இந்த வார ராசிபலன் 2-2-2025 முதல் 8-2-2025 வரை

/idhalgal/balajothidam/inata-vaara-raacaipalana-2-2-2025-mautala-8-2-2025-varaai

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: திருவோணம்- 3.

செவ்வாய்: புனர்பூசம்- 2 (வ).

புதன்: திருவோணம்- 2.

குரு: ரோகிணி- 3 (வ).

ss

சுக்கிரன்: உத்திரட்டாதி- 1.

சனி: பூரட்டாதி- 1.

ராகு: உத்திரட்டாதி- 1.

கேது: உத்திரம்- 3.

கிரக மாற்றம்:

4-2-2025 குரு வக்ரநிவர்த்தி பகல் 3.22 மணிக்கு.

சந்திரன் மாறுதல் ஆரம்பம்: மீனம்.

3-2-2025 இரவு 11.16 மணிக்கு மேஷம்.

6-2-2025 அதிகாலை 2.15 மணிக்கு ரிஷபம்.

8-2-2025 காலை 6.21 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடந்த நான்கு மாதகாலமாக வக்ரகதியில் இருந்த குருபகவான் வரும் செவ்வாய்கிழமைமுதல் வக்ரநிவர்த்தி அடைய இருப்பது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கக் கூடிய அமைப்புகள், குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி யைத் தரும். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமானது வரும் நாட்களில் உண்டு. சிலருக்கு வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாணவ- மாணவியர் கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 8.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- ராகு சேர்க்கைபெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தாலும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலை யாட்கள் ஒத்துழைப்பு மிகமிகச் சிறப் பாக இருப்பதால் வாடிக்கை யாளர்களிடம் நல்லபெயர் எடுக்கக் கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண் களைப் பெறமுடியும். வரும் நாட்களில் வளமான பலன் களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது அனுகூலத்தைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 6, 7.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: திருவோணம்- 3.

செவ்வாய்: புனர்பூசம்- 2 (வ).

புதன்: திருவோணம்- 2.

குரு: ரோகிணி- 3 (வ).

ss

சுக்கிரன்: உத்திரட்டாதி- 1.

சனி: பூரட்டாதி- 1.

ராகு: உத்திரட்டாதி- 1.

கேது: உத்திரம்- 3.

கிரக மாற்றம்:

4-2-2025 குரு வக்ரநிவர்த்தி பகல் 3.22 மணிக்கு.

சந்திரன் மாறுதல் ஆரம்பம்: மீனம்.

3-2-2025 இரவு 11.16 மணிக்கு மேஷம்.

6-2-2025 அதிகாலை 2.15 மணிக்கு ரிஷபம்.

8-2-2025 காலை 6.21 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடந்த நான்கு மாதகாலமாக வக்ரகதியில் இருந்த குருபகவான் வரும் செவ்வாய்கிழமைமுதல் வக்ரநிவர்த்தி அடைய இருப்பது அற்புதமான அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருக்கக் கூடிய அமைப்புகள், குடும்பத்தில் மங்கள கரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றி யைத் தரும். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய யோகமானது வரும் நாட்களில் உண்டு. சிலருக்கு வெளியூர், வெளிநாடுகள் மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய நேரமாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாணவ- மாணவியர் கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய நேரமாகும். இந்த வாரத்தில் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவதற்கு மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 8.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- ராகு சேர்க்கைபெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தாலும், பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலை யாட்கள் ஒத்துழைப்பு மிகமிகச் சிறப் பாக இருப்பதால் வாடிக்கை யாளர்களிடம் நல்லபெயர் எடுக்கக் கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பொழுதுபோக்குகளைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்ல மதிப்பெண் களைப் பெறமுடியும். வரும் நாட்களில் வளமான பலன் களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது அனுகூலத்தைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 6, 7.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சற்று நிதானத்தோடு செயல்பட வேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நெருங்கியவர்களால் தேவையில்லாத நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். பண வரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்றுக் கவனத்தோடு இருக்க வேண்டும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப் பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பையும் உதாசீனப் படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் சில முன்னேற்றத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் தொடர்பான கணக்கு வழக்கு களை சரியான முறையில் பராமரிப்பது நல்லது. சுக்கிரன் 10-ல் இருப்பதால் ஒருசிலருக்கு நெருங்கியவர்கள்மூலமாக சில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய அமைப்பும், தேவையற்ற மன குழப்பமும் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல் பட்டாலும் ஞாபக மறதி காரணமாக அடையவேண்டிய மதிப்பெண்களை அடைவதற்கு இடையூறுகள் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்று வது அனுகூலத்தைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5, 8.

