நேர்மறை ஆற்றலை பெருக்குவது எப்படி

/idhalgal/balajothidam/how-increase-positive-energy

ண்ணம்போல் வாழ்க்கை என்பது பழமொழி. ஒருவர் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறார்களோ அந்த நிகழ்வுகள் உடனே நடக் கும். அதாவது நல்லது நினைத் தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.

நமது எண்ண அலைகளுக்குப் பலம் உண்டு. எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அது தொடர்பான நிகழ்வுகளை, மனிதர் களைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.

நம் எண்ண அலைகளுக்கு ஏற்பச் சம்பவங் களும் தொடர்ந்துகொண்டு இருப்பதே எண்ணம்போல வாழ்க்கை என அழைக்கப் படுகிறது. இதைத்தான் கஹஜ் ர்ச் ஹற்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய் என்று கூறிகிறார்கள். அதாவது ஈர்ப்பு விதி.

உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டியகால கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும்போது சில நிலைகளில் மகிழ்சியும் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் துக்கங்களும் கிடைக்கிறது.

இந்த முயற்சியில் ஒருசிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு எதிர்மறை சிந்தனை மிகுதி யாகிவிடும்.

மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது. ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலையை ஏற்படுத்தும். அதீத எதிர்மறை எண்ணங்களால் தன்நிலை மறந

ண்ணம்போல் வாழ்க்கை என்பது பழமொழி. ஒருவர் எதைப் பற்றி அதிகம் நினைக்கிறார்களோ அந்த நிகழ்வுகள் உடனே நடக் கும். அதாவது நல்லது நினைத் தால் நல்லது நடக்கும். கெட்டது நினைத்தால் கெட்டது நடக்கும்.

நமது எண்ண அலைகளுக்குப் பலம் உண்டு. எதைப்பற்றி அதிகம் நினைக்கிறோமோ அது தொடர்பான நிகழ்வுகளை, மனிதர் களைச் சந்திக்க வேண்டியது இருக்கும்.

நம் எண்ண அலைகளுக்கு ஏற்பச் சம்பவங் களும் தொடர்ந்துகொண்டு இருப்பதே எண்ணம்போல வாழ்க்கை என அழைக்கப் படுகிறது. இதைத்தான் கஹஜ் ர்ச் ஹற்ற்ழ்ஹஸ்ரீற்ண்ர்ய் என்று கூறிகிறார்கள். அதாவது ஈர்ப்பு விதி.

உலகில் மனிதராய் பிறந்த அனைவரும் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சில கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டியகால கட்டாயம் ஏற்படுகிறது. இவற்றை சந்திக்கும்போது சில நிலைகளில் மகிழ்சியும் ஆனந்தமும், பல நிலைகளில் சங்கடங்களும் துக்கங்களும் கிடைக்கிறது.

இந்த முயற்சியில் ஒருசிலருக்கு மனச் சோர்வு ஏற்பட்டு எதிர்மறை சிந்தனை மிகுதி யாகிவிடும்.

மேலும் பார்க்கும் வேலையில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது. எதிலும் எளிதில் முடிவு எடுக்கமுடியாமல் திணறுவது. ஒரு செயலை செய்வதா? வேண்டாமா? என இருவிதமான மனநிலையை ஏற்படுத்தும். அதீத எதிர்மறை எண்ணங்களால் தன்நிலை மறந்து வாழ்க்கையின் மகிழ்ச்சியை குறைத்து துக்கம், துன்பம், கவலை போன்ற அடை யாளங்களை ஏற்படுத்திவிடுகின்றனர்.

ஒருவர் மிகுதியான எதிர்மறை எண்ணங் களோடு வாழ்வதற்கு ஜோதிட ரீதியான காரணங் களைப் பார்க்களாம்.

ஜனனகால ஜாதகத் தில் லக்னத்திற்கு எட்டாம் அதிபதியான அஷ்டமாதிபதியே மிகுதியான நேர்மறை எண்ணத்தை மனிதனுக்கு தூண்டு பவர் என்பதால் லக்னம் வலிமையாகவும் அஷ்டமாதிபதி வலிமை குறைவாகவும் இருக்கவேண்டும்.

லக்னம் அல்லது லக்னாதிபதிக்கு அஷ்டமாதிபதி மற்றும் பாதகாதி சம்மந்தம் இருப்பவர்களுக்கு எதிர்மறை எண்ணம் மிகுதியாக இருக்கும்.

ஜனனகால ஜாதகத்தில் 1, 3-ஆம் இடத்தோடு சம்பந்தம் பெறும் ராகு- கேது, சனி இயற்கையாகவே ஒருவருக்கு எதிர்மறை எண்ணத்தை மிகுதியாக்கி தன் நம்பிக்கை குறைவை ஏற்படுத்தும்.

1, 3-ஆமிடத்திற்கு வக்ரம், அஸ்த மனம், நீசம்பெற்ற கிரகங்கள் சம்பந் தம் பெற்றால் வாழ்நாள் முழுவதும் சுயமாக சிந்திக்கும் திறன் இல்லாமல் எதிர்மறை எண்ணத்துடன் குறிக் கோள், இலட்சியம் இல்லாமல் இருப்பார்கள் கோட்சார ராகு- கேது, சனி சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும்போது அல்லது பிறப்பு ராகு- கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும்போதும், ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி, ஜென்ம ராகு- கேது ஆகிய காலகட்டங்களில் எதிர் மறை சிந்தனை அதிகம் உருவாகும். உளவியல்ரீதியாக நேர்மறை எண்ணத்தை அதிகப்படுத்த கடை பிடிக்கவேண்டிய விதிகளை பார்க்க லாம்.

ss

1. திட்டமிடுதல்

நாம் செய்யும் செயல்கள் பெரியதோ சிறியதோ, சரியாக திட்டமிடுதல் மிகவும் அவசியம். சில செயல்களின் அலட்சிய மனோ பாவம் மெத்தனப் போக்குடன் மனக் கணக்கு போட்டு பாதகமான விளைவை உணரும்போது நொறிங்கிப் போவார்கள். முறையான திட்டமிடுதலே வெற்றியின் ரகசியம்.

