ஜாதகத்திலுள்ள ஒன்பது கிரகங்களும் நின்ற நட்சத்திரநாதனைக் கண்டறிந்து அந்த நட்சத்திரநாதன் நின்ற பாவகம் மற்றும் ஆதிபத்தியம் பெற்ற பாவங்களைக் குறித்துக்கொண்டால் ஜாதகர் எந்தெந்த பாவகப் பலன்களை எந்தெந்த காலங்களில் அனுபவிப்பார் என்பதைத் தெளிவாகக் கூறமுடியும். நடப்பிலுள்ள தசாபுக்திகளைத் தெரிந்துகொண்டால் அந்த தசாபுக்தியில் ஜாதகர் அனுபவிக்கும் கொடுப்பினைகளைப் பற்றி எளிதாக அறிய முடியும்.
இதன்படி பார்த்தால் பரவலாக எல்லா கிரகங்களின் நட்சத்திர சாரங்களிலும் கிரகங்கள் நின்றால் ஜாதகர் 12 பாவகப் பலன்களையும் அனுபவிக்க வாய்ப்புண்டு. கொடுப்பினைக்கு மீறிய பலன் ஜாதகருக்கு நடந்தால் அந்த பாவகரீதியான பலனால் ஜாதகர் அதீத மன உளைச்சலை அனுபவிப்பார் என்பது நிதர்சனமான உண்மை. இதைத்தான் "கொடுத்துக் கெடுக்கும்' யோகம் என்று ஜோதிடம் கூறுகிறது.
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி சாரத்தில் ஒரு கிரகம் நின்றால் ஜாதகருக்கு உரிய வயதில் திருமணம் நடக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஜாதகருக்கு மரியாதை கொடுப்பார்கள். ஜாதகரால் சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியும். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் ஜாதகரை வெற்றிபெற யாராலும் முடியாது.
வாய்ஜாலம் நிறைந்தவர். வாய்ஜாலத்தால் குடும்ப உறவுகளிடம் நற்பெயர் சம்பாதிப்பார். கொடுத்த வாக்கை
ஜாதகத்திலுள்ள ஒன்பது கிரகங்களும் நின்ற நட்சத்திரநாதனைக் கண்டறிந்து அந்த நட்சத்திரநாதன் நின்ற பாவகம் மற்றும் ஆதிபத்தியம் பெற்ற பாவங்களைக் குறித்துக்கொண்டால் ஜாதகர் எந்தெந்த பாவகப் பலன்களை எந்தெந்த காலங்களில் அனுபவிப்பார் என்பதைத் தெளிவாகக் கூறமுடியும். நடப்பிலுள்ள தசாபுக்திகளைத் தெரிந்துகொண்டால் அந்த தசாபுக்தியில் ஜாதகர் அனுபவிக்கும் கொடுப்பினைகளைப் பற்றி எளிதாக அறிய முடியும்.
இதன்படி பார்த்தால் பரவலாக எல்லா கிரகங்களின் நட்சத்திர சாரங்களிலும் கிரகங்கள் நின்றால் ஜாதகர் 12 பாவகப் பலன்களையும் அனுபவிக்க வாய்ப்புண்டு. கொடுப்பினைக்கு மீறிய பலன் ஜாதகருக்கு நடந்தால் அந்த பாவகரீதியான பலனால் ஜாதகர் அதீத மன உளைச்சலை அனுபவிப்பார் என்பது நிதர்சனமான உண்மை. இதைத்தான் "கொடுத்துக் கெடுக்கும்' யோகம் என்று ஜோதிடம் கூறுகிறது.
உதாரணமாக ஒரு ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி சாரத்தில் ஒரு கிரகம் நின்றால் ஜாதகருக்கு உரிய வயதில் திருமணம் நடக்கும். நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஜாதகருக்கு மரியாதை கொடுப்பார்கள். ஜாதகரால் சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியும். பேச்சை மூலதனமாகக்கொண்ட தொழிலில் ஜாதகரை வெற்றிபெற யாராலும் முடியாது.
