முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 3.
செவ்வாய்: திருவாதிரை- 2.
புதன்: பரணி- 1.
குரு: ரேவதி- 4.
சுக்கிரன்: கிருத்திகை- 2.
சனி: சதயம்- 1.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
சித்திரை 1 (14-4-2023)
மேஷ சூரியன் (மாலை 2.59).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
9-4-2023 காலை 8.01 மணிக்கு விருச்சிகம்.
11-4-2023 பகல் 12.58 மணிக்கு தனுசு.
13-4-2023 மாலை 4.22 மணிக்கு மகரம்.
15-4-2023 மாலை 6.44 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராசியாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளா தாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக செயல் படுவார்கள். கணவன்- மனைவியிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியா மல் மறையும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். குரு, சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத் தோடு இருப்பது, வயது மூத்தவரிடம் பேசும் பொழுது சற்று பொறுமையோடு செயல்படு வது நல்லது. புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியமாக சில முடிவுகளை எடுத்து நல்ல லாபங்களை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளைத் தொடங்குவது, அசையும்- அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குரு, சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப் பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத் தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோக முண்டு. கடந்தகால பிரச்சினைகள் விலகி நிம்மதி உண்டாகும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக் கூடிய நேரமா கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியா பாரத்தில் பிறர் ஆச்சரியப்படு மளவிற்கு கௌரவமான நிலையினை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தி லும் வெற்றிகிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்பு கள் கிடைக்கும். பயணங் களாலும் அனுகூலம் ஏற்படும். வேலைக்குச் செல்பவர் களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைப் பது மட்டுமல்லாமல் எதிர்பாராத உயர்வு கள் நடக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது முடிவுவந்து மகிழ்ச்சியடைவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர் பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்களு டைய விருப்பங்கள் நிறைவேறும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், ராகு வுடன் 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். ஜென்ம ராசிய
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 3.
செவ்வாய்: திருவாதிரை- 2.
புதன்: பரணி- 1.
குரு: ரேவதி- 4.
சுக்கிரன்: கிருத்திகை- 2.
சனி: சதயம்- 1.
ராகு: அஸ்வினி- 4.
கேது: சுவாதி- 2.
கிரக மாற்றம்:
சித்திரை 1 (14-4-2023)
மேஷ சூரியன் (மாலை 2.59).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- துலாம்.
9-4-2023 காலை 8.01 மணிக்கு விருச்சிகம்.
11-4-2023 பகல் 12.58 மணிக்கு தனுசு.
13-4-2023 மாலை 4.22 மணிக்கு மகரம்.
15-4-2023 மாலை 6.44 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் ராசியாதிபதி செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். சனி லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளா தாரநிலை மிகச்சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். உடனிருப்பவர்கள் உறுதுணையாக செயல் படுவார்கள். கணவன்- மனைவியிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் இருந்த இடம் தெரியா மல் மறையும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களிடம் நட்புடன் பழகுவார்கள். குரு, சூரியன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத் தோடு இருப்பது, வயது மூத்தவரிடம் பேசும் பொழுது சற்று பொறுமையோடு செயல்படு வது நல்லது. புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்ப தால் தொழில், வியாபாரத்தில் சாமர்த்தியமாக சில முடிவுகளை எடுத்து நல்ல லாபங்களை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளைத் தொடங்குவது, அசையும்- அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலம் உண்டாகும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குரு, சூரியன் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப் பென்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குடும்பத் தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் கைகூடும் வாய்ப்புகள் உண்டு. நண்பர்கள் மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோக முண்டு. கடந்தகால பிரச்சினைகள் விலகி நிம்மதி உண்டாகும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக் கூடிய நேரமா கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக் கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியா பாரத்தில் பிறர் ஆச்சரியப்படு மளவிற்கு கௌரவமான நிலையினை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தி லும் வெற்றிகிட்டும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வாய்ப்பு கள் கிடைக்கும். பயணங் களாலும் அனுகூலம் ஏற்படும். வேலைக்குச் செல்பவர் களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைப் பது மட்டுமல்லாமல் எதிர்பாராத உயர்வு கள் நடக்கும். ஒரு சிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கும். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது முடிவுவந்து மகிழ்ச்சியடைவீர்கள். