ஆர். கவிதா, நாகை.
எனக்குத் திருமணமாகி ஒன்பது வருடமாகிறது. பெரியவர்கள் சொல் பேச்சு கேட்காமல் காதல் திருமணம் செய்துகொண்டேன். இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவர் பெரிய குடிகாரர். ஒன்பது வருடமும் நரக வேதனை. தினமும் குடித்து விட்டுக் கொடுமைப்படுத்துகிறார். அவரிடமிருந்து எப்போது நிரந்தர விடுதலை கிடைக்கும்? குழந்தை களைக் காப்பாற்றும் அளவு எனக்கு வருமானம் கிடைக்குமா? மறுமணத் துக்கு வழி உண்டா? கடவுள்மாதிரி உங்கள் தெளிவான முடிவைப் பின்பற்றுவேன்.
33 வயது முடிந்து 34 வயது ஆரம்பம். கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம், தனுசு லக்னம். 7-க்குடைய புதன் 8-ல் மறைவு. புதனுக்கு வீடுகொடுத்த சந்திரன் அவருக்கு 8-ல் கும்பத்தில் மறைவு. புதன் தசை, புதன் புக்தி. வீட்டுக்காரர் ரவிக்குமார் தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 40 வயது. 38 வயதுமுதல் சந்திர தசை. அத்துடன் ஏழரைச்சனி வேறு. சந்திரன் 8-க்குடையவர். ராசிநாதன் செவ்வாய் 8-ல் நீசம்; சந்திரனோடு பரிவர்த்தனை. குடிகாரரை ஏன் காத−த்தீர்கள்? அதற்கு தண்டனைதான் இந்த அவஸ்தை. 2020 சனிப்பெயர்ச்சிவரை கணவர் திருந்தமாட்டார். மகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்து அவரை விவாகரத்து செய்துவிடுங்கள். மறுமணம் செய்ய முன்வரும் ஆண் சரீர சுகத்துக்கு மட்டும் ஆசைப்படுகிறவராக இருந்தால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை சிந்தியுங்கள். ஏதாவது வேலைசெய்யுங்கள். அல்லது வங்கிக்கடன் வாங்கி ஏதாவது தொழில் செய்யுங்கள். இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு உங்களுக்கு வாழ்வளிக்க உண்மையானவர் வருவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?
● மு. அன்பழகன், ஆதம்பாக்கம்.
மகன்- மருமகள் ஜாதகங்களை தக்க ஜோதிடர்களை அணுகிப் பொருத்தம் பார்த்து, திருமணம் செய்து மூன்று வருடங்கள் ஆகின்றன. இன்னும் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. அவர்கள் இருவரும் வெளிநாட்டில் இருப்பதால் என்னை அங்கு வரச்சொல்கிறார்கள். போகலாமா? எனது மைத்துனர் மகனுக்கு சில மாதங்களுக்குமுன்பு திருமணம் நடந்தது. பெண்ணின் தாய் கருத்து வேறுபாட்டால் தன் பெண்ணை மட்டும் பிரித்து அழைத்துச் சென்றுவிட்டார். அவர்கள் ஒன்றுசேர்வார்களா? அல்லது பையனுக்கு மறுமணம் அமையுமா?
மகன் வேந்தன் உத்திராட நட்சத்திரம், மகர ராசி, விருச்சிக லக்னம். ராகு தசை கேது புக்தி நடப்பு. மருமகள் காயத்ரிக்கும் மகர ராசி, மகர லக்னம், திருவோண நட்சத்திரம். அவருக்கும் ராகு தசை. ஜாதகப் பொருத்தம் எல்லாம் சரிதான். ஆனால் சம ராகு தசை நடக்கிறதே- அது சரியல்லவே! இதைப் பொருத்தம் பார்த்த தக்க ஜோதிடர்கள் உணர்த்தவில்லையா? அதனால் வாரிசு தோஷம் உண்டு. சூலினிதுர்க்கா ஹோமமும், வாஞ்சாகல்ப கணபதி ஹோமத்தில் புத்திரப்ராப்தி ஹோமமும், சந்தான பரமேஸ்வர ஹோமமும், சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும் செய்து, அவர்கள் இருவருக்கும் கலச அபிஷேகம் செய்யவேண்டும். உங்களுக்கு திருவோண நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னம். புதன் தசை, ராகு புக்தி. இந்த நிலையில் மகனுக்கும் மகளுக்கும் சம ராகு நடக்கும்போது, ராகு புக்திக்காரர் அவர்களோடு போய் சேர்ந்திருப்பது ஆகாது. ஆகவே வெளிநாட்டுப் பயணத்தைத் தவிர்க்கவும். கண்ணன் தனுசு ராசி, பூராட நட்சத்திரம், தனுசு லக்னம். தாய் திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மேஷ லக்னம். இருவர் ஜாதகத்திலும் தோஷம் உண்டு. அதிலும் பெண் ஜாதகத் தில் 8-ல் சனி இருப்பது மாங்கல்ய தோஷமாகும். இந்த ஜாதகிக்கு முப்பது வயதுக்குமேல்தான் திருமணம் செய்திருக்கவேண்டும். நடப்பு வயது 24. முன்னதாக திருமணமானதால் மணவாழ்வில் மகிழ்ச்சி இல்லை; பிரிவு உண்டாகிவிட்டது.
● எஸ். பாஸ்கர், குடவாசல்.
