•எஸ்.வி. மாணிக்கசுந்தரம், சென்னை-42.

எனது மகள் சிந்துவின் மறுமணத்துக்கு தாங்கள் தங்கள் துணைவியாருடன் பள்ளத்தூர் வந்து ஹோமப் பரிகாரம் செய்துவைத்தீர்கள். நன்றி. இப்போது ஒரு வரன் ஜாதகம் வந்துள்ளது. அதை இணைக்கலாமா- வேண்டாமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்து கூறவேண்டும். சரியான ஜாதகத்தை இணைக்காததால் முதல் திருமணம் (5-3-2012-ல்) விவாகரத்தாகிவிட்டது.

சிந்து மக நட்சத்திரம், சிம்ம ராசி, மகர லக்னம். வரன் ராஜ்குமார் பரணி நட்சத்திரம், மேஷ ராசி, ரிஷப லக்னம். 2020 ஜனவரி வரை ஆணுக்கு செவ்வாய் தசை, பிறகு ராகு தசை. சிந்துவுக்கு 2021 மே வரை சூரிய தசை. இருவருக்கும் ஒன்பது பொருத்தங்கள் உள்ளன. திருமணம் செய்யலாம். 2019 அக்டோபரில் (தீபா வளிக்குப்பிறகு) குருப் பெயர்ச்சிக்குப்பிறகு திருமணம் செய்யலாம். திருமணத்தேதி 4, 5, 7, 8 வராமல் 1, 3, 6-ல் அமைக்கவேண்டும்.

•கே. பாஸ்கரன், சென்னை- 56.

Advertisment

எனது மகன் ஹேம் நாத்துக்கு எப்பொழுது திருமணம் நடைபெறும்? பூர்வீகச் சொத்துப் பிரச்சினை எப்பொழுது தீர்வுக்கு வரும்?

ஹேம்நாத் பூச நட்சத்திரம், கடக ராசி, கும்ப லக்னம். 2021 மார்ச் மாதம் சனிப்பெயர்ச்சிக்குப்பிறகு திருமணம் கூடும். அதன்பிறகே பூர்வீகச் சொத்துப் பிரச்சினைக்கு தீர்வுவரும்.

•ஏ. தாமரை, ஈரோடு-2.

Advertisment

எனக்கு 2020-ல் மாறும் சனிப்பெயர்ச்சிப் பலன் எப்படியிருக்கும்? நான் கும்ப ராசி. ஏழரைச் சனி ஆரம்பிக்கிறது. முன்னெச்சரிக்கை யாக என்ன பரிகாரம் செய்யவேண்டும்? என் மகள் காவேரிக்கு மறு மணம் எப்போது நடை பெறும்? ஏற்கெனவே தங்கள்முன்னிலையில் புனர்விவாக ஹோமம் நடந்தது. மறுபடி ஹோமம் செய்ய வேண்டுமா?

மகள் காவேரிக்கு ஏற்கெனவே செய்த ஹோமம் போதும். வேறு ஹோமம் தேவையில்லை. அவர் ஜாதகப்படி 30 வயதில் நல்ல கணவரும், நல்ல மண வாழ்க்கையும் அமையும். 2020 ஜனவரியில் 29 வயது முடிந்து 30 தொடக்கம். அதுவரை பொறுமையாக இருக்கவும். அடுத்து நடக்கும் மறுமணமும், மணவாழ்க்கையும் பரிகார ஹோமப் பலனாகத் திருப்திகரமாக அமையும்; சந்தேகம் வேண்டாம். ஜாதகப்படி 30 வயது முடிந்துதான் திருமணயோகம். பரிகார ஹோமம் செய்ததால் 30 நடப்பில் மணம் செய்யலாம். (ஏற்கெனவே உங்களுக்கு பதில் சொன்னதாக ஞாபகம்!)

jj

•கே. கணேசன், ஈரோடு.

