ஜோதிடபானு "அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம் பதில்கள்

/idhalgal/balajothidam/jothidam-answers-42

● என். பிரியா, வல்லம்.

தங்களின் வழிகாட்டுதலின்படி என் மகளை பி.ஏ. (ஆங்கிலம்) படிக்க வைத்தபிறகு, ஐ.ஏ.எஸ் பயிற்சியில் சேர்க்க முடிவெடுத்துள்ளோம். இப்பொழுது பி.ஏ. முதல் வருடம் பயின்று வருகிறாள். பி.ஏ. முடித்ததும் ஐ.ஏ.எஸ். எழுதலாமா?

அல்லது எம்.ஏ. முடிக்க வேண்டுமா? படிப்பில் சில தடைகள் ஏற்படுகின்றன. பரிகாரம் வேண்டுமா? திருமணம் எப்போது நடக்கும்? மகள் தேவியின் படிப்பு, எதிர்காலம் பற்றி ஏற்கெனவே 24-3-2017-ல் "பாலஜோதிடம்' இதழில் பதில் கூறியிருக்கிறேன். படிப்பில் தடை நீங்கி ஆர்வமாகப் படிக்கவும், லட்சியம் ஈடேறவும் காரைக்குடியில் சுந்தரம் குருக்களைக் தொடர்புகொண்டு ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம் முதலியவை செய்து, தேவிக்கு கலச அபிஷேகம் செய்யலாம். செல்: 99942 74067. தேவிக்கு இப்போது 18 வயதுதான். 25 வயதுவரை சுக்கிர தசை. இதன்பிறகு சூரிய தசையில் ஐ.ஏ.எஸ். ஆனபிறகு திருமணம் செய்வது நல்லது. மிதுன லக்னத்தில் ராகு, 7-ல் கேது இருப்பது மாங்கல்ய தோஷம். 7-க்குடைய குருவும் 12-ல் மறைவு. எனவே 27 வயது அல்லது அதன்பிறகு திருமண முயற்சிகள் செய்யலாம். தற்போது படிப்பு, பட்டம், அரசு வேலைதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த ஹோமம் அதற்கு வழியமைத்துத் துணைபுரியும்.

● ஜானகி இராமகிருஷ்ணன், சென்னை-64.

எனது கணவர் சமீபத்தில் புதிய கம்பெனியில் சேர்ந்தார். அங்கு சில பிரச் சினைகளை சந்திப்பதாகவும், வேறு வேலை பார்க்கப் போவதாகவும் கூறு கிறார். அதிகமாக கோபம் வருகிறது. இதே பணியில் இருப்பாரா? வேலை மாறுவாரா? பரிகார பூஜை எதுவும் தேவையா?

இராமகிருஷ்ணன் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னம். சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசி என்றாலே கோபம் வரத்தானே செய்யும்! கோட்சாரரீதியாக குரு கடக ராசிக்கு 6-ல் ஆட்சி, மறைவு. என்றாலும் ராசிக்கு 10-ஆம் இடத்தை- மேஷத்தைப் பார்ப்பதால் வேலையை விட்டுவிடமாட்டார். 2011 முதல் 2026 வரை சந்திர தசை. அது லக்னத்துக்கு 12-க்குடைய தசை என்பதால், வேலை மாற் றத்தை விரும்புகிறார். 2023-ல் அட்டமச்சனி வரும்போது சந்திர தசை சந்திப்பு ஏற்படும். அப்போது வேலை மாற்றம் வரும். அந்த நேரம் மகன் சிவசைலநாதனுக்கும் கடக ராசிக்கு அட்டமச்சனி நடக்கும். அப்போது அவனுக்கும் பள்ளி மாற்றம் வரும். தகப்பனாருக்கு வேலை மாற்றம் வரும். அக்காலம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலையில், பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதைக் கோட்டைவிடும் சூழ்நிலையை சமாளிக்க ஹோமம்செய்து, குடும்பத்துடன் கலச அபிஷேகம் செய்து கொள்வது அவசியம்! அதில், பையன் படிப்பு தடையில்லாமல் முன்னேறவும், குடும்பத் தாரின் ஆரோக்கியத்துக்கும் சேர்த்து 19 அல்லது 21 ஹோமம் செய்ய வேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்களை, செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யலாம். அதுவரை தற்காலிக சாந்திக்கு திங்கட்கிழமைதோறும் சிவலிங்க அபிஷே கத்துக்கு பால் வாங்கித்தரவும்.

