மனிதனின் வாழ்வாதார சக்தி பணம்.
பூமியில் மனிதராக பிறந்த ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அவரிடம் உள்ள பணமே வெளிப்படுத்துகிறது. பணத்தால் சாதிக்க முடியாத விசயமே கிடையாது என்றவகையில் நாளுக்கு நாள் பணம் எனும் காகிதத்திற்கு மதிப்பு உயர்ந்துகொண்டே செல்கிறது. பணத்தால் சாதிக்க முடியாத ஒரே விஷயம் இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்கமுடியாது. மற்றபடி பணம் பாயாத இடமே கிடையாது. நேரம், காலம் நன்றாக இருக்கும்போது ஒருவரைத் தேடிச் செல்லும் பணம் சாதகமற்ற சூழலில் அவரைக் கேட்காமல் சென்று விடுகிறது. ஒருவரின் பணம் தொடர்பான நிதி ஆதாரத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார வருட கிரகங்களான குரு, சனி, ராகு- கேதுவின் பங்கு அளப்பரியது.
கடந்த ஒரு வருடமாக சனி மற்றும் குருவிற்கு நடுவில் கோட்சார ராகு பயணித்துக்கொண்டு இருக்கிறார். கோட்சார கேது கன்னியில் இருக்கிறார். கோட்சார ரீதியாக ராகு- கேதுக்கள் மீனம், கன்னியில் நின்று தனது மையப்புள்ளியான கடகம், தனுசுமூலம் பல்வேறு இன்னல்களை மனிதர்களுக்கு வழங்கிவருகிறார்கள். உபய ராசிகளாக மிதுனம்,
கன்னி, தனுசு, மீன ராசியில் ஒருவரின் சுய ஜாதகத் திலுள்ள கிரகங்கள் ஜாதகரை இயக்குகின்றன. குறிப்பாக பணம் தொடர்பான விளைவுகள் சற்று அதிகப்படியாக உள்ளது. குறிப்பாக வராக் கடன் பிரச்சினை தலைவிரித்து ஆடுகிறது.
ஜோதிடம் பார்க்கவரும் நபர்கள் பெரும் பான்மையாக பணம் தொடர்பான சர்ச்சைக் காக ஜோதிடரை சந்திக்கிறார்கள்.
இந்த கட்டுரையில் வராக்கடன் தொடர் பான இன்னல்களுக்கான தீர்வுகளைக் காணலாம்.
வராக்கடன் என்றால் அறவே வசூலிக்க முடியாத கடன் என்று பொருள்.ஒருவர் வழங்கிய கடனை, அனைத்து சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுத்தும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் வசூலிக்க இயலாத கடன் வராக்கடனாகும். கடன்பெற்றால் மட்டும் ஒருவர் கடனாளி அல்ல. நம்பிக்கையின் பெயரில் ஒருவருக்கு கொடுத்த பணம் அல்லது பொருளை திரும்பப்பெற முடியாவிட்டாலும் கடன்தான்.
கடன் ஒருவருக்கு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரலாம். தற்காலத்தில் வராக்கடன் சாதாரண மனிதர்கள் முதல் சாமான்யர்கள்வரை ஒருவரின் வாழ்வாதாரத்தை அசைக்கும் சக்தியாக இருந்துவருகிறது. நல்ல நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள், உறவுகளுக்கு பணமாகவோ, பொருளாகவோ உதவியவர்கள், வியாபாரத்தில் கடனுக்கு பொருள் வழங்கியவர்கள் என பலரும் பலவிதமான வராக்கடன் பிரச் சினையிலிருந்து மீளமுடியாமல் இருக்கி றார்கள்.
