முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாத சாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1.

செவ்வாய்: ரோகிணி- 2.

Advertisment

புதன்: மகம்- 3.

குரு: ரோகிணி- 4.

சுக்கிரன்: மகம்- 2.

சனி: பூரட்டாதி- 2 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம் 2.

daf

கிரக மாற்றம்:

ஆடி 20 (5-8-2024) சிம்ம புதன் (வ) ஆரம்பம் (காலை 10.26).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கடகம்

5-8-2024 பகல் 3.21 மணிக்கு சிம்மம்.

8-8-2024 அதிகாலை 3.15 மணிக்கு கன்னி.

10-8-2024 மாலை 4.18 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெரும் யோகம் உங்களுக்கு உண்டு. குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும் அமைப்பு, உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாக கூடிய யோகம், குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உணர்ச்சிவசப்படாமல் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சற்று பொறுமையோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறலாம். ஒருசிலருக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் பொருளாதார ஆதாயங்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் புதிய யுக்திகளை பயன்படுத்தி அதிகப் படியான லாபங்களைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய வெளி உதவிகள் தக்க நேரத்தில் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு மதிப்புமிகுந்த வாய்ப்பு கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர் கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு ஆசிரியர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வளமான பலன்களைப்பெற முருகப் பெருமானை தரிசிப்பது, ராகுகால நேரத்தில் அம்மனுக்கு நெய் தீபமேற்றுவது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், சுக ஸ்தான 4-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நெருங்கியவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அடையவேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. 10-ஆம் வீட்டில் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்த தேவையற்ற பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்களுடைய ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள்வழியில் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக இருந்த தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது ஒரு தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். மாணவ- மாணவியர்கள் முனைப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களையும் விரும்பிய பாடப்பிரிவையும் பெற க் கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, கால பைரவருக்கு அர்ச்சனை செய்வது நற்பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தால் தேவையற்ற நெருக்கடிகளை எதிர்கொள்வீர்கள். கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குக்கூட மனஸ்தாபம் ஏற்படும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பண விஷயத்தில் மிகமிக சிக்கனத் தோடு இருப்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது உத்தமம். சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. மறைமுக எதிர்ப்பு காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்று கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர் களுடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான சூழ்நிலை இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைவிட படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதன் மூலம் வளமான பலன்களைப் பெறலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, எதிர்பார்த்த பணவரவுகள் தக்க நேரத்தில் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. வருடக் கோள் என வர்ணிக்கப்படக் கூடிய குரு- செவ்வாய் சேர்க்கை பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் இருக்கக் கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துவழியில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைத்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய யோகம் உண்டு. தொழில் முன்னேற் றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். மற்றவர்களுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியின் உடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.

ss

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, எந்த விஷயத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. பண விஷயத்தில் மிகமிக கவனமாக இருக்கவேண்டிய நேரமாகும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற போட்டி கள் காரணமாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப் படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணி சுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டுமில்லாமல் இதன்காரணமாக குடும்பத்திலும் நிம்மதி குறைவு ஏற்படக்கூடிய ஒரு சூழ்நிலை உண்டாகும். அசையும், அசையா சொத்துவகையில் தேவையில்லாத வீண்செலவுகள் ஏற்படக்கூடிய ஒரு நிலையும் அதனால் மன அமைதி குறைவு ஏற்படக்கூடிய சூழ்நிலையும் உண்டு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்று வது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற் கொள்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 10.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன் சந்திப்பதாலும் பாக்கிய ஸ்தானத்தில் குரு அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்ப்பதாலும் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உடனிருப்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை வரும் நாட்களில் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய நேரமாகும். நீண்டநாட்களாக எதிர்பார்த்த ஒரு புதியவாய்ப்புகள் உங்களுக்கு கிடைத்து மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் மிக மிக சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் உடனிருக்கக்கூடிய நண்பர்களுக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒரு வாய்ப்புகள் ஏற்படும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 8, 9, 10.

.துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதா லும் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். ராகு 6-ல் இருப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சற்று சுமாராக இருக்கும் என்பதால் எதிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் அனுகூலங்களை அடையமுடியும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தற்போது குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக் கொண்டு ஏதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடனிருப்பவரிடம் பேசுகின்றபொழுது கவனமாக இருப்பதும், படிப்பில் கவனம் செலுத்துவதும் தற்போதைக்கு உத்தமம். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரைத்தேங்காய் உடைப்பது வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து உங்களின் குடும்ப தேவைகள் அனைத் தும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் தடைப்பட்ட மங்களகரமான சுபகாரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்ற முடியும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறக் கூடிய அதிர்ஷ்டமானது உங்களுக்கு இருக்கிறது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமையானது மிகமிக நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். சில விஷயங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உங்களுக்கு ஆதரவாக இருப்பவர் தற்போது அதிகாரியாக வரும் வாய்ப்புகள் உள்ளது. ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9, 10.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தனமான 9-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். பேச்சில் பொறுமையாக இருப்பது, வயதுமூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. உடன்பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். இருக்கும் இடத்தில் நல்ல வாய்ப்புகள் தேடிவரும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். வண்டி, வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் வேலையும் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும் என்பதால் சூழ்நிலையை புரிந்துகொண்டு நடந்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, சரபேஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் ராகு, பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களுடைய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உடன் பிறந்தவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய ஒரு நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் 8-ஆம் வீட்டில் இருப்பதால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம் என்பதால் எந்த ஒரு காரியத்திலும் சற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகளும் தொழில் முன்னேற் றத்திற்காக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கக்கூடிய யோகமும் வரும் நாட்களில் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதனை சிறப்பாக கையாண்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய இடத்தில் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் பெரியோர்களிடம் பேசுகின்ற போது சற்று பொறுமையோடு இருப்பது தற்போதைக்கு நல்லது. படிக்கும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 10.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ஆம் வீட்டில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பது பொருளாதாரரீதியாக அனுகூலமான பலனை ஏற்படுத்தும் அமைப்பாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 6-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர் கள். ஜென்ம ராசியில் சனி, 2-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக் கொண்டு பொறுமையோடு செயல்படவேண்டும். நீங்கள் விளையாட்டுத்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருக்கவேண்டும். அது மட்டும் இல்லாமல் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது. வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வதன்மூலமாக வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும் என்றாலும் அதற்கான பொருளாதார ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 4, 5, 6, 7.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள் என்றாலும் தேவையில்லாத நிகழ்வுகள் நடந்து உங்களின் மன அமைதி குறையும். ஜென்ம ராசியில் ராகு, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் 6-ல் சஞ்சரிப்பதால் தேவையற்றவகையில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். முடிந்தவரை ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் எதிர்பாராதவகையில் ஏற்படக்கூடிய சின்ன சின்ன எதிர்ப்புகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். தொழில் தொடர்பான விஷயங்களை பொதுஇடங்களில் பேசாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் தேவையில் லாத பழிச்சொற்களை எதிர்க்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்றபோது வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடனிருக்கக்கூடிய நண்பர்களிடம் பேசுகின்றபொழுது கவனமாக இருப்பது அது மட்டுமில்லாமல் படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 9.