● மகேஷ், கோவை.

மகள் பாமினி மக நட்சத்திரம், சிம்ம ராசி. தாங்கள் கூறியபடி லண்டனில

● என். பிரியா, வல்லம்.

தங்களின் வழிகாட்டுதலின்படி என் மகளை பி.ஏ. (ஆங்கிலம்) படிக்க வைத்தபிறகு, ஐ.ஏ.எஸ் பயிற்சியில் சேர்க்க முடிவெடுத்துள்ளோம். இப்பொழுது பி.ஏ. முதல் வருடம் பயின்று வருகிறாள். பி.ஏ. முடித்ததும் ஐ.ஏ.எஸ். எழுதலாமா?

அல்லது எம்.ஏ. முடிக்க வேண்டுமா? படிப்பில் சில தடைகள் ஏற்படுகின்றன. பரிகாரம் வேண்டுமா? திருமணம் எப்போது நடக்கும்? மகள் தேவியின் படிப்பு, எதிர்காலம் பற்றி ஏற்கெனவே 24-3-2017-ல் "பாலஜோதிடம்' இதழில் பதில் கூறியிருக்கிறேன். படிப்பில் தடை நீங்கி ஆர்வமாகப் படிக்கவும், லட்சியம் ஈடேறவும் காரைக்குடியில் சுந்தரம் குருக்களைக் தொடர்புகொண்டு ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், நீலுசரசுவதி ஹோமம், வாக்வாதினி ஹோமம் முதலியவை செய்து, தேவிக்கு கலச அபிஷேகம் செய்யலாம். செல்: 99942 74067. தேவிக்கு இப்போது 18 வயதுதான். 25 வயதுவரை சுக்கிர தசை. இதன்பிறகு சூரிய தசையில் ஐ.ஏ.எஸ். ஆனபிறகு திருமணம் செய்வது நல்லது. மிதுன லக்னத்தில் ராகு, 7-ல் கேது இருப்பது மாங்கல்ய தோஷம். 7-க்குடைய குருவும் 12-ல் மறைவு. எனவே 27 வயது அல்லது அதன்பிறகு திருமண முயற்சிகள் செய்யலாம். தற்போது படிப்பு, பட்டம், அரசு வேலைதான் குறிக்கோளாக இருக்க வேண்டும். இந்த ஹோமம் அதற்கு வழியமைத்துத் துணைபுரியும்.

● ஜானகி இராமகிருஷ்ணன், சென்னை-64.

எனது கணவர் சமீபத்தில் புதிய கம்பெனியில் சேர்ந்தார். அங்கு சில பிரச் சினைகளை சந்திப்பதாகவும், வேறு வேலை பார்க்கப் போவதாகவும் கூறு கிறார். அதிகமாக கோபம் வருகிறது. இதே பணியில் இருப்பாரா? வேலை மாறுவாரா? பரிகார பூஜை எதுவும் தேவையா?

