● டாக்டர். தியாகராஜன், அருப்புக்கோட்டை.

3-12-2019-ல் எழுதிய கடிதத்துக்கு 3-1-2020 இதழில் பதில் எழுதியமைக்கு நன்றி! அடியேன் "பாலஜோதிட'த் தின் நீண்டகால வாசகன்! ஒரு வாசகரை எத்துணை மட்டம்தட்டி எழுதமுடியுமோ அப்படித் திட்டித் தீர்த்திருக்கிறீர்கள். தகவலைத் தெரிவிப்பதற்கு துண்டுப் பிரசுரத்தை உபயோகிக்கக்கூடாதா? இதை சிக்கனம் என்று ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது? சாக்கடை நீரில் கிடந்த இரண்டு அங்குலப் பென்சிலை அருவறுப்பின்றி தன் கைகளால் எடுத்துத் துப்புரவாக்கி, "ஒரு ஏழை மாணவனுக்கு இது உதவக்கூடியது' என்றுரைத்த அண்ணல் காந்தியடிகளைத் தங்களுக்கு நினைவுகூர்கிறேன். அடியேன் செயலைக் கஞ்சத்தனம் என்று கடிந்ததோடு, "மறுபிறப்பில்லாத வீடுபேறு பற்றி கனவு காண்கிறீர்கள்' என்றும் எள்ளி நகை யாடியிருக்கிறீர்கள். அடியேன் 1980-ல் அலங் கியம் தவத்திரு இரத்தின சற்குருவிடம் ஆத்மஞான தீட்சை பெற்றவன். சற்குருவின் அருள்வாக்கால் மறுபிறவி அற்றவன் என்று மொழியப் பெற்றவன். மற்றும் திருவண்ணாமலையில் 2016-ஆம் ஆண்டு திருக்கயிலாயப் பரம்பரை துளாவூர் ஆதீனகர்த்தரிடம் அடியேன் சிவ தீட்சையும் பெற்றுள்ளேன். தங்களை மானசீக குருவாகப் போற்றி, வணங்கிவரும் ஜோதிடசிகாமணி ஆதித்ய குருஜி அவர்கள் அண்மையில் அடியேனின் ஜாதகக்குறிப்பை ஆய்வுசெய்து தெரிவித்த பலாபலன்களை ஜெராக்ஸ் எடுத்து தங்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளேன். கடிதத்தில் ரூ.100/- வைத்தது சத்தியம்! பொய்யுரைக்கவில்லை. இக்கடிதத்துக்கு தங்களிடமிருந்து பதில் வருமென்று அடியேன் எதிர்பார்க்கவில்லை. எனினும் அடியேன் உள்ளக் கிடக்கையை- உண்மையை உணர்த்திவிட்ட திருப்தி போதும். கேள்வி கேட்பவர் ஜாதகச் சக்கரத்திலுள்ள கோள்களின் நிலைகளைக் கணித்து, பலாபலன்களைத் தெரிவிப் பதற்குப் பதிலாக, தேவையற்ற வார்த்தை சிலம்பமாடிக் காயப்படுத்தியுள்ளீர்கள்- எண்பத்து மூன்று அகவை நிரம்பிய ஒரு சிவனடியாரை.

