ப் ஞானசங்கரன், ஸ்ரீமுஷ்ணம்.
சென்ற வருடம் உங்க ளைக் கேட்டு, தங்கள் ஆலோசனைப்படி நிறைய புத்தகங்கள் படித்து, தற்போது ஜோதிடராகப் பலன் சொல்லி வருகிறேன். நண்பர் ஒருவரின் மகனுக்கு ஜாதகம் எழுதினேன். அதில் லக்னமும் பிறந்த நட்சத்திரமும் வெவ்வே றாக வருகிறது. எது சரி என்பதைத் தாங்கள் தான் விளக்கவேண்டும். 21-10-1996 தாது வருடம், ஐப்பசி மாதம் 5-ஆம் தேதி பகல் 12.50 மணிக்கு ஜனனம்.லக்னம் கண்டுபிடிபபது எப்படி? சிலர் திருக்கணிதப் பஞ்சாங்கம் சரி என்றும்; சிலர் வாக்கியப் பஞ்சாங்கம் சரியென்றும் சொல்கிறார்கள். எது சரி?
தமிழ்நாட்டுக்கு வாக்கியப் பஞ்சாங்கமே சரியானது. திருக்கணிதம் வடநாட்டுக்கும் மேலைநாட்டுக்கும் அனுஷ்டிக்கப்படலாம். எந்தப் பஞ்சாங்கம் என்றாலும் லக்னம் மாறாது. நட்சத்திரம், கிரக நிலைகள்தான் மாறும். நமது நாட்டில் ரூபாய் என்பது புழக்கத்தில் உள்ளது. சிங்கப்பூர் அல்லது மேலைநாடடுக்குப் போனால் அதற்குச் சமமாக அந்த நாட்டு வழக்கப்படி செயல் படும் பொருளாதாரம்தான் புழக்கத்தில் மாறும். ஐப்பசி 5-ஆம் தேதி துலா ரவி இருப்பு நாழிகை 4.20. அடுத்து விருச்சிகம் 5.15; தனுசு 5.30. ஆக 15.05 வரை தனுசு லக்னம். பிறகு மகர லக்னம். ஜனன நேரம் பகல்12.50 மணிக்கு நாழிகை- 17; வினாடி- 5. எனவே மகர லக்னமே ஜனன லக்னம் என்பதே சரியாகும்!
ப் சத்தியமூர்த்தி, மானாமதுரை.
நாட்டில் நிலவும் கொரோனா போன்ற கொடிய செயல்களுக்கு என்ன காரணம்?
"குடி உயர கோன் உயரும்' என்பார்கள். குடிமக்கள் குறைவின்றி நிறைவாக வாழ்ந்தால்தான் மன்னன் நல்லாட்சி புரியலாம். அதேபோல நல்லாட்சி அமைந் தால்தான் நாடும் மக்களும் வீடும் நலமாகத் திகழும். பண்டைய காலத்தில் ஒவ்வொரு மன்னருக்கும் நல்ல ஆலோசனை கூறும் மந்திரிகளும் குருமார்களும் (ராஜகுரு) இருந்தார்கள். அதனால் நல்லாட்சி நடந்தது. இன்று மன்னர்கள் என்பவரில்லை. எல்லாரும் இந்நாட்டு மன்னர்களாகி விட்டதால், மந்திரிகளும் மந்திரி சபையும் மட்டுமே உள்ளது. தலையில்லாமல் வால் ஆடுகிறது. அந்தக் காலத்து மன்னர்கள் மக்கள்நலம் வேண்டி கோவில் கட்டினார்கள். பூஜைகள் நடத்தி னார்கள். அன்னச் சத்திரம் அமைத்தார்கள். தர்மசாலை நிறுவனார்கள். இன்றைய ஆட்சியாளர்கள் நாட்டுநலத்தைக் காட்டிலும் வீட்டுநலமே வேண்டத்தக்கது என்று செயல்படுகிறார்கள். அதனால் இறைவனுக்கும் பொறுக்கவில்லை. இயற்கை என்னும் காலத்துக்கும் பொறுக்கவில்லை. கொரோனா போன்ற கொடிய நோய் ரூபத்தில் காவுகேட்கிறது. "திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என்று பட்டுக்கோட்டையார் பாடியதுமாதிரி, ஊழல்வாதிகள் திருந்தாவிட்டால் இயற்கையெனும் காலத்தின் கடுமையைத் தடுத்துநிறுத்த முடியாது. இதற்கு என்ன பரிகாரம்? ஆன்மிக உணர்வு பெருக வேண்டும். பூஜை, வழிபாடு முறையாகச் செயல்படவேண்டும். ஐம்பது அறுபது வருடங்களுக்குமுன்பு, ஒரே ராசியில் அஷ்டகிரகச் சேர்க்கை (எட்டு கிரகச் சேர்க்கை) ஏற்பட்டது. அப்போது காஞ்சி மகாப்பெரியவர் எல்லாரையும் கோளறு பதிகம் படிக்கச் சொல்-லி, கோவில்களில் கூட்டுவழிபாடு செய்யச்சொன்னார். அதுபோல மீண்டும் ஆலயங்களில் ஆன்மிக உணர்வோடு வழிபாடு நடத்த வேண்டும். அரசியல் தலைவர்களும், ஆட்சிபீடத்தில் உள்ளவர்களும் வழிபாடு, பூஜை, அன்னதானம் செய்வது போல ஆலய வழிபாடும் நடத்த வேண்டும்.