85 வயது நடக்கும் நான், என் பேத்தி காவேரியின் திருமணம் முடியும்வரை உயிர்வாழ ஆசைப்படுகிறேன். அவளுக்கு மறுமணம் எப்போது நடக்கும்? அவளுக்கு ஆயுள் குற்றம் உள்ளதென்று குடும்ப ஜோதிடர் கூறுகிறார். ஆயுள் தோஷம் உண்டா?

முதலிலில் எனக்கு ஒரு சந்தேகத்தைத் தெளிவுபடுத்தவேண்டும். முந்தைய கேள்வியில் "தாமரை' என்ற பெயரில் மகள் காவேரிக்கு மறுமணம் எப்போது என்று கேட்கப்பட்டது. இப்போது தாத்தாவாகிய நீங்கள் பேத்திக்கு (காவேரிக்கு) மறுமணம் எப்போது என்று கேட்கிறீர்கள். ஒரே ஜாதகம்! ஒரே கையெழுத்து. ஒரே கவர். ஒரே ஊர் ஈரோடு. தெருப் பெயர் மட்டும் மாற்றி எழுதியுள்ளீர்கள். ஏன்? ஜோதிடரை "டெஸ்ட்' செய்கிறீர்களா? வக்கீலிலிடமும் வைத்தியரிடமும், ஜோதிடரிடமும் பொய் சொல்லாமல் உண்மையைச் சொன்னால்தான் உரிய நிவாரணம் கிடைக்கும்.

•ஏ. குப்புசாமி, சென்னை-78.

நான் வாழ்க்கையில் எல்லாராலும் ஏமாற்றப்பட்டேன். சென்னையில் ஒரு அரசியல் பிரமுகரும் எனது இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டார். என்னுடைய வீட்டுப்பத்திரம், நிலப்பத்திரம் எல்லாம் வெள்ளத்தில் போய்விட்டது. தேடு கூலிகொடுத்து தாலுகா ஆபிசில் தேடியும் பத்திரம் கிடைக்கவில்லை. என்ன செய்வது?

உத்திராட நட்சத்திரம், மகர ராசி, கடக லக்னம். 73 வயது. ஏழரைச்சனி 80 வயதுவரை நடக்கும். இது மூன்றாவது சுற்று. புதன் தசை விரயாதிபதி தசை. இழந்தவை இழந்தவைதான். மீண்டும் கிடைக்காது. ஆசைகளை வளர்த்துக்கொள்ளாமல், இருப்பதைக்கொண்டு திருப்தியடைவதே நல்லது. வேறு எந்தப் பரிகாரமும் இல்லை! பயன்படாது.

•ஆர். பாஸ்கர், மதுரை-11.

நான் ஆன்மிகத்தில் காவி வேஷ்டி- ருத்திராட்ச மாலை என்ற நிலையில் இருக்கிறேன். குடும்பத்தைவிட்டு விலகியிருக்கலாமா? சென்னையில் ஒரு காரியத்தை எதிர்பார்க்கிறேன். முன்னேற் றம் தெரியுமா?

காவி உடையில் இருந்தால் ஆன்மிகம் என்று அர்த் தமா? குடும்பத்தைவிட்டு விலக ஏன் நினைக்கிறீர்கள்? ரேவதி நட்சத் திரம், மீன ராசி, தனுசு லக்னம். 2017 செப்டம்பர்முதல் ராகு தசை ஆரம்பம். 18-5-2020 வரை ராகு தசை தனது புக்தி. இது போராட்டமான காலம்! உண்மையான ஞானத்தைத் தேடியலையுங்கள். ஞானம் கைவரப்பெற்றால் ஆன்மிகவாதிதான்- ஆன்மிக வாழ்க்கை தான்! ஒப்புக்கொள்ளலாம். தட்டுங்கள் திறக்கப்படும். தேடுங்கள் கிடைக்கப்பெறும்! கேளுங்கள் கொடுக்கப்படும்!

•கி. செல்லக்கண்ணு, வைத்திய−ங்கபுரம்.