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர் பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்களு டைய விருப்பங்கள் நிறைவேறும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி புதன், ராகு வுடன் 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத் தைக் குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்பட் டால் தேவையற்ற இடர்ப் பாடுகளை எதிர்கொள்ள முடியும். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பணப் பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் நல்லதாக நினைத்து ஏதாவது பேசினா லும் அதனை மற்றவர்கள் தவ றாக எடுத்துக்கொள்வார்கள் என்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. முடிந்தவரை குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப் பது உத்தமம். சுக்கிரன் விரய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது இருக்கும் வாய்ப்புகளைத் தக்கமுறை யில் பயன்படுத்திக்கொண்டு நிதானத்தோடு செயல்பட் டால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்-க்கொள்ளும்படி இருக்காது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் கெடுபிடிகள் சற்று அதிகப் படியாக இருக்குமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல் படுவது நல்லது. விரைவில் ஏற்படக்கூடிய குரு மாற்றம் உங்களுக்கு சிறப்பான பல னைத் தரும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர் பாராத தனச்சேர்க்கை ஏற் பட்டு அனுகூலமான பலன்கள் உண்டாகும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 9-ல் குரு வலுவாக சஞ்சரிப்பதும், 10-ல் புதன், 11-ல் சுக்கிரன் சஞ்சரிப் பதும் சிறப்பான அமைப் பென்பதால் நல்ல வாய்ப்பு கள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய இனிய நிகழ்வுகள் கைகூடும். உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெண்கள் வழியில் ஆதாயமான பலன்களைப் பெறுவீர் கள். உங்கள் ராசிக்கு 8-ல் சனி, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத் தில் கவனம் செலுத்துவது, பயணங்களின்பொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் வாக்கு வாதங்கள் செய்யாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்ப தால் நல்ல லாபத்தைப் பெறமுடியும். சட்டரீதியான சிக்கல்கள் தற்போது விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஒரு சிலருக்கு வெளியூர்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் வரும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சாதகமாக இருக்கும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகியவை வளர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெற்று அதிர்ஷ்டகரமான பலன்கள் கிடைக்கும். பொன், பொருள் வாங்கும் யோகம் ஏற்படும். தடைப்பட்ட காரியங்கள் தொடர்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன், குரு சேர்க்கைப் பெற்று 8-ல் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். சனி 7-ல் சஞ்சரிப்பதால் குடும்பத் தில் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்குமென்பதால் ஆடம்பரத்தைக் குறைத் துக்கொண்டு, எந்த செலவு செய்வதென்றாலும் கையிருப்பைக் கொண்டு செலவுசெய்வது நல்லது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை சிறிது காலத் திற்குத் தள்ளிவைப்பது உத்தமம். உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் பிரச்சினைகளை எதிர் கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக்கொள்வது நல்லது. தற்போது இருக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஏற்படக்கூடிய குரு மாற்றத்தின்மூலம் உங்கள் வாழ்வில் ஒரு நல்ல முன்னேற்றங் கள் உண்டாகும். ஒருசிலரின் செயல்களால் உங்களுக்கு நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்புகள்கூட தடைப்படும். நம்பியவர்களே நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். வேலைக் குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை காரணமாக உடல் அசதி உண்டாகும். வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறி மகிழ்ச்சி ஏற்படும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 7-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் ஏற்பட்டு அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நல்ல நட்புகள் நாடிவரும். குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும், செவ்வாய் 10-ல் இருப்பதாலும் உங்களது மதிப்பும், மரியாதையும், பொருளாதார நிலையும் மேலோங்கி வாழ்க்கைத் தரம் உயரும். சூரியன் உங்கள் ராசிக்கு 7-ல் சஞ்சரிப்பதாலும், 8-ல் ராகு சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது, வெளியிடங்களில் பேசும்பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. உங்கள் பொருட் களுக்கு நல்ல விலை கிடைத்து எதிர்பார்த்த லாபங்களைப் பெறமுடியும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவாக இருப்பதால் உங்கள் திறமைகளை வெளிக் காட்ட முடியும். பணி நிமித்தமாக எதிர்பார்த்த உரிய சன்மானங்கள் கிடைத்து குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்வீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் குரு, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது நல்லது. ராசியாதிபதி சுக்கிரன் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் அதிகரிக்கும். உழைப்புக்கான பலன் கிடைக்காது. சட்டரீதியாக சில சிக்கல்கள் ஏற்படலாமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரித்துக் கொள்வது நல்லது. சில விஷயங்களில் வேலையாட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக செயல்பட்டால் மட்டுமே நிலைமையை சமாளிக்கமுடியும். கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஏற்படக்கூடிய குரு மாற்றத்தின் மூலம் உங்களது வாழ்க்கை நிலை மேம்படும். பங்காளிகளுடன் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் காலமென்பதால் பேச்சில் சற்று