ப் எச். கண்ணன், ஓசூர்.
என்னுடைய மகள்வழி பேரன் ஜாதகத்தில் தோஷமிருப்பதாக சிலர் கூறுகிறார்கள். குரு 8-ல் இருப்பதால் தோஷமா? கெடுதல் ஏற்படுமா? பரிகாரம் என்ன?
மேஷ லக்னம். லக்னாதிபதி செவ்வாய் 2-ல்- ரிஷபத்தில். அவரை 8-ல் உள்ள குரு பார்க்கிறார். லக்னம் அல்லது லக்னா திபதி- ராசி அல்லது ராசியாதிபதி இவர்களுக்கு குரு பார்வையோ 5, 9-க்குடைய திரிகோணாதிபதி பார்வையோ சேர்க்கையோ சம்பந்தப்பட்டால், எந்த தோஷமானா லும் நிவர்த்தியாகிவிடும்! பேரன் ஜாதகத்தில் இந்த விதி பொருந்துவதால் தோஷ நிவர்த்தியுண்டு. 17-1-2023 வரை சூரியதசை. இதன்பிறகு சந்திர தசை நடக்கும் காலம், மகர ராசிக்கு ஏழரைச் சனியின் சந்திப்பும் உண்டாகும். அக்காலம் திங்கட்கிழமைதோறும் சிவ-லிங்கத்துக்குப் பாலாபிஷேகம் செய்யவேண்டும். சித்திரை மாதம் (பிறந்த மாதம்), உத்திராடம் ஜென்ம நட்சத்திரத்தன்று, 14 வயதுவரை தன்வந்திரி ஹோமம், நவகிரக ஹோமம், படிப்புக்காக ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம். வாக்வாதினி ஹோமம், நீலுசரசுவதி ஹோமம் போன்றவற்றைச் செய்து பேரனுக்கு கலச அபிஷேகம் செய்துவந்தால் வைத்தியசெலவு வராது. ஆயுள், ஆரோக்கியம் தீர்க்கம். கல்வி, வித்தையில் அபிவிருத்தி உண்டாகும்.
ப் பி. யமுனேஸ்வரி, சென்னை-15.
என் மகள் யோகேஸ்வரிக்குத் திருமணம் தடைப்படுவதாக "பாலஜோதிடம்' இதழில் தங்களிடம் கேட்டேன். தங்கள் ஆலோசனைப் படி காரைக்குடி சுந்தரம் குருக்களிடம் ஹோமப் பரிகாரம் செய்து கலச அபிஷேகம் செய்ததன் பலனாக திருமணம் முடிந்து, பெண் குழந்தையும் 23-10-2020-ல் பிறந்தது. டி.ஒய். ஜஸ்வந்தி என்று பெயர் வைத் தோம். என் தந்தை தன் பேத்திக்கு ஒரு ஜாதகம் கணித்துவந்தார். என் மருமகனும் ஒரு ஜாதகக் குறிப்பு கொண்டு வந்து கொடுத்தார். இரண்டும் ஒன்றுக்கொன்று வித்தியாசப் படுவதால் சரியான ஜாதகத்தைத் தாங்கள் தான் குறிக்கவேண்டும்.
