சுமார் 60 வயதுடைய ஒருவர் தயங்கித் தயங்கி என் அறைக்குள் நுழைந்தார். அவரை அமரவைத்து, "என்ன? காரியமாக நாடியில் பலன் கேட்க வந்தீர்கள்' என்றேன்.
"ஐயா, சுமார் நான்கு வருடங் களுக்குமுன்பு, ஒருமுறை வந்து, தங்களிடம், நாடியில் பலன் கேட் டுள்ளேன். என்னை உங்களுக்கு அடையாளம் தெரியவில்லையா?' என்றார்.
ஜீவநாடி படிக்க பலர் வருகின்றார்கள். என்னிடம் நேற்று நாடி படித்தவர் களைக் கூட இன்று ஞாபகம் வைத்துக் கொள்ளும் பழக்கம், வழக்கம் என்னிடம் இல்லை. ஆனால் நாடியில் பலன் கேட்டு அகத்தியர் கூறியபடி நடை முறை வாழ்வில் கடைப்பிடித்து செயல்பட்டு காரிய சித்தியை அடைந்தவர்கள் என்னிடம் வந்து கூறிவிட்டு செல்வார்கள். அவர்கள் என்னிடம் அடிக்கடி தொடர்பு கொள்வார்கள். அவர்களை மட்டும் ஞாபகம் வைத்திருப்பேன். நீங்களோ, நான்கு வருடங்களுக்குமுன்பு வந்தேன் என்கின்றீர்கள். சரி, இப்போது வந்த காரணத்தைக் கூறுங்கள் என்றேன்.
"நான்கு வருடங்களுக்குமுன்பு, என் மகள் திருமணம் சம்பந்தமாக வந்து நாடி படித்தேன். அகத்தியர், என் மகளின் முற் பிறவியில், அவள் செய்த பாவத்தைக்கூறி, அதனால் அவளுக்கு உண்டான சாபங் களையும் சில சாப நிவர்த்தி பிரார்த்தனை முறைகளையும், அவற்றை செய்யும் வழி முறைகளையும் கூறினார். மேலும் 28 வயதிற்குமேல், அவளுக்கு திருமணம் செய்தால்தான் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று கூறினார். அப்போது அவளுக்கு 24 வயதுதான்.
ஜீவநாடியில் பலன்கேட்டு சென்ற சில மாதங்களில், நல்ல குடும்பத்தைச் சேர்ந்த, நல்ல உத்தியோகத்தில் இருக்கும் ஒரு பையனுக்கு பெண் கேட்டு வந்தார்கள். நல்ல உத்தியோகம், நல்ல சம்பளமுள்ள இட மென்று, அகத்தியர் கூறியதை அலட்சியம் செய்து, மகளின் முற்பிறவி சாபம் நிவர்த்தியாக கூறிய பிரார்த் தனைகளையும் செய்யாமல், ஜோதிடர் களிடம் பொருத்தம் பார்த்து, அவர்கள் கூறிய நல்ல முகூர்த்த நாளில் திருமணம் செய்துவைத்தேன்.
திருமணம் முடிந்து சுமார் ஆறு மாதங்களில், என் மகளின் வாழ்க்கையில் சிக்கல், குழப்பம் உண்டானது. கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, என் மகள் கணவனுடன் வாழப் பிடிக்காமல், என் வீட்டிற்கு வந்து எங்களுடன்தான் இருக்கின்றாள். இனி அவள் கணவனுடன் வாழமாட்டேன் என்று உறுதியாக கூறியதால், விவாகரத்துக் கேட்டு வழக்கு தொடுத்துள்ளோம். விவாகரத்து கிடைக்குமா? என் மகளின் எதிர்கால வாழ்வு எப்படி அமையும் என்பதை அறிந்து கொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
அகத்தியர் வாக்கினை, கடைப் பிடிக் காமல் அலட்சியம்செய்து, என் மகளுக்கு திருமணம் செய்துவைத்தது தவறுதான். அதற்கு உண்டான தண்டனையைத்தான் இப்போது நாங்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கின்றோம். என் தவறை மன்னித்து, அகத்தியர் இப்போது ஓலையில் தோன்றி பதில் சொல்வாரா? அதனால்தான் தயக்கத் துடன் தங்களை காணவந்தேன் என்றார்.
