புதன் தசை

இது 17 வருடங்களுடையது. புதன் என்று சொன்னவுடன் தோல் மற்றும் நரம்புகள் ஞாபகத்துக்கு வரும். மேலும் வாதம், வாயுக்கோளாறு, நெற்றி, நாக்கு, கழுத்து சம்பந்த நோய்கள், கைகள், கழுத்து, தோள்பட்டை, தொண்டை சார்ந்த நோய்கள், மார்பு, கேசம், முதுகு தண்டுவடம், அதிகமான அரிப்பு, அலர்ஜி போன்ற நோய்களை புதன் குறிப்பார். புதனின் தானியம் பச்சைப்பயிறு. மேலும் கீரைவகைகள், பச்சைப் பட்டாணி, வெந்தயம், நெல்லி, கொடி காய்கள் என இவற்றையும் குறிக்கி றார்.

புதன் தசை- புதன் புக்தி

இது ஆரம்பித்தவுடன் சிலர் வாய் வார்த்தை ஒழுங்காக பேசமுடியாமல் வாய் குளறல் ஏற்படும். சிலர் மூளை சம்பந்த நோயால் பாதிக்கப்படுவர். அனேகர் தோல் அரிப்பு, தோல் அலர்ஜி, படை, தேமல் இவற்றால் அவதிப்படுபவர். மிகச் சிலர் வ-ப்பு நோய் தோன்றி, மனக்கிலேசத் துக்கு ஆளாவர். பொதுவாக புதன் தசை ஆரம்பித்துவிட்டது என்பதை உங்கள் தோல் நோய் காட்டிக்கொடுக்கும். விஷ்ணுவை வணங்குவது, துளசி தீர்த்தமும் அருமருந்து கள் ஆகும்.

Advertisment

புதன் தசை- கேது புக்தி

இந்த இரண்டு கிரகங்களுமே, அறிவு, புத்தி சார்ந்தவை. இதை வியாதி என்கிற நோக்கில் அலசும்போது, வரும் நோய்கள் புத்தி, மூளை சார்ந்தவையாக அமையும். இவை இரண்டும் சற்று அலிக்கிரகங்கள் வேறு. எனவே சிலர் பாலின வேறுபாட்டை சந்திக்கக்கூடும். பேச்சின் தன்மை மாறுபடும். நரம்புகள், மூளை இவை நிலையற்ற தன்மை அடைவதால் சிலருக்கு மூளை பிசகுவதும், காக்கா வலிப்பும் வரக்கூடும். சிலர் ஒருதலை காதல் வயப்பட்டு, பின் அதன் தோல்வியால், தாடி வளர்ப்பதும், பைத்தியம் பிடிப்பதும் இந்த தசை- புக்தியில் நடக்கும். எனவே இந்நேரத்தில், ஜாதகர்கள் மாறுபாடாக நடந்துகொண்டால், அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும். புதன் பச்சைப் பயரை யும், கேது கொள்ளு தானியத்தையும் குறிப் பார். பாசிப் பயறு சுண்டலும், கொள்ளு ரசமும் சரியாக வரும். கற்பக விநாயகரை வணங்குவது நலம். அருகிலுள்ள பிள்ளை யாரை, அருகம் புல் லால் வணங்குங்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு, அறிவுசார்ந்த பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். அது பல வண்ணம் கொண்ட தாக இருக்கட்டும்.

புதன் தசை- சுக்கிர புக்தி

Advertisment

புதன் தோல் நோயைக் குறிக்க, சுக்கிரன் அழகைக் குறிப்பார். முக்கியமாக சுக்கிரன் கன்னத்தைக் குறிப்பார். எனவே இந்த தசை- புக்தி மாறியவுடன், ஜாதகர்கள், கன்னத்தில் திட்டு திட்டாக படை, சொறி, தேமல், கறுப்பு திட்டு என இவை ஏற்படுவதைக் காணலாம். புதன் நரம்பு மண்டலத்தைக் குறிக்க, கர்ப்பையில் நரம்புகளால் பிரச்சினை ஏற்படும். மேலும் சிறுநீர் பாதையில் நரம்புகள் சம்பந்தமான கோளாறு உண்டு. வெகுசிலருக்கு ஏற்படும் முதுகு தண்டுவட பிரச்சினை, தாம்பத்திய தடையை உண்டாக்கும். உடல் முழுவதும் பளபளப்பு குறைந்து, சொற சொறவென்று, சற்று அருவெருப்பாக மாறும். புதன் பச்சைப்பயறை குறிக்க, சுக்கிரன் இனிப்பைக் குறிக்க, பாசிப்பருப்பு பாயசம் கிரகச் சேர்க்கை மட்டுமல்லாது. மிக சத்து நிறைந்த உணவும் ஆகும். திருக்கோஷ்டியூர் சென்று வணங்கவும். அருகிலுள்ள மகாலட்சுமி தாயாருடன் உள்ள பெருமாளை துளசியும், கற்கண்டும் கொண்டு வணங்கவும். மாணவ- மாணவியருக்கு, இனிப்புகள் கொடுக்கலாம்.

