முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

ரக பாதசாரம்:

சூரியன்: புனர்பூசம்- 1.

செவ்வாய்: மகம்- 2.

Advertisment

புதன்: புனர்பூசம்- 4.

குரு: பரணி- 1.

சுக்கிரன்: மகம்- 1.

சனி: சதயம்- 2 (வ).

ராகு: அஸ்வினி- 2.

கேது: சித்திரை- 4.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மீனம்

10-7-2023 மாலை 6.59

மணிக்கு மேஷம்.

13-7-2023 அதிகாலை

1.58 மணிக்கு ரிஷபம்.

15-7-2023 பகல்

11.23 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சியில் மிகவும் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். புதன் 4-லும், சுக்கிரன், செவ்வாய் 5-லும் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறிப் பிட்ட நேரத்தில் காப்பாற்றக்கூடிய அளவுக்கு உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மகிழ்ச்சியளிக்கும். பிள்ளை கள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் வளர்ச்சிக் காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றிதரும். வேலையாட் கள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருக்கும். நெருங்கியவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றுவீர்கள். வேலைக்குச் செல்பவர் களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்ப தால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்துமுடிக்க முடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி உண்டாகும். வெளியூர்ப் பயணங்கள்மூலமாக நல்ல வாய்ப்பை பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. கடந்தகால பிரச்சினைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு நெய் தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் யோசித்து செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாக இருக்கும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வாகனங்கள் மூலமாக வீண்செலவுகள் ஏற்படக்கூடிய காலமாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமற்று இருப்பதால் வெளிநபர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது, வேலையாட்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும். தொழில் விருத்திக்காக நீங்கள் எதிர் பார்க்கின்ற பொருளாதார உதவிகள் கிடைப்பதில் சற்று தாமதமாகும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங் களால் அலைச்சல்களும் அதன்மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையும். நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சக ஊழியரிடம் கவனமாகப் பேசுவது நல்லது. குருபகவான் விரய ஸ்தானத் தில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் சிறப்பாக இருக்கும். இந்த நாட்களில் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தட்சிணாமூர்த்தி வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது மிகவும் நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். செவ்வாய், சுக்கிரன் 3-ல் இருப்பதால் மறைமுகப் பிரச்சினைகள் விலகி ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குரு- ராகு சேர்க்கைப் பெற்று லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் வரும். நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள்வழியில் பூரிப்பு, பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருந்து மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு மிகவும் உயர்வான நிலையினை எட்டுவீர்கள். உங்கள் நிறுவனத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. ஒருசிலருக்கு அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளும் உத்தரவுகளும் வருகின்ற நாட்களில் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசிலருக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய சொத்துகள் வாங்குவது, புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது போன்ற அனுகூலப்பலன் உண்டாகும். விநாயகர் வழிபாடு, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

