ப் டி. ஏ. சதாசிவம், சேலம்-3.
சனி, செவ்வாய் சேர்க்கை- பார்வை, புணர் பூ தோஷம். பெண் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் சேர்க்கையுள்ள ஜாதகங்களுக்கு வரன் பார்க்கும்போது எப்படிப்பட்ட ஜாதகங்களைத் தேர்வு செய்யவேண்டும்? ராசிக் கட்டத்திலுள்ள மேற்படி கிரகங் களுக்கு ஏற்ப ஜாதகரீதியாக மற்ற கிரகங்கள் எப்படி இருக்கவேண்டும்?
அய்யா! இதற்கு விளக்கம் எழுதவேண்டும் என்றால் நான்கைந்து பக்கம் தேவைப்படும். ஆண் ஜாகதகத்திலும் பெண் ஜாதகத்திலும் செவ்வாய், சனி சேர்க்கை அல்லது பார்வை ஒரேமாதிரி அமையவேண்டுமென்று மட்டும் தெரிந்து கொண்டு ஜாதகங்களைத் தேர்வு செய்யவும். மற்றவற்றை விவரம் அறிந்த- தெளிந்த ஜோதிடர் பார்த்துக்கொள்வார். டாக்டர் சீட்டுக்கு மருந்து வாங்கவேண்டும். நீங்களே உங்கள் நோயைச் சொல்லி மருந்து கேட்கக்கூடாது. சிலசமயம் சேரும்; சில சமயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். இது ஒரு கேள்வியா என்று எனக்குப் படாததால்தான் பதில் சொல்ல இயலவில்லை. (ஓராண்டு ஆகிவிட்டது.)
ப் மயில்சாமி, சேவை.
வணக்கம் அய்யா! ஜோதிடத்தில் பல ஜோதிடர்கள் விளக்கமளித்தாலும், நீங்கள் தரும் விளக்கமும் விரிவுரையும் பல ஜோதிடர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் ஓய்வுபெற்ற ஆசிரியர். எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. என்றாலும் சரியான வழிக
ப் டி. ஏ. சதாசிவம், சேலம்-3.
சனி, செவ்வாய் சேர்க்கை- பார்வை, புணர் பூ தோஷம். பெண் ஜாதகத்தில் சூரியன், செவ்வாய் சேர்க்கையுள்ள ஜாதகங்களுக்கு வரன் பார்க்கும்போது எப்படிப்பட்ட ஜாதகங்களைத் தேர்வு செய்யவேண்டும்? ராசிக் கட்டத்திலுள்ள மேற்படி கிரகங் களுக்கு ஏற்ப ஜாதகரீதியாக மற்ற கிரகங்கள் எப்படி இருக்கவேண்டும்?
அய்யா! இதற்கு விளக்கம் எழுதவேண்டும் என்றால் நான்கைந்து பக்கம் தேவைப்படும். ஆண் ஜாகதகத்திலும் பெண் ஜாதகத்திலும் செவ்வாய், சனி சேர்க்கை அல்லது பார்வை ஒரேமாதிரி அமையவேண்டுமென்று மட்டும் தெரிந்து கொண்டு ஜாதகங்களைத் தேர்வு செய்யவும். மற்றவற்றை விவரம் அறிந்த- தெளிந்த ஜோதிடர் பார்த்துக்கொள்வார். டாக்டர் சீட்டுக்கு மருந்து வாங்கவேண்டும். நீங்களே உங்கள் நோயைச் சொல்லி மருந்து கேட்கக்கூடாது. சிலசமயம் சேரும்; சில சமயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும். இது ஒரு கேள்வியா என்று எனக்குப் படாததால்தான் பதில் சொல்ல இயலவில்லை. (ஓராண்டு ஆகிவிட்டது.)
ப் மயில்சாமி, சேவை.
வணக்கம் அய்யா! ஜோதிடத்தில் பல ஜோதிடர்கள் விளக்கமளித்தாலும், நீங்கள் தரும் விளக்கமும் விரிவுரையும் பல ஜோதிடர்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. நான் ஓய்வுபெற்ற ஆசிரியர். எனக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உண்டு. என்றாலும் சரியான வழிகாட்டுதலில்லாமல் கற்க இயலாத நிலையில் இருக்கிறேன். நல்ல வழி கூறுங்களேன்?
