மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, இருப்பிடம். கந்தல் துணிகூட கட்டிக் கொள்ளலாம்: மரத்தடியில் கூட வாழலாம். ஆனால் உணவு இல்லாமல் எந்த உயிரும் வாழ முடியாது. சித்தர்களும், தவசிகளும், ஞானிகளும் காற்றைப்பருகி வாழ்ந்தார்கள் என்பது புராணக்கதையாக இருந்தாலும் அனைத்து உயிர்களுக்கும் உணவு அவசியம்.
முற்காலத்தில் அனைத்து ஜீவராசிகளும் தனக்கான உணவை தேடுவதற்காக மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. பல நாட்களை பட்டினியோடும் கழிக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று பசுமை புரட்சியின் விளைவால் உணவு உற்பத்தி அதிகரித்து உணவு பொருட்கள் இலகுவாக கிடைப்பதனால் மனிதர்கள் பழமையை மறந்து உணவை வீணாக்கும் முறையற்ற கலாச்சாரம் உருவாகியுள்ளது.
வசதியானவர்கள் உணவை வீணாக்குவதும் வறுமையானவர்கள் உணவின்றி இறந்துபோவதும் சர்வசாதாரண நிகழ்வாகிவிட்டது. உலகில் ஜனத்தொகை அதிகரிப்பால் உணவுக்கான தேவையும் பசியும் பட்டினியும் இரட்டிப் பாகியுள்ளது.
உணவுத் தேவை யை பூர்த்திசெய்ய இடைவிடாமல் பயிர் செய்வதால் மண் வளம் குறைந்து தரமற்ற உணவு உற்பத்தி செய்யப் படுகிறது. இதுபோன்ற பல காரணிகளால் உணவு நெருக்கடியானது உலகமெங்கும் தோன்றி யுள்ளது.
இது ஒருபுறம் இருக்க உடலை வளர்ப்பது உணவு என்பதால் உயிர் வாழ உணவு மிக அவசியம். பசிக்கு உணவு சாப்பிட்ட காலம் சென்று ருசிக்கு உணவு என்ற நிலை உலகெங்கும் நிலவுகிறது.
சமையல் கலை என்ற உணவுத் தொழில் மனித இனத் தையே உணவின் ருசிக்கு அடிமைப்படுத்திவிட்டது. வகைப்படுத்த முடியாத விதவிதமான உணவுகளால் விதவிதமான நோய்களும் பெருகிறது. பெரும்பான்மை யாக ஒருவரின் உணவு பழக்கம் என்பது பெற்றோர் களின் வழக்கம், வாழுகின்ற சூழலுக்கு ஏற்ப மாறுபடும் காரணியாகும்.
மனிதர்கள் விரும்பி உண் ணும் உணவில் சைவ உணவை விட அசைவ உணவுப் பிரியர்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறார் கள். இந்த நிலையில் அசைவம் சாப்பிடலாமா? இறை நம்பிக்கை உள்ளவர்கள் அசைவம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
ஜோதிடரீதியாக ஒருவரின் ஜனன ஜாதகத் தின் இரண்டாம் இடத்தோடு சம்பந்தம் பெறும் கிரகத்தைக்கொண்டு சைவ விரும்பியா? அசைவ விரும்பியா என்பதை எளிதில் அறியமுடியும்.
இரண்டு, ஒன்பதாம் இடம் சம்பந்தம் உள்ளவர்கள் எந்த ஊரில், எந்த நாட்டில் வாழ்ந்தாலும் தங்கள் பாரம்பரிய குல வழக்திற்கு மாறான உணவை சாப்பிட மாட்டார்கள்.
இரண்டாம் இடத்தோடு சம்மந்தம் பெறும் கிரகங்களின் உணவு பற்றி காணலாம்.
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் இரண்டாமிடத்தோடு சூரியன், செவ்வாய் சம்பந்தம் பெறுபவர்கள் அசைவ உணவை விரும்பி சாப்பிடுவதுடன் சூடான, காரமான, சுவையான உணவை மட்டுமே உண்பார்கள். சந்திரன் சம்பந்தம் பெறும்போது குளிர்ச்சியான, திரவ உணவின்மீது விருப்பம் அதிகமாக இருக்கும். சைவம், அசைவம் என கிடைப்பதை உண்டு மகிழ்வார்கள்.
