நமது பாரம்பரிய ஜோதிடத்தின் அடிப்படையில் நமக்குரிய பலன்களைத் தெரிந்துகொண்டாலும், நம்மில் சிலரிடம் எண் கணிதத்தின் அடிப்படையில் பெயரை அமைத்துக்கொள்வதால் பலனடையமுடியும் என்னும் நம்பிக்கை மேலோங்கியுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு மனிதர்களின் வெற்றிக்குப் பின்னாலும் அவர்களுடைய ஆழ்மனதில் தோன்றும் நம்பிக்கையே பிரதானமாக அமைந்துள்ளது.
அந்தவகையில் ஒரு சாராருக்கு எண் கணிதத்தின்மீதான நம்பிக்கையும் உள்ளது.
பாரம்பரிய ஜோதிடத்தில் உள்ளதுபோலவே எண் கணிதத்திலும் ஒன்பது கிரகங்களே மையப்படுத்தப்படுகின்றன. பாரம்பரிய ஜோதிடத்தில் பன்னிரண்டு வீடுகளை மையமாக வைத்து, அவற்றில் ஒன்பது கிரகங்கள் சஞ்சரிக்கும் நிலையை வைத்து பலன்களைத் தெரிந்துகொள்கிறோம்.
கிரகங்கள் ஒவ்வொன்றும் எந்த ராசிநாதனின் வீட்டில் சஞ்சரிக்கின்றனர்- அந்த வீட்டில் யாருடைய சாரம் பெற்றுள்ளனர்- எந்த நிலையில் சஞ்சரிக்கின்றனர்- எந்த கிரகத்தோடு எந்த கிரகம் இணைந்துள்ளது- எந்த கிரகம் எந்த கிரகத்தின் பார்வையில் உள்ளது என்பதையெல்லாம் தெரிந்து, அதன்பிறகு தசாபுக்தியையும், கோட்சார நிலையையும் கண்டறிந்து, எப்போது என்ன நடக்கும் என்பதையெல்லாம் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
எண் கணிதத்தில், நம்முடைய பிறந்த தேதியை மையமாக வைத்து அதை உடல் எண் என்றும், பிறந்த தேதி, மாதம், ஆண்டு என்று மூன்றையும் கூட்டி அதனை ஒற்றைப்படையாக்கி வரும் எண்ணை உயிர் எண் என்றும் எடுத்துக்கொண்டு, அதற்கேற்ற பொதுப் பலன்களை மட்டுமே தெரிந்துகொள்கிறோம்.
இதற்கும்மேலாக ஒருசிலர் பிறந்த மாதத்திற்குரிய எண்ணை விதி எண்ணாகவும்கொண்டு பலன்களைத் தேடுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் இந்த முறையில் பொதுப்பலன்களே தென்படுகின்றன என்பதுதான் உண்மை. எண் கணிதமும் கிரகங்களும்
நம்முடைய பாரம்பரிய ஜோதிடத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் என்று ஒன்பது கிரகங்கள் இருக்கிறதல்லவா? அதேபோல் எண் கணிதத்திலும் ஒன்பது கிரகங்களே மையப்படுத்தப்படுகின்றன.
எண் 1 என்றால் அதன் கிரகமாக சூரியனையும், எண் 2 என்றால் சந்திரனையும், எண் 3 என்றால் குருவையும், எண் 4 என்றால் ராகுவையும், 5 என்றால் புதனையும், 6 என்றால் சுக்கிரனையும், 7 என்றால் கேதுவையும், 8 என்றால் சனியையும், எண் 9 என்றால் செவ்வாயையும் முன்வைத்தே எண் கணித வல்லுநர்கள் பலன் கூறுகின்றனர்.
எண் 1-ஐ உடல் எண்ணாகக் கொண்ட ஒருவருக்கு எப்படி பலன் கண்டறியப்படுகிறதென்றால், அந்த எண்ணிற்கு அதிபதியான சூரியனுடைய குணங்கள், அவர் வழங்கும் பலன்கள், அவரால் உண்டாகும் தொழில்கள், அவரால் உண்டாகும் சிறப்புகள், அவரால் உண்டாகும் நோய்கள், அவருக்குரிய நண்பர்கள் என்று சூரியனுக்கு பொதுவாகக் கூறப் பட்டுள்ள பலன்கள் யாவும் அந்த ஜாதகருக்குக் கூறப்படுகிறது. இதேபோல்தான் ஒன்பது எண்களுக்கும் எண் கணிதத்தில் பலன்கள் கூறப்படுகின்றன.
