இந்த வார ராசிபலன் 9-12-2023 முதல் 15-12-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-9-12-2023-15-12-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 3.

செவ்வாய்: கேட்டை- 1.

புதன்: பூராடம்- 1.

குரு: அஸ்வினி- 4 (வ).

சுக்கிரன்: சுவாதி- 2.

சனி: சதயம்- 1.

ராகு: ரேவதி- 4.

கேது: சித்திரை- 2.

கிரக மாற்றம்:

கார்த்திகை 27 (13-12-2023) புதன் (வ) ஆரம்பம் (பகல் (12.39).

கார்த்திகை 30 (16-12-2023) தனுசு சூரியன் (மாலை (3.58).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- துலாம்

11-12-2023 காலை 6.10 மணிக்கு விருச்சிகம்.

dd

13-12-2023 பகல் 11.05 மணிக்கு தனுசு.

15-12-2023 பகல் 1.45 மணிக்கு மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சுக காரகன் சுக்கிரன் 7-ல் ஆட்சிப்பெற்று சஞ்சரிப்பதாலும், புதன் 9-ல் சஞ்சரிப்பதாலும் நவீன கரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் எதிலும் தைரியத்தோடும், சுறுசுறுப்போடும் செயல் படுவீர்கள். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் இரவு நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது, உடன் பிறந்தவர்களிடம் பேசுகின்றபொழுது விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும், எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் பகலவனை கண்ட பனிபோல படிப்படியாக குறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள்கூட வருகின்ற நாட்களில் கிடைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வயதுமூத்தவர்களை அனுசரித்துச் சென்றால் அவர்களின் ஆதரவுடன் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதில் பைசல் செய்யமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. திங்கள், செவ்வாய், புதன் முற்பகல் நேரங்களில் உங்கள் செயல்களுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, கந்தசஷ்டி கவசம் படிப்பது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். சர்ப்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் உங்களின் பிரச்சினை ககள் சற்றுக்குறையும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனத்தோடு இருந்தால்தான் வீண் இழப்பு களைத் தவிர்க்கமுடியும். சுக்கிரன் 6-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது, மற்றவர் கள் சொல்வதற்கு செவி சாய்க்காமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே உங்க ளுடைய முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் மூலமாக வீண்செலவுகள் ஏற்படலாம். எந்த ஒருமுடிவு எடுப்பது என்றாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வெளியூர் பயணங்களை முடிந்த வரை தவிர்க்கவும். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, அதிகாரிகள் சொல்லும் சொற்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது. உடன் வேலை செய்பவர்களிடம் கவனமாக செயல்பட்டால் உங்களுக்கு எந்த பிரச் சினையும் இருக்காது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட் களில் சந்திரன் சாதகமாக சஞ் சரிப்பதால் உங்களுடைய ஒவ் வொரு செயலுக்கும் அதற்கான ஆதாயத்தை பெறக்கூடிய யோகமுண்டு. புதன், வியாழன், வெள்ளி முற்பகல் நேரங்களில் வீண் குழப்பம், சுலபமாக முடிய வேண்டிய செயல்கள் தாமதம் ஆகும் சூழ்நிலை உண்டாகும். விநாயகர் ஸ்தலங்களில் நெய் தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாத

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 3.

செவ்வாய்: கேட்டை- 1.

புதன்: பூராடம்- 1.

குரு: அஸ்வினி- 4 (வ).

சுக்கிரன்: சுவாதி- 2.

சனி: சதயம்- 1.

ராகு: ரேவதி- 4.

கேது: சித்திரை- 2.

கிரக மாற்றம்:

கார்த்திகை 27 (13-12-2023) புதன் (வ) ஆரம்பம் (பகல் (12.39).

கார்த்திகை 30 (16-12-2023) தனுசு சூரியன் (மாலை (3.58).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- துலாம்

11-12-2023 காலை 6.10 மணிக்கு விருச்சிகம்.

dd

13-12-2023 பகல் 11.05 மணிக்கு தனுசு.