ஒரு மனிதன் தன் வாழ்நாளில் சுயமாக இயங்க ஆரம்பித்தவுடன் வாழ்க்கையில் சந்திக்ககூடிய முதல் சவால் அல்லது முதல்படி 6-ஆம் பாவகம்மூலமாக ஆரம்பிக்கும். 6-ஆம் பாவம் எனும் பொருள் கடனை தொழில், உத்தியோகத்தின்மூலம் கடந்துவிட்டால் வாழ்க்கை சுகமான, சுலபமான சுமையாகிவிடும். அதாவது ஆறாம் பாவகம் என்பது கடன், வம்பு, வழக்கு, கோர்ட், கேஸ், அடிதடி, சண்டை, போட்டி, பொறாமைகள், எதிரிகள் சத்துருக்கள் போன்றவற்றை உள்ளடக்கிய பாவகமாகும். இது மனிதனின் முக்கியமான தேவைகளையும் பிரச்சினைகளையும் உள்ளடக்கிய பாவகமாகும். இந்த ஆறாம் பாவகம் மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு பிரச்சினைகள் வரும்.
இந்த பாவகம் தொடர்பான பிரச்சினைகளை அனுபவிக்காத மனிதர்களே கிடையாது. இயற்கை அல்லது பிரபஞ்சம் ஒருவரை இந்த பாவகத்தின்மூலம் தான் சோதிக்கும். இதன்மூலம் நடக்கும் சம்பவங்கள் வெளியில் தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காதத்தான் மறைவு ஸ்தானங்களாக வைத்திருக்கிறார்கள். ஜோதிடரீதியாக ஆறாம் பாவகம் ஏற்படுத்தும் வராக்கடனுக்கான கிரக அமைப்பினைப் பார்க்கலாம்.
ஆறாம் அதிபதி லக்னத்தில் இருப்பவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் வராக்கடன் முளைத்துக்கொண்டே இருக்கும். இதை கிராமத்தில் ஒரு சொலவடையாகச் சொல்வார்கள். கஷ்டம்னு கேட்டா கட்டியிருக் கும் வேட்டியைக்கூடக் கழட்டிக் கொடுத்துவிட்டு வருபவர் என்று கூறுவார்கள். லக்னாதிபதியும், ஆறாம் அதிபதியும் சம்பந்தம் பெற்றால் பரிவு மிகுதியால் வாழ்நாள் முமுவதும் வராக்கடனுடன் வாழ்கிறார் கள். லக்னாதிபதியே ஆறாம் இடத்துடன் சம்பந்தம் பெறுவதால் தனக்கு ஏற்படும் கடன் பிரச்சினைக்கு தானே காரணமாக இருப்பார்கள். தங்களுடைய நிதானமற்ற செயலால் வராக்கடன் வலையில் சிக்குகிறார் கள். உற்றார்- உறவினர், நண்பர்களுக்கு அவசர காலத்திற்கு உதவிசெய்து அதை திரும்பக்கேட்டு எதிரியை உருவாக்குவார்கள்.
ஆறாம் அதிபதி இரண்டு மற்றும் மூன்றில் இருப்பவர்கள் குடும்ப உறவுகளின் பிரச்சினை தன் தலையில் சுமந்து வராக்கடனை வர வழைத்துக் கொள்வார். பணம், பொருள் கொடுத்தால் திரும்ப வராது என்று தெரிந்தும் சந்தர்ப்ப சூழ்நிலையால் குடும்ப உறவுகளுக் காக சூழ்நிலை கைதியாக வாழ்வார்கள். குறிப்பாக சகோதர- சகோதரிகளின் குடும்ப தேவையை நிறைவு செய்வதற்காக வாழ்நாள் வராக்கடனாளியாக மாறுகிறார்கள்.
மருத்துவ தேவை, வீட்டில் சுப நிகழ்விற்கு என அவசரத் தேவைக்கு பரிதாபப்பட்டு கொடுத்த பணம் வராமல் நின்றுவிடும்.
இதனால் உடன்பிறந்தவர்களுடன் சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக் கும். முறையற்ற பாகப் பிரிவினையால் வராக்கடனை சந்திப் பார்கள். ஜாமீன், ஆவணங்கள் தொடர்பான பிரச் சினையால் வராக் கடன் தேடிவரும். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் சிலர் உடன்பிறந்தவர்கள் பெயரில் சொத்து வாங்கி குவித்துவிட்டு பின் நாட்களில் அந்த சொத்துகளை அவர்களிடமிருந்து மீட்கமுடியாமல் மன உளைச்சலை சந்திக்கிறார் கள். மூன்று, ஆறாமிட பலவீனத்துடன் புதன்+சனி+ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கு வராக்கடன் பிரச்சினை வாழ்வாதாரத்தையே அசைக்கும்விதமாகவே இருக்கிறது.