என் மகன் ராதாகிருஷ்ணன் பி.காம் படித்து தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். அவருக்கு அரசு வேலை அமையுமா? எனது மகள் சுப்புலட்சுமி பி.ஏ., ஆங்கிலம் முடித்து வீட்டில் இருக்கிறாள். அவளுக்கு அரசு வேலை கிடைக்குமா? இளைய மகன் குருசத்தி 10-ஆம் வகுப்பு முடித்து தனியார் மில்லில் வேலை பார்க்கிறான். வேலை மாற்றம், அரசு வேலை அமையுமா? மூவருக்கும் எப்போது திருமணம் நடைபெறும்?

ராதாகிருஷ்ணன் புனர்பூச நட்சத்திரம், மிதுன ராசி, துலா லக்னம். 2019 அக்டோபரில் 29 வயது முடிந்து 30 ஆரம்பம். சுக்கிரன் நீசம். திருமணம் தாமதமாகும். சூரியன் மறைவு. அரசு வேலைக்கு இடமில்லை. சுப்புலட்சுமி கன்னி லக்னம். 2-ல் ராகு. 3-ல் செவ்வாய், கேது. 6-ல் உள்ள சனி 8-ஆம் இடம் மாங்கல்ய ஸ்தா னத்தையும் செவ்வாயையும் பார்ப்பது தோஷம். 26 வயது ஆரம்பம். தாமதத் திருமணம் அல்லது காந்தர்வத் திருமணம் என்பது விதி. குருசத்தி மீன ராசி, மேஷ லக்னம். ராசியில் சனி, கேது சம்பந்தம். 24 வயது ஆரம்பம். தனியார் துறை வேலை தொடரும்; அரசு வேலைக்கு இடமில்லை. திருமணம் 27 வயதில். மூவருடைய ஜாதக தோஷம் விலகவும், வேலை, சம்பாத்தியம், வருமானம், திருமணம், வாரிசு, குடும்ப முன்னேற்றம், ஆரோக்கியம், ஆயுள் தீர்க்கம் எல்லாவற்றுக்கும் செவலூர் பூமிநாதசுவாமி கோவி−ல் ராஜப்பா குருக்களிடம் ஹோமம் செய்து, மூவருக்கும் கலச அபிஷேகம் செய்ய வேண்டும். நேரில் வந்தால் விவரம் எழுதித் தருவேன்.

•மகேஷ், கோவை.

தங்கள் அறிவுரைப்படி, கோவை சுகேஷ் வசம் பேரனுக்கு ஹயக்ரீவர் ஹோமம், சனி சாந்தி ஹோமம் 2019 ஜூலையில் செய்தேன். அத்துடன் திங்கட்கிழமை ருத் ராபிஷேகம் செய்துவிட்டேன். நன்றி! அடுத்த கேள்வி- கேது தசையில் சனி புக்தி 2020 ஜனவரியில் முடிந்து புதன் புக்தி வரும். அதில் எனக்கு தேகசுகம் பாதிக்குமா?

மீன லக்னத்துக்கு புதன் 4, 7-க்குடையவர் 6-ல் மறைவதால், உடல்நலக்குறைவு வரலாம். ஆனால் அவர் ராசிநாதன் என்பதால் (மிதுன ராசி) பாதிக்காது. கோவையில் தன்வந்திரி கோவி−ல் 17 புதன்கிழமை அர்ச்சனை செய்யவும்.

•டி. குலசேகரப்பெருமாள், நாகர்கோவில்.

என்னுடைய மகன் ஆனந்தன் எம்.சி.ஏ., பாஸாகி சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்தான். மருமகள் பவித்ரா பி.ஈ., முடித்து சென்னையில் வேலை பார்த்தாள். மருமகளை கம்பெனியின்மூலமாக அமெரிக்கா அனுப்பினார்கள். அவளுக்குத் துணையாக மகனும் வேலையை விட்டுவிட்டு கூடவே சென்றுவிட்டான். மகனுக்கு இன்னும் நல்ல வேலை கிடைக்காமல் கடைகளில் பில் போட்டுக்கொண்டிருக்கிறான். சொந்த வியாபாரம் செய்ய விரும்புகிறான். செய்யலாமா? அல்லது நல்ல வேலை கிடைக்குமா?

