முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: அஸ்தம்- 4.

செவ்வாய்: மிருகசீரிடம்- 2.

Advertisment

புதன்: உத்திரம்- 3.

குரு: உத்திரட்டாதி- 2 (வ).dd

சுக்கிரன்: அஸ்தம்- 3.

சனி: அவிட்டம்- 1 (வ).

ராகு: பரணி- 3.

கேது: விசாகம்- 1.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மீனம்.

10-10-2022 மாலை 4.01 மணிக்கு மேஷம்.

12-10-2022 இரவு 11.30 மணிக்கு ரிஷபம்.

15-10-2022 காலை 10.01 மணிக்கு மிதுனம்

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்திய மாக செயல்பட்டு சகல சௌபாக்கியங் களையும் அடைவீர்கள். பொருளாதாரநிலை மிகவும் திருப்திகரமாக இருந்து உங்களின் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். விரய ஸ்தானத்தில் குரு வக்ரகதியில் இருப்பதால் இல்லத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கை கூடும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சிகள் அரங்கேறும். ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நீங்கள் செய்த முதலீட்டைவிட அதிகப்படி யான லாபங்களை அடையும் வாய்ப்புண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார் கள். எடுத்த ஆர்டகளை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யக்கூடிய பலம் உண்டாகும். வேலைக் குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு குறைவது மட்டு மல்லாமல் சக ஊழியர்கள் உங்களுடைய வேலையை பகிர்ந்துகொள்வதால் பணியில் நிம்மதியுடன் செயல் புரிய முடியும். சிலருக்கு வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்பு களும் உண்டாகும். செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் பணவரவுகள் தாராளமாக இருந்து அனுகூல மான பலன்களை அடைவீர்கள். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமையில் மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி வழிபடு வது, மாணவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது நன்மை தரும்.

