முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: விசாகம்- 2.

செவ்வாய்: மிருகசீரிடம்- 3 (வ).

Advertisment

புதன்: விசாகம்- 3.

குரு: உத்திரட்டாதி- 1 (வ).

சுக்கிரன்: விசாகம்- 4.

tt

சனி: அவிட்டம்- 1.

ராகு: பரணி- 2.

கேது: சுவாதி- 4.

கிரக மாற்றம்:

ஐப்பசி 27 (13-11-2022) விருச்சிக புதன் (இரவு 9.19).

ஐப்பசி 27 (13-11-2022) ரிஷபச் செவ்வாய் (இரவு 8.52).

ஐப்பசி 30 (16-11-2022) விருச்சிக சூரியன் (இரவு 7.15).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மிதுனம்.

14-11-2022 காலை 6.30 மணிக்கு கடகம்.

16-11-2022 மாலை 6.58 மணிக்கு சிம்மம்.

19-11-2022 அதிகாலை 5.28 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் ராகு, ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிக்கவிருப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். சூரியன் 7, 8 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், உடல் உபாதைகள் ஏற்படும் நிலை வரும் நாட்களில் உண்டு. எதிலும் கவனத்தோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். புதன், சுக்கிரன் 8-ல் சஞ்சரிக்கவிருப்பதால் வரவுக்குமீறிய செலவுகள் உண்டாகும். பணப் பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களின் உதவியை எதிர்பார்க்காமல், நீங்களே காலநேரம் பார்க்காமல் உழைத்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழிலில் சட்டரீதியாக ஏற்படும் சில சிக்கல்களால் நிம்மதி குறையும். மனம் தளராமல் தைரியத்துடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல், தேவையில்லாத விஷயங் களுக்குக் கூட மற்றவர்கள் உங்களைக் கேள்வி கேட்கும் நிலை ஏற்படும். பொறுமையோடு இருப்பது, உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. ஞாயிறு, சனி ஆகிய நாட் களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவி கள் கிடைத்து உங்களுக் குள்ள பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ள முடியும். முருக வழிபாடு, சிவனுக்குப் பாலாபிஷேகம் செய்வது சங்கடங்களைக் குறைக்கும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் புதனுடன் 7-ல் வலுவாக சஞ்சரிப்பதால், எதிலும் தைரியத்தோடு செயல்படுவது மட்டு மல்லாமல் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர் கள். குரு பார்வை 3, 5, 7 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக் கூடிய யோகம் ஏற்படும். கடந்த காலங் களில் நிலவிய நெருக்கடிகள் விலகி மன அமைதி உண்டாகும். ராசிக்கு 6-ல் கேது, 9-ல் சனி சஞ்சரிப்பதால் வெளி மாநிலங்கள் மூலமாக அனுகூல மான செய்தி களைப் பெறுவீர் கள். வெளியூர்ப் பயணங்கள் மேற் கொள்ள எண்ணம் கொண்டவர்களுக்கு தற்போது நல்ல வாய்ப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும். போட்ட முதலீட்டை எடுக்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் அமைவார்கள். அதிக முதலீடுகொண்ட செயல் களைத் தற்போது செயல் படுத்தினால் அதன்மூலம் ஆதாயங்களைப் பெறமுடியும். உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிக் காட்ட சிறப்பான சூழ்நிலை உண்டாகும். உடனிருப்பவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். ராசிக்கு 2-ல் சஞ்சரித்த செவ்வாய் வரும் நாட்களில் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கவிருப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்படும். முருக வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் ராகு, 17-ஆம் தேதிமுதல் 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்துவிடுவீர்கள். சுக்கிரன், புதன் 6-லும், சனி 8-லும் சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய செலவுகள், தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். பொதுவாக கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது உத்தமம். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்சமயத் திற்குத் தள்ளிவைக்கவும். தொழில்ரீதியாக அனைத்து செயலிலும் நீங்களே நேரடியாக செயல் படுவதுதான் நல்லது. வேலை யாட்களை நம்பினால் சில நேரங்களில் வீண் நெருக்கடிகள் வந்துசேரும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் நேரமென்பதால் வெளிநபர்களிடம் தொழில் தொடர்பான விஷயங்களைப் பேசும்பொழுது கவனத் தோடு இருப்பது நல்லது. ஒரு நல்லகாரியம் கைகூட வேண்டிய நேரத்தில் நெருங்கியவர்களே சில இடர்களை ஏற்படுத்துவார்கள். உத்தி யோகத்தில் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். பணியில் கவனம் செலுத்தமுடியாத அளவுக்கு உடல்சோர்வு ஏற்படும். வெளியூர்ப் பயணங்கள் மேற்கொள்ளும்பொழுது கவனமாக இருக்கவும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத பணச் சேர்க்கை ஏற்பட்டு ஆதாயங்களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருக்கும். இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்த செவ்வாய் இனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறைந்து நல்ல வளர்ச்சியடைவீர்கள். தற்போது 4-ல் சஞ்சரிக்கும் சூரியன் வியாழக்கிழமை முதல் 5-ல் சஞ்சரிக்கவிருப்பதால் தற்போதுள்ள அலைச் சல்கள் குறைந்து நிம்மதி யுண்டாகும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றக் கூடிய பலம், குடும்பத் தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும் யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபங்களை அடைவீர்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால், கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக் கான பிரதிபலன்களைத் தற்போது பெற்று கடன்களைப் பைசல் செய்யமுடியும். தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கும் யோகமுண்டாகும். வெளியூர்மூலமாக அனு கூலமான செய்தி கிடைக்கும். உத்தியோகஸ் தர்கள் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். மற்றவர்களால் முடிக்கமுடியாத கடினமான பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்து முடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி பெறுவதுடன் அதிக அனுகூலங்களை அடைவீர்கள். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்கள் ஏற்படும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இந்த வாரம் இருக்கும். ராசிக்கு 4-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 10-ல் சஞ்சரிக்கவிருப்ப தால் உங்களது பெயர், புகழ், அந்தஸ்து மேலோங்கும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட உங்களின் நல்ல பண்பைப் புரிந்து கொண்டு தற்போது நட்புடன் பழகுவார்கள். கடந்த காலங்களில் இருந்துவந்த வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக அனு கூலமான பலன்கள் கிடைக்கும். பிறருக் குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றும் பல முண்டாகும். வார முற்பாதியில் சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியினை அடையமுடியும். திறமைவாய்ந்த வேலை யாட்கள் அமைவதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கடந்தகால சட்டச் சிக்கல் கள் விலகி தொழிலில் நிம்மதியுடன் ஈடுபட முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் திறமைகள் வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். அதிகாரியின் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் கவலைகள் விலகும். உடன் வேலை செய்பவர்களிடம் நிலவிய கருத்து வேறுபாடுகள் முழுமையாகக் குறையும். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, குலதெய்வ தலத்திற்குச் சென்றுவருவதன்மூலம் வாழ்வில் மறுமலர்ச்சி உண்டாகும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் 3-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. குருபகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது பிரச்சினைகளைக் குறைக்க உதவும். சர்ப்ப கிரகங்கள் சாதகமற்று இருப்பதால் குடும்பத் தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்களால் நிம்மதி குறையும். வாகனங்களில் செல்லும்பொழுதும், இரவுப் பயணங்கள் மேற்கொள்ளும்பொழுதும் மிக கவனத்தோடு இருக்கவும். ராசிக்கு 2-ல் சஞ்சரிக்கும் சூரியன் வியாழக்கிழமை முதல் 3-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால், வாரத் தொடக்கத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் பிற்பாதியில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் காலநேரம் பார்க்காமல் உழைத்தால்தான் இடர்களை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலை யாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயங்களை அடையும் வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும், உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் விரைவில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும். அடுத்த வாரத்தில் குரு வக்ரநிவர்த்தியடை வதால் உங்கள் வாழ்வில் நல்லதொரு திருப்பம் உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு கஷ்டங்கள் குறையும். விநாயகர் வழிபாடு, துர்க்கையம்மனை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