மகன் ஆனந்தன் மீன லக்னம், ரிஷப ராசி, ரோகிணி நட்சத்திரம். 2020 மார்ச்- அடுத்த சனிப்பெயர்ச்சிவரை அட்டமச்சனி நடப்பதால், திறமைக்கேற்ற வேலையும், படிப்பிற்கேற்ற வேலையும் வருமானமும் கிடைக்காது. அதன்பிறகு நல்ல வேலை அமையும். அதுவரை மகனுக்காக நீங்கள் 45 மிளகை சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி சனிக்கிழமைதோறும் காலபைரவர் சந்நிதியில் நெய் தீபமேற்றவேண்டும். அத்துடன் பவித்ராவுக்கும் விருச்சிக ராசி; 2020 மார்ச்வரை ஏழரைச்சனி நடக்கிறது. முடிந்தால் திருக்கொள்ளிக்காடு சென்று கலப்பை ஏந்திய சனீஸ்வரருக்கு இருவர்பேரிலும் அர்ச்சனை செய்யலாம்.

•எஸ். தாமரை, சிங்கம்புணரி.

கேள்வி- பதில் பகுதியில், என் மகளுக்கு மறுமணம் சிறப்பாக நடக்க விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகில் திருவிடையாறு செல்லுமாறு எழுதியிருந்தீர்கள். நன்றி. திருவையாறா அல்லது திருவிடையாறா? கோவில் குருக்கள், சுவாமி பெயர் பற்றிய விவரம் கூறவும்.

திருவிடையாறும் போகவேண்டாம்; திருவையாறும் போகவேண்டாம். மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம் மாப்படி சென்று சுமங்கலி− காளியிடம் பௌர்ணமி அல்லது ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை நாளில் மனமுருகப் பிரார்த்தனை செய்தால் போதும். தொடர்புக்கு ஸ்ரீதர், செல்: 99408 30484. இதிலும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் எங்கும் போகவேண்டாம். சிங்கம்புணரி வாத்தியார் கோவி−ல் ஏழு பௌர்ணமி, ஏழு அமாவாசை அபிஷேகப் பூஜை செய்யலாம். 2020 ஜனவரியில் 29 வயது முடிந்து 30 ஆரம்பிக்கும். அக்காலம் மறுமணம் நடக்கும்.

•ஜி. ஜானகிராமன், தூத்துக்குடி.

எனது மருமகளுக்கு முதல் குழந்தை நார்மல் டெ−வரிமூலம் பையன் பிறந்தான். இரண்டாவது குழந்தை பிறக்க ஏப்ரல் 20-ஆம் தேதி என்று குறித்து, பிறகு ஏப்ரல் 1-ஆம் தேதி செக்கப்புக்குப்போன மருமகளை உட்காரவைத்து, பிள்ளைக்கு நீர்ச்சத்து குறைவாக உள்ளது என்றும், உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்றும் கூறி ஆபரேஷன் செய்து பெண் குழந்தை பிறந்துவிட்டது. குழந்தைக்கு தடுப்பு ஊசி போடப் போனபோது, அங்குள்ள டாக்டர் குழந்தைக்கு இதயத்தில் கோளாறு உள்ளது என்று தடுப்பு ஊசி போட மறுத்துவிட்டார். திருநெல்வேலி− டாக்டருக்கு எழுதிக்கொடுத்தார். அவர் கண்டுபிடிக்க முடியவில்லை என்று மதுரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப, அவர்கள், "குழந்தைக்கு இதயத்துக்கு இரண்டு இரத்தக் குழாய் உண்டு. ஆனால் ஒரு இரத்தக் குழாய்தான் உள்ளது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டும். இது சென்னை அல்லது திருவனந்தபுரம் ஆஸ்பத்திரியில்தான் செய்யவேண்டும்' என்று நாட்களைக் கடத்திவிட்டார்கள். சென்னையில் ஐந்தரை லட்ச ரூபாய் செலவாகும் என்றார்கள். திருவனந்தபுரம் சென்றோம். ஒரு மாதம் அலையவிட்டார்கள். ஜுன் 3-ஆம் தேதி குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்து, ஒரு ரத்தக்குழாயைப் பிரித்து இரண்டாக்கிவிட்டார்கள். இதயத்தில் இருந்த ஓட்டையையும் அடைத்துவிட்டார்கள். இப்பொழுது என் பேத்தி ஜாதகத்தை அனுப்பியுள்ளேன். அவளுக்கு ஆயுள் தீர்க்கம் உண்டா? எதிர்காலம் எப்படியிருக்கும்?

