முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 1.
செவ்வாய்: பூரம்- 1.
புதன்: ஆயில்யம்- 4.
குரு: பரணி- 2.
சுக்கிரன்: மகம்- 2.
சனி: சதயம்- 2 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்:
ஆடி 7 (23-7-2023) சிம்மம், சுக்கிரன் (வ) ஆரம்பம் (காலை 7.03).
ஆடி 9 (25-7-2023) சிம்மம், புதன் (காலை 4.31)
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கன்னி
25-7-2023 பகல் 11.13 மணிக்கு துலாம்.
27-7-2023 இரவு 7.29 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் குரு, ராகு சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாக வேண்டிய நேரமென்பதால் எந்த ஒரு செய-லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்கள்மூலமாக வீண்செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நெருங்கியவர்களிடம் மனக் கசப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனத் தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. மறைமுக போட்டிகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் கவனமாக செயல்பட்டால் இருப்பதை தக்க வைத்துக்கொள்ளமுடியும். புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உடன் வேலை செய்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திரன் மிகவும் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வீண் அலைச்சல், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தலமான 4-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் முடிக்கமுடியும். குரு, ராகு விரய ஸ்தானத்தில் இருப்ப தால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு எதையும் சமாளிப்பீர்கள். சட்டரீதியாக சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் வெளிநபர்களிடம் சிலவிஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு வெளியூர்மூலமாக ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர் களுக்கு அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல் படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்துவந்த அவபெயர்கள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக்கூடிய இனிய நாட்களாக இருக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சுக்கிரனுடன் இருப்பதால் எந்த செயலிலும் தைரியத்தோடு ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள்வழியில் உங்களுக்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 1.
செவ்வாய்: பூரம்- 1.
புதன்: ஆயில்யம்- 4.
குரு: பரணி- 2.
சுக்கிரன்: மகம்- 2.
சனி: சதயம்- 2 (வ).
ராகு: அஸ்வினி- 2.
கேது: சித்திரை- 4.
கிரக மாற்றம்:
ஆடி 7 (23-7-2023) சிம்மம், சுக்கிரன் (வ) ஆரம்பம் (காலை 7.03).
ஆடி 9 (25-7-2023) சிம்மம், புதன் (காலை 4.31)
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கன்னி
25-7-2023 பகல் 11.13 மணிக்கு துலாம்.
27-7-2023 இரவு 7.29 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் குரு, ராகு சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாக வேண்டிய நேரமென்பதால் எந்த ஒரு செய-லும் சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்கள்மூலமாக வீண்செலவுகள் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நெருங்கியவர்களிடம் மனக் கசப்புகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சிக்கனத் தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்களுடைய ஒத்துழைப்பானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. மறைமுக போட்டிகள் ஏற்படக்கூடிய நேரமென்ப தால் கவனமாக செயல்பட்டால் இருப்பதை தக்க வைத்துக்கொள்ளமுடியும். புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உடன் வேலை செய்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் சந்திரன் மிகவும் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் வீண் அலைச்சல், தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் கேந்திர ஸ்தலமான 4-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் கேது சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதார தேவைகள் பூர்த்தியாகும். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உடனிருப்பவர்கள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் முடிக்கமுடியும். குரு, ராகு விரய ஸ்தானத்தில் இருப்ப தால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு எதையும் சமாளிப்பீர்கள். சட்டரீதியாக சில சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் வெளிநபர்களிடம் சிலவிஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது. ஒரு சிலருக்கு வெளியூர்மூலமாக ஒருசில அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர் களுக்கு அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல் படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்கள்மீது இருந்துவந்த அவபெயர்கள் எல்லாம் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக்கூடிய இனிய நாட்களாக இருக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உடல்ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், சுக்கிரனுடன் இருப்பதால் எந்த செயலிலும் தைரியத்தோடு ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள்வழியில் உங்களுக்கு ஆதாயம் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தனக்காரகன் குரு லாப ஸ்தானத்தில் ராகு சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் இருக்கிறது. சூரியன் 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றமுடியும். நீங்கள் போட்ட திட்டங்கள் வெற்றி அடையும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உரிய நேரத்தில் கிடைப்பதால் அன்றாட பணியில் எந்தவித தோய்வு இல்லாமல் சிறப்பாக செயல்படமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும் மற்ற வேலை ஆட்களால் முடிக்கமுடியாத செயல்களை நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக் கூடிய ஒரு பலமும் உண்டாகும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். இந்த வாரத்தில் வெள்ளி, சனி ஆகிய நாட்கள் வளர்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது நன்மை தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு நிதானத் தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நம்பியவர் களே உங்களுக்கு தேவையற்ற இடையூறுகளை ஏற்படுத்துவார்கள். பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களது தேக ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவதும், தேவையற்ற இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பதும் தற்போதைக்கு உத்தமம். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் ஏற்ற இறக்கமான நிலை இருக்கும் என்பதால் நீங்கள் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற எதிர்ப்புகள் அதிகரிப்பதால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். வேலையாட்கள் தேவையற்ற கோரிக்கைகளை வைப்பார்கள், அதன்காரணமாக மன நிம்மதி குறையும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் ஈடுபடுகின்றபொழுது கவனத்தோடு இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறைவது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். இவ்வாரத்தில் வரும் ஞாயிறு, திங்கட்கிழமைகளில் சந்திரன் பலமாக சஞ்சரிப்பதால் உங்களின் செயல்களுக்கு பரிபூரண வெற்றி கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு, ராகு சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய அனுகூலமான நிலையானது இவ்வாரத்தில் இருக்கிறது. சனி உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதாலும், மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 12-ல் புதன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. பொதுவாக நீங்கள் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால்தான் தேவையற்ற கருத்து வேறுபாடுகளை தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும் என்றாலும் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது உத்தமம். உங்கள் தனித்திறமையால் சாமர்த்தியமான முடிவுகள் எடுத்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படமுடியும். சக ஊழியர்களால் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி சுமூகமான சூழ்நிலை நீடிக்கும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களுக்கு மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன் லாப ஸ்தானத்தில் சூரியன் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ஒருபெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் எவ்வித நெருக்கடியும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு விரய ஸ்தானமான 12-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உடன்பிறந்தவர்களை அனுசரித்து செல்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தனக்காரகன் குருபகவான் ராகுவுடன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பண பரிமாற்ற விஷயங்களில் மிகவும் கவனத்தோடு செயல்படுவது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைதற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. உற்றார்- உறவினர்களே உங்களுக்கு ஒரு நல்லது நடக்க இடையூறாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் அடையவேண்டிய இலக்கை நீங்கள் அடையமுடியும். வேலையாட்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வு நேரம் குறையக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான காரியங்களைகூட சுலபமாக முடித்துவிடுவீர்கள். இயற்கை உணவுகளை உண்பதன்மூலம் ஆரோக்கிய குறைபாடுகளை சமாளிக்கமுடியும். தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிசயத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கூறிய நாளில் எடுத்தால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நன்மை தரும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். உங்கள் ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கடந்தகால உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யவேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்கள் தற்போது நிறைவேறி மனமகிழ்ச்சி உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்கள் வளர்ச்சியானது மிகச்சிறப்பாக இருக்கும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் உரிய நேரத்தில் கிடைத்து நிம்மதி உண்டாகும். தொழில் நிறுவனத்திற்கு நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதாரரீதியான அனுகூலங்களை பெறுவீர்கள். பெண்கள்வழியில் எதிர்பாராத உதவிகள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனை தரிசிப்பதுமூலம் சங்கடங்கள் மறையும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசி அதிபதி செவ்வாய்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குருபகவான் 6-ல் இருப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் நெருக்கடியான நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ளமுடியும். புதன், சூரியன் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் உறவினர்கள் ஆதரவு சிறப்பாக இருந்து மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 4-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஆதாயமானது தாமதப்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது, மற்றவரிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொதுவாக குடும்ப விஷயங்களை வெளிநபரிடம் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் உடன்பணிபுரிபவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். பொதுவாக எந்த ஒரு விஷயத்திலும் பக்குவமாக நடந்துகொண்டால் வீண் சிக்கலை தவிர்க்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசியை பார்ப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் உங்கள் எண்ணங்கள் உரிய நேரத்தில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யமுடியும். பூர்வீக சொத்துவகையில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். மாதகோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் பயணங்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது, ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் வேலையாட்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த போட்டி, பொறாமைகள் எல்லாம் தற்போது விலகி மன நிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பு, மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளை நீங்கள் தலையிட்டு குறுகிய நேரத்தில் எடுத்தப் பணியை முடித்து நல்லபெயர் எடுக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் எண்ணிப் பார்க்கமுடியாத அளவுக்கு எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் ஒவ்வொரு காரியத்திலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். குரு, ராகு சேர்க்கைப்பெற்று 4-ல் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக தேவையற்ற நெருக்கடிகள், நெருங்கியவர்களால் நிம்மதி குறைவு உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படும். சட்டரீதியாக சிறிது சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் உங்களுடைய கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. வேலையாட்களால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் கவனத்தோடு இருந்துவிட்டு அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது மிக மிக நல்லது. ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்களும் அதன்மூலம் வீண்செலவுகளும் ஏற்படும். உங்களது தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பிரச்சினை என்றாலும் அதற்கான மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமியை தரிசிப்பது நன்மை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைப்பதால் உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் சற்று குறையும். சுக்கிரன் 7-ல் இருப்பதால் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குருபகவான் 3-லும், ஜென்ம ராசியில் சனியும் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் நிலைமையை சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வதன்மூலமாக ஒருசில ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். வயது மூத்தவர்களுடைய ஆதரவானது உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர்மூலமாக ஆதாயங்கள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதற்கான சன்மானம் கண்டிப்பாக அடையமுடியும். சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன்மூலமாக உங்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் முற்பகல் காலத்தில் தேவையற்ற நெருக்கடிகள், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒரு நிலை நிலவும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு ஒருசில அனுகூலங்கள் நடக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதும் உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சிறப்பான கிரக அமைப்பு என்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள்மூலமாக ஒருசில அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. உங்களது ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்து வந்த வீண் மருத்துவச்செலவுகள் எல்லாம் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை நீங்கள் சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுக்கமுடியும். இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகி சுமூகமானநிலை இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் வீண் பிரச்சினைகள், மனக்குழப்பம் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது, பேச்சில் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வாங்கித்தருவது மிகவும் நல்லது.