Advertisment

உங்கள் உள்ளத்தைப் புண்படுத்துவது என் நோக்கமல்ல. சிவனடியார் என்றும், சிவதீட்சை பெற்றவர் என்றும் பெருமைப் படும் தாங்கள் "சிறியோர் செய்த பிழை யெல்லாம் பொறுத்தருள்வது பெரியோர் கடன்' என்பதை மறந்துவிட்டீர்களா? 83 வயது பெரியவர் என்பதற்காகவும், சிவனடியார் அல்லது சிவதீட்சை பெற்றவர் என்பதற்காகவும், "எருமை மாட்டான் கருணை காட்டமாட்டான்' என்றோ, "வரமாட்டான்' என்றோ சொல்லமுடியுமா? அடியேனும் உங்கள் வயதினைவிட சீனியர்தான். அடியேனும் 45 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளத்தூர் குருநாதரிடம் தீட்சைபெற்று சிவபூஜை செய்கிறவன்தான். தாங்கள் ரூ.100/- கவரில் வைத்தது சத்தியமென்றால், கவரில் அந்தப் பணம் இல்லையென்பதும் சத்தியத்திலும் சத்தியம். சிவனுக்கே வெளிச்சம்! முதலிலில் நோட்டீஸின் பின்பக்கம் கேள்விகேட்ட தாங்கள், இப்போது லெட்டர்பேடில்- முகவரி அச்சடித்த தாளில் எழுதியுள்ளீர்களே! 16-7-2019 "மாலை மலரி'ல் ஜோதிடக்கலையரசு ஆதித்ய குருஜி எழுதியபடி, 2021-ஆம் ஆண்டு ஜுலை அல்லது ஆகஸ்டில் உங்களின் நல்முடிவு அமையும். அவர் கணிப்பு பொய்யாகாது. "உறங்குவது போலும் சாக்காடு- உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்பது வள்ளுவரின் வாக்கு. கவியரசர் கண்ணதாசன் எழுதியமாதிரி, "வந்தவர் எல்லாம் இந்த பூமியில் நிலைத்துவிட்டால் பூமி தாங்குமா? இறந்தவர்கள் எல்லாம் மோட்சம் அடைந்துவிடுவார்கள் என்றால் ஜனத்தொகையின் கணக்கு ஏன் அதிகரிக்க வேண்டும்? "புல்லாகிப் பூடாகிப் புழுவாகி பல் மிருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய் செல்லாசு நின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்' என்று மாணிக்கவாசகப் பெருமான் பாடுகிறார்! அதாவது ஒரு மனிதன் நல்லவன் என்பதும், அல்லவன் என்பதும் அவனது அந்திமக் கால முடிவின்போது மற்றவர்களின் கணிப் பில்தான் தெரியும். ஏசுநாதரும்- மகாத்மா காந்தியடிகளும் 100-க்கு 100 தூய்மையானவர்கள்தானே! அவர்களின் அந்திமக் காலத்தில் ஏசுநாதருக்கு உயிரோடு சிலுவையில் அறையும் தண்டனையும், காந்தியடிகளுக்கு துப்பாக்கிக் குண்டால் சுடப்பட்ட கொடுமையும் ஏன் கிடைக்க வேண்டும்? இதெல்லாம் தெய்வ ரகசியம். அதேசமயம் காந்தியடிகளும் ஏசுபிரானும் "அய்யோ' என்று அலறவில்லை. காந்தியடிகள் "ராம் ராம்' என்று தெய்வ சிந்தனையாக வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டார். ஏசுபிரான் "அறியாமல் செய்யும் இவர்களை மன்னி யுங்கள்' என்று பிரார்த்தித்தார். நம்மைப் போன்ற ஆசாபாசம் உடையவர்களுக்கு அந்திமக் காலத்தில் கடவுளின் பேரை அழைக் கவேண்டும் என்றுதான் சந்ததிகளுக்கு முருகன், ராமன், கோவிந்தன், கணபதி என்று பெயர் வைத்தார்கள். இப்போது அந்த மரபெல்லாம் மாறிப்போய் நஞ்சு (நஞ்சுண்டான்) என்றும், பாபி (செல்லப்பேர்) என்றும் அழைக்கும் வழக்கமாகிவிட்டது.

● எஸ். சந்திரசேகரன், சென்னை- 23.

எனக்கு 70 வயது. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, துலா லக்னம். தற்போது சந்திர தசையில் ராகு புக்தி நடக்கிறது. எனக்கு இதய அறுவை சிகிச்சை நடந்து பத்து ஆண்டுகளா கின்றன. அதிலிருந்து அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறது. எப்போது சீராகும்?

