ருவரின் கர்மாவிற்கு ஏற்ற தசா புக்தியே ஜாதகரை இயக்கும்.

அதிலும் ஆறாமிடம் என்பது ஒரு மனிதனுக்கு தேவையில்லாத கடன் நோய், எதிரி இந்த மூன்றையும் கொடுக்கக்கூடிய தசையாகும். ஆறாமிட தசை நடக்கும்போது இந்த மூன்றில் எதன்மூலம் பாதிக்கப்பட போகிறார் என்பதை எப்படி அறிவது?

ஒருவருக்கு ஆறாம் அதிபதி தசை அல்லது 6-ல் நிற்கும் கிரகத்தின் தசை நடந்தால் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானம் இயங்கும். இதில் அந்த ஜாதகர் நோயால் அவதிப்படுவாரா? கடனால் இன்னல் கள் ஏற்படுமா? எதிரிகளால் மன உளைச்சலை சந்திப்பாரா? படிக்காதவன் தனுஷ்போல உத்தியோகத்தால் நெருக்கடியா? என்பதுதான் ஹைலைட். வெகுசிலருக்கு இந்த 4-ஆம் பாதிப்பைத் தரும். 6-ஆமிடத்தைவிட லக்னம் வலுவாக இருப்பவர்கள் எந்த பாதிப்பும் பெரியதாக அண்டாது.

6-ஆமிடத்தைவிட லக்னம் வலு குறைந்தவர்களுக்கு அந்த தசையை தாக்கப்பிடித்து கடப்பது சற்று கடினம்தான்.

Advertisment

ஒரு ஜாதகத்தில் ஆறாம் அதிபதி வலுத்து தன, லாப ஸ்தான அதிபதி வலு குறைந்து, குரு கெட்டு, கடனுக்கு காரக கிரகமான செவ்வாய், சனி வலுப்பெற்று, பாவ கிரக தொடர்பைபெற்று, ஆறாமிட தசை நடந்தால் கடன்மூலமாக பிரச்சினைகள் உண்டாகும். கடன் இருந்தால் எதிரி தானா கவே உருவாகிவிடும்.

ஒரு ஜாதகத்தில் ஆறாம் அதிபதி வலுப்பெற்று சுகஸ்தானமான 4-ஆமிடத்துடன் தொடர்புபெற்று 4-ஆம் அதிபதி வலு குறைந்தாலும் நோய்க்கு காரக கிரகமான செவ்வாய், சனி 4, 6-ஆமிடத்துடன் சம்பந்தம் பெற்றால் உடல்நலம் சார்ந்த தொந்தரவு உண்டு. சிலருக்கு நோயால் கடன் உருவாகும்.

vv

Advertisment

ஒரு ஜாதகத்தில் 6-ஆம் அதிபதி வலுப்பெற்று 3-ஆமிடமான தைரிய ஸ்தானம் பலம் குறைந்தால் எதிரிகளை எதிர்கொள்ளும் மனோதைரியம் இருக்காது. எளிதில் தேவையில்லாத பிரச்சினையில் மாட்டுவார். எந்த வில்லங்கத்தை எப்படி சமாளிப்பது என்ற ஞானம் இருக்காது. எந்த ஒரு ஜாதகத்திலும், ஆறாம் அதிபதி, லக்னத் தில் வந்து அமர்வது நல்ல அமைப்பு அல்ல. அதேபோல் 6-ஆம் அதிபதி அமர்ந்த பாவகத்தின்மூலம் ஜாதகருக்கு மன உளைச்சல் உண்டு.

இதை ஒரு உதாரண ஜாதகத்துடன் பார்க்கலாம். 13-12-1979-ல் 9.16 மணிக்கு திருச்சியில் பிறந்த ஜாதகர்.