இப்போது நிறைய ஜோதிட வகுப்புகள் வந்துவிட்டன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் கற்பிக்கின்றனர். வாக்கியம், திருக்கணிதம், பிரசன்னம், ஆரூடம் என்று பலமுறைகளைக் கையாள் பவர்கள் உள்ளனர். எனினும் ஜோதிடத் தின் அடிப்படையினைத் தெளிவாகக் கற்றுக்கொள்வது அவசியம். எனது நண்பர் அமரர் பி.எஸ்.பி. அவர்கள் ஜோதிட வகுப்புகள் நடத்தினார். பயிற்சிப் புத்தகமும் எழுதியுள்ளார். அவர் காலத்திற்குப்பின் அவரது மகன் பி.எஸ்.பி. விஜய்பாலா அவர்கள் எல்லாருக்கும் பயன் படும்படி அவர் விட்டுச் சென்ற பணியை செவ்வனே செய்துகொண்டிருக்கி றார். எனவே, விஜய் பாலாவைத் தொடர்பு கொண்டு "ஜோதிடம் ஓர் அறிமுகம்' என்ற பயிற்சிப் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள். உங்கள் சந்தேகத்திற்கும் விளக்கம் கிடைக் கும். ஜோதிடப் பாடமும் பயிலலாம். தொடர்புக்கு டாக்டர். விஜய்பாலா, செல்: 73586 26538.
ப் நாராயணன், காரைக்குடி.
நாட்டில் எவ்வளவோ உன்னதத் தொழில் இருக்கும்போது- கேவலம் ஜோதிடம் ஒரு தொழிலா?
முதலில் உங்கள் வாயை கோமியம் விட்டுக் கழுவுங்கள். வீட்டில் புனிதம் ஏற்பட பசுவின்நீர் கோமியத்தை தெளிப்பார் கள். புனிதமான ஜோதிடத்தை கேவலம் என்று சொன்ன நீங்கள்தான். உடலுக்கு ஏற்படும் நோயைக் குணப்படுத்த மருத்துவரும், மருந்து, ஊசி போன்றவையும் உண்டு. மனதுக்கு ஏற்படும் நோய்க்கு மருந்து ஆன்மிகம். அதில் ஜோதிடமும் தெய்வப் பரிகாரமும் பிரார்த்தனையும் அடக்கம்! உடலை விற்றுப் பிழைக்கும் விபசாரம்கூட கேவலமல்ல! உடல்பசி எடுத்தவனுக்கு அது உணவாகிறது; மருந்தாகிறது; திருப்தியாகிறது. விவேக சிந்தாமணியில் ஒரு பாடல் உண்டு! விபசாரம் செய்யும் பெண் தன் தாயிடம் ஒரு சந்தேகம் கேட்பாள். "எனக்கும் இன்பம் தந்து பணமும் தருகிறார்களே- ஏன்? என்பாள். அதற்கு அந்தத் தாய் "அறம் செய்யாதார் தனம் கள்ளுக்காம் காமத்துக்காம்' என்பாள்! உண்மையில் கேவலம் என்று ஒதுக்கப்பட வேண்டிய கேவலத் தொழில் எது தெரியுமா? தொண்டு செய்யவேண்டிய அரசியல்வாதிகள் ஊழல்செய்து சம்பாதிப்பதுதான்! சொத்து சேமிப்புதான்! பிச்சையெடுப்பதுகூட கேவலமல்ல! "இரந்தும் உயிர்வாழ வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்' என்று இறைவனைத்தான் குறை கூறுகிறார் வள்ளுவர். இறைவனுக்கே சாபம் கொடுக்கிறார். உங்களுக்கு ஜோதிடத் தின்மீது நம்பிக்கை இல்லையென்றால் விட்டுவிடுங்கள். மிகப்பெரிய தீர்க்கதரிசி களால் உருவாக்கப்பட்ட கலையை இழிவு படுத்தவேண்டாம்.
ப் ஆதித்சிவா, கோவை.
"இளமையில் கல்' என்று ஏன் சொன்னார்கள்?
