இந்த வார ராசிபலன்கள் 28-7-2024 முதல் 3-8-2024 வரை

/idhalgal/balajothidam/horoscopes-week-28-7-2024-3-8-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூசம்- 3.

செவ்வாய்: ரோகிணி- 1.

புதன்: மகம்- 3.

ss

குரு: ரோகிணி- 3.

சுக்கிரன்: ஆயில்யம்- 3.

சனி: பூரட்டாதி- 2 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

ஆடி 15 (31-7-2024) சிம்ம சுக்கிரன் (பகல் 2.33).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மேஷம்

29-7-2024 மாலை 4.45 மணிக்கு

ரிஷபம்.

31-7-2024 இரவு 10.15 மணிக்கு மிதுனம்.

3-8-2024 அதிகாலை 5.41 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும், 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கோபத்தை சற்றுக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ஒருசிலருக்கு நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த போட்டி, பொறாமைகள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல நிலையை அடைவீர்கள். பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணிகளை சிறப்பாக செயல்படுத்தி அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 1, 2.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல் களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குருபார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பு கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கக் கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையும். குறிப்பாக சட்டரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைவதால் தொழில் அபிவிருத் திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் அனுகூல பலனை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத் துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 3.

ss

மிதுனம்

(மிருகசீரிட

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூசம்- 3.

செவ்வாய்: ரோகிணி- 1.

புதன்: மகம்- 3.

ss

குரு: ரோகிணி- 3.

சுக்கிரன்: ஆயில்யம்- 3.

சனி: பூரட்டாதி- 2 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

ஆடி 15 (31-7-2024) சிம்ம சுக்கிரன் (பகல் 2.33).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மேஷம்

29-7-2024 மாலை 4.45 மணிக்கு

ரிஷபம்.

31-7-2024 இரவு 10.15 மணிக்கு மிதுனம்.

3-8-2024 அதிகாலை 5.41 மணிக்கு கடகம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும், 4, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திருமணமான புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கோபத்தை சற்றுக் குறைத்துக்கொண்டு எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ஒருசிலருக்கு நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த போட்டி, பொறாமைகள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல நிலையை அடைவீர்கள். பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எடுத்த பணிகளை சிறப்பாக செயல்படுத்தி அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டி தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 1, 2.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும், 4-ல் புதன், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் உங்கள் செயல் களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். குருபார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் தொடர்பு கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிக்கக் கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையும். குறிப்பாக சட்டரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் குறைவதால் தொழில் அபிவிருத் திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளில் அனுகூல பலனை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத் துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 3.