ss

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 7-ல் புதன், 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 11-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் வக்ரநிவர்த்தி அடைந்து சஞ்சாரம் செய்ய இருப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் உங்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக விலகி ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர் கள். நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் சாதகமாக இருப்பதால் அனைத் துத் தேவைகளும் பூர்த்தி யாகும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் தற்போது கைகூடும். தொழில், வியாபாரத்தில் இருந்த பொருட் தேக்கங்கள் தற்போது விலகி நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சில நேரங்களில் நன்றாக இல்லாவிட்டாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பம் அமையும். அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சுலபமாக செய்துமுடிக்க முடியும். வண்டி, வாகனங் களில் செல்கின்றபொழுது சற்று நிதானத்தோடு செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது அனுகூலத்தைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியாதிபதி சூரியன் ருண, ரோக, ஸ்தானமான 6-ல் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்துச் சென்றால் வளமான பலன்களை பெறக் கூடிய வாய்ப்பானது உங்களுக்கு உண்டு. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகளைத் தற்போது பெறமுடியும். புதிய யுத்தி களைப் பயன்படுத்தி தொழி-ல் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு எதிலும் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன் களை அடையக்கூடிய நேரமாகும். பிறரால் முடிக்க முடியாத பணியைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, வேங்கடேசப் பெருமாளைத் தரிசிப்பதன்மூலம் அனுகூலங்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 5-ல் சஞ்சரிப்பதும், 6-ல் சனி, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய கனவுகள் எல்லாம் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். கடந்த நான்கு மாதகாலமாக வக்ரகதியில் இருந்த குரு பகவான் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் வக்ரநிவர்த்தி பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து சகல சௌபாக்கியங்களை யும் அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியடையக்கூடிய அதிர்ஷ்டமும் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட சுலபமாக செய்துமுடிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு கடந்தகாலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு எல்லாம் தற்போது விடிவுகாலம் பிறந்து மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் சிறப் பான மதிப்பெண்களைப் பெறுவது மட்டுமில்லாமல் உயர்கல்வி தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு துர்க்கையம்மனை தரிசிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 8.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் சூரியன், 6-ல் சுக்கிரன், 8-ல் குரு சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நியாயப்படி உங்களுக்கு வரவேண்டிய பணவரவுகள் தற்போது தாமதமாவதால் தேவை யற்றவகையில் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். பெண்கள்மூலமாக மனக்கசப்பான சம்பவங்கள் நடக்கலாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறு கள் ஏற்படும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலம் தேவையற்ற நெருக்கடி களை சமாளிக்கமுடியும். அதிக முதலீடு கள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக மன நிம்மதி குறைவு உண்டாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மேலதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்கள்மூலமாக வீண் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது அனுகூலத்தைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 4, 5.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் வக்ர நிவர்த்திபெற்று சஞ்சரிக்க இருப்பதால் கடந்த சில மாதங்களாக இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து மனமகிழ்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் பொருளாதாரரீதியாக ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் இருக்கிறது. சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். உங்கள் ராசிக்கு 5-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சாமர்த்தியமாக செயல்பட்டு எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப் பாக செயல்படுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று தற்போது கிடைக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 3-ல் சனி, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உடனிருப்பவர் கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் சூழ்நிலைக்கு ஏற்ற வாறு நடந்துகொள்வது, நெருங்கியவர்களை அனுசரித் துச் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள்மூலமாக தேவையில்லாத மனக்கவலைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் தற்போது குறைவதால் எதிலும் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எந்த பணியும் சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனக் குறைவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் மனதை ஒருநிலைப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் புதன், 3-ல் ராகு, 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. வரும் செவ்வாய்க்கிழமைமுதல் குரு வக்ரநிவர்த்தி அடைய இருப்பதால் தற்போது இருக்கக்கூடிய பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிக மிகச் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பும் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் இருக்கிறது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன், பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலமும், படிப்பில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு காலபைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 8.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று நிதானத்தைக் கடைபிடிக்கவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உடல்சோர்வு காரணமாக எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியாது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். தொழில் தொடர்பான கணக்குகளை சரியான முறையில் பராமரித்துக்கொள்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. முடிந்தவரை வயது மூத்தவர்களிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற் களை சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு செய-லும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது நல்லது. எது எப்படியிருந்தாலும் உங்கள் உழைப்புக் கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் ஞாபக மறதி ஏற்படக் கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெறுவதற்கு ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத் தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணஉதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாக கூடிய நேரமாகும். ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வியாபாரத்தில் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வியாபார ரீதியாக மறைமுக எதிர்ப்புகள், போட்டிகள் நிலவினாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். வேலையாட்களை அனுசரித்து செல்வதன் மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு செயல் படுவது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு தற்போது வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் நீண்டநாட்களாக முடிக்க முடியாத பணிகளைகூட வரும் நாட்களில் சுலபமாக செய்து முடிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறந்து விளங்கி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் விலக மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது தற்போதைக்கு நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 2, 3, 6, 7.

bala070225
இதையும் படியுங்கள்
Subscribe