உத்திரட்டாதி சனியின் நட்சத்திரம்; மீனம் குருவின் ராசி; துலாம் சுக்கிரனின் லக்னம். எனவே 80 வயது சதாபிஷேகம் பார்க்கலாம். சந்திர தசையில் ராகு புக்திவரை தேகநலனில் பிரச்சினைகள் இருக்கலாம். திங்கள்கிழமைதோறும் சிவலிலிங்கத்துக்கு பால் தந்து அபிஷேகம் செய்யுங்கள். வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு நெய் விளக்கேற்றுங்கள். குரு புக்தி வந்ததும் முழுமையான சுகம் ஏற்படும். சென்னை அருகே திருநின்றவூரில் இருதயாலீஸ்வரர் கோவில் உள்ளது. அங்கு சென்று ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும். மனதுக்குள்ளேயே சிவனுக்கு கோவில் கட்டியவர் பூசலார் நாயனார். நெஞ்சில் ஓர் ஆலயம் கட்டி, கும்பாபி ஷேகத்துக்கு நாள் குறித்தார். அதேசமயம் காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் காடவர் கோன் இராஜசிம்மன் உண்மையாகவே ஒரு கோவிலைக்கட்டி, கும்பாபிஷேகத்துக்கு அதேநாளைக் குறித்தான். சுவாமி, மன்னன் கனவில் தோன்றி, ""பூசலார் கட்டிய கோவிலுக்கு கும்பாபிஷேகம் அன்றுதான். எனவே நீ வேறொரு நாள் குறித்துக்கொள்'' என்றார். உடனே மன்னன் பூசலாரை தரிசித்து ஆசிபெறத் தேடிவந்தான். நேரில் வந்தபோது கும்பாபிஷேகம் செய்யும் கோவில் கோபுரம் தென்படுகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான். கண்ணுக்கு எதுவும் தெரியவில்லை. மக்களிடம் விசாரித்தான். அவர்கள் ஒரு மரத்தைக் காட்டி, ""மரத்தடியில் ஒரு சந்நியாசி இருக்கிறார். அவர்தான் கோவில் கட்ட விரும்பினார்'' என்றார்கள். மன்னன், தடாகத்திலுள்ள தவளை (மண்டூகம்) தாமரை மலரின் அருமையை உணராது என்று நினைத்து, பூசலார் இருக்குமிடம் சென்று வணங்கினான். அவர் நெஞ்சில் சிவலிலிங்கம் காட்சியளிப்பதை தரிசனம் செய்து, தாள் பணிந்தான். பின்னர், தான் தரிசித்த காட்சியை அடிப்படையாகக்கொண்டு, அங்கேயே கோவில் எழுப்பினான் மன்னன். அந்த இடமே தற்போதைய திருநின்றவூர், இருதயாலீஸ்வரர் கோவில். மூலஸ்தானத் திலேயே சிவலிலிகத்துக்கு இடதுபாகம் பூசலாருக்கும் ஒரு விக்ரகம் உண்டு. இதயம் சம்பந்தப்பட்ட எல்லாப் பிணி, பீடைகளுக்கும் அங்குசென்று நம்பிக்கை யோடு வழிபட்டால் பூரண குணமாகும்.

● பி. சுந்தரம், கோவனூர்.

Advertisment

முப்பது வருடகாலமாக நான் தங்கள் ரசிகன். தாங்கள் எனக்கு பலமுறை பதில் எழுதியுள்ளீர்கள். தங்கள் ஆலோசனைப்படியே இதுவரை நடந்து வருகிறேன். தற்போது என் அத்தை மகன் ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். இதுவரை திருமணமாகவில்லை. எப்போது நடக்கும்? அத்தை மகனின் தந்தை இறந்து மூன்று மாதங்களாகின்றன.

நீங்கள் அனுப்பிய ஜாதக ஜெராக்ஸ் தெளிவாக இல்லை. அத்தை மகனா? மகளா என்பதும் தெரியவில்லை. பெயரும் இல்லை. திருப்பதியில் காணாமல்போனவரைக் கண்டுபிடிக்க அடையாளம் கேட்டால், "மொட்டையடித்திருப்பார்' என்று சொன்னால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? ஊர், பேர் சொல்லவேண்டாமா? ஆணா- பெண்ணா என்ற விவரமும் கூறவேண்டாமா? 40 வயது என்பதால், ஆண் என்று தெளிவாகிறது. கந்தர்வராஜ ஹோமம் செய்யவேண்டும்.

● சி.ஆர்.சி. சேகர், ஆவடி.

என் மகள் பூஜா 10-ஆம் வகுப்பு படிக்கிறாள். பிளஸ் 1-ல் எந்த குரூப் எடுக்கலாம்? மேற்படிப்பு எது படிக்கலாம்? அரசு வேலை கிடைக்குமா?

