ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jotipapunu-lucky-c-subramaniam-answers

● விஜயா, சேலம்.

எனது மகன் மணிகண்டன் அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னம். புதன் தசையில், குரு புக்தி நடக்கிறது. சரியான வேலை அமையவில்லை. குடும்பத்தின்மேல் பாசமும் இல்லை. திருமணம் எப்போது நடக்கும்? எப்போது பார்த்தாலும் காசு காசு என்று கேட்டுக்கொண்டே இருக்கிறான். சம்பாதித்து வீட்டுக்குக் காசு கொடுப்பானா?

மிதுன லக்னத்துக்கு 2-ல் செவ்வாய் நீசம். 2-க்குடைய சந்திரனும் 6-ல் நீசம். செவ்வாயும் சந்திரனும் பரிவர்த்தனை என்பதால் நீசபங்கம் அடைவார்கள். என்றாலும் 30 வயது முடிந்தபிறகுதான் திருமண முயற்சிகள் கைகூடும். 7-ல் சனி இருப்பதும் தோஷம். 2021 வரை ஏழரைச்சனி முடிந்தால்தான் நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் உண்டாகும். அவர் திருமணத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும். அதனால் அவர் திருமணம் பற்றி பெற்றோர்கள் எந்த முயற்சியும் எடுக்கவேண்டாம்.

● வி. சங்கர், நல்லூர்.

நான் உ.ப.ஊக்., ஆசிரியர் பயிற்சி முடித்து 13 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அரசுப்பணி அமையவில்லை. ஆசிரியர் தேர்வுக்கு ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதுகிறேன். இரண்டு அல்லது மூன்று மார்க் வித்தியாசத்தில் தோல்வி ஏற்படுகிறது. பரீட்சையில் பாஸ் ஆகவும், அரசு ஆசிரியர் பணி கிடைக்கவும் என்ன பரிகாரம்?

சங்கர் துலா லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னத்திற்கு 10-ல் கேது, அதற

● விஜயா, சேலம்.

எனது மகன் மணிகண்டன் அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, மிதுன லக்னம். புதன் தசையில், குரு புக்தி நடக்கிறது. சரியான வேலை அமையவில்லை. குடும்பத்தின்மேல் பாசமும் இல்லை. திருமணம் எப்போது நடக்கும்? எப்போது பார்த்தாலும் காசு காசு என்று கேட்டுக்கொண்டே இருக்கிறான். சம்பாதித்து வீட்டுக்குக் காசு கொடுப்பானா?

மிதுன லக்னத்துக்கு 2-ல் செவ்வாய் நீசம். 2-க்குடைய சந்திரனும் 6-ல் நீசம். செவ்வாயும் சந்திரனும் பரிவர்த்தனை என்பதால் நீசபங்கம் அடைவார்கள். என்றாலும் 30 வயது முடிந்தபிறகுதான் திருமண முயற்சிகள் கைகூடும். 7-ல் சனி இருப்பதும் தோஷம். 2021 வரை ஏழரைச்சனி முடிந்தால்தான் நல்ல வேலை, நல்ல சம்பாத்தியம் உண்டாகும். அவர் திருமணத்தில் சில பிரச்சினைகள் உண்டாகும். அதனால் அவர் திருமணம் பற்றி பெற்றோர்கள் எந்த முயற்சியும் எடுக்கவேண்டாம்.

● வி. சங்கர், நல்லூர்.

நான் உ.ப.ஊக்., ஆசிரியர் பயிற்சி முடித்து 13 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் அரசுப்பணி அமையவில்லை. ஆசிரியர் தேர்வுக்கு ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதுகிறேன். இரண்டு அல்லது மூன்று மார்க் வித்தியாசத்தில் தோல்வி ஏற்படுகிறது. பரீட்சையில் பாஸ் ஆகவும், அரசு ஆசிரியர் பணி கிடைக்கவும் என்ன பரிகாரம்?

சங்கர் துலா லக்னம், மிதுன ராசி, மிருகசீரிட நட்சத்திரம். லக்னத்திற்கு 10-ல் கேது, அதற்கு 8-ல் சூரியன் மறைவு என்பதால் அரசு வேலை கிடைப்பது கஷ்டம்தான். வயது 46 முடிந்துவிட்டது. சனி தசை நடக்கிறது. அவரும் லக்னத்துக்கு 8-ல் மறைவு.