15-12-2023 பகல் 1.45 மணிக்கு மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல் லாம் நடக்கக்கூடிய இனிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சுக காரகன் சுக்கிரன் 7-ல் ஆட்சிப்பெற்று சஞ்சரிப்பதாலும், புதன் 9-ல் சஞ்சரிப்பதாலும் நவீன கரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் எதிலும் தைரியத்தோடும், சுறுசுறுப்போடும் செயல் படுவீர்கள். சூரியன், செவ்வாய் 8-ல் சஞ்சரிப்பதால் இரவு நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது, உடன் பிறந்தவர்களிடம் பேசுகின்றபொழுது விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவும், எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் பகலவனை கண்ட பனிபோல படிப்படியாக குறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள்கூட வருகின்ற நாட்களில் கிடைத்து பொருளாதாரப் பிரச்சினைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். வயதுமூத்தவர்களை அனுசரித்துச் சென்றால் அவர்களின் ஆதரவுடன் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகள் எல்லாவற்றையும் எளிதில் பைசல் செய்யமுடியும். இவ்வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத இனிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. திங்கள், செவ்வாய், புதன் முற்பகல் நேரங்களில் உங்கள் செயல்களுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, கந்தசஷ்டி கவசம் படிப்பது, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. சனி 10-ல், குரு 12-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள், சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால்தான் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். சர்ப்ப கிரகமான ராகு 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் உங்களின் பிரச்சினை ககள் சற்றுக்குறையும். கொடுக்கல்- வாங்கலில் மிகவும் கவனத்தோடு இருந்தால்தான் வீண் இழப்பு களைத் தவிர்க்கமுடியும். சுக்கிரன் 6-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் சற்று நிதானத்தோடு இருப்பது, மற்றவர் கள் சொல்வதற்கு செவி சாய்க்காமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே உங்க ளுடைய முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் மூலமாக வீண்செலவுகள் ஏற்படலாம். எந்த ஒருமுடிவு எடுப்பது என்றாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வெளியூர் பயணங்களை முடிந்த வரை தவிர்க்கவும். வேலைக்குச் செல்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது, அதிகாரிகள் சொல்லும் சொற்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது நல்லது. உடன் வேலை செய்பவர்களிடம் கவனமாக செயல்பட்டால் உங்களுக்கு எந்த பிரச் சினையும் இருக்காது. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட் களில் சந்திரன் சாதகமாக சஞ் சரிப்பதால் உங்களுடைய ஒவ் வொரு செயலுக்கும் அதற்கான ஆதாயத்தை பெறக்கூடிய யோகமுண்டு. புதன், வியாழன், வெள்ளி முற்பகல் நேரங்களில் வீண் குழப்பம், சுலபமாக முடிய வேண்டிய செயல்கள் தாமதம் ஆகும் சூழ்நிலை உண்டாகும். விநாயகர் ஸ்தலங்களில் நெய் தீபமேற்றுவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

மாதக்கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். சுக்கிரன் 5-ல் ஆட்சி பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார நெருக்கடி இருந்தாலும் எதிர்பாராத தனவரவால் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் அமைப்பு, பெண்கள் வழியில் அனுகூலங்கள் ஏற்படும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் வி‘யத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசிக்கு 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்ப தால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனு பவிக்க இடையூறுகள் ஏற்படும், வண்டி, வாகனங்கள் மூலம் வீண்செலவுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். ஒரு பெரிய மனிதனுடைய நட்பு கிடைப்பதால் தொழில்ரீதியாக இருக்கக்கூடிய நீண்டநாளைய பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகர மாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உத்தியோ கத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் வேலை செய்பவர்களால் இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். வரும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். வெள்ளி, சனிக்கிழமைகளில் புதிய முயற்சிகளையும், வெளியூர் பயணங்களையும் தவிர்ப்பது நல்லது. வெங்கடேச பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, ராகு காலங்களில் துர்க்கையம்மனுக்கு குங்கும அபிú‘கம் செய்வது நல்லது.

