மகம் என்பது இந்திய வானியலிலும், ராசி சக்கரத்திலும் பேசப்படுகின்ற 27 நட்சத்திரங்களில் பத்தாவது நட்சத்திரமாகும்.
இது கேதுவின் மூன்று நட்சத்திரங்களில் இரண்டாவது நட்சத்திரமாகும். இந்த மகம் சிம்ம ராசியில் தனது நான்கு பாதங்களையும் பதித்து முழு முதல் நட்சத்திரமாகப் பிரகாசிக்கிறது. ஜோதிடத்தில் மகத்தை கேது ஆள்கிறது.
கேதுவின் நட்சத்திரங்கள் மூன்றுமே நெருப்பு ராசியில் அமைந்திருக்கும் முதல் நட்சத்திரமான அஸ்வினி மேஷத்திலும், இரண்டாவது நட்சத்திரமான மகம் சிம்மத்திலும் மூன்றாவது நட்சத்திரமான மூலம் தனுசிலும் அமையப்பெற்றிருந்தாலும், இந்த நட்சத்திரத்தின் தத்துவம் நீர்த் தத்துவமாகும்.
இந்திய பஞ்சாங்க முறையின்படி சந்திரன் பூமியைச் சுற்றி வரும்பொழுது மக நட்சத்திர கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் மக நட்சத்திரத்திற்குரிய காலமாகும்.
ஜோதிடப்படி இந்த காலப்பகுதியில் பிறக்கும் ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் அல்லது ஜென்ம நட்சத்திரம் மகமாகும்.
சமஸ்கிருதத்தில் "மகா' என்றழைக்கப்படும் மகம் வேள்வி, வேட்டுவன், கொடுந்தன், வாய்க்கால் என்னும் தமிழ்ப் பெயர்களால் தமிழ் நிகண்டுகளில் எடுத்துரைக்கப்படுகிறது.
சூரியனின் ஆட்சி மற்றும் திரிகோண வீடான சிம்மத்தில் அமையப்பெற்ற மகம் ஐந்து நட்சத்திரங்களைக் கூட்டாகக் கொண்ட நட்சத்திரத் தொகுதியாகும். இவற்றை நேர்ப் புள்ளிகளாக இணைத்துப் பார்த்தால் ஊஞ்சல் வடிவமாகவும், சில நூல்களில் சிம்மாசனமாகவும் மற்றும் பல்லக்கு வடிவமாகவும் இருப்பதாக எடுத்துரைக்கப்படுகிறது.
இது பித்ருலோகம் என்று சொல்லக்கூடிய எமதர்மப் பட்டினத்திற்கு அருகில் அமைந் துள்ளதாக சில கதைகளில் கூறுகின்றனர். இதன் தேவதை சிவந்த நிறமுடையவளாக இருப்பாள் என்று கூறுவார்கள்.
இந்த நட்சத்திரத்தில்தான் நீதியை நிலை நாட்டக்கூடிய எமதர்மனும், பஞ்சபாண்டவர் களில் அர்ஜுனனும் ஜனித்தார்கள் என்கின்றது ஜோதிட நிகண்டுகள்.
இது நீதியின்பால் நிற்கும் நட்சத்திரம். தனது வெற்றியையும் முன்னுரிமையையும் அதிகாரத்தையும் பிரதானமாகக்கொண்ட நட்சத்திரமென்றால் மிகையாகாது.
வெற்றியை மட்டுமே இலக்காகக் கொண்டு பயணிக்கும் நட்சத்திரமாக இது அறியப்படுகிறது. இவர்களுக்கு அமையப்பெறும் எதிரிகளும் பலம்வாய்ந்தவர்களாக இருப் பார்கள். எதிரிக்கும் ஒரு தகுதி வேண்டுமென்று எண்ணக்கூடிய நட்சத்திரம். கடுமையான போட்டி மற்றும் போராட் டத்தைக் கடந்து வெற்றி யடையும் பிடிவாதமும் மூர்க்கமும் இவர் களிடையே இருக்கும்.
ராட்சச கனமான நட்சத்திரம் இதுவென் பதால் போராட்ட குணம் இயல்பிலேயே இவர்களிடம் இருக் கும்.
அதிகாரத்தின் மூலம் அணைத்துக் கொள்ளும் தன்மையும் தலை மைப் பண்பும் இவர்களிடம் இயற்கையாகவே இருக்குமென்பதனால், அழிக்கப்படவேண்டிய வேலைகளை மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் செய்துமுடிப்பார்கள். எத்தகைய சூழ்நிலையையும் சமாளிக்கும் ஆற்றல் இவர்களிடம் இருக்கும்.
இவர்களின் எண்ண வோட்டம், புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்குத் தலையாக இருந்துவிடலாம் என்பதாக இருக்கும். இளமையில் பல போராட் டங்களையும் வலிகளை யும் கடந்து, மத்திம வயதிற்குப் பிறகு இவர்களின் வாழ்க்கையில் பல முன்னேற்றங்களைக் காணமுடியும். பெரும்பா லும் காதல் திருமணமே இவர்களுக்கு அமையப் பெறுகிறது.