2. விடாமுயற்சி, தன் நம்பிக்கை

முறையான திட்டமிடுதலுடன் விடா முயற்சியும் தன் நம்பிக்கையும் மிக முக்கியம். என் முயற்சி பலிக்குமா? என்ற அவ நம்பிக்கை ஏற்பட்டாலே பலிதமாகாது?

3. அவசரம்

விதையை விதைத்து தண்ணீர் ஊற்றி சூரிய வெளிச்சம் பட்டவுடன் செடி வளராது. நாம் விதைத்த விதையின் தரம், விதைத்த இடம், சுற்றுபுற சூழ்நிலையை பொறுத்து செடி வளர குறிப்பிட்ட கால அவகாசம் தேவைப்படும். இதேபோல்தான் மனித வாழ்க்கையும் செய்த செயல் வடிவாக்கம்பெறும் வரை பொறுமையுடன் இருக்கவேண்டும்.

4. மன அமைதி

நல்ல எண்ணங்களும் தீய எண்ணங்களும் மனிதனின் மனதில் இருந்து தான் தோன்றுகின்றன. அதாவது எண்ணங்களின் ஆரம்ப ஸ்தானம் மனம். ஆழ்மனதில் அழுத்தமான அமைதியான எண்ணம் இருந்தால் மட்டுமே மன அமைதி கிட்டும்.

மன அமைதியே நமக்கு வெற்றியை தேடித்தரும். ஒரு தெளிவான மனநிலையில் இருந்து, எடுத்த முடிவில் உறுதி யாக நிற்கும்போது, வலிமை வாய்ந்த கட்டளையாக அதை பிரபஞ்சத்திற்கு கொடுக்கிறீர்கள்.

அந்த கட்டளைக்கு ஏற்ப இந்த பிரபஞ்ச பேராற்றல் உங்களை வழி நடத்தும். மனதை முழுவதுமாக அமைதிப்படுத்துவது எளிதான செயல் அல்ல என்றாலும் மனதை சிறிது நேரத்திற்காவது அமைதிப் படுத்த முறையான பயிற்சி எடுக்க வேண்டும். அந்தப் பயிற்சி பிரபஞ்சத்திடமிருந்து வரும் சுப- அசுப செய்திகளை உணர்த்தி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் நம்முள் நிறைய கவலை, பெரும் வெறுப்பு, எரிக்கும் பொறாமை, அதிக டென்ஷன், களைப்பு இருக்குமானால் பிரபஞ்சம் நமக்கு உணர்த்தும் முக்கிய எச்சரிக்கை செய்தியை நம்மால் உணரமுடியாது.

பரிகாரம்

ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டில் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள், சண்டை, சச்சரவு ஏற்படுவது போன்ற பிரச்சினைகள் ஏற்படும். தொடர் பிரார்த்தனைகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நூறு சதவிகிதம் அதிகப்படுத்தும்.

வீட்டில் அனைத்து ஜன்னல்களையும் நன்கு திறந்து வைக்கவேண்டும். நல்ல காற்றோட்டமும் சூரிய ஒளியும் உள்ளே வரும்போது எதிர்மறை ஆற்றல்கள் உள்ளே புகுவது தடுக்கப்படும்.

வீட்டில் தேவையற்ற பழைய பொருட் களை சேர்க்கக்கூடாது. மிகக் குறிப்பாக ஓடாத கடிகாரம், டி.வி, போன், எலக்ட் ரானிக்ஸ் பொருட்கள் இருந்தால் எதிர்மறை ஆற்றலை வீட்டிற்குள் ஈர்த்து சேர்க்கும்.

வீட்டிற்குள் வெறும் கால்களோட நடந்தால் உடல் ஆற்றல் சமன்படுத்தப் படுவதுடன் உடம்பில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்களை பூமி ஈர்த்துக்கொள்ளும். சமையலறையில் அடுப்புக்கு கீழே தண்ணீர் பிடித்து வைக்கக்கூடாது.

அன்றாட உணவில் கல் உப்பை அதிகம் சேர்த்து சாப்பிடக் கூடாது. மாறாக வீட்டை துடைக்கும்போதோ கழுவும்போதோ, ஒரு கை கல் உப்பை வாளியில் போட்டு அந்த நீரை உபயோகிப்பதும் அதிக பலனை தரும்.கல் உப்பு கரைத்த நீரில் குளித்தால் உடலிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை சுத்தப்படுத்தும்.

தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செய்வது, நேர்மறை ஆற்றல்களையும் புத்துணர்வையும் அளிக்கவல்லது.

நமது எண்ணம், செயல், சிந்தனை, நடத்தை, பேச்சு, நட்பு வட்டாரம் அனைத் தையும், நாம் நேர்மறையாக, நேர்மையாக, தூய்மையாக வைத்திருக்கவேண்டும்.

வீட்டைச் சுற்றி தூய எண்ணத்தையும் அதிர்வலைகளையும் தரும் மரம், செடி, கொடிகளை வளர்ப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

செல்: 98652 20406

bala011223
இதையும் படியுங்கள்
Subscribe