இராமகிருஷ்ணன் ஆயில்ய நட்சத்திரம், கடக ராசி, சிம்ம லக்னம். சிம்ம லக்னம் அல்லது சிம்ம ராசி என்றாலே கோபம் வரத்தானே செய்யும்! கோட்சாரரீதியாக குரு கடக ராசிக்கு 6-ல் ஆட்சி, மறைவு. என்றாலும் ராசிக்கு 10-ஆம் இடத்தை- மேஷத்தைப் பார்ப்பதால் வேலையை விட்டுவிடமாட்டார். 2011 முதல் 2026 வரை சந்திர தசை. அது லக்னத்துக்கு 12-க்குடைய தசை என்பதால், வேலை மாற் றத்தை விரும்புகிறார். 2023-ல் அட்டமச்சனி வரும்போது சந்திர தசை சந்திப்பு ஏற்படும். அப்போது வேலை மாற்றம் வரும். அந்த நேரம் மகன் சிவசைலநாதனுக்கும் கடக ராசிக்கு அட்டமச்சனி நடக்கும். அப்போது அவனுக்கும் பள்ளி மாற்றம் வரும். தகப்பனாருக்கு வேலை மாற்றம் வரும். அக்காலம் இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலையில், பறப்பதற்கு ஆசைப்பட்டு இருப்பதைக் கோட்டைவிடும் சூழ்நிலையை சமாளிக்க ஹோமம்செய்து, குடும்பத்துடன் கலச அபிஷேகம் செய்து கொள்வது அவசியம்! அதில், பையன் படிப்பு தடையில்லாமல் முன்னேறவும், குடும்பத் தாரின் ஆரோக்கியத்துக்கும் சேர்த்து 19 அல்லது 21 ஹோமம் செய்ய வேண்டும். காரைக்குடி சுந்தரம் குருக்களை, செல்: 99942 74067-ல் தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யலாம். அதுவரை தற்காலிக சாந்திக்கு திங்கட்கிழமைதோறும் சிவலிங்க அபிஷே கத்துக்கு பால் வாங்கித்தரவும்.

● மகேஷ், கோவை.

மகள் பாமினி மக நட்சத்திரம், சிம்ம ராசி. தாங்கள் கூறியபடி லண்டனில் வேலை பார்க்கிறாள். 2020 செப்டம்பர் வரை அங்கு வேலை உண்டு. அதன் பிறகும் அங்கு வேலை தொடருமா? அல்லது இந்தியா திரும்புவாளா? என் பேரன் பிரவீனுக்கு 2019 மே வரை சந்திர தசை, சனி புக்தி. அடுத்து புதன் புக்தி எப்படி இருக்கும்?

மகள் பாமினிக்கு 2020 கடைசியில் சனிப்பெயர்ச்சியானதும், வெளிநாட்டிலிருந்து தாய்நாடு வந்துவிடுவார். பேரனுக்கு சந்திர தசை முடியும்வரை சளித்தொல்லை இருக்கும். திங்கட்கிழமைதோறும் சிவலிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவும். பாமினி ஜென்ம நட்சத்திரத்தன்று மாதந்தோறும் தன்வந்திரி பகவானுக்கு அர்ச்சனை செய்யவும்.

● சு. வெங்கட்ராமன், அம்பத்தூர்.

என் மகன் கணேஷ்ராம் பி.ஈ., படித்து முடித்து பத்து வருடங்களாகின்றன. இன்னமும் எந்த வேலையும் கிடைக்க வில்லை. வீட்டில்தான் இருக்கிறான். எப்போது வேலை கிடைக்கும்? அடிக்கடி உடல்நிலையும் சரியில்லை. என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

கணேஷ்ராம் மிருகசீரிட நட்சத்திரம், தனுசு லக்னம், ரிஷப ராசி. 2020 டிசம்பர் வரை அட்ட மச்சனி நடக்கும். 35 வயது நடக்கிறது. நல்ல வேலை அமையவும், திருமணம் நடக்கவும் காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமம் செய்யவும். அதில், உடல் ஆரோக்கியத்துக்கு தன்வந்திரி ஹோமமும் சேர்த்துச் செய்வார்கள். 9-க்குடைய சூரியன் 10-ல் இருப்பது தர்மகர் மாதிபதி யோகம். தாயும் தந்தையும் சம்பாதித்து, ஒரே மகனை சுகவாசியாக்கிவிட்டீர்கள் என்று சொல்லுவதா? சோம்பேறியாக்கிவிட்டீர்கள் என்று சொல்லுவதா? வேலை, வருமானம் இல்லாதவருக்கு யார் பெண் தருவார்கள்? சிந்தியுங்கள். ஹோமம் ஒன்றே விமோசனம்!

● நோபன் ஸ்ரீபதி, விழுப்புரம்.

கடந்த ஐந்து வருடங்களாக மிகுந்த பணக்கஷ்டம். அதனால் மனக்கஷ்டம். தாயாருக்கு ஆரோக்கியம் பாதிப்பு. இதற்கு தீர்வு என்ன?

விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம். 2020 டிசம்பரில் சனிப்பெயர்ச்சிவரை இந்த கஷ்டம் தொடரும். 27 மிளகை ஒரு சிவப்புத்துணியில் பொட்டலம் கட்டி காலபைரவர் சந்நிதி யில் சனிக்கிழமைதோறும் நெய்யில் தீபமேற்றவும்.

● ஆறுமுகம், ஆரணி.

என் ஜாதகப்படி எனக்கு ஜோதிடம் வருமா? நீங்கள் எனக்கு குருநாதராக இருந்து ஜோதிடம் கற்றுத்தரு வீர்களா?

லக்னத்துக்கு 2-ல் கேது இருப்பதால் உங்களுக்கு ஜோதிட ஞானம் வரும். ராசி அல்லது லக்னத்துக்கு 2-ல் ராகுவோ கேதுவோ இருந்தாலும், பார்த்தாலும் ஜோதிடம் பயிலலாம். நான் எந்த ஜோதிட வகுப்பும் நடத்துவதில்லை. வீட்டிலும் ஜோதிட ட்யூஷன் எடுப்பதில்லை. கால அவகாசமில்லை. சென்னையில் பி.எஸ்.பி. (பி.எஸ். பரமசிவம்) ஜோதிடம் பற்றி தெளிவாகப் புத்தகம் எழுதியுள்ளார். அவர் தற்போது இல்லையென்றாலும், அவர் மகன் விஜய்பாலாவைத் தொடர்புகொண்டு, அந்த புத்தகத்தை dவரவழைத்து, ஒரு முறைக்குப் பலமுறை படித்து, பயிற்சி எடுத்துக்கொண்டால் நீங்களும் பெரிய ஜோதிடராகலாம். ஆரம்பத்தில் பலன் சொல்வதில் தயக்கமும் குழப்பமும் ஏற்பட்டாலும், போகப்போக ஜோதிட சூட்சுமங்கள் தெளிவாகப் புரியும். அவருடைய செல்: 98410 40251. எந்த ஒரு கலைக்கும் ஆர்வமும், அக்கறையும், விடாமுயற்சியும் தேவை. வீணை பாலசந்தர், பயிற்சியும் சாதனையும் இருந்ததால் குருவே இல்லாமல் பிரபல வீணை வித்வா னாக மாறினார். புராணத்தில் ஏகலைவன், குரு துரோணரை மானசீக குருவாக மதித்து, சுயமுயற்சியால் அர்ஜுனனை மிஞ்சிய வில்லாளியாக மாறினான். இப்போதும் "பாலஜோதிடம்' கேள்வி- பதிலை படித்தே பலர் ஜோதிடர்களாக வளர்ந்துள்ளார்கள்.

● சண்முகம், காரைக்குடி.

ஒழுக்கம் முக்கியமா? பக்தி முக்கியமா? பக்தி வேடத்தில் உள்ள பல காவி கட்டியவர்கள் பெண்கள் வகையில் ஒழுக்கக் குறைவாக உள்ளனரே! ஏன்?

"ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' என்று வள்ளுவரே சொல்லியுள்ளார். காமமும் கோபமும் மனிதனை கீழே தள்ளிவிடும். இந்த இரண்டையும் வென்றவர்கள் உயர்ந்த மகான்களாக மதிக்கப்படுவார்கள். மகாத்மா காந்தியடிகளும் காஞ்சி மகாப்பெரியவரும் சத்தியசீலர்கள். அரச பதவியைத் துறந்து தவ வாழ்க்கையை மேற்கொண்ட விசுவாமித்திரர்கூட காமத்தில் வீழ்ந்து மேனகை வசப்பட்டு சகுந்தலையைப் பெற்றெடுத்தார். எத்தனையோ ஞானிகளும் தவசீலர்களும் இருப்பதால்தான் பாரதம் இன்னும் அழியாமல் இருக்கிறது. ஞானம் வேண்டி ஒழுக்கமாக வாழ்ந்தாலே எல்லாரும் வணங்கத்தக்க தெய்வமாகலாம். சங்கரர், இராமகிருஷ்ணர், விவேகானந்தர், வள்ளலார் போன்றவர்கள் எல்லாம் இந்த வரிசையில் வைத்துப் போற்றத்தக்கவர்கள்தான்.

