முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: பூசம்- 1.
செவ்வாய்: கிருத்திகை- 3.
புதன்: மகம்- 1.
குரு: ரோகிணி- 3.
சுக்கிரன்: ஆயில்யம்- 1.
சனி: பூரட்டாதி- 2.
ராகு: உத்திரட்டாதி- 4.
கேது: அஸ்தம்- 2.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- தனுசு
21-7-2024 காலை 7.27 மணிக்கு மகரம்.
23-7-2024 காலை 9.20 மணிக்கு கும்பம்.
25-7-2024 பகல் 10.44 மணிக்கு மீனம்.
27-7-2024 பகல் 12.59 மணிக்கு மேஷம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், பஞ்சம ஸ்தானமான 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு 2-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களது பொருளாதாரநிலை மிகவும் நன்றாக இருந்து தேவைகள் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, தேவையற்ற அலைச்சலை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் விருத்திக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவதுடன் எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் நன்றாக இருப்பதால் வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவது மட்டுமில்லாமல் எதிர்பார்த்த நல்லவாய்ப்புகள்கூட தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த கடந்தகால வம்பு வழக்குகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூக நிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் அதிகப்படியான மதிப்பெண்களைப் பெறமுடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதுமூலம் ஏற்றமிகுந்த பலன்களை வரும் நாட்களில் அடையமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதும் 4-ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் தற்போது இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையும். குரு பார்வை 7-ஆம் இடத்துக்கு இருப்பதால் மங்களகரமான சுப காரியங்கள் குடும்பத்தில் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மன கவலைகள் எல்லாம் தற்போது குறைந்து வளமான பலன்கள் உண்டாகும். பூர்வீகச் சொத்துரீதியாக பங்காளியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் வரும் நாட்களில் முடிவுக்கு வந்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சற்று சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. வேலையாட்களின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எளிதில் செய்து முடிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, பெருமாள் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு தன ஸ்தானமான 2-ஆம் வீட்டில் சூரியன், விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. நீங்கள் வெளிப்படையாக பேசினாலும் உடனிருப்பவர்கள் அதனை தவறாக எடுத்துக்கொள்ளக்கூடிய நேரமென்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் எதிலும் கண்ணும் கருத்துமாக நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரித்த சனிபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒருசில அனுகூலங்கள் கிடைத்தாலும் வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. வேலையாட்கள் வைக்கக்கூடிய கோரிக்கைகள் காரணமாக தேவையற்ற மனக்கவலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மேல் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தேவையற்ற தூரப் பயணங்களைத் தற்காலிகமாக தவிர்ப்பதன்மூலம் வீண் அலைச்சல்கள் குறையும். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நட்புகளிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். இந்த வாரத்தில் சிவ வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நெருங்கியவர்களால் அனுகூலங்கள் உண்டாகும். பெண்கள்மூலமாக ஆதாயங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தனகாரக னான குருபகவான் செவ்வாய் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்குவதுடன் மட்டுமில்லாமல் உங்களின் பொருளாதாரநிலை மிகமிக நன்றாக இருக்கும். அஷ்டம ஸ்தானத்தில் இருக்கக்கூடிய சனிபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் உடல்ரீதியாக இருந்த சின்ன சின்ன பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில்ரீதியாக நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியின் உடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்வார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற காலபைரவரை வழிபாடு செய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதும் தொழில் ஸ்தானமான 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் எதிலும் துணிவோடு செயல்படுவீர்கள். ராசியாதிபதி சூரியன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று விரய ஸ்தான மான 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்ப தால் பணவரவுகள் சாதகமாக இருந்தாலும் தேவையில்லாத வகையில் வீண் செலவுகள் ஏற்படும். மிகவும் நெருக்கமானவர்கள் உங்களுக்கு தேவையற்ற நெருக்கடிகளைத் தருவதால் மன நிம்மதி குறைவு ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது தற்போதைக்கு நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் நிதானதோடு செயல்படுவதும், அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளி வைப்பதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படக்கூடிய யோகம் உண்டு. மறைமுக போட்டிகள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் சற்று குறையக் கூடிய நேரமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகள் நம்பி தற்போது இருக்கக்கூடிய நல்ல வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் சொல்படி நடந்துகொள்வது தற்போது நல்லது. சரவேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 23, 24.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பது உன்னதமான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குருபகவான் செவ்வாயுடன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம், உறவினரிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமானநிலை ஏற்படக்கூடிய அமைப்பு உண்டாகும். மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கி தரக்கூடிய அதிர்ஷ்டங்கள் வருகின்ற நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வருகின்ற நாட்களில் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஒருசிலருக்கு பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய யோகமும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவீர்கள். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24, 25, 26.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சூரியன் சேர்க்கைப்பெற்று தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ஆம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதும், லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் மிகவும் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த கவலைகள் எல்லாம் தற்போது மறைந்து குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகி போட்ட முதலை எடுக்கமுடியும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைந்து மன நிம்மதி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி சுமூக நிலை உண்டாகும். பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வருவதால் ஒருசிலருக்கு அனுகூலமான இடமாற்றங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 25, 26, 27.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 10-ல் புதன் சஞ்சரிப்பதாலும் சகல சௌபாக்கியங்களையும் அடையும் வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் ஏற்படும். உங்களுக்கு இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் எல்லாம் தற்போது விலகி தாராள தன வரவுகள் உண்டாகும். 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்கக் கூடிய சனி வக்ரகதியில் இருப்பதால் சில நாட்களாக இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். செவ்வாய் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே சற்று விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் போட்ட முதலை எளிதில் எடுப்பது மட்டுமில்லாமல் ஒருசிலர் கிளை நிறுவனங்களை நிறுவக்கூடிய அளவிற்கு அனுகூலமான சூழ்நிலை நிலவும். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து நவீன கருவிகளை வாங்கக்கூடிய வாய்ப்புகள்கூட உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் விலகுவது மட்டுமில்லாமல் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு நல்ல பெயர் வாங்கித் தருவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள்கூட சற்று தாமதமாகும். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது, பிறரை நம்பி முன்ஜாமின் அளிப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் ஒரு முடிவு எடுப்பதற்குமுன்பு ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது உத்தமம். வண்டி, வாகனங்களில் வெளியே செல்கின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். குறிப்பாக முக்கிய விஷயங்களை வெளிநபரிடம் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ-மாணவியர்கள் தேவையற்ற பழக்க வழக்கங்களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், 5-ல் குரு சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு எல்லாவகையிலும் ஒரு அனுகூலமான பலன்கள் ஏற்படும். நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு உடன் இருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். ராகு 3-ல் சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக மனமகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லையென்று ஏங்கிய புதுமண தம்பதிகளுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத் தில் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் அமையும். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடித்து வாடிக்கையாளர்களிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடிய யோகம் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமில்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி ஏற்படும். மாணவ- மாணவியர் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்கு பெற்று பரிசுகளை பெறுவார்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, காலபைரவருக்கு அர்ச்சனை செய்வதன்மூலம் அனுகூல பலன்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 25, 26.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாலும் 7-ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து இருக்கக்கூடிய பிரச்சினை களைச் சமாளிக்கமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. குரு, செவ்வாய் 4-ஆம் வீட்டில் இருப்பதால் அலைச்சல், டென்ஷன், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச் செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக முடிவெடுத்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படக்கூடிய நேரமாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் மற்றவர்களுடைய பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளமுடியும். மாணவ- மாணவியர்கள் உடன் இருப்பவர்களிடம் பழகுகின்ற பொழுது கவனமாக இருப்பது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 23, 24.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும், பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் எதையும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் கிடைக்கும். ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். இக்கட்டான நேரத்தில் நெருங்கிய உறவினருடைய உதவியால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளித்துக்கொள்ளமுடியும். உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். சின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் அதற்கும் முக்கியத்துவம் கொடுத்து சரியான முறையில் அதனை பயன்படுத்தி கொள்வது தற்போதைக்கு நல்லது. வயது மூத்தவர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஒருசில ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு செயல்படுவது மிகவும் நல்லது. சனிபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் மிகவும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். பிரித்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றுவது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 21, 22, 25, 26.