எண் கணிதமும் பெயர்களும்
இந்த நிலையில், எண் கணிதத்தில், ஒருவர் பிறந்த எண்ணான உடல் எண்ணை மையப்படுத்தி பெயரை அமைத்துக்கொள்வது அதிர்ஷ்ட மானதாகக் கூறப் பட்டு, அதையே ஒரு சாரார் இன்றளவும் பின்பற்றி வருகின்றனர். சிலர், நாள் மாதம் ஆண்டு என்று மூன்றையும் கூட்டி அதன் ஒற்றைப்படை எண்ணிலும் தங்கள் பெயரினை அமைத்துக்கொள்கின்றனர்.
இந்த இடத்தில், இட்டு நிரப்புதல் என்றொரு பணியையும் எண் கணித வல்லுநர்கள் செய்கின்றனர்.
ஒருவர் 24-11-1958-ல் பிறந்திருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம், அவருடைய பெயரானது உடல் எண்ணாகிய 6-லும் இல்லை; உயிர் எண்ணாகிய 4-லும் இல்லை. அவருடைய முன்னெ ழுத்தை சேர்த்து அவருடைய பெயர் வேறொரு எண்ணில் வருகிறது. அவருக்கு தன்னுடைய பெயரை அதிர்ஷ்டப் பெயராக மாற்றிக்கொண்டு அதிர்ஷ்ட மடைய வேண்டுமென்ற ஆசை வருகிறது. ஒரு எண் கணித நிபுணரிடம் செல்கிறார்.
கட்டணம் செலுத்தி ஆலோசனை கேட்கிறார்.
அவரும், இருக்கிற ஆங்கில எழுத்துகளையெல்லாம் சேர்த்து சேர்த்துப் பார்க்கிறார். இரண்டு ஆலிக்கள் போடுகிறார்.
ஃலிவை ஏ ஆக்குகிறார்.
அப்போதும் எதிர்ப்பார்த்த எண் வரவில்லை. கடைசியாக பிறந்த ஊரை விசாரிக்கிறார். அதன் முதலெழுத்தை முன்னே வைக்கிறார். ஒரு வழியாக ஜாதகர் எதிர்ப்பார்த்த எண்ணில் பெயரமைந்துவிட்டது.
வணிக நிறுவனங்களுக்கும் இதேரீதியில் தான் பெயரமைக்கப்படுகிறது. இப்படி அமைத்துத் தருவதற்காக ஆயிரக்கணக்கில் பணம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இதற்குள் நாம் ஆழமாக போக விரும்பவில்லை. ஆனால், இதே எண் கணித வழியாக பெயரமைத்துக் கொடுப்பவர் களுக்குள் இருவேறு கருத்துகள் வெளிப் படுகிறது.
எண் கணிதமும் பெயரியலும்
நியூமராலஜி என்ற எண் கணிதம், அதிர்ஷ்டப் பலன்களை வழங்குவதில் பல்வேறு குறைபாடுகள் இருக்கிறது. அதில், ஒருவருடைய பெயருக்கு முன்னும், பின்னும், இடையிலும், பெயருக்குரிய ஒலி அளவுக்கு மாறாக எழுத்துகள் வலிந்து திணிக்கப்படுகின்றன. உதாரணமாக முருகன் என்றால் ஙமதமஏஆச என்றுதான் இருக்கவேண்டும். அதை ஙமதமஃஆச என்று ஒரு எழுத்தை மாற்றுவதால், அந்தப்பெயரின் ஒலியளவு ஙமதமஏஆச என்பதிலிருந்து மாறப் போவதில்லை. அதேபோல் பெயருக்கு முன்னுள்ள தந்தை பெயருக்கு முன்பாக, பிறந்த ஊரின் பெயரை சேர்ப்பதாலும் எந்தவொரு மாற்றமும் உண்டாகப் போவதில்லை. காரணம், ஒருவரை அழைக்கும்போது யாரும் அவருடைய முன்னெழுத்தை எல்லாம் சொல்லி அழைப்பதில்லை. பெயரை வைத்து அழைக்கும்போதுகூட பெரும்பாலானவர்களை அவர்களுடைய முழுமையான பெயரைச்சொல்லி அழைப்பதில்லை.
இதற்கு ஒரு சின்ன உதாரணம். கதிர்வேல் என்ற பெயருடையவரை அழைப்பவர்கள் அவரை கதிர் என்றழைக்கலாம். விஜயராகவன் என்பவரை விஜி என்றழைக்கலாம். ராஜாராம் என்பவரை ராஜா என்றழைக்கலாம்.