● ராமசாமி, தேவகோட்டை.

ஜோதிடம் முக்கியத்துவமா? கைரேகை முக்கியத்துவமா?

ஜோதிடம், கைரேகை, ஏடு, நாடி சாஸ்திரம், அருள்வாக்கு, குறி, ஆரூடம், முத்துப்போட்டு (சோழி) பார்ப்பது எல்லாம் ஒருதாய் மக்கள்தான். அவரவர் எதிர்காலத்தைக் கோடிட்டு உணர்த்தும் வழிகாட்டியாகும். எல்லாமே தெய்வீகக்கலை. ஆனால் அதை சிலர் வியாபார நோக்கோடு பரிகாரம் கூறி பணம் பறிப்பதே கொள்கையாக வாழ்வார்கள். சிலர் உண்மையாக தெய்வத்தொண்டாக மதித்து செயல்படுவார்கள். எல்லாவற்றிலும் அசலும் உண்டு; போலியும் உண்டு. எது அசல்? எது போலி என்று தெரிந்து, தெளிந்து, பின்பற்றுவதே புத்திசாலிகளின் கடமை! வாக்குச்சீட்டு (ஓட்டு உரிமை) விற்பனைக்கல்ல என்றாலும், 200 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கும் ஆசைப்பட்டு நேர்மையாளர்களைத் தோற்கடித்து, ஊழல்வாதிகளை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்களே! ஆக, இதில் ஏமாற்றுவது யார்? ஏமாறுவது யார்? ஏமாறுகிறவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும் கொடிகட்டி கோஷம் போடத்தான் செய்வார்கள். விழிப்புணர்வோடு வாழ்வதே ஒவ்வொரு மனிதனுடைய கடமையாகும்.

● வெங்கடாசலம், கோவை.

என் வயது 40. இதுவரை குழந்தை இல்லை. இனிமேல் குழந்தை பாக்கியம் உண்டா? மனைவி ஜாதகமும் அனுப்பியுள்ளேன்.

உங்கள் ஜாதகப்படி எந்த தோஷமும் இல்லை. ஆனால் உங்கள் மனைவி ஜாதகத்தில் புத்திர தோஷம் உண்டு. மனைவியின் ஜாதகத்தில் 5-ஆம் இடம் கர்ப்ப ஸ்தானம், 9-ஆம் இடம் வாரிசு ஸ்தானம். 5-ல் ராகு- கேது, சனி சம்பந்தம் இருப்பதால் கர்ப்பம் தரிப்பதும் நிலைப்பதும் பிரச்சினைக்குரிய சமாச்சாரம்! எனவே திருக்கருகாவூர் சென்று கர்ப்பரட்சகாம்பிகை சந்நிதியில் நெய் படிபூஜை செய்து, அந்த நெய்யை வாங்கிவந்து கணவரும் மனைவியும் 48 நாள் தொடர்ந்து ஒரு வேளை சாப்பிட வேண்டும். அதற்கு முன்னதாக சந்தானபரமேஸ்வர ஹோமமும், சந்தானகோபால கிருஷ்ண ஹோமமும், சந்தான கணபதி ஹோமமும் செய்து தம்பதிகள் கலச அபிஷேகம் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் கும்பகோணம் அருகில் குடவாசல் வழி சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயருக்கு அபிஷேக பூஜை செய்ய வேண்டும். 40 வயது என்பது வாரிசுக்கு ஒரு தடையல்ல. 60 வயதிலும் அப்பா ஆனவர்கள் உண்டு.

● ரெங்கநாதன், உடுமலைப்பேட்டை.

"பிறக்கும்போதே அவனவன் தலையில் பிரம்மா தலையெழுத்தை எழுதிவிடுகிறான்' என்று சொல்லுகிறார்கள். அதேபோல "எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கும்' என்று பகவத் கீதையில் கண்ணபரமாத்மா கூறியிருப்பதாகவும் சொல்லுகிறார்கள். அப்படியிருக்கும்போது ஜாதகம் என்றும், பரிகார பூஜை என்றும் ஏன் நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண்டும்? சொர்க்கம் என்றும், நரகம் என்றும் சொல்லி மக்களை ஏன் மடையர்களாக்க வேண்டும்?