1-4-2019, பங்குனி 18-ஆம் தேதி, அவிட்ட நட்சத்திரம், கும்ப ராசி, கடக லக்னத்தில் குழந்தை ஜனனம். செவ்வாய் தசை இரண்டு வருடம், இரண்டு மாதம். தசாநாதன் செவ்வாய் 11-ல்- பாதக ஸ்தானம். ராசிக்கும் லக்னத்துக்கும் செவ்வாய்க்கும் குரு பார்வை இல்லை. மருத்துவச் சிகிச்சை உதவியோடு செவ்வாய் தசையைக் கடந்தாலும், அடுத்துவரும் ராகு தசை மாரக தசையாக வருகிறது. 2020 பங்குனியில் அவிட்ட நட்சத்திரத்தில் ஒரு வயது முடியும்போது ஆயுஷ் ஹோமம், நவகிரக ஹோமம் செய்யவும். இரண்டு வயது முடிவில் மறுபடியும் சூலிலினி துர்க்கா ஹோமம் செய்யவும்.

•செந்தில்நாதன்-

என் தாய்- தந்தைக்கு நான் ஒரே மகன். ஜாதகரீதியாக என்னை தனிக்குடித்தனம் போகச்சொல்கிறார்கள். நான் என்ன செய்வது?

செந்தில்நாதன் விருச்சிக லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசி. லக்னத்துக்கு 2-ல் கேது. அத்துடன் ஏழரைச்சனியில் விரயச்சனி. 32 வயதுமுதல் குரு தசை. குரு 12-ல். (நடப்பு 37 வயது). மனைவி லலி−தாவுக்கு 34 வயது முடிந்து 35 ஆரம்பம். பரணி நட்சத்திரம், மேஷ ராசி, கன்னி லக்னம். ராகு தசை நடக்கிறது. குழந்தை அவந்திகாவுக்கு கும்ப ராசி, சதய நட்சத்திரம். நான்கு வயதுவரை (2021 வரை) ராகு தசை நடக்கிறது. கூட்டுக்குடும்பமாக இருந்தால் யாருக்காவது உயிர்ச்சேதம் அல்லது பொருட்சேதம் வரலாம். எனவே தனிக்குடித்தனம்- பெற்றோரைவிட்டு விலகியிருப்பது நல்லது. வேண்டிய உதவிகளைச் செய்து பக்கத்திலேயே விலகியிருப்பதே பரிகாரம்.

•ஏ.டி. புஷ்பராணி, விழுப்புரம்.

எனக்கு அரசு வேலை கிடைக்குமா? கனவில் அடிக்கடி சர்ப்பம் வருகிறது; அருகில் இருப்பதுபோல உணருகிறேன். இதற்குப் பரிகாரம் என்ன?

அஸ்த நட்சத்திரம், கன்னி ராசி, மிதுன லக்னம். 17 வயதுமுதல் 35 வயதுவரை ராகு தசை நடக்கிறது. அதனால் சர்ப்பம் கனவிலும் வரும்; பார்வையிலும் தென்படும். நாகதோஷப் பரிகாரம் செய்யலாம். காளஹஸ்தி சென்று செய்யலாம். பரிகாரப்பூஜை செய்வார்கள்.

