ராகு என்றவுடன், ராகு தசை 18 ஆண்டுகளும் சிரமப்படுவோம் என்று பலர் பயப்படுகிறார்கள். அப்படி எல்லாரும் பயப்படத் தேவையில்லை. ஏனெனில் ஐந்து ராசிகளுக்கு விதிவிலக்குண்டு. அவை: மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம். பிறக்கும்போதே மேற்கண்ட வீடுகளில் ராகு அமைந்தால் 18 வருட தசா காலத்திலும் யோகங்கள் நடக்கும். மற்ற வீடுகளில் ராகு, அம்சத் திலும் அதேபோல் அதே ராசியில் வந்திருந்தால் 18 ஆண்டுகளும் ராகு தசை யோக தசையாக மாறும்.
ராகு தசையில் கேது புக்தியும், கேது தசையில் ராகு புக்தியும் நற்பலன் தராது. எனவே மேற் கண்ட இடங்களில் யோக தசை யாக ராகு தசை நடப்பவர்கள், கேது புக்திக் காலத்தில்- அதுவும் கேது அந்தரம் நடைபெறும் நேரத்தில்- அதாவது ஆரம்பத்தில் 22 நாட்கள் மட்டும் எச்சரிக்கையாக இருந்துகொண்டால் போதும். மற்ற நாட்கள் முழுவதும் ராகு தசை முடியும்வரை யோகமாய் மாறும்.
மற்ற வீடுகளில் ராகு இருந்து ராகு தசை வந்தால் நமது நிலைமை மோசமாகிவிடுமோ என்று நினைக்கவேண்டாம். எச்சரிக்கை யுடன் வாழ்ந்தாலே போதும்.
ராகு தசையில் ஒன்பது புக்தி களுக்கும் உள்ள பலன்களை இங்கு காணலாம்.
1. ராகு தசையில் ராகு (சுய) புக்தி
அரசாங்கம்மூலம் சிலருக்கு பாதிப்புகள் வரும். மனதில் துன்பம் இருக்கும். விஷத்தால் பீடை உண்டாகும். மனையாளுக்கு துன்பம் அதிகமாகும். அரசுப் பணியாளருக்கு பணிமாற்றம் வரும். காக்கைக்கு ஒப்பான நிறமுள்ளவரால் கலகமும், புகழும் உண்டாகும்.
2. ராகு தசையில் குரு புக்தி
வாழ்க்கையில் மிகுந்த இன்பமும், அந்தணரால் செல்வமும், அரசாங்கத்தால் மகிழ்ச்சியும் நினைத்த காரியமெல்லாம் கைகூடுதலும், திருமணமும் நடைபெறும். ராகு தசையில் குரு புக்தி வந்தால் பிரிந்த தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். குழந்தை பாக்கியமும் ஏற்படும்.
3. ராகு தசையில் சனி புக்தி
மனதில் துக்கமும், நோயும், முடிவுக்கு வராத வழக்குகளும், சண்டைகளும் உருவாகும். முதியவர்களுக்கு வாதம், பித்தம் போன்ற நோய்கள் வரும். திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு நோய் மிகுதியாக வரும்.
4. ராகு தசையில் புதன் புக்தி
முயற்சிக்குத் தகுந்த மேன்மையும், தெய்வ பக்தியும், பொருள்கள் சில வந்து சேர்தலும், ஆச்சரியப்படும்படியாக குழந்தை உருவாகு தலும் (எந்த குழந்தை வேண்டுமோ அந்த குழந்தை பிறத்தலும்) தங்களுக்கு மேலான நிலையில் உள்ளவர்களுடன் பகையும் உண்டாகும்.
5. ராகு தசையில் கேது புக்தி
விஷத்தால் பயமும், குழந்தைகளுக்குப் பீடையும், உடலில் வீக்கமும் உண்டாகும். பெண் களுக்குத் துன்பமும், அரசாங்கத்தால் பயமும் உண்டாகும். எனவேதான் ராகு தசையில் கேது புக்தி ஆகாது என்று ஜோதிடத்தில் சொல்லப் படுகிறது.
