பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் பிறப்பு, திருமணம், இறப்பு இம்மூன்றும் தனிப்பட்ட அவரவர் சம்பந்தப்பட்டது. இதில் பிறப்பு- இறப்பு இவை இரண்டையும் அவரவராலும், மற்றவராலும், ஜாதகம், ஜோதிடர்கள்மூலமாக தீர்மானித்துக் கூறமுடியாது. ஆனால் திருமணத்தை மட்டும் அவரவரே தீர்மானித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று இயற்கையே மனிதர்களுக்கு ஏற்படுத் திக்கொடுத்துள்ளது.
இன்றையநாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணகால சமயத்தில் நட்சத்திரப் பொருத்தம், பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு- கேது, சர்ப்ப தோஷம் இவற்றைப் பார்த்தும் ஜோதிடர்கள் கூறுவதைக் கேட்டும், இன்னும் சிலர் குலதெய்வக் கோவில்களிலும், பூ போட்டுப் பார்த்து திருமணம் செய்துவைத்து விடுகின் றார்கள். இதுபோன்று திருமணம் செய்து கொண்டவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, சந்தோஷமாக பிரிவின்றி வாழ்கின்றார்களா என்று அனுபவத்தில் அறிந்து பார்த்தால், இல்லையென்பதே உண்மை நிலை.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை ஒரு கடமையாக எண்ணி பத்துப் பொருத்தம் பார்த்து செய்து வைத்து விடுகின்றார்கள். ஆன
பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையில் பிறப்பு, திருமணம், இறப்பு இம்மூன்றும் தனிப்பட்ட அவரவர் சம்பந்தப்பட்டது. இதில் பிறப்பு- இறப்பு இவை இரண்டையும் அவரவராலும், மற்றவராலும், ஜாதகம், ஜோதிடர்கள்மூலமாக தீர்மானித்துக் கூறமுடியாது. ஆனால் திருமணத்தை மட்டும் அவரவரே தீர்மானித்து திருமணம் செய்துகொள்ளலாம் என்று இயற்கையே மனிதர்களுக்கு ஏற்படுத் திக்கொடுத்துள்ளது.
இன்றையநாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணகால சமயத்தில் நட்சத்திரப் பொருத்தம், பத்து பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு- கேது, சர்ப்ப தோஷம் இவற்றைப் பார்த்தும் ஜோதிடர்கள் கூறுவதைக் கேட்டும், இன்னும் சிலர் குலதெய்வக் கோவில்களிலும், பூ போட்டுப் பார்த்து திருமணம் செய்துவைத்து விடுகின் றார்கள். இதுபோன்று திருமணம் செய்து கொண்டவர்கள் அனைவரும் ஒற்றுமையாக, சந்தோஷமாக பிரிவின்றி வாழ்கின்றார்களா என்று அனுபவத்தில் அறிந்து பார்த்தால், இல்லையென்பதே உண்மை நிலை.
பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை ஒரு கடமையாக எண்ணி பத்துப் பொருத்தம் பார்த்து செய்து வைத்து விடுகின்றார்கள். ஆனால் திருமணத்திற்குப் பின்பு அமையும் குடும்ப வாழ்வில் அவர்கள் அனுபவிக்கப்போகும் நன்மை- தீமைகளை, இன்ப- துன்பங்களைப் பற்றி பொருட்படுத்துவது இல்லை. பத்துப் பொருத்தம் பார்த்து, முடிவெடுத்து திருமணம் செய்வதைவிடுத்து, ஆண்- பெண் இருவர் ஜாதகத்தையும் கிரக அமைப்பினையும் ஒப்பிட்டு நன்கு ஆய்வுசெய்து பலன் பார்த்து திருமணம் செய்து வைத்தால் இணை பிரியாமல் வாழ்வார்கள்.
திருமணத்திற்குப்பிறகு தங்கள் குடும்ப வாழ்வில் கருத்து வேறுபாடு, பிரச்சினை, பிரிவு என ஏதுமின்றி ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் நேசித்து இன்பமுடன் வாழும் யோகம் பெற்றவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரகங்களின் நிலையைப் பற்றி சப்தரிஷி நாடியில் கூறப்பட்டுள்ளவற்றை அறிவோம்.
திருமணகால சமயத்தில் பொருத்தம் பார்க்க என்னிடம் வருபவர்களிடம் ஆண்- பெண் இருவர் ஜாதகத்தினையும் ஆய்வு செய்து சப்தரிஷி நாடி முறையில் பொருத்தம் பார்த்துக் கூறுவேன். அந்த தம்பதிகள் மகிழ்ச்சியாகவே வாழ்கின்றார்கள். ரிஷிகள் வாக்கு நடைமுறை வாழ்விலும் சரியாகவே உள்ளது. இனி திருமணத்திற்குப் பிறகு அமையும் இல்லற வாழ்வில் இணைபிரியாமல் வாழும் ஜாதகர்களின் ஜாதக கிரக அமைப் பினை அறிவோம்.
ஆண்கள் ஜாதகத்தில், லக்னாதிபதி கிரகம், அந்த ஜாதகனையும், லக்னத்திற்கு ஏழாவது ராசி, அவள் மனைவியையும் குறிக்கின்றது. பெண்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி கிரகம் அந்த ஜாதகியையும், 7-ஆமிடம் அவளின் கணவனையும் குறிக்கும்.