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பார்கள். படிப்பதும்- படித்தது மனதில் நிலைப்பதும் மாணவப் பருவத்தில்தான். இளமையில் படித்தவை மனப்பாடப்பகுதி யாக நிலைத்தவையாக விளங்கும்! இளமையில் படிப்பது புரியாமல் இருக்கலாம். மனதில் நிலைக்கும். முதுமையில் படிப்பது புரியும். ஆனால் மனதில் நிலைக்காது.
ப் எஸ்.கே. மணிமாறன், திண்டிவனம்.
தங்களது ஆன்மிகம், ஜோதிடத் தொண்டு வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும், வழிகாட்டி யாகவும் உள்ளது. வாழ்த்துகள்! பாராட்டுகள்! ஒருசில பஞ்சாங்கத்தில் யோகங்களில் "பிரபலாரிஷ்ட யோகம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக ஞாயிறு- பரணி, திங்கள்- சித்திரை, செவ்வாய்- உத்திராடம், புதன்- அவிட்டம், வியாழன்- கேட்டை, வெள்ளி- பூராடம், சனி- ரேவதி. மேற்கண்ட கிழமை, நட்சத்திரத்தில் பிறந்தால் தோஷமா? திதிகளின் விஷ சூன்ய ராசிகள் என்பதற்கும் விளக்கம் தேவை!
அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம், வர்ஜயோகம், நாச யோகம், தக்த யோகம், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் என்று எட்டு யோகம் உண்டு. இதில் அமிர்தயோகம், சித்தயோகம், சுபயோகம் என்ற மூன்றுமே நல்ல யோகம். மற்றவை கெடுதல். நீங்கள் குறிப்பிட்டபடி சில கிழமைகளில், சில நட்சத்திரம் வந்தால் பிரபலாரிஷ்ட யோகம். இம்மாதிரி காலங்களில் திருமணம், கிரகப்பிரவேசம், தொழில் துவங்குதல் போன்ற நல்ல காரியங்களைத் தவிர்க்கவேண்டும. இதையெல்லாம் யார் கடைப்பிடிக்கிறார் கள்? கிழமைகளில் 27 நட்சத்திரம் சேரும் காலம் மேற்கண்ட யோகங்கள் உண்டாகும். இதேபோல ஏழு கிழமைகளிலும் குறிப்பிட்ட திதி சேர்வதும் அசுபயோகம். இவற்றையும் யாரும் அனுஷ்டிப்பதில்லை. காலண்டரில் சுபமுகூர்த்தம் என்று போட்டிருந்தாலும், மண்டபம் காலியாக இருந்தாலும், செவ்வாய்- சனிக் கிழமை தவிர எல்லா நாட்களிலும் விசேஷம் வைத்துவிடுகிறார்கள். இவற்றைக் காட்டிலும் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது. ஆங்கிலத் தேதிப்படி 8 அறவே கூடாது. அடுத்து 4-ம், 7-ம் தவிர்க்கப்பட வேண்டும். எல்லா சுபயோகம் இருந்தாலும், தேதி எண் அல்லது கூட்டு எண் 8 வரும் நாளில் திருமணம் வைத்தால், கண்டிப்பாக வாரிசு இருக்காது அல்லது தம்பதிகள் பிரிந்துவிடுவார்கள். கிரகப் பிரவேசமும் கூடாது.
ப் டி. செல்வராஜ், பர்கூர்.
நான் இஞ்சினீயரிங் டிப்ளமோ முடித்துள்ளேன். ஏழரைச்சனியும், சனி தசையும் நடப்பதால் வாழ்வில் பல தடைகள், சோதனைகள். மேற்படிப்பு படிக்க விரும்புகிறேன். சாத்தியமா? உணவு சம்பந்தமான தொழிலை சிறு அளவில் தொடங்க விரும்புகிறேன். அரசு உத்தியோகம் அமையுமா?
2023 வரை ஏழரைச்சனி நடக்கிறது. துடுப்பு இல்லாத படகு காற்றடித்த பக்கம் போவதுபோலதான் வாழ்க்கை ஓடும். எந்த திட்டமும் செயலும் நடக்காது. சனிப்பெயர்ச்சிவரை நாளைக் கடத்தவும். சொந்தத்தொழில் செய்தாலும் கடனாளி யாகத்தான் இருப்பீர்கள். வேலைக்குப் போவது நல்லது.