● எஸ். குணசேகரன், புதுச்சேரி-1.

எனது மகள் சுகன்யாவுக்கு எப்போது திருமணம் நடக்கும்? மூல நட்சத்திரம் என்பதால் திருமணம் தடையாகுமா?

மூல நட்சத்திரம், தனுசு ராசி, கடக லக்னம். 8-ல் சனி, 2-ல் செவ்வாய். இருவரும் பார்த்துக்கொள் கிறார்கள். அதுதான் பிரச்சினை. மூல நட்சத்திரம் என்பதால் பிரச்சினை இல்லை. 27 வயது முடியவேண்டும். அதன்பிறகு காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து சுகன்யாவுக்கு கலச அபிஷேகம் செய்ய வேண்டும். இதற்கிடையே அவர் யாரையாவது விரும்பினால் திருமணம் செய்து வைக்கலாம்.

murugan

● இராதாகிருஷ்ணன், திருமுல்லைவாயில்.

எனது இரண்டாவது மகள் கற்பகம் ஜாதகப் பொருத்தம் இல்லாத ஒருவரை- வயதில் குறைந்தவரை விரும்புவதாகக் கூறுகிறாள். அவரையே திருமணம் முடிக்க திடமாக இருக்கிறாள். அவள் மனம் மாற பரிகாரம் உண்டா?

கற்பகம் கன்னியா லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். 33 வயது நடக்கிறது. ராகு தசை முடிந்து குரு தசை ஆரம்பம். 2-ல் சனி, கேது. 7-க்குடைய குரு 5-ல் நீசம். 8-ல் ராகு. அவரது திருமணம் அவர் விருப்பப்படிதான் நடக்கும். வயதைப் பற்றியும் ஜாதி சமயத்தைப் பற்றியும் சிந்திக்காமல் சீர்திருத்தத் திருமணமாக நடத்திவையுங்கள். அவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவுமே உங்கள் திருப்தியாக ஏற்று நீங்கள் மனம் மாறுவதுதான் வழி! அதுவே பரிகாரம்! திருமணத்தேதியை 1, 3, 6-ல் அமைத்து எளிமையாக நடத்திவைக்கலாம். பேரன்- பேத்தி பிறந்தபிறகு உங்கள் மனம் சாந்தியடையும்.

● முத்துக்குமரன், சேலம்.

நீங்கள் வாக்கியப் பஞ்சாங்கமே சரியானது என்கிறீர்கள். ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் அவர்களும் வாக்கியப் பஞ்சாங்கப்படியே பலன் சொல்கிறார். ஆனால் ஆதித்ய குருஜி அவர்கள் திருக்கணிதமே சிறந்தது என்கிறார். எது சரியானது?

