சுக ஸ்தானம் சொத்து, சுகம், வண்டி, வாகனம், தாயன்பு, கால்நடை வளர்ப்பு, அடிப்படைக் கல்வி, தேக சுகம் பற்றிக் கூறுமிடம்.

4-ஆமிடம் எனும் சுக ஸ்தானாதி பதி நட்சத்திர சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தினால் தாய், தாய்வழி உறவினர்களின் அன்பும் அனுசரணையும் பெற்றவர்கள். தாய் வழிச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள். நல்ல வீடு, மனை, வாகன யோகம் உள்ளவர்கள். வீட்டில் நல்ல அதிர்வலைகள் நிரம்பியிருக்கும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பதில் ஆர்வம் மிகுந்தவர்கள். இல்வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆடம்பரப்பொருட்கள் வீட்டில் அதிகம் இருக்கும். நல்ல கல்வி அறிவுண்டு. படித்த படிப்பிற்கேற்ற தொழில், உத்தியோகம் அமையும். பெற்றோர்களுடன் சேர்ந்து கூட்டுக் குடும்பமாக வாழ்வார்கள். அக்கம் பக்கதில் இருப்பவர்கள் இவர்களிடம் ஆலோசனை கேட்பார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்திருக்கும்.

4-ஆம் அதிபதி சாரத்தில் எந்த கிரகமும் இல்லாமல் இருந்தால் தாயின் ஆரோக்கியம் கெடும். வறுமை, வாஸ்துக் குறைவான வீட்டில் வாழுதல் போன்ற நிலை நீடிக்கும். எளிதில் சொத்து அமையாது.

Advertisment

பரிகாரம்: தாயின் வயதிலுள்ள பெண்களின் தேவையறிந்து உதவுவது நல்லது.

44

பூர்வபுண்ணிய ஸ்தானம்

5-ஆமிடம் என்பது பூர்வீகம், குலதெய்வம், அதிர்ஷ்டம், தெய்வ அனுக்கிரகம், காதல், ஆசை, எண்ணங்கள் பற்றிக் கூறுமிடம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் நட்சக்திரத்தில் ஒரு கிரகம் நின்று தசை நடத்தினால் ஊரில் பெயர் சொன்னால் தெரியக்கூடிய வம்சத்தினராக இருப்பார்கள். குலதெய்வமே குழந்தையாகப் பிறக்கும். பிள்ளைகள் குல கௌரவத்தைக் காப்பாற்றுவார்கள். வாழ்நாள் முழுவதும் புகழ், அந்தஸ்து உடன் வரும். தாத்தாவின் தொழிலைச் செய்து சுய உழைப்பில் சொத்து யோகம் உண்டு. அடுக்குமாடிக் குடியிருப்பு, மாடிவீடு கட்டி வாழ்வார்கள். முன்னோர்களின். பூர்வீகச் சொத்துகள் பெற்றோரின் காலத்திற்குபின் முறையாக இவர்களைச் சென்றடையும். பூர்வீகத்தில் பிழைப்பு நடத்துவார்கள்.

அறிவாளியாக புக்திக்கூர்மையுடன் இருப்பார்கள். சிலர் அதிர்ஷ்ட வசத்தால் திடீர் பணக்காரர்களாக மாறுவார்கள். சிறிய உழைப்பில் அதிக லாபம் ஈட்டுவார்கள். குலதெய்வ அருள் உண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகிகள் அல்லது கௌரவப் பதவியில் இருப்பார்கள். அரசாங்கப் பதவி, அரசு உத்தியோகம் உண்டு. சிறப் பான வீடு, வாகன யோகம் உள்ளவர்கள். பூர்வீகச் சொத்தை பல தலைமுறையினர் பயன்படுத்துவார்கள்.

5-ஆம் அதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் அதிர்ஷ்டம் குறைவுபடும். புக்திக்கூர்மை இருக்காது. புத்திர தோஷம் உண்டாகும். சிலருக்கு வம்சம் தழைக்காது. சிலருக்கு வாரிசுகளால் குடும்ப கௌரவம் கெடும். புகழ், அந்தஸ்து, கௌரவம் மட்டுப்படும். குலதெய்வ அருள் கிடைக்காது.