அறியாத குழந்தைக்கு இரட்டைக்கண்ணன் வருகிறான் என்றும், பூனை வருகிறது என்றும் பயமுறுத்தி தாய் சோறு ஊட்டுகிறாளே- அது ஏன்? அந்த பய உணர்விலேயே அந்த குழந்தை அதிகமாக சாப்பிட வேண்டுமென்பது தாயின் விருப்பம். சொர்க்கம்- நரகம் உண்மையா பொய்யா என்ற ஆராய்ச்சி அவசியமில்லை. நல்லது செய்தால் சொர்க்கம்; கெட்டது செய்தால் நரகம் என்று ஒரு பயமுறுத்தல் இருந்தால், அதை நினைத்தாவது கெட்டது செய்ய மனிதன் அஞ்சுவான் என்பது ஒரு கணக்கு! மனசாட்சிக்கு பயந்து நடப்பவனுக்கு நரகமும் சொர்க்கமாகிவிடும்! இன்று யார் மனசாட்சிக்கு பயப்பட்டு ஒழுக்கமாக வாழ்கிறார்கள்? குடிபோதையில் தெருவில் போகிறவர்களையெல்லாம் திட்டியும், கத்தியைக் காட்டி மிரட்டியும் ரகளை செய்யும் ரௌடி, போலீஸ் வேன் வந்ததும் ஆர்ப்பாட்த்தைக் கைவிட்டு அமைதியாக ஒதுங்கிப்போகிறானே- அது ஏன்? அவனுக்கு போலீஸ் என்ற பயம்! போதையெல்லாம் இறங்கிவிடுகிறதே! மாணவனுக்கு வாத்தியாரிடம் பயம் அல்லது பரீட்சை பயம்! மகனுக்கு கண்டிப்பான தந்தையிடம் பயம். பணம் பதுக்கி வைத்திருப்பவனுக்கு திருடனை நினைத்து பயம்! அப்பாவி மக்களுக்கு முரட்டு அரசியல் ரௌடிகளிடம் பயம்! எலிக்கு பூனையிடம் பயம். பூனைக்கு நாயிடம் பயம்! நாய்க்கு புலியிடம் பயம். இப்படி ஏதாவது ஒரு பயத்திலேதான் வாழ்க்கை ஓடுகிறது. நல்ல மனைவி- மக்கள் அடங்கிய வாழ்க்கையே ஒரு சொர்க்கம்தான். நடத்தை கெட்ட மனைவியும், குடிகாரக் கணவனும், அவப்பெயருக்கு ஆளாக்கும் பிள்ளையும் அமைந்துவிட்டால் நரகம்தான். இவற்றைத் தெரிந்து, தெளிந்து, புரிந்து, இன்பமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதற்கும், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற தத்துவத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்கவும் நமக்கு வழிகாட்டியாக இருப்பது ஜாதகம், பரிகாரம், தெய்வ நம்பிக்கை! தவறு செய்கிறவனுக்கு நீதிபதி தண்டனை விதிப்பது அவனைத் திருத்துவதற்காகத்தானே தவிர, தண்டித்து பழிவாங்குவதற்கல்ல! கொள்ளையனாகத் திரிந்த ரட்சகன் வால்மீகியானார். காமுகனாக அலைந்தவன் அருணகிரிநாதராகி திருப்புகழ் பாடினார். போரில் கொடூரக்கொலைகாரனாக இருந்த மன்னன்- அசோகராக மாறி புத்தமதத்தைப் பரப்பினார். இவர்கள் வரலாறு எல்லாம் நமக்குப் பாடம் புகட்டும் போதனையல்லவா! பத்து அடி நீளமுள்ள கயிற்றில், ஒரு கம்பில் கட்டியுள்ள மாடு பத்து அடிக்குள் போடப்பட்ட புல்லைத் தின்னலாம். அந்த மாடு அந்தக் கம்பைச் சுற்றிச் சுற்றி வந்து, பத்து அடி நீளத்தை ஐந்து அடியாக சுருட்டிக் குறைத்துக்கொண்டால் ஆறு அடியில் உள்ள புல் அதற்கு எட்டாது. அந்த சுற்றியுள்ள நீளத்தை (கயிற்றை) எடுத்துவிடுவது பரிகாரம்! ஆறு அடியல்ல- பத்து அடிவரை உள்ள புல்லையும் அது சாப்பிடமுடியும் என்று உணர்த்துவது ஜாதகம்! பிறக்கும்போது எல்லாப் பிள்ளைகளும் நல்ல பிள்ளைகளே. பட்டுக்கோட்டையார் பாடிய மாதிரி. "மனிதன் பிறக்கும்போது இருந்த குணம் போகப்போக மாறுது' அவன் நல்லவனாவதும் வல்லவனாவதும் பொல்லாதவனாவதும் வளரும் வகையில்தான். (வளர்ப்பில்). அதற்கு வழிகாட்டுவது ஜோதிடம்!

