்பை இறக் கம், குடலிறக்கம், தசைநார் சம்மந்தப் பட்ட நோய்கள், கண்ணின் ஒளி பாதிப்பு, கொழுப்பு- நீர்க்கட்டி, சர்க்கரை நோய், கெட்ட கொழுப்பினை அதிகப்படுத்தல், விந்தணுக்கள் குறைபாடு, பால்வினை நோய்கள், போதை வஸ்துக்கள்மூலம் ஏற்படும் நோய்கள் என்று அடுக்கிக்கொண்ƒட போகலாம். இவர்களோடு அஷ்டமாதிபதி, பாதகாதிபதி, முழு பாவர்கள் சம்பந்தம் பெறும்பொழுது மார்பக புற்றுநோய் அல்லது வயிறு- முகத்திலுள்ள அங்க பகுதிகளில் புற்றுநோய் தாக்கம் இருக்கும். பெரும்பாலும் பெண் களுக்கு சுக்கிரனால் ஏற்படும் நோயின் தாக்கம் கொஞ்சம் அதிகம்.
இவர்கள் பேச்சு அழகாகத் திறமையாக இருக்கும். இந்த சேர்க்கை உள்ளவர்கள் நீண்டகால திட்டம் தீட்டுவதில், மற்றவருக்கு ஆலோசனைமூலம் உதவிசெய்வதில் வல்லவர்கள். அதுவும் இவர்கள் மருத்துவ ராக இருந்தால், இவர்கள் கைப்பட்டால் நோய் சீக்கிரம் குணமாகும். குரு அசுப தன்மை பெறும்பொழுது அதோடு சுக்கிரனும் வலுப்பெற்றால் பணத்தையும், பொருளை யும், சந்தோஷ சுகத்தையும் நோக்கி அவர் கüன் ஓட்டம் இருக்கும். அதனால் சில நேரங்களில் ஒழுக்கமான இல்லற வாழ்க்கை அமையாது, தவறான சகவாசம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
ஒருவரின் பாதகாதிபதி வீட்டில் குரு- சுக்கிரன் அமர்ந்தால் பாதகத்தைச் செய்ய குருவோ சுக்கிரனோ தயார் நிலையில் இருப்பார்கள். அவர்களுடைய தசை புக்தி வரும் காலத்திற்காகக் காத்திருப்பார்கள். இவற்றில் குரு குறைந்த பாதகத்தையும் சுக்கிரன் அதிக பாதகத்தையும் தரவல்லவர் கள். எடுத்துக்காட்டாக மிதுன லக்னத்திற்கு குரு பாதகர். இங்கு குரு, சுக்கிரன் சேர்க்கை ஜாதகருக்குக் கிட்டிய மற்றும் சேர்த்துவைத்த அனைத்து வருமானத்தையும், பொருளையும் இழக்கச் செய்வார். ஒருவேளை இவர் பொருள் இழக்கவில்லை என்றால் களத்திரத் தால்லி குழந்தையால் இழப்பு ஏற்படும். குடும்பத்தில் சுமூக உறவு இருக்காது அல்லது பாகப் பிரிவினை ஏற்படும்.
குரு- சுக்கிரன் சமசப்தம பார்வைபெற்று புத்திக்கூர்மைக்கு அதிபதியாக புதனுடன் சேர்ந்து கேந்திரம், அல்லது திரிகோணத்தில் தனம் வரக்கூடிய 2-ல் இருந்தால் சரஸ்வதி அருள் மற்றும் சரஸ்வதி யோகமுண்டு.
அதனால் குழந்தைகள் அதீத அறிவாற்றல், மற்றும் படிப்பில் வல்லமை பெற்றவர் களாகத் திகழ்வார்கள்.
செல்: 90802 73877