ஆண்கள் ஜாதகத்தில், லக்னாதிபதி கிரகம், அந்த லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் நின்றிருந்தால், அந்த ஜாதகன் தன் மனைவி மீது அதிக பாசம்கொண்டு, அன்பு காட்டி வாழ்வான். ஒரு பெண்ணின் ஜாதகத்தில், லக்னாதிபதி கிரகம், லக்னத்திற்கு 7-ஆவது ராசியில் நின்றிருந்தால் அந்தப் பெண், தன் கணவன்மீது அதிகம் பிரியம் கொண்டு வாழ்வாள்.
ஆண் ஜாதகத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் லக்னத்தில் அமர்ந்திருந்தால் அவர் தன் மனைவிமீது அதிகம் பாசம்கொண்டு இருப்பார். பெண்களின் ஜாதகத்தில் 7-ஆமிடத்திற்குரிய கிரகம் லக்னத்தில் அமர்ந்திருந்தால், அந்தப் பெண் தன் கணவன் மீது அன்பைச் செலுத்தி பாசம் கொண்டு வாழ்வாள்.
ஆணின் ஜாதகத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம், இருக்கும் ராசிக்கு அடுத்த 2-ஆவது ராசியில் லக்னாதிபதி கிரகம், வக்ரம் பெற்று அமர்ந்திருந்தாலும்கூட அவன் தன் மனைவிமீது அதிக பாசம், பிரியமுள்ளவனாக இருப்பான். இதேபோன்று ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கணவனைக் குறிப்பிடும் 7-ஆவது ராசிக்குரிய கிரகம், நின்ற ராசிக்கு, இரண்டாவது ராசியில் லக்னாதிபதி கிரகம் வக்ரம்பெற்று அமர்ந்திருந்தாலும்கூட அந்தப் பெண் தன் கணவன்மீது அதிகம் பாசம்கொண்டு இருப்பாள். இருவரும் இன்பமாக வாழ்வார்கள். கிரக வக்ரநிலை பாதிப்பைத் தராது.
ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், அவரவர்கள் ஜாதக லக்னாதிபதி கிரகம் ராசிக்கு 2-ஆவது ராசியில் அவரவர் ஜாதக 7-ஆவது ராசிக்குரிய கிரகம் வக்ரம்பெற்று அமர்ந்திருந்தாலும், திருமணத்திற்குப்பிறகு இருவரும் ஒருவர்மீது ஒருவர் பாசம், பிரியம் கொண்டு, அன்யோன்யமான தம்பதிகளாக வாழ்வார்கள். இவர்கள் பூர்வ ஜென்மத்தில் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்கள்.
ஆண்களின் ஜாதகத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகத்திற்கு 12-ஆவது ராசியில் லக்னாதிபதி கிரகம் இருந்தால், ஜாதகன் தன் மனைவிமீது அதிகமான பிரியம் கொண்டி ருப்பான். அதேபோன்று பெண்களின் ஜாத கத்தில் 7-ஆவது ராசிக்குரிய கிரகம் இருக் கும் ராசிக்கு 12-ஆவது ராசியில் லக்னாதிபதி கிரகம் அமர்ந்திருந்தால் அந்தப் பெண் தன் கணவன்மீது அதிகமான பாசம் கொண்டி ருப்பாள். இந்த ஜாதகர்கள் முன்ஜென்மத்தில் கணவன்- மனைவியாக வாழ்ந்தவர்கள்.
ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், அவரவர் லக்னாதிபதி கிரகமும், 7-ஆவது ராசிக்குரிய கிரகமும் அடுத்தடுத்த ராசிகளில் இருந்தால், கணவன்- மனைவி இருவருக்கும் அதிக நெருக்கமும் உறவும் இருக்கும்.
ஆண்- பெண் இருவர் ஜாதகத்திலும், அவரவர் ஜாதக லக்னாதிபதியும், 7-ஆவது ராசிக்குரிய கிரகமும், ஒரே ராசியில் அமர்ந் திருந்தால், அந்த கிரகங்கள் முன், பின் நின்ற நிலையை அறிந்து பலன் அறியவேண்டும்.
இதுபோன்று கிரக அமைப்பிருந்தாலும், லக்னாதிபதிக்கோ, 7-ஆமிடத்துக் கிரகத் திற்கோலி 1, 5, 9, 7, 2, 12-ஆவது ராசிகளில் ராகு- கேது, கிரகங்கள் இருந்தால் சில பிரச்சினைகள் உண்டாக்கி வைக்கும். இதுபோன்று ராகு- கேது பாதிப்புள்ள ஜாதகர்கள் சரியான, முறையான பரிகாரங்களைச் செய்து கிரக தோஷத்தை நீக்கினால் இன்பமான இல்வாழ்க்கை அமையும். அடுத்து தடைகள் விலகி, நிச்சயமாக திருமணம் நடக்கும், ஜாதக அமைப்பு, கிரக நிலைகளை சப்தரிஷி நாடிமூலம் அறிவோம்.
செல்: 93847 66742