எந்தத் தொழில் செய்தாலும் லாபகரமாக நடத்த முடியவில்லை. பொருளாதார நெருக்கடியும் கடன் பிரச் சினைகளும் சங்கடப்படுத்துகிறது. அம்மா பெயரிலுள்ள வீட்டில் கடன் இருக்கிறது. கடன் எப்போது அடையும்?
பாஸ்கர் கும்ப ராசி, தனுசு லக்னம். 24 வயதுமுதல் சனி தசை ஆரம்பம். 43 வயதுவரை நடக்கும். தற்போது 34 வயது நடக்கிறது. இனிமேல் சனி தசை பிற்பகுதியில் படிப்படியான தொழில் முன்னேற்றமும், சம்பாத்தியமும் உண்டாகும்.
● திருமதி சாந்தி, வேலூர்.
எனது மகனின் திருமணம் எப்படி அமையும்? பெற்றோர் பார்க்கும் பெண்ணா? காதல் திருமணமா?
மகனுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். லக்னத் துக்கு 8-ல் செவ்வாய், ராகு; 6-ல் சனி. செவ்வாய் சனியைப் பார்ப்பதால் சந்தேகமில்லாமல் கலப்புத் திருமணம்- காதல் திருமணம் என்பதுதான் அவர் ஜாதக விதி. பெற்றோர் அதற்கு ஆதரவுதர வேண்டியது கடமை! ஏற்றுக்கொள்வது சிறப்பு.
● க. முத்து, நெல்லை.
எனது மகளுக்கு எப்போது திருமணம் நடக்கும்? செவ்வாய் தோஷம் உள்ள வரன்தான் பார்க்கவேண்டுமா?
வசந்தா கன்னி லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். 4-ல் செவ்வாய், சனி சேர்க்கை இருப்பதால் 30 வயதில்தான் திருமணம் செய்யவேண்டும். இப்போது 22 வயதுதான் நடக்கிறது. செவ்வாய், சனி சேர்ந்துள்ள ஜாதகமாகச் சேர்க்கவேண்டும்.
● எல். ஜெகன், திருவள்ளூர்.
என் மகள் அம்பிகாவுக்கு திருமணம் எப்போது நடக்கும்? செவ்வாய் தோஷ மாப்பிள்ளைதான் பார்க்கவேண்டுமா? தந்தைக்கு அடிக்கடி உடல்நிலை பாதிக்கிறது. என்ன பரிகாரம் செய்யலாம்?
அம்பிகாவுக்கு சிம்ம லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். செவ்வாய் 8-ல் குரு வீட்டில் இருப்பதால் தோஷமில்லை. லக்னத் தில் கேது, 7-ல் ராகு என்பதால் நாக தோஷம் உண்டு. சனி 5-ல் நிற்க, 7-ஆம் இடத்தைப் பார்ப் பதால் மாங்கல்ய தோஷம் உண்டு. அதனால் 27 வயது முடிந்தபிறகுதான் திருமணம் கூடும். தந்தைக்கு ஆயுள் தீர்க்கம். குருப்பெயர்ச் சிக்குப்பிறகு பூரண சுகம் உண்டாகும். திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்கு பாலாபிஷேக பூஜை செய்யவும்.
● வி. சண்முகம், கூடலூர்.
எனது தந்தை போலீஸில் வேலைப் பார்த்தார். திடீரென இறந்துவிட்டார். வாரிசு வேலை கேட்டு முயற்சிக்கிறேன். கிடைக்குமா? திருமணமாகி இரண்டு வருடமாகியும் குழந்தை இல்லை. எப்போது கிட்டும்?
ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி, மிதுன லக்னம். குரு தசை நடக்கிறது. வழக்குத் தொடர்ந்து வெற்றிபெற்று வாரிசு வேலையை வாங்கவேண்டும். 5-ல் சனி இருப்பதால் புத்திர தோஷம் உண்டு. திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு வாரிசு கிடைக்கும்.
● ஐ. ராமச்சந்திரன், கும்பகோணம்.
29 வயதுக்குப்பிறகு சந்நியாசம் மேற் கொள்ள விரும்புகிறேன். வாய்ப்பு உள்ளதா?
அதென்ன 29 வயது கணக்கு? அனுபவிக்க வேண்டியதை எல்லாம் அனுபவித்துவிட்டு பிறகு சந்நியாசம் போகலாமென்று நினைக் கிறீர்களா? அந்த ஆசையே சந்நியாசத்துக்கு எதிரியாயிற்றே! கும்ப லக்னத்துக்கு 7-ல் சூரியன், சுக்கிரன், புதன் இருக்கிறார்கள். எத்தனை பேரைக் காதலித்து கைவிடப் போகிறீர்களோ- கடவுளுக்கே வெளிச்சம்.
● பி. சச்சிதானந்தம், ஈரோடு.
எனது பையனுக்கு எப்போது திருமணம் நடக்கும்?
மகன் கண்ணனுக்கு விசாக நட்சத்திரம், துலா ராசி, மிதுன லக்னம். மார்ச்சில் 30 வயது முடியும். அதன்பிறகு திருமணம் கைகூடும். அந்நிய சம்பந்தம். செவ்வாய், சனி சேர்க்கை என்பதால் காமோகர்ஷண ஹோமமும், கந்தர்வராஜ ஹோமமும் செய்துகொள்ளவும்.