பரிகாரம்: சிவ வழிபாடு செய்யவும்.

ருண, ரோக, சத்ரு ஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் ருண, ரோக, சத்ரு ஸ்தானம் எனும் 6-ஆம் அதிபதியின் சாரத்தில் அதிக கிரகம் இருக்கக்கூடாது. அதே நேரத்தில் ஓரிரு கிரகங்களாவது இருக்கவேண்டும். 6-ஆமிடம் என்பது இரண்டாவது உபஜெய ஸ்தானம். கடன், எதிரியை வெல்ல 6-ஆமிடம் எனும் உபஜெய ஸ்தான வலிமை மிக முக்கியம். எதிரி என்ற ஒருவன் இருந்தால் மட்டுமே வெற்றி என்ற நிலையை அடையமுடியும். ஒருவரின் சிந்தனையில் எப்பொழுதும் தனது எதிரியை எப்படி கவிழ்ப்பது என்ற நோக்கம் இருந்து கொண்டே இருக்க வேண்டும். எதிரிகளை வெல்லும் திறமை யுடன், ஆரோக்கியம் நிரம்பியவராக இருக்க வேண்டும்.

அத்துடன் பொருளாதாரத் தேவைகளை சரிசெய்யும் திறமை மிகமிக அவசியம். ஜனன கால ஜாதகத்தில் ஆறாம் அதிபதி சாரத்தில் ஓரிரு கிரகம் நின்றால் மட்டுமே எதையும் எதிர்கொள்ளும் வலிமை இருக்கும். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக இயங்க ஆரம்பித்தவுடன் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய முதல் சவால் அல்லது முதல்படி 6-ஆம் பாவகம் மூலமாக ஆரம்பிக்கும். 6-ஆம் பாவகம் எனும் பொருள் கடனை தொழில், உத்தியோகத்தின்மூலம் கடந்துவிட்டால் வாழ்க்கை சுகமான, சுலபமான சுமையாகிவிடும். அதாவது ஆறாம் பாவகம் என்பது கடன், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், அடிதடி, சண்டை, போட்டி, பொறாமைகள், எதிரிகள் சத்துருக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பாவகமாகும். இது மனிதனின் முக்கியமான தேவைகளையும் பிரச்சினைகளையும் உள்ளடக்கிய பாவகமாகும். இந்த ஆறாம் பாவகம் மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு பிரச்சினைகள் வரும்,

இந்த பாவகம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிக்காத மனிதர்களே கிடையாது. இயற்கை அல்லது பிரபஞ்சம் ஒருவரை இந்த பாவகத்தின் மூலம்தான் சோதிக்கும். இதன்மூலம் நடக்கும் சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காதத்தான் மறைவு ஸ்தானங்களாக வைத்திருக்கிறார்கள். லக்னம் வலிமை இல்லாதவர்கள் ஆறாம் அதிபதி தசாபுக்திக் காலங்களில் அனுபவிக்கும் சங்கடங்களை திரைப்படமாக்கினால் உலகிலேயே அதிக வசூலில் சாதனை படைத்த படமாக இருக்கும். லக்ன வலிமைபெற்ற வெகுசிலர் சினிமா ஹீரோவைப்போல் எதிரிகளை வைத்தே முன்னேறுவார்கள். ஒரு ஜாதகத்தில் 6-ஆமிடமே ஒரு மனிதனின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கிறது.

பரிகாரம்: சனிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் சிவப்புத் திரியிட்டு நல்லெண்ணெய்யில் ஜோடி தீபமேற்றி சிவனை வழிபடவேண்டும்.

களத்திர ஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது களத்திர ஸ்தானம். நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கைத் துணை மற்றும் சமுதாய அங்கீகாரம், சமுதாய அந்தஸ்து பற்றிக் கூறுமிடம்.