இவர்களின் பட்சி ராஜாளி என்பதனால், எதையும் நின்று நிதானித்து அடையும் நோக்கமும் இவர்களிடம் இருக்கும். இவர்களின் யோனி எலியாக வருவதனால், சுறுசுறுப்பு மற்றும் ஒன்றிருக்க மற்றொன்றைத் தேடுதல், மிகுந்த காமம் போன்றவை இயல்பிலேயே கலந்திருக்கும்.
இவர்களுக்கு இயல்பாகவே தூக்கம் குறைவாக இருக்கும்.
தந்தை- தாய்மேல் அதீத பாசம் மற்றும் சகோதர பாசமுடையவர்கள். இவர்கள் பேசும் பொய்யினைக் கண்டுபிடிக்கவே முடியாதென்ற அளவுக்குப் பேசுவார்கள். சொந்த ஊரிலிருந்து வெளியேறி, வசிக்கும் ஊரில் தனக்கென ஒரு நிலையான பெயரை உருவாக்கிப் புகழ் பெறுவார்கள். தனது நேரத்தைப் புகழுக்காகவே விரயமாக்கும் தன்மைகொண்ட நட்சத்திரமிது.
மக நட்சத்திரத்தின் ராசிநாதன் சூரியனாக வும், நட்சத்திரநாதன் கேதுவாகவும், நவாம்சநாதர்களாக மகம் ஒன்றாம் பாதமென்றால் மேஷ செவ்வாயும், மகம் இரண்டென்றால் சுக்கிரனும், மகம் மூன்றென்றால் புதனும், மகம் நான்கென்றால் சந்திரனும் அமையப்பெறுவார்கள்.
மகம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் இவர்களது சந்திரன் நவாம்சத்தில் மேஷத்தில் அமையப்பெறுவார். சிம்மாசனம், பல்லக்கு போன்ற உருவத்தைக்கொண்ட சிம்மத்தின் நாயகன் சூரியன் அதிகாரத்தைச் சொல்வார். அவரே சென்று மேஷத்தில் அமரும்போது அதிகாரத்துடன் பிடிவாத மும் சேர்ந்துகொள்ளும். இவர்கள் அரசு, அரசாங்கம் சம்பந்தப்பட்ட தொழில், சீருடைத் தொழில்கள், பூமி மற்றும் வீடு ஆகியவற்றின்மூலம் வருமானம் வரும் தொழிலை அமைத்துக்கொண்டால் இவர் களின் வாழ்வு சிறப்படையும். கேதுவின் நட்சத்திரம் என்பதாக மருத்துவம், மருத்துவர், மருந்து விற்கும் இடங்கள் போன்ற தொழில்களும் இவர்களுக்கு சிறப்பினைத் தரும். அதிகாரம் மிகுந்த காவல் காவல்துறை, இராணுவத் துறை போன்றவற்றிலும் தங்களை நிலைநிறுத்தி ஜெயித்துக் காட்டும் வல்லமை இந்த மகம் ஒன்றாம் பாதத்திற்கு இருக்கும்.
மகம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் ரிஷப ராசியில் அமையப்பெறும். இவர்கள் அதிகாரத்துடன் அழகியலையும் சேர்த்து தங்களை மெருகேற்றிக் கொள்வார்கள். இவர்களின் பேச்சு மிகவும் நளினமாகவும் ரசிக்கும் தன்மையுடையதாகவும் அமைந் திருக்கும். இவர்கள் அழகியல், அதிகாரம் சார்ந்த பியூட்டி பார்லர், நகை, ஜவுளி, ஆர்க்கிடெக்ட் போன்ற துறைகளில் தங்களை மெருகேற்றிக்கொள்வார்கள்.
மகம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் புதன் வீடான மிதுனத்தில் அமையப் பெற்றிருக்கும். இவர்கள் அதிகாரம், புத்திசாலித்தனமான எதையும் தன்பக்கம் சாதித்துக்கொள்ளும் பேச்சுத்திறன்கொண்ட குணத்தைப் பெற்றிருப்பார்கள். அதிகாரம், தரகு, கமிஷன், பத்திரப்பதிவு, குழந்தைகள் பாதுகாப்பு இல்லம், கணினி சம்பந்தப்பட்ட தொழில் மற்றும் படிப்பு போன்றவற்றின்மூலம் தங்களை முன்னிருத்திக்கொள்வார்கள்.
மகம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்
இவர்களது சந்திரன் நவாம்சத்தில் தனது ஆட்சிவீடான கடகத்தில் அமையப் பெறும். இவர்களது அதிகாரம் அரவணைக் கும் அதிகாரமாக வெளிப்படும். எந்த விஷயத் தையும் அதிகாரம் நிறைந்த அரவணைப்போடு எடுத்துரைக்கும் குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு விவசாயம் சம்பந்தப்பட்ட தொழில், கணினி, உணவு, குளிர்பானங்கள், டிராவல்ஸ், உணவகம் போன்ற தொழில்களில் தங்களை முன்னிருத்தி மிக உயர்ந்த இடத்தில் நிலை நிறுத்திக்கொள்வார்கள்.
வணங்கவேண்டிய தெய்வம்: பராசக்தி, விநாயகர்.
வணங்கவேண்டிய தலம்: சூரியனார் கோவில்.
கல்: மாணிக்கம்.
விருட்சம்: ஆலமரம்.
(அடுத்த இதழில் பூரம்)
செல்: 80563 79988