Advertisment

aa

பூஜா அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மகர லக்னம். 7-12-2004-ல் பிறந்தவர். 2019 டிசம்பரில் 15 வயது முடிந்து 16 ஆரம்பம். 11 வயதுமுதல் ராகு தசை- 18 வருடம். ராகு 4-ல் கேது சாரம். அவருக்கு வீடுகொடுத்த செவ்வாய் 10-ல் நின்று பார்க்கிறார். அவருடன் சுக்கிரன் ஆட்சி. 9-ல் குருவும் சந்திரனும் சேர்க்கை. கம்ப்யூட்டர் சயின்ஸ் அல்லது தகவல் தொழில்நுட்பம் படிக்கலாம். உயர்கல்வி யோகம் உண்டு. ராகு தசை நடப்பதால், விரும்பினால் மருத்துவத்துறையில் படிக்கலாம். 8-க்குடைய சூரியன் 6-க்குடைய புதனோடு சேர்க்கை. புதன் 9-க்குடையவர் என்பதால் அரசு வேலை பார்க்கலாம். ந. டஞஞஓஆஆ என்று ஒரு "ஆ' சேர்க்கவும்.

● பி. சுந்தரம், கோவனூர்.

28-6-2019 "பாலஜோதிட'த்தில், நான் ஆதீனத்தில் காலத்தைக் கழிக்கலாமே என்று எழுதியிருந்தீர்கள். குருவே, பூர்வீகச் சொத்து உள்ளது; தாய் இருக்கிறார்; சொந்த வீடு உள்ளது; மனைவி இருக்கிறார். பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆதீனம் செல்லாமல் வாழ வழிசொல்லுங்கள். நான் வாழவேண்டும்.

நீங்கள்தான் "எல்லாமிருந்தும், அமைதியில்லை, ஆனந்தமில்லை, வாழவே பிடிக்கவில்லை' என்று எழுதியிருந்தீர்கள். "அப்படியென்றால் ஆதீனத்தில் காலம் கழிக்கலாமே' என்று வழி சொன்னேன். இப்போது மாற்றிப் பேசுகிறீர்களே! ஜோதிடம் என்ன தாய விளையாட்டுமாதிரி என்று நினைத்துவிட்டீர்களா? அல்லது ஆடுபுலியாட்டம் என்று எண்ணிவிட்டீர்களா? உங்கள் நேரத்தை வீணடிப்பது மட்டுமல்லாமல், என் நேரத்தையும் வீணடிக்கலாமா?

● தி. பரணிதரன்...

மாமா வீட்டிலிருந்து 10-ஆம் வகுப்புவரை படித்து முடித்து, பிறகு சொந்த வீட்டிலிருந்து படிக்க ஆரம்பித்தேன். தொடர்ந்து படிக்க முடியவில்லை. நான்கு வருடகாலமாக சந்தன காளியம்மனுக்கு கரகம் எடுத்து வருகிறேன். அதில் ஏதாவது குறையா? எதுவரை படிக்கலாம்? அப்பாவும் அம்மாவும் என்னை வெடுவெடுவென்று பேசுகிறார்கள்.

கரகம் எடுப்பதால் உமக்கு பதிலாக சந்தன காளியம்மன் வந்து பரீட்சை எழுதுமா? கரகம் எடுப்பதால் நீங்கள் பக்திமான் என்று தெரிகிறது. அதேசமயம் ஆர்வமாகப் படிக்கவேண்டும். அது உனது கடமை! கரகம் எடுக்கும்போது உனது காலில் மற்றவர்கள் விழுந்து வணங்கி ஆசிபெறுவதால், "ஈகோ' வந்துவிடும். படிப்பு வேறு; பக்தி வேறு! படித்துப் பட்டம் வாங்கும்வரை பக்தியை மனதுக்குள் மட்டும் நிறுத்திக்கொண்டு, படிப்பில் முழுக்கவனம் செலுத்தவும்! தனுசு ராசிக்கு ஜென்மச்சனி இருப்பதால் படிப்பில் தடை வரலாம். ஆர்வமும் அக்கறையும் தேவை. முயற்சி இருந்தால் முன்னேறலாம்.