கவனம் தேவை. அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாகத் தவிர்ப்பது, புதிய முயற்சிகளை சிறிது காலம் தள்ளிவைப்பது நல்லது. சூரியன் 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து, நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 5-ல் குரு, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப் பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றிமேல் வெற்றிபெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். ராகு 6-ல் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உங்கள் ராசிக்கு சனி 4-லும், செவ்வாய் 8-லும் சஞ்சரிப்பதால் அதிக அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகலாம். வாகனங்கள் மூலமாக எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத் தோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு தேவையற்ற நெருக்கடிகளால் மனநிம்மதிக் குறைவு ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும், ஓய்வுநேரம் இருக்காது. ஒருசில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்படவேண்டிய நெருக்கடிகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் இருந்தாலும் பணி நெருக்கடி காரணமாக குடும்பத்தில்- குறிப்பாக மனைவியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடன்பிறந்தவரிடம் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குறிப்பிட்ட இந்த நாட்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதன்மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 5-ல் புதன், 11-ல் கேது சஞ்சாரம் செய்யும் நேரமென்பதால் உங்களின் பொருளாதாரநிலை படிப்படியாக வளரும். நீண்டநாட்களாக இருக்கும் பிரச்சினைக்கெல்லாம் வரும் நாட்களில் தீர்வு கிடைத்து மன மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உறவினர்களிடம் ஒற்றுமைக் குறைவு ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு செய-லும் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்குமளவுக்கு உங்கள் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் தக்கநேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக இருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். புதிய வேலை தேடிக்கொண்டிருப்பவர் களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கும். விரைவில் ஏற்படக்கூடிய குரு மாற்றம் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மறு மலர்ச்சியை உண்டாக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் செய்யும் செயல்களுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகபடியான ஆதாயங்கள் கிடைக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனி நடைபெற்றாலும் 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எதிர் பாராத தனச் சேர்க்கைகள் ஏற்பட்டு அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிப்பது மட்டுமல்லாமல் பெண்கள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் இருந்த தேக்கநிலை விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் அனைத் தையும் எதிர்கொண்டு போட்ட முதலை எளிதில் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருந்தாலும் எடுத்த வேலையை குறித்த நேரத்தில் செய்துமுடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். முக்கிய விஷயங் களை உடன் வேலைசெய்பவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் மேற்கூறிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்கள் முழு வெற்றியைத் தந்து பிரச்சினைகளைக் குறைக்க உதவும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்பதால் வளமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகளுண்டு. 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்துக்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினைப் பெறுவீர்கள். தடைப்பட்ட திருமண சுப காரியங்கள் தற்போது கைகூடி மன மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு உணவு உட்கொள்வது, சிறு பாதிப்பென்றாலும் உடனடியாக மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறப் பாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். கடந்தகால நெருக்கடிகள் விலகி ஏற்றம் மிகுந்த பலன்களைப் பெறும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான நிலை உண்டாகும். அதிகாரிகளுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் வேலைப்பளு சற்று குறையும். படித்து முடித்த இளைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய அதிர்ஷ்டமும் அதன்மூலம் அனுகூலங்களும் உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் குரு, சூரியன், 2-ல் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். பேச்சால் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது உத்தமம். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 12-ல் சனி சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்கா-கமாகத் தவிர்ப்பது நல்லது. பங்காளி வகையில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு பொறுமையாக நடந்துகொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல், கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புகளைத் தக்கமுறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஏற்படக்கூடிய குரு மாற்றத்தின்மூலம் உங்கள் தொழி-ல் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் மன நிம்மதிக் குறைவுகள், ஓய்வில்லாத நிலை ஏற்படும். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் சற்று பொறுமையோடு இருந்துவிட்டால் இரு வாரத்தில் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு நெருக்கடிகள் குறையும்.