இந்த வார ராசிபலன் 8-9-2024 முதல் 14-9-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-8-9-2024-14-9-2024

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூரம்- 3.

செவ்வாய்: திருவாதிரை- 1.

புதன்: மகம்- 2. s

குரு: மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: அஸ்தம்- 3.

dd

சனி: பூரட்டாதி- 1 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- துலாம்

9-9-2024 பகல் 11.28 மணிக்கு விருச்சிகம்.

11-9-2024 இரவு 9.21 மணிக்கு தனுசு.

14-9-2024 அதிகாலை 3.23 மணிக்கு மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தந்து உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள்மூலமாக சாதக மான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமெற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 14.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். செவ்வாய் 2-ல், சூரியன் 4-ல் சஞ்சரிப்ப தால் எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்களது முன்கோபமே உங்களது முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஒரு சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அதன்மூலம் ஒருசில ஆதாயங் களை அடையமுடியும். உடன் பிறந்தவர்கள்மூலமாக ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக் கிறது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகுபவர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. முருக வழிபாடு மேற் கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் & 8, 9, 10, 11.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சூரியன் சேர்க்கைபெற்று 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்ப

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,

சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாத சாரம்:

சூரியன்: பூரம்- 3.

செவ்வாய்: திருவாதிரை- 1.

புதன்: மகம்- 2. s

குரு: மிருகசீரிடம்- 1.

சுக்கிரன்: அஸ்தம்- 3.

dd

சனி: பூரட்டாதி- 1 (வ).

ராகு: உத்திரட்டாதி- 4.

கேது: அஸ்தம்- 2.

கிரக மாற்றம்:

இல்லை.

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- துலாம்

9-9-2024 பகல் 11.28 மணிக்கு விருச்சிகம்.

11-9-2024 இரவு 9.21 மணிக்கு தனுசு.

14-9-2024 அதிகாலை 3.23 மணிக்கு மகரம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும், 5-ல் புதன் சஞ்சரிப்பதாலும் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு உண்டு. குருபகவான் 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். குடும்ப ஒற்றுமை மிகமிக சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தந்து உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். கூட்டாளிகள்மூலமாக சாதக மான பலன்களைப் பெறுவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு மேலதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களுடைய பாராட்டுதலை பெறுவார்கள். வரும் நாட்களில் வளமான பலன்களைப்பெற துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமெற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 14.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் புதன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய நெருக்கடிகள் குறையும். செவ்வாய் 2-ல், சூரியன் 4-ல் சஞ்சரிப்ப தால் எந்த ஒரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. உங்களது முன்கோபமே உங்களது முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருக்கும். தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். பணவரவில் ஒரு சில ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம் என்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு தற்போது கிடைப்பதை பயன்படுத்திக் கொண்டால் விரைவில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் அதன்மூலம் ஒருசில ஆதாயங் களை அடையமுடியும். உடன் பிறந்தவர்கள்மூலமாக ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. உத்தியோகரீதியாக வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு இருக் கிறது. மாணவ- மாணவியர்கள் உடன் பழகுபவர்களிடம் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. முருக வழிபாடு மேற் கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள் & 8, 9, 10, 11.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- சூரியன் சேர்க்கைபெற்று 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத் தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் 4-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய பிரச்சினைகள் குறையும். உங்கள் ராசிக்கு 12-ல் குருபகவான் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எந்த ஒரு விஷயத்திலும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. ஒருசில நேரங்களில் உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது மிகவும் நன்று. தொழில், வியாபாரரீதியாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சொல்-க் கொள்ளும்படி இருக்காது. ஒருசில நேரங்களில் கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் செல்வதன்மூலமாக இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியும். பிள்ளைகள் வழியில் தேவையில்லாத மனக் கவலைகள் உண்டாகும். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரண மாக உடல் அசதி, மனநிம்மதி குறைவு ஏற்படலாம். குறிப்பாக சக ஊழியர்களால் தேவையில் லாத பிரச்சினைகளை எதிர் கொள்வீர்கள். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்து விட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய ஒரு நேரமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப் பாக இருக்கும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவதன்மூலம் வளமான பலன்களை அடையலாம்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