● ஆர். ஜெயசரசுவதி, திருச்சி- 102.

ராமச்சந்திரன் (கணவர்) ஜாதகமும், எனது மகனின் ஜாதகமும், எனது ஜாதகமும் அனுப்பியுள்ளேன். ஏற்கெனவே கேள்வி கேட்டேன். சர லக்னத்துக்கு 11-ஆமிடமும், ஸ்திர லக்னத்துக்கு 9-ஆமிடமும், உபய லக்னத்துக்கு 7-ஆமிடமும் பாதகஸ்தானம். 4-ஆமிடம் தகப்பனார் ஸ்தானம், 7-ஆமிடம் களஸ்திர ஸ்தானம், 11-ஆமிடம் லாபஸ்தானம். இவற்றை பாதிக்குமா? அதேசமயம் பாதகாதிபதிகளே யோகாதிபதிகளாக வருவார்கள் அல்லவா? அப்படி வரும்போது, அந்த கிரகம் தமது தசாபுக்திகளின் காலத்தில், அந்த பாதகாதிபத்திய பலனைச் செய்வார்கள் அல்லவா? மேற்படி பாதகஸ்தானத்தில் வேறு ஏதாவது ஒரு கிரகம் இருந்தால், அந்த பாதகத் தன்மை அந்த இடத்தில் இருக்கும் கிரகத்துக்குப் போய்விடும் என்று முன்பு எழுதியிருந்தீர்கள். இன்னும் எனக்கு சரியான விடை கிடைக்கவில்லையே?

உங்களின் கேள்வியிலேயே அதற்கான பதில் அடங்கியுள்ளது. ஒருமுறைக்குப் பலமுறை படித்துப் படித்து சிந்தியுங்கள்; விடை கிடைக்கும்

● எஸ். சுப்பையா, திருநெல்வேலி டவுன்.

இந்திய சுதந்திர நேரப்படி, 29-1-2020 முதல் 29-2-2021 வரை இந்தியாவுக்கு சந்திர தசையில் சனி புக்தி நடக்க இருப்பதாகத் தெரிகிறது. குருஜி, தங்களின் தேவ ஜோதிடவாக்குமூலம் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் என்ன பலன்- என்ன பரிகாரம் என்று கூறுங்கள்.