● அந்தோணிராஜ், திண்டுக்கல்.

நான் கிறிஸ்துவன். ஒரு இந்துப்பெண்ணை விரும்பி திருமணம் செய்துகொண்டேன். அவள் சர்ச்சுக்கு வரப் பிரியப்படவில்லை. நான் இந்து கோவில்களுக்குப்போக விருப்பமில்லை. என்ன முடிவு?

இந்தப் பிரச்சினையை திருமணத்துக்கு முன்பு யோசித்து முடிவெடுத்திருக்க வேண்டும். கண் கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் செய்வதால் என்ன பயன்? ஒன்று நீங்கள் இந்துவாக மாறவேண்டும் அல்லது உங்கள் மனைவியை கிறிஸ்துவராக மதம் மாறச்செய்ய வேண்டும். பக்குவமாகப் பேசி சமாதானப்படுத்திதான் காரியம் சாதிக்க வேண்டும். எதிர்காலத்தில் உங்களுக்கு குழந்தைகள் பிறந்துவிட்டால், அவர்கள் நிலையும், திருமண வாழ்க்கையும் எப்படி அமையும் என்பதை சிந்தியுங்கள். எல்லா மதமும் ஒன்றுதான். எல்லா தெய்வமும் ஒன்றுதான். மனிதர்கள்தான் பாகுபாடு பார்க்கிறார்கள். எனக்குத் தெரிந்த ஒரு வெங்காய வியாபாரி நண்பர் இந்து. அவர் மனைவி கிறிஸ்துவ மதம். நாளடைவில் அவரும் கிறிஸ்துவ சமயத்துக்கு மாறிவிட்டார்.

● கோட்டைச்சாமி, விருதுநகர்.

பங்குனி மாதம் வீடு மாறலாமா? அஸ்திவாரம் போடலாமா?

12 ராசிகளும் 12 மாதங்கள். 12 கட்டத்தில் நான்கு மூலை இடங்கள் உபய ராசிகள் எனப்படும். அதாவது ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவை! இந்த நான்கு மாதங்களும் வாஸ்து புருஷன் கண் விழிப்பதில்லை. பூமி சம்பந்தமான, கட்டட சம்பந்தமான தேவதை வாஸ்து புருஷன் கண் விழிக்காமல் உறங்கிக்கொண்டிருக்கும் காலங்கள் மேற்படி கட்டட காரியங்களையும், தச்சு செய்வது, நிலைவைப்பது, வீடு மாறுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்ற காரியங்களையும் செய்யக்கூடாது. ஆடிமாதம் அவற்றைச் செய்யலாம். ஆனால் ஆனி கூடாது. அதேபோல வீட்டில் குடும்பத்தலைவி கர்ப்பமாக இருக்கும்போதும் மேற்படி காரியங்களைச் செய்யக்கூடாது. எனது நண்பர் ஒருவர் தன் மனைவி கர்ப்பமாக இருக்கும்போது, தன் தந்தை மாடியில் குடியிருப்பதற்காக மாடியில் ஒரு அறை (ரூம்) கட்டினார். அங்கு அவர் குடியேறியதும் அந்தப் பெண்ணின் கர்ப்பம் கலைந்துவிட்டது. இப்படி அனுபவப் பூர்வமான சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் உண்டு. அவற்றைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை வளமாக அமையும்.

bala190419
இதையும் படியுங்கள்
Subscribe