ww

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன், 6-ல் புதன் சஞ்சரிப்பதால் பொரு ளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலையினை எதிர்கொள்ள வேண்டிய நேரமாகும். சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று 5-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களிடம் குறிப்பாக உடன்பிறந்தவர் களிடம் தேவையற்ற கருத்து வேற்றுமைகள் ஏற்படும். நீங்கள் சற்று பொறுமையாக செயல்பட்டால் வீண்வம்பு தேவையற்ற வாக்குவாதங்களை சமாளிக்க முடியும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துகொள்வது, சூழ்நிலைக்குத் தக்கவாறு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும். அஜீரணக் கோளாறுகள் ஏற்படலாம் என்பதால் உணவு வி‘யத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால்தான் பெரிய இழப்புகள் ஏற்படாமல் போட்ட முதலீட்டையாவது எடுக்கமுடியும். வேலை யாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தாலும் சில நேரங்களில் நீங்களும் நேரடியாக செயல் பட்டால்தான் ஒருசில ஆதாயங்களை பெறமுடியும். நெருங்கிய நண்பர்களே உங்களுக்கு தேவை யில்லாத நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சற்று வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் பணியில் திறம்பட செயல்படமுடியும். உங்களுக்கு நம்பிக்கை கூறிய நபர்கள்மூலமாக எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் சிறப்பாக கையாள முடியும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் உழைப்புக்கான பலனை முழுமையாக அடையமுடியும். அதுமட்டுமில்லாமல் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முழுமையான வெற்றி கிடைக்கும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று சுக ஸ்தானமான 4-ல் சஞ்சரிப்பதால் வீண் அலைச்சல், உறவினர்கள்மூலமாக தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம். ராகு 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, குடும்ப உறுப் பினர்களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. உங்கள் ராசிக்கு 5-ல் புதன் சஞ்சரிப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு முன்னேற் றங்களை பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசி, 3, 5 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் எதையும் எதிர்கொள்ள கூடிய பலம், பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத் தோடு செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்த்துவிட்டு ஒவ்வொரு செயலிலும் கவனமாக செயல்பட்டால் தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். அரசு அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில் வி‘யங்களை வெளி நபர்களிடம் பேசாமல் இருப்பதன்மூலம் தேவையற்ற பிரச்சினை கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு, உடன் வேலை செய்பவர்களால் நிம்மதிக்குறைவுகள் ஏற்படும். உங்கள் பணியில் நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். வரும் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் வண்டி, வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். சனி 3-ல் இருப்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களும், குடும்பத்தில் சுபிட்சம் நிறைந்திருக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 4-ல் புதன் சஞ்சரிப்பதால் அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் யோகம் வரும் நாட்களில் உண்டு. உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் படிப்படியாக குறைந்து மன நிம்மதியுடன் எதிலும் செயல்படமுடியும். 7-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை குறைவு, கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுகொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றங்கள் ஏற்படுவது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பொருட் தேக்கங்கள் எல்லாம் விலகி லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்பு உண்டு. நீங்கள் எடுத்த ஆர்டர்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடித்து தொழிலை விருத்தி செய்யமுடியும். தொழிலுக்காக அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை பெரும் வாய்ப்பு உண்டு. வேலை யாட்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் உங்களின் தனித்திறமையால் அனைத்தையும் சமாளித்து வளமான பலன்களை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு நல்லவாய்ப்புகள் தேடி வருவது மட்டுமில்லாமல் வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்குக் கூட பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்புவரும். வரும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து உங்களின் நீண்டநாள் கனவுகளெல்லாம் நிறைவேறும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மையை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங் கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு வளமான பலன்களை அடையும் யோகம் உண்டு. சுக்கிரன் ஜென்ம ராசியில் வலுவாக சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சனி பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் உற்றார்- உறவினர்களின் ஆதரவால் எதையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சூரியன், செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் ஒன்றுமில்லாத வி‘யத்திற்குக்கூட உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சூழல் இருப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நிதானத்தோடு செயல்படுவது நல்லது. தேவையில்லாத அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வேலையாட் களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. வயது மூத்தவர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு தொழில்ரீதியாக இருந்த தீர்க்கமுடியாத பிரச்சினைகள் தற்போது சுமூகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் கடினமான பணியைகூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். பேச்சில் பொறுமையோடு இருந்து பிறர் வி‘யத்தில் தலையிடாமல் இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வரும் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் சகல விதத்திலும் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக உள்ள வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்று வதன்மூலம் வளமான பலன்களை பெறலாம்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், சகல விதத்திலும் அனுகூலமான பலன்களை வரும் நாட்களில் அடையும் யோகம் உண்டு. 6-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக இருந்த நெருக்கடிகள் குறைந்து பணவரவுகள் ஏற்பட்டு எல்லா வகையிலும் மேன்மைகளை அடைவீர்கள். கொடுத்த வாக்குறுதி களை குறித்த நேரத்தில் காப்பாற்றும் யோகம் ஏற்படும். நெருங்கியவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். ராகு 5-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியரீதியாக வயிறு பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் இயற்கை உணவுகளை உட்கொள்வது உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதுடன் சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடங்கல்கள் விலகி மங்கள நிகழ்வுகள் நடப்பதற்கான யோகமுண்டு. தொழில், வியாபாரத்தில் வியக்கத்தக்க அளவுக்கு அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். தொழில் அபிவிருத்திக்காக நவீனகரமான கருவிகளை வாங்குவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து நிம்மதி அடையமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் எல்லாம்கூட தற்போது வந்து உங்களின் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகும். நீண்டநாட்களாக தடைப்பட்ட உங்கள் முயற்சிகள் தற்போது வெற்றிபெற்று மனநிம்மதி உண்டாகும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் பொன், பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தால் தீபமேற்றுவது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பதால் எல்லாவகையிலும் ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் 11-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, சுபகாரிய முயற்சிகளில் வெற்றி, உற்றார் உறவினர்களின் ஆதரவு சிறப்பாக இருக்கும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். இவ்வாரத்தில் சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் விலகி எதிலும் நிம்மதியுடன் பணிபுரியமுடியும். நீண்டநாட்களாக நீங்கள் மேற்கொண்ட அனைத்து செயல்களுக்கும் தற்போது பிரதிபலன் கிடைத்து பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகம் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகள்மூலம் புதிய ஆர்டர்கள் கிடைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் திறம்பட செயல்படுவதுடன் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளை அடையும் யோகமும் வரும் நாட்களில் உண்டு. மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய நிலை இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. இவ்வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வெற்றிமேல் வெற்றிபெறுவீர்கள். ஜென்ம ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு உங்களை மாற்றிக்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடையும் திறமை உங்களுக்கு உண்டு. குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று சிக்கனமுடன் இருந்தால் நிலைமையை சமாளிக்கமுடியும். அவசரப்பட்டு பிறருக்கு வாக்குறுதி கொடுக்காமல் இருப்பது நல்லது. சனி 2-ல் உள்ளதால் பேச்சில் நிதானமாக இருந்தால் குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை, பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பண வி‘யத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை எதிர்பார்க்காமல் எந்த வி‘யத்திலும் நீங்களே நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். தொழில் வி‘யங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருந்தாலே வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வெளியூர் தொடர்புகள்மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை பெரும் வாய்ப்புண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். அதிகாரிகள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைகூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வரும் நாட்களில் வளமான பலன்களை பெற சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, மகாலட்சுமிக்கு அர்ச்சனை, அபிú‘கம் செய்வதுமூலம் உங்கள் சங்கடங்கள் குறையும்