நாடு சுதந்திரமடைந்து 73 ஆண்டுகளாகின்றன. 73 ஆண்டுகளில் எத்தனையோ பிரதமர்கள், எத்தனையோ ஆளுங்கட்சிகள், எத்தனையோ எதிர்க்கட்சிகள் மாறியபோதும் ஜனத்தொகை கூடியுள்ளது. அன்று 30 கோடி. இன்று 120 கோடிக்குமேல்! எவ்வளவோ சாதனைகள்! உலக நாடுகளில் பாரதத்துக்கு மதிப்பும் மரியாதையும் செல்வாக்கும் கூடியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. நீர்வளம், நிலவளம், அணைக்கட்டுகள் பெருகியிருந்தாலும், வறுமையை ஒழிக்க முடியவில்லை. அதற்காக பட்டினிச்சாவு எதுவுமில்லை. அப்போதிருந்த வாய்மை, தூய்மை, நேர்மை, தியாகம் அரசியல் தலைவர்களிடம் இல்லை. எல்லாம் ஊழல், எல்லாவற்றிலும் சுயநலம். சுதந்திர லக்னத்துக்கு குரு 6-ல் மறைவு; ராகு- கேது சம்பந்தம். சனியின் நட்சத்திரம். (பூசம்). நாடு சுதந்திரம் அடைந்த தேதியின் கூட்டு எண் 8. (சனி ஆதிக்கம்). மனைவியை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், திருமணமே ஆகாதவர்கள், மனைவியைப் பிரிந்தவர்கள்- இப்படிதான் நாட்டின் தலைமைப் பொறுப்பேற்று ஆட்சி நடத்தும் அவலம்! தப்பித்தவறி குடும்பஸ்தர்கள், நேர்மையானவர்கள் ஆட்சிபீடத்தில் அமர்ந்தாலும், நெடுங்காலம் நிலையான ஆட்சி தரமுடியாத நிலை! ஔவைப் பிராட்டி மன்னனை வாழ்த்தும்போது "வரப்புயர' என்று வாழ்த்தினாராம். வரப்புயர நீர் உயரும். நீர் உயர விவசாயம் உயரும். விவசாயம் உயர மக்கள் வாழ்வு (பயிர்வளம், செல்வவளம்) உயரும். ஒருகாலத்தில் அரிசித் தட்டுப்பாடு காரணமாக திருமணப் பத்திரிகையில், "தங்கள் பங்கு ரேஷன் அரிசியைக் கொண்டு வரவும்' என்று குறிப்பிட்டிருந்தார்கள். (ஆறு அவுன்ஸ் ரேஷன் திட்டம். பி.எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்த காலம். இன்று உணவுப்பஞ்சம் இல்லையென்றாலும் வருமானப் பஞ்சம் போகவில்லை. இதற்கெல்லாம் ஒட்டுமொத்தப் பரிகாரம் எதுவுமில்லை. ஒவ்வொரு தனிமனிதனும் (குடிமகனும்) ஒழுக்கமாக, நேர்மையாக இருந்தாலே போதும்! அரசு தரும் இலவச சலுகையை வசதியிருப்பவரும் வாங்கி மாற்றிவிடுகிறாரே- அரிசி, சீனியை ரேஷனில் வாங்கி, பலசரக்குக் கடையில் விலைக்குக் கொடுத்து காசாக்கி விடுகிறார்களே! அதைவிடக் கொடுமை- வாக்குரிமைக்கும் விலை நிர்ணயிக்கப்படுகிறதே! ஆக, மக்களிடம் தூய்மை, நேர்மை இல்லை. அரசியல்வாதிகளிடம் வாய்மை இல்லை! இவையெல்லாம் மாறும் என்று நினைக்கிறீர்களா? நிச்சயம் மாறாது. வாலி எழுதியதுமாதிரி "மாறாதய்யா மாறாது. மனமும் குணமும் மாறாது.' இவையெல்லாம் மாறவேண்டும் என்றால், அன்று ஆங்கிலேயர் ஆதிக்கம் இருந்ததுபோல இன்னொரு அந்நியர் ஆதிக்கம் வரவேண்டும். அதை விரட்டியடிக்க மறுபடி இன்னொரு காந்திமகான் அவதரிக்கவேண்டும். இந்திராகாந்தி காலத்தில் "மிசா சட்டம்' கொண்டுவந்தபோது அரசு அலுவலகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் ஒரு குறுகிய காலம் வேலைகள் ஒழுங்காக நடைபெறவில்லையா? 1962-ல் பக்கத்து நாடான சீனா, இந்தியாமீது படையெடுத்தபோது, நாட்டுமக்களுக்கு நாட்டுப்பற்றும் ஒற்றுமையும் வந்ததே- அந்த உணர்வு இப்போது ஏனில்லை? (வயதான பெரியோர்களுக்கு- சீனியர் சிட்டிசன்களுக்கு இந்த நிகழ்ச்சி நினைவிருக்கும்). இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது. நம் நாட்டுக்காரன்தான் நம்மை சுரண்டி வாழவேண்டும். அடுத்தவனை வரவிடக்கூடாது என்பது அரசியல்வாதிகளின் கணக்கு. காஞ்சி மகா பெரியவர் காலத்தோடு ஆன்மிகம் தொலைந்துவிட்டது. (இப்போது நித்தியின் கைலாச காலம்). பெருந்தலைவர், சரித்திரநாயகன் காமராஜரோடு அரசியல் தூய்மை தொலைந்துவிட்டது. (இப்போது இரட்டையர்கள் கட்சிக்காலம்) சக்தியிழந்தவன் சக்திபடைத்தவனைப் பார்த்துப் பொருமி, ஏங்கிப் பொறுமையாக ஆறுதல் அடையவேண்டியதுதான்.

● ஆர். முனுசாமி, புதுச்சேரி.