வாய்ஜாலம் நிறைந்தவர். வாய்ஜாலத்தால் குடும்ப உறவுகளிடம் நற்பெயர் சம்பாதிப்பார். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவார்.
2-ஆம் அதிபதி சாரத்தில் எந்த கிரகமும் இல்லை என வைத்துக் கொள்வோம். 2-ஆமிடம் என்பது தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்.
சுய ஜாதகரீதியாக 2-ஆம் அதிபதி சாரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் உரிய வயதில் திருமணம் நடந்து குடும்பம் அமையாது. குடும்பத்தை நடத்த போதிய பொருளாதாரம் இருக்காது. இவரின் வார்த்தையைக் குடும்ப உறவுகள் மதிக்க மாட்டார்கள். வருமானம் வந்தாலும் சேமிக்க முடியாதது போன்ற சௌகரியங்கள் இருக்கும்.
இதன்படி நவகிரகங்கள் நின்ற நட்சத்திர சாரப்படி அந்த தசா புக்திக்காலங்களில் ஜாதகர் அனுபவிக்கும் கொடுப்பினைகளைக் காணலாம்.
லக்னம்
லக்னாதிபதி சாரத்தில் ஒரு கிரகம் நின்று தசை நடத்தினால் உண்டாகும் பலன்கள்:
லக்னம் என்பது ஜாதகரின் விதியைப் பற்றிக் கூறுமிடம். இந்த ஜென்மத்தில் ஒருவர் அனுபவிக்கும் விதிப் பயனைப் பற்றிக் கூறுமிடம். ஜாதகர் எதையும் எதிர்கொண்டு வெல்லும் வலிமை படைத்தவர். எதையும் சமாளிக்கும் திறன் உள்ளவராக இருப்பார். தோல்வி பயம் இல்லாதவர். நல்ல உடற்கட்டு, புகழ், ஸ்திரபுத்தி உண்டு. நீண்ட ஆயுள் உள்ளவராக இருப்பார். நல்ல குணங்கள் உள்ளவராக இருப்பார். சுய முயற்சியில் முன்னேறக் கூடியவர். பொதுநலம் சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு உள்ளவராக இருப்பார். தன்னைப்பற்றி உயர்வான சிந்தனை உண்டு. சகல யோகங்களை அனுபவிக்க கூடியவராக இருப்பார். அதேசமயம் கஷ்டங்கள், சோதனைகள் வந்தால் அதை எதிர்கொள்ளும் வல்லமை உள்ளவராக இருப்பார். எந்த தோஷமும் இவரைத் தாக்காது. பிறரின் புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். நட்புக்கு மரியாதை தருபவர்கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை மிகுதியாக இருக்கும்.
லக்னாதிபதியின் சாரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் ஜாதகருக்கு சுயமுடிவு எடுக்கத் தெரியாது. பிறரின் ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள். இதை பேச்சுவழக்கில் சுயபுத்தியும் கிடையாது; சொல் புத்தியும் கிடையாது என்று கூறுவார்கள். கப்பலின் கேப்டன் திறமையானவராக இருந்தால் மட்டுமே பயணம் எளிமையாக இருக்கும்.
அடையவேண்டிய இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் செல்ல முடியும். கேப்டன் திறமையற்றவராக இருந்தால் பயணம் கரடுமுரடாக இருக்கும். இலக்கை அடைவதில் தடை, தாமதம் நிலவும். சுருக்கமாக, பன்னிரு பாவகங்களின் மொத்த பலனை லக்னம் தெரிவிக்கும் என்பதால் லக்ன பலன் மிக அவசியம்.
பரிகாரம்: லக்னாதிபதியின் சாரத்தில் எந்த கிரகமும் இல்லாதவர்கள் அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்து அண்ணாமலையாரை வழிபட, சிறப்பான பலன் உண்டாகும்.
தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம்
2-ஆமிடம் எனும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதி பதி சாரத்தில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தினால் ஜாதகர் வேலை, தொழில், எதைச் செய்தாலும் வருமானம் உண்டு. கையில் பணம் சரளமாகப் புரளும். ஜாதகர் செல்வாக்கு, சொல்வாக்கு மிகுந்தவர். செல்வச் சீமானாக விளங்குவார். பணக்கஷ்டம் தெரியாதவர். பேச்சுத் திறமையால் வருமானம் ஈட்டும் காரியவாதிகள்.
பேச்சுத் தொழிலை மூலதனமாகக்கொண்டு பல வழிகளில் வருமானம் ஈட்டும் தந்திரவாதிகள். கலகலப்பாகப் பேசி தன்னைச் சார்ந்தவர்களை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்றுவார்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் நாணயவாதிகள். வாக்கு பலிதம் உண்டு. தொழில், உத்தியோகத்திற்கு குடும்ப உறுப்பினர்களின் அன்பும் அனுசரணையும் உண்டு.
இரண்டாம் அதிபதி சாரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் நிலையான, தொழில், உத்தியோகம் அமையாது. குடும்பம் நடத்த தேவையான வருமானம் கிடைக்காது. கிடைக்கும் சொற்ப வருமானமும் கடனுக்குச் செல்லும். திருமண வாழ்க்கை சிறக்காது. குடும்ப உறவுகளிடம் கலகலப்பு குறைந்து சலசலப்பு மிகுதியாக இருக்கும். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட முடியாது. குடும்ப உறவுகள் பகையாளியாக இருப்பார்கள்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஓரையில் மகாலட்சுமியை வழிபட மேலும் செல்வம் சேரும்.
சகாய ஸ்தானம்
லக்ன பாவத்தின் பாவாத்பாவமான மூன்றாமிடம் ஒருவருக்கு வளர்ச்சியைக் கொடுக்கும் பாவகம்.
மூன்றாமிடமான சகாய, முயற்சி, இளைய சகோதர ஸ்தானா திபதி சாரத்தில் ஒரு கிரகம் நின்று தசை நடத்தினால் வாழ்வில் அனைத்துவிதமான சகாயமும் பெற்றிட முடியும். வாழ்நாள் முழுவதும் வெற்றி தொடர்ந்துகொண்டே இருக்கும். திட்டமிட்டு செயல்படுவார்கள். முயற்சியை மூலதனமாகக்கொண்டு முன்னேறுபவர். விடாமுயற்சி, தன்நம்பிக்கை, துணிச்சல் மிகுந்தவர்கள். புகழ், கீர்த்தி, வெற்றி, சுய வருமானம், நேர்மை, திறமை, இளைய சகோதர விருத்தி, மங்காத புகழ் உடையவர்கள். ஆன்மிக ஈடுபாடு உண்டு. அதிகார வர்க்கத்தின் தொடர்புடையவர்கள். இளைய சகோதரத்தால் ஆதாயம் உள்ளவர்கள். இயல், இசை, நாடகப் பிரியர்கள். வேலையாட்கள் யோகம் உண்டு. பயணம் செய்வதில் விருப்பம் மிகுந்தவர்.
மூன்றாம் அதிபதியின் சாரத்தில் எந்த கிரகமும் இல்லையெனில் மன சஞ்சலம் மிகுதியாக இருக்கும். தெளிவான திட்டமிடுதல் இருக்காது. சகோதரர் கலகம் நிறைந்தவராக இருப்பார். பயணங்களால் ஆதாயமின்மையும் அசௌகரியமும் ஏற்படும். ஞாபக சக்தி குறையும். காது. மூக்கு, தொண்டை பாதிப்பு இருக்கும். டாக்குமென்ட் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். அண்டை, அயலாருடன் இணக்கம் இருக்காது. ஆபரணங்கள், சொத்துக்கள் அடமானத்தில் இருக்கும். பாகப் பிரிவினை சுமூகமாக இருக்காது. வாழ்க்கையில் வளர்ச்சி இருக்காது. ஒப்பந்தங்களால் மன உளைச்சல் இருக்கும் பரிகாரம்: செவ்வாய்க்கிழமை சுவாமி மலை முருகனை வழிபட வேண்டும்.
தொடரும்.....
செல்: 98652 20406