ஆறாம் அதிபதி நான்கு, ஐந்தில் இருப்பவர்கள் பூர்வீகச் சொத்தில் வில்லங்கம் இருக்கும். அந்த வில்லங்கத்தை சரிசெய்ய சுய சொத்தை இழந்து வராக்கடனை வரவழைப்பார்கள் அல்லது பூர்வீகச் சொத்தை விற்று கடன் அடைப்பார்கள். அல்லது வருமானத்திற்கு மீறிய தீயபழக்கத்தால் வராக்கடன் உருவாகும். அல்லது நஷ்டத் திலுள்ள குலத்தொழிலை தூக்கி நிறுத்துகிறேன் என்று மிச்ச மீதி இருக்கும் பெயரையும் கெடுத்து நஷ்டத்தை அதிகரிப்பார்கள் அல்லது அரசியல், கவுரவப்பதவி அல்லது தகுதிக்கு மீறிய ஆன்மிகச் செயல்களுக்காவும் கடன்படுவார் கள்.
ஆறாம் அதிபதி ஆறில் இருப்பவர்களுக்கு வராக்கடன் மிகுதியாக இருக்கும். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது பழமொழி. ஆனால் ஆறாமாதிபதி ஆறில் இருப்பவர்கள் நடைமுறை வாழ்வில் சொந்தத் தொழில் அல்லது வட்டித்தொழல் செய்து வராக் கடனாளியாகி. விடுகிறார்கள். நிதி நிறுவனம், வங்கித்தொழில், வட்டித்தொழில் நடத்து பவர்களுக்கு ஆறாமாதிபதி ஆட்சி, உச்சம் பெறாமல் சூட்சம வலுப்பெறவேண்டும்.
ஆறாம் அதிபதியால் இவர்கள் அனுபவிக்கும் இன்னல்கள் அளப்பறியது. லக்னம் வலிமை இல்லாதவர்கள் ஆறாம் அதிபதி தசாபுக்தி காலங்களில் அனுபவிக்கும் சங்கடங்களை திரைப்படமாக்கினால் உலகிலேயே அதிக வசூலில் சாதனை படைத்த படமாக இருக்கும். லக்ன வலிமைபெற்ற வெகுசிலர் சினிமா ஹீரோவைப்போல் எதிரிகளை வைத்தே முன்னேறுவார்கள்.
ஆறாம், ஏழாம் அதிபதி சம்பந்தம் நண்பர் மற்றும் தொழில் கூட்டாளி யால் வஞ்சிக்கப்படுதல் அல்லது மனைவி மற்றும் தாய்மாமன்மூலம் பொருள் இழப்பால் வராக்கடன் அவதி இருக்கும். ஆறு, எட்டாம் அதிபதி சம்மந்தம் மிகக் கொடூரமான வராக்கடன் அமைப்பாகும். வட்டிக்கு பணம் வாங்கி மீண்டும் வட்டிக்கு விடுகிறார்கள். பணத்தை பன் மடங்காக மாற்றிதருவதாக கூறுபவர்களிடம் ஏமாறுவது. அதாவது ஒரு லட்சம் கொடுத்தால் மூன்று லட்சம் திரும்ப தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற்றப் படுகிறார்கள். இதில் படித்து நல்ல அரசு உத்தியோகத்தில் இருப்பவர்கள், மிகப் பெரிய தொழில் அதிபர்கள்தான் அதிக அளவில் பணம் கொடுத்து ஏமாறுகிறார்கள்.
பணத்தைக் கொடுத்தவர்கள் அசல் வந்தால்கூட போதும் என்று புலம்புகிறார்கள். எந்த ஆதரமும் இன்றி கொடுத்த பணம் எப்படி வரும்? பணத்தை பெருக்கி தருகிறேன் என்று கூறுபவர்கள் பெரும்பான்மையாக அறிமுகமான மிகவும் நம்பிக்கைக்குரிய உறவுகளாகவே இருக்கிறார்கள். உறவுகளை வெறுக்கவும், ஒதுக்கவும் முடியாமல் பணத்தை இழந்தவர்கள் படும் வேதனை அளப் பரியது.
