முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:

சூரியன்: ஆயில்யம்- 3.

செவ்வாய்: ரோகிணி- 4.

Advertisment

புதன்: மகம் 3 (வ).

குரு: ரோகிணி- 4.

ss

சுக்கிரன்: மகம்- 4.

சனி: பூரட்டாதி- 2 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

ஆடி 31 (16-8-2024) சிம்ம சூரியன் (இரவு 7.44).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- துலாம்

13-8-2024 அதிகாலை 4.15 மணிக்கு விருச்சிகம்.

15-8-2024 பகல் 12.52 மணிக்கு தனுசு.

17-8-2024 மாலை 5.28 மணிக்கு மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் குரு- செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும், பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகமிக நல்லது. சுக ஸ்தானமான 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படலாம். இருப்பதை அனுபவிக்கக்கூட இடையூறுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருந்தாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர் சிறப்பான மதிப்பெண்களை பெற்று பள்ளி கல்லூரிக்கு பெருமை சேர்ப்பார்கள். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கைக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதாலும், சுக ஸ்தானமான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்பு ஏற்படும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. முயற்சி ஸ்தானமான 3-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளை பயன்படுத்தி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த தேவையற்ற இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி ஏற்றம்மிகுந்த பலன்கள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்தி ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகச்சிறப்பாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொண்டு உங்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படுவது, முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. செவ்வாய், குரு 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள் என்றாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படும். கூட்டாளிகளை அனுசரித்துச் செல்வது தற்சமயத்துக்கு நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் அதிகரிப்பது மட்டுமில்லாமல் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 16.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், குரு சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக அனுகூலமான பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். ஜென்ம ராசிக்கு 2-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். உங்களது பேச்சுத் திறமையால் பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். தற்போது சனி வக்ரகதியில் இருப்பதால் கடந்த காலங் களில் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகரீதியாக நல்ல மேன்மைகளை அடையும் யோகமும் ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டாகும். உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகி மன நிம்மதியுடன் பணிபுரிய முடியும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசு களை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, பெருமாள் வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 15, 16, 17.

rasi

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் சாமர்த்தியமாக செயல்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கக்கூடிய நேரமென்பதால் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன்மூலமாக தேவையற்ற நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். முடிந்தவரை அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது, படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. காலபைரவரை வழிபாடு செய்வதும், துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதும் ஏற்றமிகுந்த பலன்களை உங்களுக்குத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் மாதக்கோளான சூரியன் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடும். புதன், சுக்கிரன் விரய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் தேவையற்ற வகையில் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவி கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் இதுவரை இருந்த இடர்பாடுகள் எல்லாம் விலகி தொழிலை சாதகமாக நடத்தி நல்ல லாபத்தை அடையமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக மன மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்திற்கு தற்போது நல்ல சன்மானம் கிடைக்கக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது. லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசி அதிபதி சுக்கிரன், புதனுடன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் இந்த வாரத்தில் 10, 11-ல் சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சர்ப கிரகமான ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எந்தவித பிரச்சினையும் துணிவோடு எதிர்கொண்டு ஏற்றங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் அமையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். உடன்பிறந்தவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகரீதியாக பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக படிப்பது மட்டுமில்லாமல் உடனிருப்பவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய பலம் உண்டாகும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப் பாடோடு இருப்பது தற்போதைக்கு சிறப்பு. முருக வழிபாடு மேற்கொள்வதும், தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதும் நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 16, 17.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடைபெறும். வெளியூர் தொடர்புகள் மூலமாக ஆதாயங்கள் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய தேவையற்ற அலைச்சல்கள் எல்லாம் குறைந்து ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ஒரு பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைத்து நீண்டநாட்களாக தீர்க்க முடியாத இருந்த பிரச்சினைக்கு ஒருநல்ல தீர்வு கிடைக்கும். மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். புதிய திட்டங்களை போட்டு தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், சக ஊழியருடைய ஆதரவு சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும் உண்டு. மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டி தேர்வுகளில் பங்குபெற்று வெற்றிபெறுவார்கள். இந்த வாரத்தில் விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானம் என வர்ணிக்கப்படக்கூடிய 6-ஆம் வீட்டில் செவ்வாய் பலமாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். புதன், சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் குறையும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உறவினரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் உடைய உதவியை நம்பாமல் எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை பொது வெளியில் பேசாமல் இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது நிதானத்தோடு செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களைச் சொல்வார்கள். ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் நன்மை கிடைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 16, 17.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பதும் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதும் நல்லது. சுக்கிரன், புதன் 8-ல் சஞ்சரிப்ப தால் தேவையற்ற வீண் விரயங்கள் ஏற்படலாம். எந்த ஒரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதாலும், 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் எந்தவித நெருக்கடியும் துணிச்சலோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும் என்றாலும் வேலையாட்கள் தரக்கூடிய தொந்தரவுகள் உங்கள் மன அமைதியை குறைக்கும். ஒருசில நேரங்களில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தவிர்ப்பது நல்லது. கூட்டாளிகள் மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். எதிலும் சற்று பொறுமை காப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் அனாவசிய விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும், லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வதும் நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 11, 12, 13, 14.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கக்கூடிய நிலை, இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும் யோகம் உங்களுக்கு உண்டு. ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் மற்றவரிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமைக் காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. புதிய ஆர்டர்கள் கிடைப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், தனவரவும் ஏற்படும். ஒருசிலருக்கு நீங்கள் வாங்கிய கடன்களை தற்போது பைசல் செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல ஒரு வளர்ச்சியும் நீண்ட நாட்களாக நீங்கள் விரும்பிய வாய்ப்புகளும் தற்போது கிடைக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டமும் உண்டு. உடல்ரீதியாக இருந்த சின்னசின்ன பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் தேவையற்ற மருத்துவ செலவுகள் குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 13, 14, 15, 16.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் பொறுமையோடு இருக்கவேண்டும். உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் என்றா லும் அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்க முடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய ஒரு நல்ல வாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். ஒருசில நேரங்களில் வயது மூத்தவர்களுடைய ஆலோசனையை கேட்டு செயல்படுவது மிகமிக நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது தேவையற்ற பழிச் சொற்களை சொல்வார்கள். ஒருசில விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சக நண்பர்கள் உங்களை மாற்று பாதைக்கு அழைத்துச் செல்ல முயற்சிப்பார்கள் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. குருபகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 16, 17. ப்