dd

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட் டால் தேவையற்ற பிரச்சினைகளை எளிதில் எதிர்கொள்ள முடியும். ராசியாதிபதி சுக்கிரன், புதனுடன் 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து வாழ்க்கைத் தரம் உயரும். நல்ல நட்புகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப் பதால் நீண்டநாட்களாக தீராத பிரச் சினைகளுக்குத் தற்போது ஒரு நல்ல முடிவு கிடைக்கும். கேது 6-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர் கொள்ளக்கூடிய பலமுண்டாகும். பூர்வீக சொத்துவகையில் இருந்த தேவையற்ற கருத்து வேறுபாடுகள் விலகி மன நிம்மதி உண்டாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படு வது நல்லது. தொழில், வியாபாரத் தில் சூழலுக்கேற்றவாறு நிதானத் தோடு ஒவ்வொரு விஷயத்தையும் கையாண்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். கூட்டாளிகளை கலந் தாலோசித்து செயல்படுவதன்மூலம் எதிர் பாராத அனுகூலங்களை அடைவீர்கள். நெருங் கிய உறவினர்கள் உதவியாக இருப்பதால் தொழில்ரீதியாக நல்ல வளர்ச்சியடையும் வாய்ப்புண்டு. பேச்சுத் திறமை யால் நல்ல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ மான நிலை ஏற்படுவது மட்டு மல்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணைந்து வாழக்கூடிய அற்புதமான நிலை உண்டாகும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிகளுக்கான ஊதியங் களைத் தற்போது பெறுவீர் கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றிகளைப் பெறமுடியும். முருக வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றுவது நற்பலனைத் தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் 4-ல் ஆட்சி, உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூடக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். பண வரவு எதிர் பார்த்ததைவிட சிறப்பாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல லாபங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்களது எண்ணங்கள் நிறைவேறும் வாய்ப்புகள் உண்டு. அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது கிடைக்கும். வேலையாட்கள் சிறுசிறு பிரச்சினைகளை ஏற்படுத்தினா லும் உங்களின் தனித்திறமையால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். சூரியன் ராசிக்கு 4-ல், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படுமென்றா லும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 5-ல் கேது, 8-ல் சனி சஞ்சரிப்ப தால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர் களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். என்றாலும் தகுந்த சன்மானத்தைப் பெறுவீர் கள். மற்றவர்களால் முடிக்க முடியாத கடினமான பணி யைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். வெளியூர்ப் பயணங்களையும் இரவு நேரப் பயணங் களையும் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் மறக்கமுடி யாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் தலங்களுக் குச் சென்றுவருவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, வசதியில்லாதவர்களுக்கு உங்களால் முடிந்த பொருளாதார உதவிகள் செய்வது நன்மையைத் தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், சுக்கிரன், புதனுடன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகமுண்டு. உங்களின் அனைத்து செயல்களுக்கும் உடனிருப்பவர் களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பது உங்களுக்கு மேலும் அனுகூலமான பலன்களைத் தரும் அமைப்பாகும். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். புதிய நபர்களுடைய அறிமுகம் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க் கலாம். வெளியூர்த் தொடர்புகள்மூலமாக எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக் கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உடல்சோர்வு காரணமாக உங்கள் பணி களில் சுறுசுறுப்பாக செயல்பட முடியாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்குமென் றாலும் சக ஊழியர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். அதிகாரி யிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி நிம்மதி யுடன் பணிபுரியமுடியும். கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சிக்கனத்தோடு செயல் படவும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த விஷயத்தில் ஈடுபட்டாலும் அதிகப்படியான ஆதாயங் களைப் பெறுவீர்கள். சனி பகவானுக்கு நீலநிறப் பூக்க ளால் அர்ச்சனைசெய்வது, இரும்புப் பாத்திரத்தில் நல்லெண்ணெய் தீப மேற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத் தில் தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் புதன் ஆட்சி, உச்சம்பெற்று, சுக்கிரன் உடன் சஞ்சரிப்ப தால் குடும்பத்தில் மகிழ்ச்சி, பொருளாதாரநிலை திருப்திகரமாக இருக்கும் அமைப்புண்டு. ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்ப தால் உங்களுக்கு இருந்த மறைமுக பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாகக் குறையும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட பகைமையை மறைந்து உங்களிடம் நட்பாகப் பழகுவார்கள். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். செவ்வாய் 10-ல் வலுவாக சஞ்சரிப்பதால் இருக்குமிடத்தில் கௌரவமான நிலையினை எட்டும் யோகமுண்டு. நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் தற்போது கிடைக்கும். கணவன்- மனைவி யிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் சுபகாரிய முயற்சி களுக்கான செயல்களைத் தற்போது செய்தால் அதற்கு நல்ல ஆதரவு கிடைக் கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் எண்ணங்கள் நிறை வேறும். கடந்தகால வம்பு, வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரும். தொழில் வளர்ச்சிக்காக எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு மிகவும் அனுகூல மான நாட்களாக வரும் நாட்கள் இருக்கும். எதிர் பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து பணியில் நிம்மதி யுடன் செயல்படமுடியும். புதிய வாய்ப்புகளை எதிர் பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக் கும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட் களில் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்கள் விருப் பங்கள் நிறைவேறும். தட்சிணா மூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, சிவன் தலங் களுக்குச் சென்றுவருவது, குலதெய்வத்தை வழிபடுவது கெடுதியைக் குறைக்கும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலமுண்டா கும். ஜென்ம ராசியில் சூரியன், 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நிதானத்தோடு செயல்படுவது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் பொருளாதாரத்தில் ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால், ஆடம்பர செலவு களைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் பொறுமையுடன் செயல்பட்டால் எதையும் சமாளிக்கமுடியும். அசையா சொத்துவகையில் எதிர்பாராத செலவு கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சிந்தித்து பொறுமை யுடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். சில இடைத்தரகர்கள் செய்யும் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தட்டிப்போகும். இரவுநேரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்களது பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கலாம். சக ஊழியர்களிடம் பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. தற்போது வேலைப்பளு கூடுதலாக இருந்தாலும் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் புதிய செயல்களைத் தொடங்கினால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். செவ்வாய், புதன்கிழமைகளில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கு திருமண உதவிசெய்வது நன்மையைத் தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் உடல் ஆரோக்கியத்திலும், பொருளாதார விஷயத்திலும் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டிய நேரமாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். கணவன்- மனைவி யிடையே கருத்து வேறுபாடுகளால் மன நிம்மதிக் குறைவு ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும். வாகனங்களில் பயணம் மேற்கொள்ளும் பொழுது கவனத்தோடு இருப்பது நல்லது. பிறருக்கு வாக்குறுதி கொடுப்பதை சிறிது காலம் தள்ளிவைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில் தடங்கல் ஏற்படும். எந்த முடிவெடுப்பதென்றாலும் சிறிது காலம் பொறுமை காப்பது மிகமிக நல்லது. எந்த வொரு செயலிலும் சிந்தித்து செயல்பட்டால் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காத காரணத்தினால் உங்களது ஓய்வு நேரம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அமைதி பாதிக்கும். மற்றவர்கள் பணியை யும் சேர்த்து செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். அதிகாரியிடம் வாக்குவாதங் களைத் தவிர்ப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு உங்களது நெருக்கடிகள் குறையும். முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்ப தால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். 