புதன் தசை- சூரிய புக்தி

இந்த நேரம் தலையில் பொடுகுத் தொல்லை அதிகம் ஆகும். நரம்புத் தளர்ச்சி அதிகரிக்கும். வாய்ப்புண் வரும். சிலர் குடல் புண்களால் அவதிப்படுவர். பசியின்மை ஏற்படும். ஈரல் கெடும். தோள் வலி வரும். சிலர் காதுகளில் சீழ் பிடிக்கும். உதடு, அதிக சூட்டினால் வெடித்து வலிவரும். உடம்பு முழுக்கவே, ஆங்காங்கே தோல் சுருங்கினாற் போல் ஆகிவிடும். புதன் பச்சைப் பயறைக் குறிக்க, சூரியன் கோதுமையைக் குறிப்பார். எனவே கோதுமை ரொட்டியும், பாசிபயறு சப்ஜியும் ஏற்றது. கும்பகோணம் உப்பிலி அப்பன் கோவில் சென்று வணங்குவது நல்லது. அருகிலுள்ள பெருமாள் கோவிலில், கருடாழ்வாருக்கு விளக்கேற்றி வணங்கவும். மாணவ- மாணவியருக்கு, கோதுமை சார்ந்த உணவு வழங்கலாம்.

dd

புதன் தசை- சந்திரன் புக்தி

இந்த இரு கிரகங்களுமே, அறிவைக் குறிப்பது. இதனால் வேக புத்தியினால், பேச்சு ஒழுங்கற்று ஆகிவிடும். நாம் ஒன்று கேட்டால், அவர் வேறு ஒன்று பதில் கூறுவர். சிலர் தலை ஆட்டம் காணும். அஜிரணம் காரணமாக, வயிற்றுப்புண், வயிறு கோளாறு உண்டாகும். சிலர் குடல் புண்ணால் ரொம்ப அவதிக்கு ஆளாவர். இந்தக் காலக்கட்டத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். புதன் பச்சைப்பயிறைக் குறிக்க, சந்திரன் அரிசியைக் குறிப்பார். வெண்பொங்கல் ஏற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதரை சேவிப்பது நலம். அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு, அபிஷேகப் பொருட்களை வாங்கிக் கொடுத்து, வணங்கவும். மாணவர்கள், சுத்தமான குடிநீர் குடிக்க உதவவும்.

புதன் தசை- செவ்வாய் புக்தி

இந்தக் கால நேரத்தில், முக்கியமாக மறைவு ஸ்தான நோய்கள் வந்து, ஜாதகரை பாடாய்படுத்தும். ஆசன வாய் கொப்பளம், மூலம், இடுப்பில் படை, சொறி, மர்ம ஸ்தானங் களில் புண்கள், சிறுநீர்க்கல், கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சை என இவ்விதம் பெரும் இன்னல் தோன்றும். சிலருக்கு சூட்டினால் தொண்டைக் கட்டிக்கொள்ளும். காது அரிப்பு எடுக்கும். குரல் மாறும். புதன் பச்சைப் பயறைக் குறிக்க, செவ்வாய் துவரையைக் குறிப்பார். இந்த பருப்புகளோடு இன்னும் அரிசி, கடலை பருப்பை சேர்த்து அடை செய்து கொடுக்கலாம். இந்த கிரகச் சேர்க்கைக்கு, நரசிம்மரைத் தவிர வேறு தெய்வம் கிடையாது. அருகிலுள்ள நரசிம்மரை பானகம் கொண்டு வழிபடவும். மாணவ- மாணவியருக்கு, ஜியோமெட்ரிக் பாக்ஸ் போன்ற பாட உபகரணங்களை வாங்கிக்கொடுங்கள்.

புதன் தசை- ராகு புக்தி

இந்தக் காலக்கட்டம் ஈஸ்னோபீலியா என்ற நோய் தாக்குதலை தரும். காது, அடைத்துக்கொள்வது, சீழ் பிடிப்பது என காதை டமாரம் ஆக்கும் அளவிற்கு நோய் வரும். தொண்டைக்கட்டு, தொண்டையில் கிருமிகள் பாதிப்பு, தொண்டை சதை வளர்தல் என ஏதோ ஒன்று வரும். ஆஸ்த்துமா தொல்லை அதிகரிக்கும். வறண்ட இருமல் ஏற்படும். இந்த புதனும், ராகுவும் சேர்ந்து, ஒரு ஜாதகரின் முகத்தில் எத்தனைவித நோய் தரமுடியுமோ, அத்தனையையும் யோசித்து, யோசித்து தருவர். ஆக முகத்தை, தோள், கழுத்து, கைகள் என இவற்றிலும் இவர்கள் ஏதேதோ வில்லத்தனம் பண்ணுவர். புதன் பச்சைப்பயறைக் குறிக்க, ராகு உளுந்தைக் குறிப்பார். உளுந்து வடையும், பாசிப்பயறு சுண்டலும் செய்யலாம். திருமோகூர் சென்று பெருமாளை வணங்கவும். அருகிலுள்ள பெருமாள் கோவிலுக்கு உளுந்து வாங்கி கொடுத்துவிட்டு, துளசியுடன் வணங்குங்கள். இஸ்லாமிய சிறுவர்- சிறுமியரின் தேவைக் கேட்டறிந்து உதவவும்.