ஏழாம் அதிபதி சாரத்தில் ஒரு கிரகமாவது இருக்கவேண்டும். இளம் வயதில் திருமணம் நடக்கும். சமுதாய அங்கீகாரம், அந்தஸ்து நிறைந்த மண வாழ்க்கையாக இருக்கும்.

வாழ்க்கைத் துணையின் கை ஓங்கும். வாழ்க்கைத் துணை ஜாதகருக்குக் கட்டுப்படுவார். கூட்டுத்தொழிலில் கொடிகட்டிப் பறப் பவர்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். சிறிய வயதில் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வார்கள். கவுரவமான சம்பந்திகள் கிடைப்பார்கள். ஏழாம் அதிபதி சாரத்தில் அதிக கிரகம் நின்றால் அரசியலில் தனித்தன்மையுடன் ஜொலிப்பார்கள். அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள். அதிக வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு வாழ்வாதாரம் உயரும்.

ஏழாம் அதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் காலதாமதத் திருமணம் நடக்கும். கணவன்- மனைவி ஒற்றுமை குறையும். பெண்ணாக இருந்தால் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்பவள். சில தம்பதிகள் மிகுதியான ஈகோவால் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன. உபய லக்னமாக இருந்தால் திருமண வாழ்க்கை சுமாராகவே இருக்கும். சிலர் மனதிற்குள் அழுது புழுங்கி நரகமான வாழ்க்கையை அனுபவிக்கிறார் கள். சிலர் துணிந்து இல்லற பந்தத்திலிருந்து விடுபடுகிறார்கள். சமுதாய அங்கீ காரம் இருக்காது. நல்ல நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், சம்பந்திகள் கிடைக்க மாட்டார்கள்.

பரிகாரம்: அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு மேன்மை தரும்.

அஷ்டம ஸ்தானம்

ஒரு லக்னத்திற்கு எட்டுக்குரியவரே அஷ்டமாதிபதியாவார். அந்த அஷ்ட மாதிபதியும், அஷ்டமத்தில் நின்ற கிரகங்களும், அஷ்டமாதிபதி நட்சத்திர சாரத்தில் நின்ற கிரகங்களுமே ஒருவருக்கு யோக- அவ யோகத்தைத் தருகின்றன. ஆயுள், ஆரோக்கியம், தீராத நோய், தீர்க்கமுடியாத கடன், விபத்து, கண்டம், சர்ஜரி, அவமானம், வம்பு, வழக்கு ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம் அஷ்டம ஸ்தானம்.

அஷ்டமாதிபதி சாரத்தில் அதிக கிரகம் இருக்கக்கூடாது. ஓரிரு கிரகங்கள் நிற்பது நல்லது. ஓரிரு கிரகம் நின்றால் நிறைந்த ஆயுள் உண்டு. பெரிய தீவினைகள் ஜாதகரை அண்டாது. கடன், நோய், பெரிய விபத்து, கண்டம், அவமானம் நேராது. சிறுசிறு பாதிப்பு நிகழ்ந்தாலும் மீண்டு வரக்கூடிய சந்தர்ப்பம் தானே உருவாகும்.

அஷ்டமாதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் ஆயுள் பங்கம் ஏற்படும். வாழ்நாள் முழுவதும் ஏதாவது பிரச்சினையில் சிக்கித் தவிப்பார். நோய்கள், எதிரிகள் தொல்லை, கடன் தொல்லை தாங்கமுடியாத அளவில் இருக்கும். வம்பு, வழக்கு, விபத்து ஏற்படும். இந்த ஜென்மத் தில் மற்றவர்களுக்கும் தங்களுடைய உறவு களுக்கும் என்னதான் உதவி செய்தாலும், என்னதான் உழைத்துக் கொட்டினாலும் அதற்கான அங்கீகாரமும் மரியாதையும் இவர்களுக்குத் திரும்ப வரவே வராது. "நீ எனக்கு என்ன செய்தாய்' என்றுதான் இவர்களைப் பார்த்துக் கேட்பார்கள். இவர்கள் வெறும் கடமைக்காகவும் கடனுக்காகவும்தான் உயிர் வாழ்வார்கள். "யாருடன் பழகுவதற்கும் ஒற்றுமையாக இருப்பதற்கும் எனக்குப் பிடிக்கவில்லை. நான் தனிமையை விரும்புகின்றேன்' என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும்.