ss

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய், குரு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை உடன் இருப்பவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. எதிர்பார்க்கக் கூடிய பணவரவுகள் தக்கநேரத்தில் கிடைக்காத காரணத் தால் உங்களுடைய சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்களே உங்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகளை உண்டாக்கும் சூழ்நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனத்தோடு செயல்படுவதும், கிடைக்கக்கூடிய வாய்ப்பு களை சரியானமுறையில் பயன்படுத்திக் கொள்வதும் நல்லது. முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். ஒருசில நேரங்களில் வேலையாட்களுடைய ஒத்துழைப்பை நம்பாமல் எதிலும் நீங்களே நேரடியாக செயல்பட் டால் இருக்கக்கூடிய நெருக் கடிகளைச் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவை யில்லாத அவப்பெயர் எதிர் கொள்ளக்கூடிய நேரமென்ப தால் உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர் கள் பொழுதுபோக்கு விஷயங்களில் நேரத்தை செலவிடுவதைவிட படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். மகா லட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 1, 2.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய், குரு சஞ்சரிப்பதாலும் எதிலும் சாமர்த்திய மாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் தாராள மாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறை வேற்றுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளா தார உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக் கூடியநிலை உண்டாகும். உத்தியோகரீதியாக சக ஊழியர் கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமுகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப் பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30, 31, 3.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் ராசியாதிபதி சூரியன் சஞ்சரிப்பதாலும், சம சப்தம ஸ்தானமான 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமாகும். அலர்ஜி சம்பந்தப்பட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம் என்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது தற்போதைக்கு நல்லது. நீங்கள் நிதானத்தோடு செயல்பட்டாலும் வயது மூத்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் ஏற்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய லாபங்கள் தடைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப் பளு சற்று அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவருடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். மாணவ- மாணவி யர்கள் சூழலை புரிந்துகொண்டு பொறுப்புடன் செயல்பட்டால் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 1, 2.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாலும், பாக்கிய ஸ்தானமான 9-ல் குருபகவான் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நேரமாகும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார் கள். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் விலகி மன அமைதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தந்து மனமகிழ்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை பெறக்கூடிய நேரமாகும். உத்தியோகரீதியாக மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்பு களும், ஒருசிலருக்கு வெளியூர் பயணங்கள் மேற் கொள்ளக்கூடிய யோகமும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப் படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பள்ளி கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பார்கள். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு, 11-ல் புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். ராசியாதிபதி சுக்கிரன் 10, 11-ல் சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பணஉதவிகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு, செவ்வாய் உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவதும், தேவை யற்ற பயணங்களைத் தள்ளி வைப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று முனைப்பு டன் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். ஒரு சிலருக்கு கூட்டாளிகள் மூலமாக ஒருசில உதவிகள் கிடைக்கும். உத்தி யோகரீதியாக நீங்கள் சிறப்பாக செயல்படுவீர் கள் என்றாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச் சொற்களை சொல்வார் கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்ப தால் எந்தவித பிரச்சினையும் எளிதில் சமாளிக் கக்கூடிய பலம் உண்டாகும். குறிப்பாக உங்களு டைய பணியில் மட்டும் கவனம் செலுத்தி விட்டு மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று கவனத் தோடு இருக்கவேண்டும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 3.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் தாராள தனவரவுகள் ஏற்பட்டு அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும். சுக காரகன் சுக்கிரன் இந்த வாரத்தில் 9, 10-ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பெண்கள்மூலமாக ஒருசில ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக முடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒருசிலருக்கு நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். சக ஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் படிப்பு தொடர்பாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடன்பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 30, 31.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதாலும் மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 8-ல் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு விஷயத்திலும் சற்று சிந்தித்து செயல்பட வேண்டிய நேரம் ஆகும். வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும் என்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 9-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும் என்றாலும் அதனை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய சின்ன வாய்ப்பை யும் தவறவிடாமல் சரியாக பயன்படுத்திக் கொண்டால் விரைவில் சில மாற்றங்கள் ஏற்படும். சனிபகவான் வக்ரகதியில் இருப்ப தால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவு நேர பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவி யிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறைவது மட்டும் இல்லாமல் அதன்காரணமாக மன நிம்மதி குறைவு உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். வண்டி, வாகனங்கள்மூலம் சுபச்செலவுகள் ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, குருபகவானுக்கு வியாழக் கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 31, 1, 2.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ஆம் வீட்டில் குரு பகவான் செவ்வாய் சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 7-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சில நேரங்களில் நெருங்கியவர்களை அனுசரித்து சென்றால் வளமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சனிபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நீங்கள் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருந்து தொழிலை விரிவுபடுத்த முடியும். ஒருசிலருக்கு நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை பெறுவீர்கள். பணி நிமித்தமாக வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று உங்களுக்கு கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் சிறப்பாக படிப்பீர்கள் என்றா லும் உடன் இருக்கக்கூடிய நண்பர்கள் உங்கள் மனதை மாற்ற முயற்சிப்பார்கள் என்பதால் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 1, 2, 3.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாலும் சமசப்தம ஸ்தானமான 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வண்டி, வாகனங்கள்மூலமாக கூட எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் பொறுமையோடும் எதிலும் நிதானத்தோடும் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. சில நேரங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடன் இருப்பவர்கள் வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். எது எப்படியிருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எடுத்த பணியை குறித்து நேரத்தில் முடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் உடன் இருப்பவர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையாக இருப்பதும், படிப்பில் கவனம் செலுத்துவதும் நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 28, 29, 3.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். குரு பகவான் 3-ல் இருப்பதால் பணவரவில் நெருக்கடி இருந்தாலும் ஒருசில உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு நிதானத்தோடு இருப்பது நல்லது. நம்பியவர்களே உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது, ஆடம்பர செலவுகளைக் குறைத் துக்கொள்வது நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது, பங்காளியிடம் பேசுகின்றபொழுது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிறர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகள் நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்து விடவேண்டாம். உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு பெரியவர் சொல்வதைக் கேட்டு நடந்துகொள்வது நல்லது. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் கொண்டக் கடலை மாலை அணிவிப்பது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 30, 31.

bala020824
இதையும் படியுங்கள்
Subscribe