6. ராகு தசையில் சுக்கிர புக்தி
பொன் பொருள் சேர்தலும், மிகுதியான ஆபரணச் சேர்க்கையும், ஒருசிலருக்கு வேறு பெண்களின் சேர்க்கையும், அரசாங்கத்தால் மகிழ்ச்சியும், வஞ்சனையால் துன்பமும் பீடை யும் வந்து பின்பு அவை விலகுதலும்நடைபெறும்.
7. ராகு தசையில் சூரிய புக்தி
சூரிய புக்தியில் அரசாங்க ஆதரவு பெறு தலும், சரீரத்தில் தழும்பு உண்டாகுதலும், மனைவி, பிள்ளை, தந்தையுடன் சண்டை போடு தலும் அல்லது இவர்கள்மூலம் பயமும், இருப் பிடம்விட்டு வேறிடம் போவதும் நடைபெறும்.
8. ராகு தசையில் சந்திர புக்தி
மதிக்கத்தக்க உறவினர் நாசமும், மனைவி யால் பொருட்சேதமும், அஸ்தம், திருவோண நட்சத்திரம் வரும் தினங்களில் கால், இடது கண்ணில் நோய் உண்டாகுதலும், தனக் கான இடம்விட்டுப் போதலும், விஷத்தால் துன்பமும் ஏற்படும்.
9. ராகு தசையில் செவ்வாய் புக்தி
நெருப்பால் பயமும், அதிக குழப்பமும் பயமும், விஷத்தால் பீடையும், சண்டாளர் களால் இன்பமும், களவும், சண்டையும், மனைவியால் துன்பமும் ஏற்படும்.
மேற்கண்டவாறு ஒன்பது புக்தி களுக்கும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து வீடுகளுக்கும் ராகு வர்க் கோத்தமமாகி இருந்தாலும், அவர்கள் கேது புக்தியில்- கேது அந்தரத்தில் 22 நாட்கள் மட்டும் எச்சரிக்கையாக இருந் தால் போதும். மற்ற தசை நாட்கள் அனைத்தும் யோகமாக மாறும். மற்றவர்கள் மட்டும் ராகு தசையில் அந்தந்த புக்தியில் குறிப்பிட்டபடி சிரமங்களையும், யோகப் பலன்களையும் அடைவார்கள். அவர்கள் கீழுள்ள பரிகாரங்களைச் செய்து கொள்ளலாம்.
பரிகாரம்-1
அவரவர் ஊரின் அருகிலுள்ள ராகு பரிகாரத் தலங்களுக்கு சனிக்கிழமையன்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் சென்று பரிகாரம் செய்து நல்ல பலன்களை அடையலாம்.
பரிகாரம்-2
பரிகாரத் தலமான திருநாகேஸ்வரம், புதுக்கோட்டை அருகிலுள்ள நாகநாதசாமி கோவிலுக்கு சனிக்கிழமையன்று சென்று காலை 9.00 மணிமுதல் 10.30 மணிக்குள் பாலாபிஷேகம் செய்துகொள்ள ராகு தோஷம் நீங்கும்.
பரிகாரம்-3
ஆலயத்திற்குச் செல்லமுடியாதவர்கள் 27 உளுந்தை எடுத்து வெள்ளைத் துணியில் முடிந்து தலையணைக்குள் வைத்துக்கொள்ள ராகு தோஷம் நீங்கும். மேலும் 27 உளுந்தை (முழு உளுந்து) வெள்ளைத் துணியில் முடிந்து பூஜையறையில் வைத்து தினசரி வணங்கிவர, ராகு தசை முழுவதும் யோகமாக மாறும். ராகு தசை முடிந்தவுடன் மேற்சொன்ன உளுந்து முடிச்சையெடுத்து ஓடும் தண்ணீரில் போடவேண்டும்.
செல்: 94871 68174