ஆறுதலாய் இருக்க முன்வருபவரையும் நோகடித்து விலக்குவர். ஒருவர் ஜாதகத்தில் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவ காரியத்தைக் குறிக்கும் இடம் 8-ஆம் பாவகமாகும்.

பரிகாரம்: காவல் தெய்வங்களை வழிபடுவது மிகச் சிறந்தது.

பாக்கிய ஸ்தானம்

ஒரு ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் எனும் 9-ஆமிடம் மூலமே ஒரு மனிதன் உயர்வானதை அடையமுடியும். பூர்வபுண்ணிய ஸ்தானப் படி அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கியப் பலன்களும் இந்த பாவகத்தில் பதிவாகி இருக்கும்.

ஒரு ஜாதகத்தில் 9-ஆம் அதிபதி நட்சத்திர சாரத்தில் அதிக கிரகங்கள் இருப்பது மிகமிக நன்மை தரும் அமைப்பாகும்.

9-ஆம் அதிபதி நட்சத்திர சாரத்தில் கிரகம் இருப்பவர்களுக்கு பாக்கியப் பலன்கள் மிகுதியாக நடக்கும். நல்ல ஒழுக்கமும், சமயோசித புத்தியும் உள்ளவராக இருப்பார். நீண்ட ஆயுள், ஆரோக்கியம் உள்ளவராக இருப்பார். தந்தைவழி யோகத்தை முழுமையாக அனுபவிப்பார்கள். தான் வசிக்கும் ஊரில் மதிப்பும் மரியாதையும் மிக்கவராகவும் குலத்தொழில் புரிபவர் களாகவும் இருப்பார்கள். சிறிய உழைப்பில் பெரிய வருமானம் உண்டு. குரு தீட்சை பெற்றவர்கள். தந்தை, தந்தைவழி முன்னோர் கள் பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு உள்ளவ ராக இருப்பார்கள். கோவில் கட்டி கும்பா பிஷேகம் செய்தவர்கள்; செய்பவர்கள். கோவில் சார்ந்த திருப்பணி வேலைகளுக்கு தான தர்மம் வழங்கி முன்னின்று செயல்படுவார்கள். கல்வி நிறுவனங்கள் நடத்துவார்கள். உயர்கல்வி வெளியூர் அல்லது வெளிநாட்டில் படிப்பார்கள். லௌகீக உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும் அனுபவிக்கும் பாக்கியம் உண்டாகும்.

9-ஆம் அதிபதி நட்சத்திர சாரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் ஜாதகருக்கு தான தர்ம குணங்கள் இருக்காது. ஜாதகர் தந்தை மற்றும் தந்தைவழி தந்தை சம்பாதித்த சொத்துகளை விரயம் செய்வார். சேமிப்பும் சிக்கனமும் இருக்காது. ஊதாரித்தனமாக செலவு செய்பவராக இருப்பார்.

கடினமாக உழைத்தாலும் வாழ்வில் பெரிய வெற்றி, முன்னேற்றம் இருக்காது. வாழ்க்கையில் விரக்தியும், வெறுப்பும் உள்ளவராக இருப்பார். பூர்வீகத்தில் வசித்தால் மேன்மை இருக்காது. வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும்.

ஜாதகருக்கு தந்தையின் அன்பு கிடைக்காது. நிம்மதியான உறக்கம் இருக்காது. பெற்றோர் களுக்கு அவப்பெயரைத் தேடி வைப்பவர். குல கௌரவத்திற்கு பங்கம் ஏற்படுத்துவர். ஜாதகரின் பெற்றோர்கள் தங்கள் இறுதிக் காலம்வரை பெற்ற பாவத்திற்காக படியளப் பார்கள். பெற்றவர்களுக்கு அவரால் எந்த பயனும் இருக்காது.

பரிகாரம்: பித்ருக்கள் வழிபாடு சிறப்பு தரும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406