•ஆர். பெருமாள், பாடியந்தல்.

எனது மூத்தமகன் சிவக்குமார் ஐ.டி.ஐ டர்னர் படிப்பு முடித்து குறைந்த சம்பளத்தில் கஷ்டப்படுகிறான். கேது தசை முடிந்து சுக்கிர தசை ஆரம்பிக்கப் போகிறது. இது எப்படியிருக்கும்? சொந்த வீடு கட்டும் யோகம் வருமா? நான்காவது தசையாக வருவது நல்லதா?

நான்காவது தசையாக சனி தசைதான் வரக்கூடாது. சுக்கிர தசை வருவதால் தோஷமில்லை. பூச நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னம். சுக்கிரன் 10-க்குடையவர். 10-ல் ராகு. எனவே வெளிநாட்டுக்குப் போகும் யோகம் ஏற்படும். அங்கு சென்றபிறகு சம்பாத்தியம் செய்து, சுக்கிர தசை, தனது புக்திக்குப்பிறகு சூரியன் அல்லது சந்திர புக்தியில் சொந்தவீடு கட்டலாம். வெளிநாடு போக- சேலம்- மேட்டூர் அருகில் நங்கவள்ளி சென்று லட்சுமி நரசிம்மருக்கு அபிஷேகபூஜை செய்யவேண்டும். தொடர்புக்கு: பாலாஜி- செல்: 94435 15904.

•ஆர். கவிதா, நாகை.

எனக்குத் திருமணமாகி ஒன்பது வருடமாகிறது. பெரியவர்கள் சொல்பேச்சு கேட்காமல் காதல் திருமணம் செய்துகொண்டேன். இரண்டு குழந்தைகள் உள்ளன. கணவர் பெரிய குடிகாரர். ஒன்பது வருடமும் நரக வேதனை. தினமும் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துகிறார். அவரிடமிருந்து எப்போது நிரந்தர விடுதலை கிடைக்கும்? குழந்தைகளைக் காப்பாற்றும் அளவு எனக்கு வருமானம் கிடைக்குமா? மறுமணத்துக்கு வழி உண்டா? கடவுள்மாதிரி உங்கள் தெளிவான முடிவைப் பின்பற்றுவேன்.

33 வயது முடிந்து 34 வயது ஆரம்பம். கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம், தனுசு லக்னம். 7-க்குடைய புதன் 8-ல் மறைவு. புதனுக்கு வீடுகொடுத்த சந்திரன் அவருக்கு 8-ல் கும்பத்தில் மறைவு. புதன் தசை, புதன் புக்தி. வீட்டுக்காரர் ரவிக்குமார் தனுசு லக்னம், விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 40 வயது. 38 வயதுமுதல் சந்திர தசை. அத்துடன் ஏழரைச்சனி வேறு. சந்திரன் 8-க்குடையவர். ராசிநாதன் செவ்வாய் 8-ல் நீசம்; சந்திரனோடு பரிவர்த்தனை. குடிகாரரை ஏன் காத−த்தீர்கள்? அதற்கு தண்டனைதான் இந்த அவஸ்தை. 2020 சனிப்பெயர்ச்சிவரை கணவர் திருந்தமாட்டார். மகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்து அவரை விவாகரத்து செய்துவிடுங்கள். மறுமணம் செய்ய முன்வரும் ஆண் சரீர சுகத்துக்கு மட்டும் ஆசைப்படுகிறவராக இருந்தால், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதை சிந்தியுங்கள். ஏதாவது வேலைசெய்யுங்கள். அல்லது வங்கிக்கடன் வாங்கி ஏதாவது தொழில் செய்யுங்கள். இரண்டு குழந்தைகள் பெற்றபிறகு உங்களுக்கு வாழ்வளிக்க உண்மையானவர் வருவார் என்று எதிர்பார்க்கிறீர்களா?