புதன் தசை- குரு புக்தி

குரு, கொழுப்பைக் குறிப்பவர். எனவே இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். புதன் காது, தொண்டை, கைகள், கழுத்து, முகம் எனக் குறிப்பவர். இவர் வீக்கத்துக்குரிய குரு சம்பந்தம்பெறும்போது, மேற்கண்ட பகுதிகளில் வீக்கம் உண்டாகும். மேலும் நுரையீரல் சம்பந்தமான வியாதிகளும் எட்டிப்பார்க்கும். கொஞ்சம் நெஞ்சுவலி ஏற்படும். அதிக கபம் ஜுரம் தரும். சிலருக்கு சிறுநீர் தானாகவே கசியும். அவ்வப்போது வயிற்று வலி வரும். மூக்கில் கட்டிகள் உண்டு. நிறைய பேர் பாத வலியால் துன்புறுவர். இந்தக்காலக் கட்டத்தில், ஜாதகர் சிலர் கேட்கும் திறனை இழப்பர். அல்லது வாய் குளறல் ஏற்படும். புதன் பச்சைப்பயறையும், குரு கொண்டைக் கடலையையும் குறிப்பர். இரண்டையும் சுண்டல் செய்து சாப்பிடலாம்; கொடுக்கலாம். திருவனந்தபுரம், பத்மநாப சுவாமியை வணங்குவது நல்லது. அருகிலுள்ள பெருமாளை, தாமரை மலர்கொண்டு வணங்கவும். கல்வி கற்பிக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு முடிந்த உதவிச் செய்யும்.

புதன் தசை- சனி புக்தி

உடல் முழுவதும் வலி ஏற்படும். நரம்புத் தளர்ச்சியால் வெகு துன்பம் வரும். கால்கள் பலவீனமாகும். மனநோய் உண்டு. மனம் ஒருநிலையில் இல்லாமல், சுற்றி சுழலும். காரணம் கண்டுபிடிக்க இயலாது. ரொம்ப நாள் நோய் வாய்ப்பட்ட ஜாதகர்கள் இப்போது, இன்னும் நோயின் வீரியம் அதிகரிக்க காண்பர். மனக் கோளாறு உள்ளவர் களின் நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாகும். ஏனெனில் ஜாதகர் களின் நரம்பு மண்டலம் மிக மோசமாக பாதிக்கக்கூடும். எனவே ஜாதகர்கள் தன்னிலை தவறும் சூழ்நிலை ஏற்படும். புதன் பச்சைப்பயறைக் குறிக்க, சனி எள் தானியத்தைக் குறிப்பார். பச்சைப் பயறு சப்ஜி, எள்ளுருண்டை என தயாரிக்கலாம். ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபத்ர சாயியை வணங்கவும். அருகிலுள்ள பெருமாள் கோவிலில் கருடாழ்வாருக்கு தீபமேற்றுவதும், ஆஞ்சனேயர் வழிபாடும் நல்லது. குழந்தைகளுக்கு படம் வரைய, ஆயில் பெயிண்ட் வாங்கிக்கொடுங்கள்.

புதன் தசை ஆரம்பித்தவுடன், பெருமாளை வணங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளவேண்டும். சனிக்கிழமை விரதமிருப்பதும், விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஏற்புடைய சிறந்த பரிகாரமாகும்.

பரிகாரங்கள்

நோய்க்குரிய, நோயைத் தீர்க்கும் தெய்வம் ஸ்ரீ தன்வந்திரி பகவான். எனவே நோய் ஆரம்பித்தவுடன், இவரை அண்டி விடுங்கள். நோய்த் தாக்கத்தை பெருமளவு குறைத்து நல்ல சுகம் கொடுப்பார்.

வைத்தீஸ்வரன் கோவில் மற்றொரு நோய் தீர்க்கும் திருத்தலமாகும்.

திருவான்மியூர் மருந்தீஸ்வரர், ஸ்ரீரங்கம் தன்வந்திரி பெருமாள், திருவள்ளூர் வீரராகவ பெருமாள், பழனி முருகர், சயன கோல பெருமாள் என சில கோவில்கள் குறிப்பிடத் தகுந்தது.

நோய் வந்துவிட்டால், ஸ்ரீமந் நாராயணியம் பாராயணம் மிகச்சிறப்பு. நாராயண பட்டத்திரி அவர்கள், தங்கள் குருவின் வாத நோயை தான் ஏற்றுக்கொண்டு, பின் குருவாயூர் திருத்தலத்தில், சுவாமி குருவாயூர் கிருஷ்ணனின் வழிகாட்டுதல்படி, இயற்றியதுதான் நாராயணியம். எனவே நாராயணத் தின் 100 பகுதிகளையும் ஒன்றாக, ஒரே நாளில் பாராய ணம் செய்வது மிகச் சிறப்பு.