இப்படி அழைக்கப்படும் பெயர்கள்தான், அழைக்க அழைக்க, நாவில் ஒலிக்க ஒலிக்க உயிர்பெறுகிறது. அந்த ஜாதகரை மற்றவர்கள் எப்படி அழைக்கிறார்களோ அப்படி அழைக்கப்படும் பெயருக்குரிய எண்ணே அவருடைய எண்ணாக உயிர்பெற்று அவருடைய வாழ்க்கையை நடத்திச்செல்ல ஆரம்பிக்கிறது.
"ஓம் நமசிவாய, ஓம் நமசிவாய' என்று ஆலயத்தில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கும் உச்சரிப்பு எப்படி ஒரு ஆலயத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறதோ அதேபோல் ஒருவரை எல்லாரும் அழைக்கும் அவருடைய பெயரின் உச்சரிப்பே அவரை ஆட்சிசெய்யத் தொடங்குகிறது.
நியூமராலஜி என்னும் எண் கணிதத்திலிருக்கும் தவறுகளை சுட்டிக்காட்டும் நேமாலஜி என்னும் பெயரியல் வல்லுநர்கள் கூறும் இதுபோன்ற எதார்த்தத்தை நாம் ஏற்றே ஆகவேண்டும். பெயரியல் வல்லுநர்கள் முன்வைக்கும் வாதம் நியாயமானதாகவும், அதே நேரத்தில் நம்மை நம்பிடவும் வைக்கிறது.
பெயரும் உச்சரிப்பும்
ஒருவருடைய பெயர் எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அதன் ஒலியின் அளவுக் கேற்பவே அவருடைய வாழ்க்கையின் விதி தீர்மானிக்கப்படுகிறது என்பது இங்கே உண்மையாகியுள்ளது. மறைந்த நம்முடைய முதல்வர்கள் எப்படி அழைக்கப்பட்டார்கள் என்பதை நாம் கவனத்தில் கொண்டுவந்தாலே அவர்களுடைய வெற்றிக்கு என்ன காரணமென்பது நமக்குத் தெரியவரும்.
எம்.ஜி.ஆர். என்னும் உச்சரிப்பின் வலிமையே அவரை உச்சத்திற்குக் கொண்டுசென்றது, கலைஞர் என்ற உச்சரிப்பின் தொடர்ச்சியே அவரை முதன்மைப்படுத்தியது. ஜெ என்ற ஒற்றை எழுத்தே அவரை ஜெகமாள வைத்தது.
இப்படி, நாம் அழைக்கும் சுருக்கப்பெயரின் ஒலிப்பிற்குரிய எண்ணே நம் வாழ்வின் விதியாகிறது என்பதை அனுபவங்களின் வழியாக நாம் ஏற்றே ஆகவேண்டும்.
ஒன்பது கிரகங்களே ஒன்பது எண்கள்
நியூமராலஜி என்ற கணிப்பின்படி அமைத்துக்கொள்ளும் பெயராகட்டும்; நேமாலஜி என்ற முறையில் நாம் அழைக்கப் படும் பெயராகட்டும்- இவையிரண்டுமே ஒன்பதிற்குள் உள்ள ஒரு எண்ணில்தான் அமைகிறது. அந்த எண் ஒன்றாக இருந்தால் சூரியன், இரண்டாக இருந்தால் சந்திரன், மூன்றாக இருந்தால் குரு, நான்காக இருந்தால் ராகு, ஐந்தாக இருந்தால் புதன், ஆறாக இருந்தால் சுக்கிரன், ஏழாக இருந்தால் கேது, எட்டாக இருந்தால் சனி, ஒன்பதாக இருந்தால் செவ்வாய் என்று ஒன்பது கிரகங் களை வைத்தே நியூமராலஜி நிபுணர்களும் பெயரமைத்துத் தருகின்றனர்; நேமாலஜி வல்லுநர்களும் பெயரமைத்துத் தருகின்றனர்.
இவற்றை நாம் கவனத்தில் கொள்ளும்போது நம்முடைய பாரம்பரிய ஜோதிடமே அனைத்திற்கும் மூலமானது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.
நாம் பிறக்கும்போது வான சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒன்பது கிரகங்களின் நிலையை வைத்து, நம்முடைய ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் ஆட்சியாக, உச்சமாக, நட்பாக இருக்கிறது என்பதையும், எந்தெந்த கிரகங்கள் பகையாக, வக்ரமாக, நீசமாக இருக்கிறது என்பதையும் நம்மால் தெரிந்துகொள்ளமுடியும்.