t

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் மிகவும் பொறுமையோடு இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்கள்மூலமாக மன அமைதி குறையக்கூடிய காலம் என்பதால் முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். குரு, ராகு 10-ல் இருப்பதால் வரவுக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்ளவும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருக்கவேண்டும். முடிந்தவரை இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நெருங்கிய வர்களால் நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை வெளியாட்களிடம் பேசாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். சிலருக்கு வேலையாட்களால் வீண் சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் பக்குவமாக நடந்துகொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய பணியையும் நீங்கள் சேர்த்து செய்வதால் உங்களது மன அமைதி குறையும். ஒருசில காரணங்களால் மனைவி, பிள்ளைகளிடம் தேவையற்ற மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குறிப்பாக எதிலும் பொறுமையோடு இருப்பது, வயது மூத்தவர்களிடம் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் நீங்கள் நினைப்பது நிறைவேறி மன நிம்மதி உண்டாகும். முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைசெய்வது மிகவும் நல்லது.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 11-ல் ராசியாதிபதி சூரியன் சஞ்சாரம் செய்வதால் உங்கள் எண்ணங்களை நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபங்களை ஈட்டுவது மட்டுமல்லாமல் புதிய யுக்திகளை பயன்படுத்தி அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். வேலையாட்களுடைய ஒத்துழைப்பானது ஆதரவாக இருப்பதால் மன நிம்மதி ஏற்படும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் கிடைக்கும். சட்டரீதியான சிக்கல்கள் எல்லாம் வரும் நாட்களில் இருந்த இடம் தெரியாமல் மறைந்து நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குரு, ராகு பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய மாற்றங்கள் ஏற்பட்டு குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் வளர்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருக்கும். எதிர்பாராதவகையில் வரவேண்டிய தொகை வந்துசேரும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு, வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சூரியன் தொழில் ஸ்தானமான 10-ல் இருப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய யோகமும், ஒரு பெரிய மனிதருடைய ஆதரவு கிடைப்பதால் உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் குறையக்கூடிய சூழலும் ஏற்படும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். குரு, ராகு 8-ல் இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக் காமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத் தில் நல்ல வளர்ச்சி ஏற்படுவது மட்டுமல்லாமல் வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, நேரத்திற்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் எடுத்த பணிகளைக் குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அதிகாரியிடம் இருந்துவந்த மனஸ்தாபங்கள் தற்போது குறைவதால் நிம்மதி உண்டாகும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அதில் நல்ல செய்தி கிடைக்கும். செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் எதிலும் பொறுமையோடு இருப்பது நல்லது. துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது மிகவும் நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பாகும். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக்கூடிய நேரமாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் மிகச்சிறப் பாக இருக்கும். சூரியன் 9-லும், புதன் 10-லும் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு கௌரவமான நிலை ஏற்படும். எதிர்பாராத லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையும், எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய பலமும் ஏற்படும். ஒருசிலருக்கு நீண்டநாட்களாக இருந்த சிக்கல்கள் தற்போது விலகி ஒரு சுமூகமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகள்வழியில் இருந்த கவலைகள் முழுமையாக மறைந்து மன நிம்மதி ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். வியாழன், வெள்ளி, சனி முற்பகல் காலங்களில் சற்று பொறுமையோடு இருப்பது, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது உத்தமம். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது வளர்ச்சியைத் தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதும், 9-ல் புதன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பென்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்புகள் உண்டு. ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் 10-ல் இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்கக்கூடிய அமைப்பாகும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். குரு 6-ல் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. சனிபகவான் வக்ரகதியில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் சற்று விலகி நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒருசில சாமர்த்தியமான முடிவுகளை எடுத்து அதன்மூலம் லாபங்களைப் பெறுவீர்கள். கூட்டாளிகளால் இருந்த தொந்தரவுகள் விலகுவதால் நிம்மதி உண்டாகும். தொழில் தொடர்பான விஷயங்களை சம்பந்தமில்லாத நபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் தேக ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு ஆதாயங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக அதிகாரியிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் எதிர்பாராத புதிய மாற்றத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலைசாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபடுவது, சிவன் ஸதலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு ஜென்ம ராசியை பார்ப்பதால் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். வெளியூர் தொடர்புகள் மூலமாக ஆதாயங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 11-ல் கேது சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் படிப்படியான வளர்ச்சிகளையும் பெறுவீர்கள். கடந்தகால தேக்கநிலையெல்லாம் விலகி நல்ல லாபங்கள் கிடைக்கும். அரசாங்கத்தின்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தற்போது கிடைப்பதால் மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் உங்களுக்கு வெற்றியைத் தரும். தகுதி வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்களால் இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். உங்களுடைய பணியில் நீங்கள் சிறப்பாக செயல்படுவதால் நல்ல பெயர் எடுப்பது மட்டுமில்லாமல் அதற்கான சன்மானங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சூரியன் 7-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். புதிய சொத்துகள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். பிரத்தியங்கரா தேவி வழிபாடு, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது உத்தமம்ம.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்))

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 8-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும், புதன் 7-ல் சஞ்சரிப்பதாலும் நெருக்கடியான நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து உங்கள் பிரச்சினைகள் குறையும். ஒரு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் கடினமான பணிகளை கூட எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஒரு பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் கவனத்தோடு செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன் மூலமாக நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று பொறுமையோடு செயல்பக்கூடிய நேரமாகும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளியாட்களிடம் பேசாமல் இருப்பது மிகவும் உத்தமம். ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்களும், அதன்மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது, குறிப்பாக இரவு நேரப் பயணங்கள் மேற்கொள்கின்றபொழுது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு பல்வேறு வெற்றிகளை தரக்கூடிய நாட்களாக இருக்கும். முருக வழிபாடு, அஷ்டலட்சுமிக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் குரு, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். பொருளாதார நெருக்கடிகள் உண்டாகி மன அமைதி குறையும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாவது மட்டுமில்லாமல் தேவையில்லாத பிரச்சினைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமைக் குறைவு உண்டாகும். உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தொழில் தொடர்பான உங்கள் கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது நல்லது. முடிந்தவரை மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. குறிப்பாக தூரப் பயணங்களைத் தள்ளிவைக்கவும். ஜென்ம ராசியில் சனி, 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் கவனத்தோடு தற்போது செயல்பட்டால்தான் விரைவில் ஏற்படக்கூடிய சில மாற்றங்களால் நல்லநிலை அடையமுடியும். தற்போது கிடைத்ததைப் பயன்படுத்திக்கொண்டால் நிலைமையை சமாளிக்கமுடியும். குறிப்பாக அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். பெண்களுடைய உதவி தக்க நேரத்தில் கிடைப்பதால் ஒருசில நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். அலைபேசி வழியில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்துசேரும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்று.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அனைத்து காரியங்களிலும் சிறப்பாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளை அடைவீர்கள். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நண்பர்கள்மூலமாக வளமான பலன்களைப் பெறுவீர்கள். ஒருசில புதிய திட்டங்களைப் போட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் மேலும் மேலும் தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். திறமைவாய்ந்த வேலை ஆட்கள் உங்களுக்கு அமைவதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். செவ்வாய் 6-ல் இருப்பதால் உங்களுக்கு இருக்கக்கூடிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக குறைந்து நல்ல நிலை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது அதற்கான பிரதிபலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு கிடைக்கவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து குடும்பத்திலுள்ள நெருக்கடிகள் குறையும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் அனுகூலப்பலன் ஏற்பட்டு நவின பொருட்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது சிறப்பு.