புதன்
இரண்டாமிடத்துடன் புதன் சம்பந்தம் இயற்கை உணவுகள், கீரைகள், பழங்கள் மற்றும் கிழங்கு வகைகள்மீது விருப்பம் மிகுதியாக இருக்கும். புதன் நின்ற வீட்டிற்கு ஏற்ப சைவ, அசைவ உணவின் விருப்பத்தில் மாற்றம் இருக்கும்.
குரு
இரண்டாமிடத்திற்கு குருவின் தொடர்பு இருந்தால் கொழுப்பு சத்து மிகுந்த இனிப்பு உணவை மிகுதியாக உண்பார்கள். பெரும்பாலும் அசைவ உணவையே சாப்பிடாதவர்கள். இவர்கள் இளவயதில் அசைவம் சாப்பிட்டாலும் மத்திம வயதிற்குபின்பு சுத்தமான, ஆச்சாரமான சைவ உணவை மட்டுமே விரும்புவார்கள்.
சுக்கிரன்
இரண்டாமிடத்திற்கு சுக்கிரன் தொடர்பு இனிப்பு வகைகள், சைவ உணவை மட்டும் சாப்பிடும் பழக்கம் மிகுதியாக இருக்கும்.
சனி
இரண்டாமிடத்திற்கு சனி சம்பந்தம் மீதமான பழைய உணவில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலும் அசைவ வாசமில்லாத உணவை சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள்.
ராகு
சூடான, சுவையான காரமான அசைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள். சைவ உணவின் வாசனையை அறியாதவர்கள்.
கேது
சுத்தமான, சுகாதாரமான சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் உண்ணும் உணவினால் மனிதனுடைய குணங்கள் மூன்று வகையாக மாற்றம் அடைகின்றது.
1. சாத்வீக குணம்
தாவர உணவுகளான கீரை. பச்சைகாய்கறிகள், பழங்கள் மட்டும் உண்பவருக்கு சாத்வீக குணம் உண்டாகும். அதாவது தன்னை உணர்ந்து அதிக விவகாரமான தவறுகளை செய்யாமல் மனசாட்சிபடி வாழ்வார்கள். பிறருக்கு நன்மை தரும் தானம், தர்மம் செய்பவர்களாக இருப்பார்கள்.
2. ராஸஸ குணம்
பால், தயிர், நெய், கிழங்கு வகைகள் பருப்பு வகைகள், பூண்டு, வெங்காயம் அதிகம் உண்பவர்கள். எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகவும் சுயநலம் அதிகம் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
3. தாமஸ குணம்
அசைவ உணவை உண்பவர்களுக்கு உண்டாகும் குணம் தாமஸ குணமாகும். ஆன்மாவின் இயற்கை குணங்களான தயவு, கருணை இன்றிசெயற்கை குணங்களால் தவறு செய்பவர்கள். மிகுதியான தூக்கம், சோம்பல் உடையவர்களாகவும் இருப்பார்கள்.
உலகில் ஜனிக்கும் ஒவ்வொரு உயிர்க்கும் பிறவியின் அடிப்படையில் பகுத்தறியும் தன்மை உண்டு. அந்த அடிப்படையில் மரம், செடி, கொடி, புல், பூண்டுபோன்ற தாவர இனங்கள் ஓரறிவுகொண்ட உயிரினங்கள். இவைகளால் சுயமாக சிந்திக்கும் திறன் கிடையாது. மேலும் கர்ம வினைப் பதிவு மிகமிக குறைவு.