எனது மகனுக்கு தற்போது 38 வயதாகிறது. ஏழு ஆண்டுகளாக முயற்சி செய்தும்- பல பெண் ஜாதகங்கள் வந்தும் திருமணம் தள்ளிப்போகிறது. எல்லாருக்கும் கவலை! ஒரு நல்ல வழிகாட்டவும்.

மகர லக்னம். 7-ல் செவ்வாய்- ராகு. செவ்வாய் நீசம். லக்னத்தில் கேது. களஸ்திரகாரகன் சுக்கிரன் கன்னியில் நீசம். 7-க்குடைய மனைவி ஸ்தானாதிபதி சந்திரன் 8-ல் மறைவு (சிம்மத்தில்); 8-க்குடைய சூரியனுடன் சம்பந்தம். அவர் ஜாதகத்தைப் பொருத்தம் பார்க்கும்போது எல்லா ஜோதிடர்களும் குமரனுக்கு களஸ்திரதோஷம் இருப்பதாகவும், மனைவி இறந்துவிடுவார் என்றும் கூறியிருப்பார்கள். ஆகவே, நல்ல இடமாகத் தெரிந்தாலும் முடியாமல் தள்ளிப்போகும். அதற்காக பயந்து, மனமொடிந்துவிடாதீர்கள். குமரனுக்கென்று ஒரு பெண் பிறந்து எங்கேயோ வளர்ந்துவருகிறாள். உரிய காலம் வரும்போது உங்கள் கண்ணுக்குத் தெரிவாள். அப்படித் தெரியவும், நிச்சயம் செய்யவும், கல்யாணம் நடக்கவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் (செல் 99942 74067) குமரனை அழைத்துப்போய் காமோகர்ஷண ஹோமமும், பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்து கலச அபிஷேகம் செய்யவேண்டும். (புத்தாடை உடுத்தி). தைப்பொங்கலுக்கு முந்தைய நாள் போகிப் பண்டிகையன்று ஆகாத போகாத கழிவுகளையெல்லாம் சேகரித்து எரித்துவிடுகிறோம் அல்லவா? அதுபோல கிரக தோஷங்களையும், மற்ற தோஷங்களையும் அக்னிகாரியம் ஹோமம் வளர்த்து எரித்துவிடவேண்டும். நீரும் நெருப்பும்தான் நம் வினைப்பயனைப் போக்கும். (ஹோமம்- நெருப்பு, அபிஷேகம்- நீர். கங்கை நீரில் பாவம் கரைந்துவிடுவதுபோல).

● ஆர். பிருந்தா, நீடாமங்களம்.

நான் எம்.ஏ., எம்.பில்., முடித்து தனியாரிடம் வேலை பார்க்கிறேன். எனக்கு அரசு வேலை கிடைக்குமா? எந்தத் துறையில் கிடைக்கும்?

தனுசு லக்னம், பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி. புதன் தசை, தனது புக்தி நடக்கிறது. புதன் 7, 10-க்குடையவர். சூரியன் 9-ல் ஆட்சி. 10-க்குடைய புதன் கடகத்தில்- சந்திரன் ராசியில். சூரியனும் சந்திரனும் ராஜகிரகங்கள். அரசு வேலை உறுதி. புதன் தசை, சுயபுக்தி இறுதியில், கல்லூரியில் வேலை கிடைக்கும். ஒரு விடுமுறை நாளில் கும்பகோணம்- குடவாசல்வழி சேங்காலிபுரம் சென்று குரு தத்தாத்ரேயரை வணங்கிவரவும். வேலை கிடைத்தபிறகு ஒருமுறை அபிஷேக பூஜை செய்யவும்.

● வி.எஸ். செந்தில்குமார், கோவை- 14.

கந்தர்வராஜ ஹோமம் செய்தேன். (ஐந்து வருடங்களாகின்றன). எப்போது திருமணம் நடைபெறும்? ராகு தசை வருகிறது. அதில் திருமணம் நடக்குமா?

மேஷ ராசிக்கு குரு 9-ல் இருக்கிறார். அவருடன் கோட்சாரத்தில் கேது சம்பந்தம். ஆவணிக்குள் திருமணம் நடக்கும்! வரும் தீபாவளியே தலை தீபாவளியாக அமையும். ராகு தசை, ராகு புக்தியில் திருமணம் செய்யலாம்.