கடக லக்னம், அஸ்த நட்சத்திரம். திதி தேய்பிறை தசமி திதி சூன்யம்: சிம்மம், விருச்சிகம் பிறப்பில் சந்திர தசை இரண்டு வருடம், ஆறு மாதம். தசாநாதன் மற்றும் லக்னாதிபதி சந்திரனுடன் அஷ்டமாதிபதி சனி 3-ஆமிடமான சகாய ஸ்தானத் தில் காலபுருஷ 6-ஆமிடமான கன்னியில் சேர்க்கை. லக்னாதிபதி சந்திரன் அஷ்டமாதிபதி சனியுடன் இணைந்து தசை நடத்தியதால் பிறந்தவுடன் சந்திர தசை கேது புக்தியில் இதய அறுவை சிகிச்சை.

இரண்டாவதாக செவ்வாய் தசை ஏழு வருடம். செவ்வாய் கடக லக்னத் திற்கு ஏக யோகாதிபதி. 2-ஆம் அதிபதி சூரியனுடன் 5, 10-ஆம் அதிபதி செவ்வாய் பரிவர்த்தனை பெற்று தசை நடத்தியது. தந்தைக்கு நல்ல தொழில் முன்னேற்றம். பொருளாதாரத்தில் அதீத வளர்ச்சி. பிறவியில் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஜாதகரின் 5-ஆம் அதிபதியான செவ்வாய் தசை குடும்பத்தினரை புகழ், அந்தஸ்து, கௌரவம் என கொடிகட்டி பறக்கச்செய்தது. தசாநாதன் செவ்வாய் 6, 9-ஆம் அதிபதி குருவுடன் சேர்க்கைப்பெற்று 2-ஆமிடமான குடும்ப ஸ்தானத் தில் நின்றது குருமங்கள யோகம் உன்னதமான உயர்வை கொடுத்தது.

ஏழு வயதில் செவ்வாய் தசையின் சுக்கிர புக்தியில் ஜாதகருக்கு இடுப்பி-ருத்து கால்வரை வ- அதிகமாகிக்கொண்டே இருந்தது. சுகஸ்தானாதி பதி சுக்கிரன் 6-ஆமிடமான ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ரோகாதிபதி குருவின் வீட்டில் குரு பார்வையில் நின்று புக்தி நடத்தினார். சுக்கிரனே பாதகாதிபதியாகவும் வருவதால் எத்தனை வைத்தியம் செய்தும் ஜாதகருக்கு வ- குறையவில்லை. என்ன பாதிப்பு என்று யாராலும் கண்டரிய முடியவில்லை.

3-ஆவது ராகு தசை, 2-ல் நின்ற ராகு 8-ல் நிற்கும் கேது சாரம். வைத்தியம் சர்ஜரி என்றே ஜாதகரின் வாழ்க்கை நகர்ந்தது. 4-ஆமிடம் பாதிக்கப்பட்டதால் முறையாக கல்வியை தொடர முடியாமல் வீட்டில் தனி ஆசிரியர்மூலம் படித்தார். திருமண பந்தத்தில் ஈடுபடும் ஆர்வமும் இல்லை.

4-ஆவதாக குரு தசை. கடக லக்னத்திற்கு 6, 9-ஆம் அதிபதி தசை. குரு சுக்கிரன் சாரம். சுக்கிரன் சுக ஸ்தானாதிபதி 4-ஆம் அதிபதி.

தசாநாதன் குரு 6-ல் நின்ற சுக்கிரன் சாரம்பெற்று தன் வீட்டை தானே பார்த்தது. சுக ஸ்தானாதிபதி சுக்கிரன் 6-ல் நின்று 6, 9-ஆம் அதிபதி குருவின் பார்வையில் நின்று தசை நடத்தியதால் அதிக வைத்தியத்தில் ஜாதகரின் உடல்பலம் இழந்து பருமனாது. முன்னோர் களின் பரம்பரை நோயான சுகர், பிரஷர், கை- கால் வ- என ஜாதகருக்கு வாழ்க்கையில் பிடிப்பு குறைந்தது.

ஒரு "பால ஜோதிட' வாசகர்மூலம் 2022 ஏப்ர-ல் குரு தசை, ராகு புக்தியில் என்னை சந்தித்தார்கள்.