விலங்குகள் மற்றும் பறவைகள் சுயமாக சிந்திக்க முடியும். அதனால் அவைகளுக்கு ஐந்தறிவுடன் கர்ம வினைப் பதிவும் உண்டு. மனிதர்களுக்கு ஆறறிவு உண்டு. பல ஜென்மங்களின் செய்த பல்வேறுவிதமான பாவங்களே ஜனன ஜாதகத்தில் கிரகங்களாக அமர்ந்து மனிதப் பிறப்பிற்கு காரணமாக இருக்கிறது. கர்மப் பிடியிலிருந்து விடுபட்டு பிறவா பெருநிலை அடைவதே மனித பிறப்பின் நோக்கம். தன் ஆறாம் அறிவால் சிந்தித்து செயல்பட்டு தன் விருப்பம்போல் தன் கர்ம வினையை குறைக்கவோ- அதிகரிக்கவோ முடியும்.
உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அசைவ உணவு சாப்பிடுபவர்களை கடவுள் தண்டிப்பார், கோபிப்பார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை. உணவிற்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு உணவுக் கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு. உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு.
மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு. உடலாலும் உயிராலும் மனித பிறவி சைவம். குணத்தால் மனித பிறவி அசைவம் மற்றும் சைவம் கலந்த கலவை. தாவர உணவுகளுக்கு கர்ம பதிவுகள் குறைவு என்பதால் சைவ உணவை உண்ணும்போது இறையுணர்வு மிகுதியாகி வினைப் பதிவு குறைந்து பிறவா நிலையை எளிதில் அடையமுடியும். ஒரு உயிரை மனிதன் கொன்று உண்டால் அந்த உயிர்களின் கர்ம வினைகள் சாப்பிடும் மனிதர்களின் கர்மாவோடு கலக்கும். அந்த உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே சுமக்கவேண்டும்.
அந்த உயிர்களின் கர்ம தோஷத்தையும் சேர்த்து தீர்க்கவேண்டும். இவ்வளவு ஏன் வீடுகளில் வளர்க்கப் படும் ஆடு, மாடு, நாய், மீன், கோழி, புறா, மரம், செடி, கொடிகள் போன்ற உயிர்கள் கர்ம பதிவோடு தொடர்பு இல்லாத மனிதர்களின் வீட்டில் அந்த உயிர்கள் 1 மணி நேரம்கூட வாழாது. பலர் உயிர்களை வளர்க்க விரும்பி ஆசைப்பட்டு இறந்துவிட்டது அல்லது பராமரிக்க முடியவில்லை என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டும் இருக்கிறோம். ஜனனகால ஜாதகத்தில் நான்காம் இடம் வலுப்பெற்றவர்களுக்கே உயிரினங்களை, தாவரங்களை வளர்க்கும் வாய்ப்பு கிட்டும்.
மனிதர்களைப்போலவே வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடு, நாய், மீன், கோழி, புறா பாச உணர்வு அதிகம் உண்டு. வளர்கப்படும் குடும்ப உறுப்பினர்களின் உயிர்க்கு ஆபத்து ஏற்படும் காலங்களில் தன் உயிரை மாய்த்துக் கொண்டு குடும்ப நபர்களை காக்கும் சக்தியும் உண்டு.
மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது. ஓரறிவு உள்ள தாவர வகைகளான காய், கனிவகைகள் மட்டுமே மனிதர்களுக்காக படைக்கப் பட்டது. உயிரை வளர்ப்பது தர்மம். இந்த வாய்ப்பு பாவமற்ற வருக்கும் துன்பத்திலிருந்து விடுபட முயற்சிப்பவர் களுக்கும் கிடைக்கும். உயிர்களை கொல்வது பாவம், பாவகணக்கு யாருக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறதோ அவர்களே அந்த செயலை செய்துகொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு நாளும் பல்லாயிர கணக்கான மக்கள் உணவின்றி உலகமெங்கும் தவிக்கின்றனர். உலகில் மனிதனுக்கு போதும் என்ற எண்ணம் தோன்றுவது உணவருந்தும்போதுதான். ஒருவர் வயிறு நிரம்பி, மனதார வாழ்த்தினால் ஜாதகத்திலுள்ள கர்மா குறைந்து அனைத்துச் செல்வங்களும் தேடிவரும். எனவே இயன்ற உணவுகளை தான, தர்மங்கள் செய்ய பலன் கர்மா குறையும்.
செல்: 98652 20406