தந்தை கொடுத்த ஜாதகமும் மருமகன் கொடுத்த ஜாதகமும் லக்னம் மாறவில்லை. இரண்டும் துலா லக்னம்தான். ஆனால் கிரகங்கள் மாறியுள்ளன. சார்வரி வருடம், ஐப்பசி மாதம் 7-ல், வெள்ளிக்கிழமை (23-10-2020) வளர்பிறை சப்தமி திதி, நாழிகை 16-56, பூராட நட்சத்திரம் நாழிகை 2.50 வரை; அதற்குமேல் உத்திராட நட்சத்திரம். இது வாக்கியப் பஞ்சாங்கப்படி. ஆகவே தந்தை கொடுத்த ஜாதகமே சரியா னது. அதையே பின்பற்றவும். மருமகன் கொடுத்த ஜாதகம் திருக்கணிதப் பஞ்சாங்கம். நமக்கு வாக்கியப் பஞ்சாங்கமே நடைமுறை அனுபவத்தில் சரியாகும்.
ப் வி. கார்த்திகேயன், விழுப்புரம்.
பிலவ வருடத்தில் மாசி, பங்குனி மாதங்களில் அனைத்து கிரகங்களும் ராகு- கேது பிடிக்குள் வருவதும், இம்மாதங்களில் பிறக்கப்போகும் குழந்தைகள் காலசர்ப்ப தோஷத்தில்தான் அகப்பட்டுக்கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறார்கள். அவர்கள் எதிர்காலம் எப்படி அமையும்?
எல்லா கிரகங்களும் முழுமையான சுபகிரகங்கள் அல்ல; முழுமையான அசுப கிரகங்களும் அல்ல. கிரகங்களை சுபத் தன்மை- அசுபத்தன்மை என்றுதான் பிரித்துப் பார்க்கவேண்டுமே தவிர, பாபர்- சுபர் என்று பேசக்கூடாது. கிரகங்கள் பாவிகள் அல்ல; பாவம் செய்த மனிதர்கள்தான் பாபர். மாட்டை பசு என்றும் காளை என்றும் சொல்லாம். மாடு என்றால் செல்வம் என்றொரு அர்த்தமுண்டு. காலசர்ப்ப யோகமென்றும், காலசர்ப்ப தோஷமென்றும் இரண்டு வேறுபாடுகள் உண்டு. ராகுவிலி-ருந்து கேதுவரை வலமாகவும் பார்க்கலாம். இடமாகவும் பார்க்கலாம். (ஆய்ற்ண் ஸ்ரீப்ர்ஸ்ரீந் ஜ்ண்ள்ங்). எப்போதும் நவகிரகங்களில் சூரியன்முதல் சனிவரை வலமாகச் சுற்றும். ராகு- கேது மட்டும் இடமாக (எதிர்மறையாக) சுற்றும். இருதலைப்பாம்பு மாதிரி ராகுவும் கேதுவும் இடமாகவும் பார்க்கும்; வலமாகவும் பார்க்கும். தீக்குச்சி தீபமேற்றவும் பயன்படும்; வீட்டைக் கொளுத்தவும் பயன்படும். பஞ்சபூதங்களும் (நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம்) இறைவன் படைத்தவை. நாத்திகர்கள் அதை இயற்கை என்பார்கள். அதை ஒப்புக்கொண்டாலும் இயற்கையை இயக்குவது யார்? அதுவே இறைவன். நாத்திகர் அதை காலம் எனலாம். ஆத்திகர்கள் காலத்தையே கடவுளாகக் கண்டனர். ஆக காரணம்- காரியம்- கர்த்தா என்று மூன்றுநிலை உண்டு. இவை ஒன்றில்லாமல் மற்றொன் றில்லை. இதைப் புரிந்துகொண்டவர்கள் ஞானிகள்; புரியாதவர்கள் அஞ்ஞானிகள். எல்லாவற்றுக்கும் மேலாக அவரவருக்கு பூர்வபுண்ணிய அறிவென்று ஒன்றுண்டு. ஒரு உயிர் தந்தையின் கர்ப்பத்தில் இரண்டு மாதமும், தாயின் கர்ப்பத்தில் பத்து மாதமும் தங்கித்தான் மண்ணுலகில் பிறவியெடுக்கும். உயிர் என்பது வேறு; ஆத்மா என்பது வேறு. உயிர் என்பது செத்துச் செத்து பிழைக்கும். (பிறவி எடுக்கும்). ஆத்மாவுக்கு மரணமும் இல்லை; ஜனனமும் இல்லை. இதுதான் வேதாந்தம். அதை உணர்ந்தவன் அல்லது அறிந்தவன் வேதாந்தி அல்லது ஞானி. பிறப்பென்று இருந்தால் இறப்பு நிச்சயம். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவிதி. பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவான சரீரத்தை- பஞ்சபூதங்களுக்கே பிரித்துக் கொடுத்தால் மரணமும் இல்லை; ஜனனமும் இல்லை. இதை உணர்ந்தவர் இராம-லிங்க வள்ளலார் ஒருவர்தான்.