பரிகாரம்

இந்த கட்டுரையின் சாரம்சம். விதியை பின் வாங்கச் செய்வது எப்படி? எந்த பாவகத்தின் உயிர்காரகத்துவத்தை அடைய விரும்புகிறோமா அதற்கு 12-ஆம் பாவகத்தின் மீதான பொருள் பற்றைக் குறைக்கவேண்டும். எந்த பாவகத்தின் பொருள் காரகத்துவத்தை பெறவேண்டுமோ அதற்கு 12-ஆம் பாவகம் தொடர்பான உயிர்காரகத்துவ உறவு களிடம் அதிக ஈடுபாடு காட்டாமல் விலகி இருக்கவேண்டும். அதன்படி ஜாதகர் 6-ஆம் பாவகத்தின் நோய் தாக்கத்தி-ருந்து விடுபட 6-ஆம் பாவகத்தின் 12-ஆம் பாவகமான 5-ஆமிட காரகத்துவத்திற்கு பொருள் விரயம் செய்யவேண்டும். 5-ஆமிடம் என்பது வணங்கவேண்டிய தெய்வம், குலதெய்வம், நூல்கள் வெளியிடுதல் ஆகியவற்றைக் குறிக்கும்.

1. அதன்படி தமிழ் நாட்டின் மிகப் பிரசித்திபெற்ற சிவன் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு சிவபுராணம் சிறிய புத்தகமாக வடிவமைத்து வழங்கவேண்டும்.

2. குலதெய்வ கோவில் முழுவதும் புனரமைப்பு செய்து புனித நீரால் அபிஷேகம், ஆராதனை நடத்தவேண்டும்.

3. மேலும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாத அல்லது பெற்றோர் இல்லாத மாணவர்கள் மூன்று பேரின் வாழ்நாள் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளவேண்டும்.

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுக்கும் வழக்கம் தங்கள் குடும்பத்திற்கு எப்பொழுதுமே உள்ளது என்று கூறினார்.

இதுபோன்ற எளிய பரிகாரம் பிறவி-ருந்து அனுபவிக்கும் நோயின் தாக்கத்தை குறைக்குமா? என்ற சந்தேகத்துடன் சென்றார்.

ஜாதகர் நேரில் தனது உதவியாளருடன் பிரதோஷ காலங்களில் சிவபுராண புத்தகம் வழங்கினார். இதுவரை 5,000 புத்தகம் வழங்கியுள்ளார். குலதெய்வ கோவிலை சீர்திருத்தி சிறப்பு வழிபாடு நடத்தினார்.

உடல்நிலையில் சிறு சிறு முன்னேற்றம் உள்ளது. பிறருடைய உதவியை எதிர் பார்க்காமல் தன் பணியை தானே செய்துகொள்வதாக கூறினார்.

தற்போது சனி தசை (7, 8-ஆம் அதிபதி தசை) துவங்கியுள்ள நிலையில் தனக்கு திருமணம் நடக்குமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

7-ஆமிடம் என்பது நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாழ்க்கைத் துணையைப் பற்றிக் கூறுமிடம். 8-ஆமிடம் விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு பற்றிக் கூறுமிடம். எனவே முதல் திருமணத்தி-ருந்து விவாகரத்துப் பெற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு பெண்னை திருமணம் செய்வதால் பெரிய பாதிப்பு ஏற்படாது என்று கூறப் பட்டுள்ளது.

வாழ்நாள் முழுவதும் கடன், எதிரி தொல்லை இல்லாமல் நோய் என்ற ஒன்றில் இவர் கடுமையாக பாதித்துள்ளார். ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல, ஒரு ஜாதகத்தில் மாறுபட்ட பலன் நடக்க வேண்டும் என்றால், அந்த தசை வரவேண்டும் அல்லது மாறுபட்ட கோட்சார அமைப்புகள் நடைமுறையில் வரவேண்டும். உயிர் காரகத்துவதால் ஏற்படும் மன உளைச்சலை, பிரச்சினையை பொருள் காரகத்துவத்தால் சீர் செய்ய முடியும். இதுபோன்ற சில எளிய முறைகளைக் கடைபிடிக்க துன்பம் விலகும்; விதியை பின் வாங்கச் செய்ய முடியும்.