ஜீவநாடி ஓலைக்கட்டைப் பிரித்துப் பார்க்கின்றேன். அகத்தியர் ஓலையில் ஏதாவது பலன் கூறினால் படிக்கின்றேன். இல்லையேல் என்னை தொந்தரவு செய்யாதீர் கள் என்று கூறிவிட்டு, ஓலையைப் பிரித்தேன். சுமார் பத்து நிமிடம் ஓலையில் எழுத்து எதுவும் தோன்றவில்லை. பிறகு வாசகங்கள் எழுத்தாக ஓடத்தொடங்கியது.
இவன் மகள் முற்பிறவியில் செய்த பாவத் தையும், அதனால் உண்டான சாபத்தையும் இவனுக்கு விளக்கமாகக் கூறி, அதற்கு நிவர்த்தி பிரார்த்தனைகளையும் கூறி, மகள் திருமணத்தை தாமதமாக செய் என்றேன். இவன் அலட்சியப்படுத்திவிட்டான். இவனின் ஆணவ அவசர செயலால், மகள் வாழ்க்கை சிதிலமடைந்தது. எல்லாவற்றையும் சொன்னான். ஆனால் கணவன்- மனைவி யிடையே கருத்து வேறு ஏற்பட்டதற்கான காரணத்தைக் கூறாமல் அகத்தியனிடம் ஏன் சொல்லாமல் மறைக்கின்றான்.
மகளின் திருமணத்தில் மாப்பிள்ளையாக வந்தவனின் சொத்துகளையும், உத்தி யோகத்தில் வாங்கும் சம்பளத்தையும் பார்த் தானே, தவிர, மருமகனாக வரப்போகின்றவனின் சரீர சக்தியை அறிந்தானா? இவன் மருமகன் இளம் வயதில் ஒரு விபத்தில் சிக்கியதால் ஆண்மையை இழந்தான். ஆண்மைக் குறைவு உள்ளவன். தாம்பத்திய உறவில் மனைவியை திருப்திபடுத்த முடியாதவன். ஜோதிடனிடம் இருவரின் ஜாதகத்தையும் கொடுத்து பொருத்தம், பலன்கள் பார்த்தானே, அப்போதாவது கேட்டு தெரிந்துகொண்டானா? திருமணத் திற்குப் பிறகும் இவன் மகள் கன்னி யாகவேதான் இருக்கின்றாள். கணவன்- மனைவி பிரிவிற்கு இதுதான் முக்கிய காரணம்.
நீதி மன்றத்தில், மருமகனின் ஆண்மைக் குறைவை, சுட்டிக்காட்டி வாதாடச் சொல், மருத்துவ பரிசோதனையில் அகத்தியன் உடனிருந்து அதை நிரூபிக்கின்றேன். மகளின் முற்பிறவி பாவத்திற்கு நான் முன்பு கூறிய பிரார்த்தனைகளை முறையாகச் செய்யச் சொல். இன்னும் ஆறு மாதத்தில் மகளுக்கு, வழக்கு வெற்றியாகமுடிந்து, விவாகரத்து கிடைக்கும்.
அகத்தியன் இவனுக்காக ஓலையில் தோன்றவில்லை. பாவப்பட்ட மகளுக் காகவே இப்போது பலன் கூறினேன். இவன் வேதத்தை நம்பி மகள் வாழ்வை வீணாக்கியவன். அகத்தியன் வாக்கை அலட்சியம் செய்தவன். மகளின் எதிர்கால வாழ்க்கையைப் பற்றிக் கேட்டான். இவனை நம்பி இப்போது எதுவும் அதைப்பற்றி சொல்லமாட்டேன். விவாகரத்து முடிந்த பின்பு இவன் மட்டும் தனியாக வரக்கூடாது. இவன் மனைவி, மகள் மூவரும் சேர்ந்து நாடி படிக்கவந்தால் பலன் கூறுவேன் என்று கூறிவிட்டு ஓலையில் இருந்து அகத்தி யர் மறைந்தார்.
அகத்தியர் கூறியதைக் கேட்ட அவர், அகத்தியரின் கோபத்திற்கு ஆளாகி விட்டேன். அவர் கூறியது உண்மைதான். வேத சாஸ்திரத்தையும், வேத ஜோதிடத் தையும் நம்பி, என் மகள் வாழ்க்கையை நானே கெடுத்துவிட்டேன். இப்போது உண்மையை உணர்ந்தேன். விவாகரத்து கிடைத்தவுடன் என் மனைவி, மகளுடன் வந்து, அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றோம். இனி அவர் கூறியபடியே நடைமுறையில் கடைப்பிடித்து எதையும் செய்வேன். நம்பிக்கையில் எதையும் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டு என்னிடம் விடைபெற்றுச் சென்றார்.
செல்: 99441 13267