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் செல்வம் செல்வாக்கு பெயர், புகழ்கூடக் கூடிய வாரமாக இவ்வாரம் இருக்கும். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதாரரீதியாக சிறப்பான நிலை, குடும்பத்தில் சுபிட்சம், மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் அரங்கேற கூடியநிலை ஏற்படும். பூர்வீக சொத்து வகையில் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். புதன் 11-ல் இருப்பதால் எல்லாவகையிலும் அனுகூலங்கள், எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம் ஏற்படும். குரு வக்ரகதியில் இருப்பதால் உங்களுடைய செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு நன்றாக இருக்கும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வந்தவர்களுக்குகூட தற்போது உட லில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய வளர்ச்சி மிகச்சிறப்பாக இருக்கும். மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் முழுமையாக மறைந்து எதிலும் நிம்மதியுடன் செயல்படமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த அரசு உத்தரவுகளை வரும் நாட்களில் பெரும் வாய்ப்புண்டு. வேலையாட்கள் வைத்தக் கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் முன்னேற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் பேச்சு திறமையால் இருக்கும் இடத்தில் சிறப்பான நிலையினை அடைவீர்கள். வரும் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் யோகமும், ஒரு பெரிய மனிதரின் நட்பும் கிட்டும். லட்சுமி நரசிம்மரை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மையை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நல் லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 12-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளா தாரரீதியாக நெருக்கடிகள் இருந்தாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை உங்களுக்கு இருக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்கள் சக்திக்கு மீறியச்செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் பணவி‘யத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, உற்றார்- உறவினர்களிடம் பேசுகின்ற பொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சின்னச் சின்ன நெருக்கடிகள் இருந்தாலும் நல்லவாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன்மூலம் வீண் பிரச்சினைகளை சமாளித்து வளமான பலன்களை பெறமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு உடன்வேலை செய்பவர்களால் தேவையற்ற இடைஞ்சல்கள் இருக்கும் என்றாலும் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு தற்போது கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் ஜனவரிமுதல் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக அமைந்து அதன்மூலம் கடன் பிரச்சினைகளும் குறைந்து மனநிம்மதி அடை வீர்கள். ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு வீண் அலைச்சல், நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நன்று.

bala151223
இதையும் படியுங்கள்
Subscribe