ஒரு ஜாதகருக்கு சூரியன் பகையாக இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் முதல் தேதியில் பிறந்திருக்கிறார் என்பதற்காக அவருக்கு சூரியனுடைய ஆதிக்கத்தில் பெயரமைத்துக் கொடுத்தால் எப்படி அவருடைய வாழ்க்கையில் நன்மை உண்டாகும்?
நாட்டில் ஆயிரமாயிரம் ஆலயங்கள் இருந்தாலும் ஒருசில ஆலயங்கள்தானே புகழின் உச்சியில் இருக்கின்றன? அதே போல், ஒருவருடைய ஜாதகத்தில் பகையாக உள்ள கிரகத்தின் ஆதிக்க எண்ணில், அந்த எண் உடல் எண் என்றோ, உயிர் எண் என்றோ பெயரை அமைத்துக்கொண்டால் அந்த ஜாதகரின் நிலை எப்போதும் போராட்டமாகவே அமைந்துவிடும். அதிர்ஷ்டம் என்பதே அவருடைய வாழ்க்கையில் இல்லாமல் போய்விடும்.
நம்மில் ஒருசிலருக்கு இயல்பாகவே பெயர் யோகமானதாக அமைந்துவிடுகிறது. ஒருசிலருக்கு பாதகமாகவும் அமைந்து விடுகிறது.
யோக கிரகங்களில் பெயர்கள்
இந்த நிலையில், அதிர்ஷ்டப் பெயரை அமைத்துக்கொள்ள நினைப்பவர்களும், தாங்கள் தொடங்கவுள்ள நிறுவனங்களுக்கு அதிர்ஷ்டப் பெயரை அமைக்க நினைப் பவர்களும் முதலில் தங்கள் ஜாதகத்தில் எந்தெந்த கிரகங்கள் வலிமையானவையாக இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கடுத்து உடல் மற்றும் உயிர் எண்களுக்குரிய கிரகங்களின் நிலைமைகளை ஆராயவேண்டும். இவற்றில் உடல் எண்ணுக்குரிய கிரகம் நம் ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அந்த எண்ணின் ஆதிக்கத்தில், நம்மை அழைக்கும்படியான பெயரை அமைத்துக்கொள்ளவேண்டும். நமது நிறுவனத்தை அழைக்கும்படியான பெயரை அமைத்துக்கொள்ளவேண்டும். உடல் எண்ணுக்குரிய கிரகம் ஜாதகத்தில் வலிமை குன்றியிருந்தால் உயிர் எண்ணுக்குரிய கிரகம் ஜாதகத்தில் வலிமையானதாக இருக்கிறதா என்று பார்த்து அந்த எண்ணின் ஆதிக்கத்தில் பெயரை அமைத்துக்கொள்ள வேண்டும்.
உடல் எண், உயிர் எண்ணுக்குரிய கிரகங்கள் இரண்டுமே ஜாதகத்தில் வலிமைகுன்றி, பகையாக, வக்ரமாக, நீசமாக இருந்துவிட்டால் ஜாதகத்தில் எந்த கிரகம் நமக்கு வலிமையாக உள்ளது என்பதைத் தெரிந்து அந்த கிரகத்தின் ஆதிக்க எண் வரும்படி பெயரை அமைத் துக்கொள்ளவேண்டும்.
நியூமராலஜி என்னும் எண் கணிதமாகட்டும்; நேமாலஜி என்னும் பெயரியலாகட்டும்- இரண்டுக்குமே ஆதாரமாகத் திகழ்பவர்கள் நவநாயகர்களான ஒன்பது கிரக சக்திகள்தான்.
அதிர்ஷ்டப் பெயரைத் தேர்வு செய்யும்போது, நம்முடைய உடல் எண், உயிர் எண்ணை வைத்து பெயரை முடிவு செய்வதற்கு முன்பாக, நம்முடைய ஜாதகத் தில் அந்த எண்களுக்குரிய கிரகங்களின் நிலைகளையும் நன்றாக ஆராய்ந்த பிறகே ஒரு முடிவுக்கு வரவேண்டும். நாம் அழைக்கப்படும் பெயரை நம் ஜாதகத்தில் வலிமை யாக உள்ள கிரகத்தின் ஆதிக்கத்தி லேயே அமைத்துக் கொள்வது மட்டுமே அதிர்ஷ்டத்தை உண்டாக்கும்.
செல்: 94443 93717