tt

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதும், தற்போது 9-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் இனி 8-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். சூரியன் 1, 2-ல் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு பொறுமையைக் கடைப் பிடிப்பது நன்மை தரும். பொருளாதார நெருக்கடிகளால் சேமிப்புகள் குறையும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சில இடைத் தரகர்களின் செயல்களால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். வேலை யாட்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காதென்பதால் அனைத்திலும் கவனமாக செயல்படவேண்டிய நேரமாகும். வேலைக் குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அமைதி குறையும். அதிகாரி களுடைய கெடுபிடிகளால் நிம்மதியற்ற நிலை ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தினால் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால், மற்ற கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் எதிர்பாராத நிகழ்வுகள் ஏற்பட்டு எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். சூரிய நமஸ்காரம் செய்வது, முருகனுக்கு அர்ச் சனைசெய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிக்கவிருப்பதால் சகலவிதத்திலும் வளமான பலன்கள் ஏற்படும். சனி 3-ல் வலுவாக சஞ்சரிப்பதும், 6-ல் ராகு சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பென்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றி, பணவரவுகள் சிறப்பாக இருக்கும் நிலை, எடுத்த பணியைக் குறிப் பிட்ட நேரத்தில் செய்துமுடிக்கும் பலமுண்டா கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. இதுவரை 8-ல் சஞ்சரித்த செவ்வாய் இனி 7-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடந்த காலங்களில் இருந்துவந்த மருத்துவ செலவுகள் குறையும். இன்னும் சில நாட்களில் குரு வக்ரநிவர்த்தி அடையவிருப்ப தால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடைபெறும். தடைப் பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புகள் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்களை ஈட்டலாம். தொழில் வளர்ச்சிக்கான உங்களது முயற்சிகள் வெற்றிபெற்று வெளியிடங்கள்மூலமாக பொருளாதார உதவிகள் கிடைக்கும் யோகமும் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறைந்து பதவி உயர்வுகள் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியுண்டாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பல்வேறு வளமான பலன்களை எளிதில் அடையமுடியும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நன்று.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வதன்மூலம் பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். சுக்கிரன், புதன் 12-ல் சஞ்சரிப்பதால் சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படலாமென்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், வார முற்பாதியில் சூரியன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதாலும், ராசிக்கு 7-ல் சஞ்சரித்த செவ்வாய் இனி 6-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து கவனத்தோடு செயல்படவேண்டிய நேரமாகும். கடினமாக உழைத்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். பண விஷயங்களில் சிக்கனத்துடன் இருப்பது நல்லது. வேலையாட்கள்மூலம் நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடனிருப்பவர்களும் உங்கள்மீது வீண் பழிகளைச் சொல்வார்கள். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருந்தால் எதிர்காலத்தில் நல்ல நிலையை எட்டமுடியும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடையும் வாய்ப்புண்டு. திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சரபேஸ்வரர் வழிபாடு, சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, 4-ல் ராகு சஞ்சரிப்பது தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பென்றாலும், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், புதன் சஞ்சரிக்கவிருப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். சூரியன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், ஒரு பெரிய மனிதரின் ஆதரவால் உங்கள் கஷ்டங்கள் குறையக்கூடிய நிலை ஏற்படும். ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து, இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இல்லாவிட்டாலும் உங்களின் தனித்திறமையால் எடுத்த ஆர்டர்களை வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு சாதகமாக இருப்பதால் தொழில்ரீதியான சட்டச் சிக்கல்கள் குறைந்து நிம்மதி உண்டாகும். பணியில் பொறுமையோடு செயல்பட்டால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகளை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் சந்திரன் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காரியங்கள் தாமதமாகக்கூடிய சூழ்நிலை ஏற்படும். ஆஞ்சனேயர் வழிபாடு, சனிபகவானுக்கு இரும்புப் பாத்திரத்தில் தீபமேற்றுவது, துர்க்கையம்மனை வழிபடுவது நன்று.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சுக்கிரன், புதன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். பொருளாதார நெருக்கடி இருந்தாலும் எதிர்பாராத தனச் சேர்க்கையால் கடந்தகால சோதனைகள் படிப்படியாகக் குறையும் வாய்ப்புகள் உண்டு. விரைவில் குரு வக்ரநிவர்த்தி அடையவிருப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, முடிந்தவரை வேலை விஷயங்களில் பக்குவமாக நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் முனைப் புடன் செயல்பட்டால்தான் இலக்கை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்குமென்றாலும், மறைமுகப் போட்டிகள் காரணமாக லாபங்களை அடைவதில் இடைஞ்சல்கள் ஏற்படும். சூழலுக்குத் தக்கவாறு நடந்துகொண்டால் அனுகூலங்களை அடையமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை இருந்தாலும், உழைப்புக்கான பலனை விரைவில் அடைவீர்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடந்தகால சோதனைகள் விலகி மனதளவில் கவலைகள் விலகும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவியைச்செய்வது, முருக வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் லாப ஸ்தானமான 11-ல் சனிபகவான் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் நினைத்ததை நிறைவேற்றக்கூடிய பலமுண்டாகும். பணவரவு தாராளமாக இருந்து சகலவிதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். இதுவரை 4-ல் சஞ்சரித்த செவ்வாய் இனி 3-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் சூரியன் வியாழக்கிழமை முதல் 9-ல் சஞ்சரிக்கவிருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புகளும், அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறக்கூடிய அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. ஒருசிலருக்கு வெளியூர்த் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் பணியாற்றமுடியும். சிறப்பாக செயல்படுவதால் மற்றவரிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நிம்மதி உண்டாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் அசையும்- அசையா சொத்துகளை வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் அதில் அனுகூலமான பலன்களை அடைவீர் கள். சிவன் தலங்களுக்குச் சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது கெடுதியைக் குறைக் கும்.