11-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பது மிகவும் அற்புதமான அமைப்பென்பதால் பொருளாதாரரீதியாக நல்ல வரவுகள் ஏற்பட்டு வாழ்க்கைத் தரம் உயரும். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டு. வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். பூர்வீக சொத்து வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று நல்ல லாபங்களை அடைவீர்கள். உங்களுடைய பொருட்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்கும். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்ப துடன், மறைமுக பிரச்சினைகள் மறைந்து நிம்மதியுடன் தொழில் புரியமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிலும் சுறுசுறுப் பாக செயல்பட்டு கடினமான பணிகளைக்கூட எளிதில் முடிப்பீர்கள். நீண்டநாட்களாக பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைப்பது மட்டுமல்லாமல் மற்றவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களின் அனைத்து செயல்களுக்கும் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான ஆதாயங்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு அறுகம்புல் சாற்றி அர்ச்சனைசெய்வது கெடுதியைக் குறைக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால், சிறப்பான தர்மகர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருப்பதால் நீங்கள் சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். இருக்குமிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். கடந்தகால சோதனைகள் மறைந்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களைப் பெற்று உங்களின் நீண்ட நாளைய கடன்கள் வரும் நாட்களில் படிப்படியாகக் குறையும். நீங்கள் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உணவு விஷயத் தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடந்தகால பிரச்சினைகள் விலகி நல்ல லாபங்களைப் பெறுவீர்கள். புதிய வாய்ப்புகளைப் பெற்று தொழிலை விரிவுபடுத்தமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப் பாக இருப்பதால் நீங்கள் வாங்கிய ஆர்டர்களை குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கடந்தகாலங்களில் செய்த பணிகளுக்கான சன்மானம் தற்போது கிடைக்கும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் சௌகரியமாக செயல்படமுடியும். ஒருசிலருக்கு வெளியூர், வெளிநாடு வாய்ப்பு கள்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் கிடைக்கும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் தடைப்பட்ட செயல்களை மீண்டும் தொடங்கி னால் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகள்செய்வது, லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நன்மையைத் தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்ப தாலும், 4-ல் ராகு சஞ்சரிப்பதாலும் வீண் அலைச்சல், எதிலும் எதிர்நீச்சல் போட வேண்டிய நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியக் குறைபாடுகளால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட இடையூறுகள் ஏற்படும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்பட்டு உங்களது சேமிப்புகள் குறையும். ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான புதன், சுக்கிரன் இணைந்து 9-ல் இருப்பது தர்மகர்மாதிபதி யோகமென்பதால் எதிர்பாராத பொருளா தார உதவிகள் கிடைத்து உங்களுக்குள்ள நெருக்கடிகள் சற்று குறையும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிந்தித்து செயல்பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் திருமணம் சார்ந்த சுப நிகழ்ச்சிகளுக்குத் தற்போது முயற்சிகள் செய்தால் நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் கடின உழைப்பால் இலக்கை அடைவீர்கள். தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. கிடைக்கும் சிறு வாய்ப்புகளைக்கூட தவற விடாமல் கவனமாக செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்கள்மூலம் வீண் செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமல்லாமல் எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பதில் இடையூறு கள் ஏற்படும். சக ஊழியர்களை அனுசரித் துச்செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், சனிக்கிழமைகளில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால், முடியாது என்று நினைத்த காரியங்கள்கூட எளிதில் முடிந்து மகிழ்ச்சியளிக்கும். சனிபகவானுக்கு கருப்பு வஸ்திரம் சாற்றுவது, எள்தீபம் ஏற்றுவது, துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். உடல் நலத்தில் கவனம் செலுத்துவது மிகமிக நல்லது. அலைச்சல் காரணமாக மன அமைதிக் குறைவு, உடனிருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நிலவும். குடும்பத்தில் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதன்மூலம் தேவையற்ற பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். பணம் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. மற்றவர்களுக்கு பண உதவிசெய்வது, ஜாமின் கையெழுத்துப் போடுவது போன்றவற்றைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும். பங்காளிவகையில் தேவையற்ற மனஸ்தாபம் ஏற்படும். தொழில், வியாபாரத் தில் உங்களது உழைப்புக்கான பலனை அடைவதில் இடையூறுகள் உண்டாகும். சிலர் செய்யும் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கடைசி நேரத்தில் தட்டிப்போகும். குருபகவானும் வக்ரகதியில் இருப்பதால் பிள்ளைகள்வழியில் தேவையற்ற கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடல்நிலை பாதிப்பால் பணியில் கவனம் செலுத்துவதில் இடையூறுகள் உண்டாகும். அதிகாரியிடம் பேசும்பொழுது வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை இரவுப் பயணங்களைத் தவிர்க்கவும். செவ்வாய், புதன்கிழமையில் எதிர் பாராத உதவிகள் கிடைத்து கஷ்டங்கள் குறையும். மகாலட்சுமி வழிபாடு, சூரிய நமஸ்காரம் செய்வது கெடுதியைக் குறைக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண சுபகாரியங்கள் கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சியளிக்கும். ஜென்ம ராசிக்கு 3-ல் செவ்வாய், 7-ல் புதன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக திருப்திகரமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் பலமுண்டாகும். அசையும், அசையா சொத்துகள் வாங்கும் எண்ணங்கள் நிறைவேறும். ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் பேச்சில் நிதானத் துடன் இருப்பது, உறவினர்களை அனுசரித்துச் செல்வது, முன்கோபத்தை சிறிது குறைத் துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத் தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைத்து வளர்ச்சியடைவீர்கள். அரசுவழியில் எதிர் பார்த்த உத்தரவுகள் கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சி ஒன்று நடக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வுகளைப்பெற்று நிம்மதி பெறுவீர்கள். உங்களது திறமைகளை வெளிக்காட்டு வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரி கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் எளிதில் பல்வேறு காரியங்களை சாதித்துக்கொள்ளமுடியும். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.