புதிய தொழில் முயற்சிக்காக தொழிலில் பங்குதாரர் ஆக பணம் கொடுத்து ஏமாறுவது. வீடு, மனை வாங்க இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது. அரசு உத்தியோகம் வாங்கித் தருகிறேன் என்று கூறுபவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறுவது. மேலே கூறிய இந்த முறையில் சில லட்சம் முதல் பல லட்சம் கொடுத்து வேதைனையில் இருப்பவர்களே அதிகம். எந்த ஆதாரமுமின்றி பல லட்சம் பணத்தை பறிகொடுத்தவர்கள் வெளியில் சொல்லமுடியாமல் அடுத்த அடி எடுத்து வைக்கமுடியாமல் நடைப்பிணமாக காலம் தள்ளுகிறார்கள். பெரிய பணம் கொடுக்கும்போது சுய ஜாதக பரிசோதனை மிக அவசியமானதாகும்.
ஆறாம் அதிபதி ஒன்பதில் இருந்தால் தந்தையால் வராக்கடன் உருவாகும். குல கவுரவத்திற்காக தந்தை ஏற்படுத்திய கடனை அடைத்து அவதிப்படுகிறார்கள்.
ஆறாம் அதிபதி பத்தில் இருந்தால் தொழில் சார்ந்த நஷ்ட கடன், கூடிக்கொண்டே இருக்கும். கஷ்டமான தொழில் செய்யும் சூழல், திடீர் விரையம் உண்டாகும். இவர்கள் கடனுக்கு பொருள் விற்பதால் வராக்கடன் கூடும். அதனால் டென்ஷன் மிகுதியாகும். இந்த அமைப்பு உடையவர்கள். கடனுக்கு பயந்து நோயை வரவழைத்துக்கொள்வார்கள். மிகுதியான தொழில் எதிரிகள் உண்டு.
ஜோதிடரீதியாக வராக்கடன், பண இழப்பு ஏற்படும் காலம் எது?
6, 8-ஆம் அதிபதி அல்லது 6, 8-ல் நின்ற கிரகத்தின் தசை புக்தி, அந்தரம் நடப்பவர்களுக்கு புதன் தசை நடக்கும் காலங்களில் ஜனனகால ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி வக்ரம்பெற்று தசை நடத்தும்போது மேஷம், மகர லக்னத்தை சேர்ந்தவர்களுக்கு இயல்பாகவே வராக்கடன் இருக்கும்.
6, 8-ஆம் அதிபதி லக்னத்தில் இருப்பவர் களுக்கு 7-ஆம் அதிபதி 6, 8-ஆம் இடத்தோடு சம்பந்தம் இருப்பவர்களுக்கு மேலும் ஜனனகால ஜாதகத்தில் 2, 8-ஆம் இடத்தில் சனி, ராகு- கேது இருப்பவர்கள் அல்லது 2, 8-ஆம் இடத்திற்கு வக்ர கிரகம் சம்பந்தம் இருப்பவர்கள் யாருக்கும் பணம், பொருள் கொடுத்தாலும் திரும்ப வராது.
வயதோட்டத்தின் அடிப்படையில் 19, 28, 37, 46, 55, 64, 73 ஆகிய வயதில் ஏதாவது ஒரு காரணத்தினால் வராக்கடன் உருவாக்கு கிறது.
பரிகாரம்
செவ்வாய் அல்லது சனிக்கிழமையும் பிரதோஷமும் இணைந்தநாளில் ஸ்ரீ சரபேஸ் வரரை வழிபட கடன்கள் வசூலாகும். ஒன்பது செவ்வாய்க்கிழமை வெண்கடுகை ஒரு அகல் விளக்கில் போட்டு அதனுள் கற்பூரம் வைத்து கொளுத்தவும். வெண்கடுகு பட்பட்வென வெடித்து சிதறும். இதேபோல் உங்கள் பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
காலை 5.00 மணிமுதல் மாலை 5.00 மணிக்குள் குல அல்லது இஷ்ட தெய்வ கோவிலிலுள்ள ஸ்தல விருச்சத்திடம் முறையிட விரைவில் கடன்கள் வசூலாகும்.
செல்: 98652 20406