dd

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 2-ல் புதன், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடைபெற்று நீண்ட நாட்களாக உங்களுக்கு இருந்துவந்த மனக்கவலைகள் குறையும். கணவன்- மனைவியிடையே அன்யோனியம் அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் ஒருசில சாதகமான பலன்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்பட்டால் ஒரு வளமான பலன்களைப் பெறக் கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு ஏற்படும். பொதுவாக அலைச்சல் காரணமாக உடல் அசதி உண்டாகும். தேவையற்ற பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அமைப்பும் தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் உங்களுக்கு இருக்கக்கூடிய வேலைப்பளு சற்று குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெரியோர்களிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, மாற்றுத்திறனாளிகளுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது மிகவும் நல்லது.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் செவ்வாய் வலுவாக சஞ்சரிப்பதால் உங்களின் பொருளாதார நிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக் கூடிய அமைப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். நெருங்கியவர்களின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள்மூலமாக அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழில், வியாபாரத்தில் கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து போட்ட முதலை எளிதில் எடுப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கூட்டாளிகளை சற்று அனுசரித்துச் சென்றால் தேவையற்ற நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணி நிமித்தமாக நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவதும், காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலமும் ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறமுடியும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 14.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் குரு சஞ்சரிப்பதால் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய பெயர், புகழ் அந்தஸ்து மேலோங்கக் கூடிய நேரமாகும். நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு ஒரு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக இருந்து வந்த போட்டி, பொறாமைகள் எல்லாம் தற்போது விலகுவதால் எந்த ஒரு காரியத்தி லும் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு மதிப்பு மிகுந்த வாய்ப்புகள் தேடிவரும். நீண்டநாட்களாக புதிய வாய்ப்பு எதிர்பார்த்து தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்பு வரக்கூடிய ஒரு நேரமாகும். குடும்பத்தில் தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவதும், பிரத்தியங்கராதேவி வழிபாடு மேற்கொள்வதும் வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் ராகு, லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு இருந்து வந்த நெருக்கடிகள் எல்லாம் குறைந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைப்பதால் தீர்க்க முடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழ்நிலையை புரிந்துகொண்டு தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் நீங்கள் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் ஏற்படும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களை தற்கா-கமாக தள்ளிவைப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்லக்கூடிய நேரமாகும். எது எப்படியிருந்தாலும் அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் மிகவும் நிதானத்தோடு செயல்பட்டால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வியாழக்கிழமைகளில் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 12, 13.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். லாப ஸ்தானத் தில் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களது தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த வீண்செலவுகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துவகையில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டமானது வரும் நாட்களில் இருக்கிறது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலை எடுப்பது மட்டுமில்லாமல் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சாதகமான சூழ்நிலையும் நீங்கள் விரும்பிய பதவி உயர்வை அடையக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் ஏற்படும். அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் திறன்களை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று வெற்றிபெறக்கூடிய யோகம் வரும் நாட்களில் இருக்கிறது. முருக வழிபாடு மேற்கொள்வது, சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் நடைபெறும் பூஜைகளில் கலந்து கொள்வதன்மூலம் வளமான பலன்கள் ஏற்படும்.

வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 14.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சூரியன், புதன், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் சற்று நிதானத் தோடு செயல்பட்டால் வளமான பலன்களைப் பெறமுடியும். தேவையற்ற வகையில் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கக்கூடிய ஒரு நேரமென்பதால் சூழ்நிலையை புரிந்துகொண்டு எதிலும் பொறுமையோடு செயல் பட்டால் வீண் பிரச்சினைகளைத் தவிர்த்து வளமான பலன்களை அடையலாம். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கூட்டாளிகள் ஆதரவு சற்று சிறப்பாக இருப்பதால் நீண்ட நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சினைக்கு தற்போது ஒரு தீர்வு கிடைக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவு நேரப் பயணங்களைத் தள்ளி வைப்பது மிகமிக நல்லது. கணவன்- மனைவியிடையே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய நேரமாகும். உத்தியோகரீதியாக பார்க்கின்றபொழுது நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உங்கள்மீது வீண்பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் தேவையற்ற நெருக்கடிகளை உண்டாக்குவார்கள் என்பதால் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வதும், துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனை செய்வதும் வளமான பலனைத் தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 12, 13.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிப்ப தாலும், பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பண வரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைக்கூடி மன நிம்மதி ஏற்படும். நீண்டநாட்களாக குழந்தை பாக்கியத்தை எதிர்பார்த்த தம்பதிகளுக்கு வரும் நாட்களில் ஒரு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் கடந்த காலத்தில் இருந்துவந்த போட்டிகள் எல்லாம் தற்போது குறைந்து நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில்ரீதியாக வெளியூர்மூலமாக புதிய வாய்ப்புகள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பும் உங்களுக்கு ஆதரவாக இருப்பவர் நீங்கள் இருக்கக்கூடிய இடத்திற்கு அதிகாரியாக வரக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். உடல் ஆரோக்கிய ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது சற்றுக் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப்பெறக்கூடிய நேரமாகும். பொதுவாக பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. காலபைரவரை வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மருக்கு அர்ச்சனை செய்வது ஏற்றமிகுந்த பலன்களை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 8, 9, 10, 11, 14.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். உங்களது முன் கோபத்தை சற்றுக் குறைத்துக்கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 5-ல் செவ்வாய், 8-ல் சுக்கிரன், கேது சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்பட்டு உங்களது சேமிப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பைக்கூட உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை பொதுவேளையில் பேசாமல் இருப்பது மிகவும் நன்று. வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம் என்பதால் அவர்களை சரியான முறையில் கையாள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு சற்றுக் கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் மற்றவர்களுடைய பணியும் சேர்த்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நிலை உண்டாகும். ஒருசிலருக்கு தேவையற்ற தூரப் பயணங்களும் அதன்மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் ஒழுங்காக இருந்தாலும் சக நண்பர்கள் உங்களை மாற்றுப் பாதைக்கு அழைத்துச் செல்லக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. விநாயகருக்கு சூரத்தேங்காய் உடைப்பதும், காலபைரவர் வழிபாடு மேற்கொள்வதும் வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 10, 11, 12, 13.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் ராகு, 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கக்கூடிய நேரமென்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு இருக்கவேண்டும். மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதும், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் சற்று சாதகமான அமைப்பு என்பதால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் ஒரு சிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல ஒரு வாய்ப்புகளும் கடைசி நேரத்தில் தடைப்படும். பொதுவாக எந்த ஒரு காரியத்திலும் சற்று கவனத்தோடு இருப்பது, அதிகம் முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தை செலுத்துவது நல்லது. அனாவசிய பேச்சை குறைத்தால் வீண் பிரச்சினைகள் குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இந்த வாரத்தில் உக்கிர தெய்வங்களை வழிபடுவது, முருகருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனை தரும்.

வெற்றி தரும் நாட்கள்: 12, 13, 14.

bala130924
இதையும் படியுங்கள்
Subscribe