அந்தக்காலத்தில் பள்ளியில் வாய்ப்பாடு என்று ஒரு கணிதப்பாடம் இருந்தது. 1ஷ்1=1, 2ஷ்2=4, 3ஷ்3=9 என்று 16 வரையும் 20 வரையும் வாய்ப்பாடு இருந்தது. நான் அந்த வாய்ப்பாடு கணக்கைப் படித்தவன். பிற்காலத்தில் (இப்போது) அந்தக் கணிதமுறை வழக்கத்தில் இல்லை. வாய்ப்பாடு தெரிந்தவர்கள் மனக்கணக்கிலேயே எல்லா பெருக்கல், வகுத்தல்- கூட்டல், கழித்தல் கணக்குகளை எளிதாகக் கணக்கிட்டுவிடுவார்கள். பேப்பர், பேனா தேவைப்படாது. இப்போது எல்லா கணக்குப் போடவும் கால்குலேட்டர் வந்துவிட்டது. அதற்குமேல் செல்போனிலேயே அந்த சிஸ்டம் வந்துவிட்டது. வாய்ப்பாடு கணக்கு முறைதான் வாக்கியப் பஞ்சாங்கம். கால்குலேட்டர் முறைதான் திருக்கணிதம். உண்மையில் சொல்லப்போனால் "ரெடிரெக்கனர்' மாதரி "ஈஸியாக'க் கணக்கிடுவது திருக்கணிதம். சொல்லப்போனால், ரயில்வே பிளாட்பாரத்தில் நின்றுகொண்டு, ஓடும் எக்ஸ்பிரஸ் ரயிலைப் பார்ப்பதுபோல- வேகமாக ஓடும் ரயிலால் பிளாட்பாரம் அதிர்வதுபோல திருக்கணிதம் இருக்கும். வாக்கியம் என்பது திருச்சி மலைக்கோட்டையில் நின்றுகொண்டு, வேகமாக ஓடும் ரயிலைப் பார்த்தால் ஊர்ந்து செல்வது போல தோன்றும். ஆனால் ரயிலின் வேகம் ஒரேமாதிரிதான்! ரிஷிகள் எழுதிய வாக்கியப்படி கிரக சஞ்சாரக்கணிதம் வாக்கியப் பஞ்சாங்கம். அதைத் திருத்திக் கணக்கிடப்பட்டது (திருக்) திருக்கணிதப் பஞ்சாங்கம்! தமிழன், தாயை அம்மா என்றும் தகப்பனை அப்பா என்றும், கணவனை மனைவி அத்தான் என்றும் இனிமையாக அழைப்பதற்குச் சமம்தான் வாக்கியப் பஞ்சாங்கம். ஆங்கிலப் பள்ளியில் படிக்கும் குழந்தை அம்மாவை "மம்மி' என்றும், அப்பாவை "டாடி' என்றும், மனைவி கணவனை, காதலி காதலனை பெயர் சொல்லி அழைப்பதற்குச் சமம் போன்றது திருக்கணிதம்! எப்படி அழைத்தாலும் அழைக்கப்படுகிறவர்கள் மாறுவதில்லை.நவகிரகங்கள் சூரியனை மத்தியாக வைத்து உருவாக்கப்பட்டவை. அதனால் சூரியனை மத்தியாக வைத்துக் கணிக்கப்பட்டது வாக்கியப் பஞ்சாங்கம். (சூரிய சித்தாந்தம்). நாம் பூமியில் வாழ்வதால் பூமியை மத்தியாக (சென்டராக) கணக்கிட்டது திருக்கணிதம். இரண்டுக்கும் பாதசாரம் வித்தியாசப்படும். அதனால் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, ராகு- கேது பெயர்ச்சிக் காலங்களில் தேதி வித்தியாசம் வரும். உண்மையில் இந்த நவகிரகங்கள் எல்லாமே கற்பனைதான். அவர்களின் வரலாறும் (புராணம்) கற்பனைதான். விஞ்ஞான யுகத்தில், "நாசா' விண்வெளி ஆராய்ச்சிக்கூடத்தில் இருந்து பார்க்கும்போது இவை எல்லாம் கோளங்களாகத் தெரியும். இதை நமது முன்னோர்கள், ஞானிகள் ஞானதிருஷ்டியால் கணித்து விளக்கியிருக்கிறார்கள். இதில் வாக்கியப் பஞ்சாங்கமானாலும் சரி; திருக்கணிதப் பஞ்சாங்கமானாலும் சரி- சந்திர கிரகணம், சூரிய கிரகணத் தேதிகளும் நேரமும் மிகச்சரியாக ஒன்றாகவே இருக்கும். அப்படியிருக்கும்போது வாக்கியப் பஞ்சாங்க முறையை ஏன் புறக்கணிக்கவேண்டும்? என்னுடைய 60 ஆண்டுகால ஜோதிட அனுபவத்தில் வாக்கியப் பஞ்சாங்க ஜாதகமே பலன் சொல்வதில் 100-க்கு 100 சரியாக இருக்கிறது. நோயாளிக்கு நோய் தீரவேண்டும் என்பதுதான் முக்கியக் குறிக்கோள்! அது ஆயுர்வேதமானாலும் சரி; ஹோமியோபதியானாலும் சரி; அலோபதியானாலும் சரி; சித்த வைத்தியமானாலும்; யுனானி வைத்தியமானாலும் சரி- எந்த சிகிச்சையானாலும் அதை விமர்சிக்கும் அவசியமில்லை. உலகத்துக்கு ஒரே சூரியன்தான். ஒரே சந்திரன்தான். இதில் சூரிய கிரகணமும், சந்திர கிரகணமும் சில நாடுகளில்- ஊர்களில் தெரிகிறது. சில இடங்களில் தெரிவதில்லை. அதனால் தெரியாத இடங்களில் கிரகணம் என்பது பொய்யென்று கூறமுடியுமா?

இதையும் படியுங்கள்
Subscribe