முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: அஸ்தம்- 4.
செவ்வாய்: சித்திரை- 3.
புதன்: அஸ்தம்- 1.
குரு: பரணி- 2 (வ).
சுக்கிரன்: மகம்- 2.
சனி: சதயம்- 1 (வ).
ராகு: அஸ்வினி- 1.
கேது: சித்திரை- 3.
கிரக மாற்றம்: இல்லை.
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கடகம்
10-10-2023 அதிகாலை 5.45 மணிக்கு சிம்மம்.
12-10-2023 மாலை 6.15 மணிக்கு கன்னி.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத தன சேர்க்கை ஏற்பட்டு அனைத்துவிதமான குடும்பத் தேவைகளும் எளிதில் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் வளமான பலன்களைப் பெறுவீர்கள். சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்ப தால் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குரு வக்ரகதியில் இருப்ப தால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டால் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்கலாம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்றாலும் இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. செவ்வாய், கேது 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்பட்டால் நல்ல வளர்ச்சியை அடையமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைப்பார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். கூட்டாளிகள் தங்கள் பங்கை கேட்டு தொந்தரவு தருவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நிம்மதியுடன் பணியாற்றமுடியும். வேலைப்பளுவை பற்றி கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு இருந்தால் விரைவில் ஒரு நல்ல நிலையை அடையமுடியும். மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் அளிப்பது போன்றவற்றினை தற்காலிகமாக தள்ளி வைப்பது நல்லது. வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களைப்பெற்று உங்களுக்கு உள்ள நெருக்கடிகளை குறைத்துக்கொள்ளமுடியும். வெங்கடாசலபதியை தரிசிப்பது, துர்க்கையம்மன் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து கடந்தகால நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். செவ்வாய், கேது 6-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வளமான பலன்களை பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 5-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது முன்னெச்சரிக்கையுடன் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரரீதியாக உங்களுக்கு சிறப்பான நாட்களாக வரும் வாரம் இருக்கும். நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் விலகி தொழிலில் நிம்மதியுடன் செயல்படமுடியும். கூட்டுத்தொழில் செய்பவர் களுக்கு கூட்டாளிகள் மூலம் பொருள் உதவிகள் கிடைப்ப தால் உங்களுக்கு உள்ள வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் வரும் நாட்களில் கிடைக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் அமையும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வை வரும் நாட்களில் அடையமுடியும். உடன்வேலை செய்பவர்கள் சில பிரச்சினைகளை உங்களுக்கு தருவார்கள் என்பதால் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீண்டநாள் இழுபறி நிலையில் இருந்த வழக்குகளில் சாதகமான பலன் கிடைப்பதற்கான அறிகுறிகள் தென்படும். சிவ வழிபாடு மேற்கொள்வது, அஷ்டலட்சுமியை தரிசிப்பதன்மூலம் உங்கள் கஷ்டங்கள் குறையும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் 4-ல் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு வளமான பலன்களைப் பெறுவீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனமாக செயல்பட்டால்தான் எதையும் எதிர்கொள்ளமுடியும். ஜென்ம ராசிக்கு 4-ல் சூரியன், 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பங்காளியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை சற்று அனுசரித்துச்செல்வது, இருக்கும் வாய்ப்புகளை சரியானமுறையில் பயன் படுத்திக்கொள்வது நல்லது. கூட்டுத்தொழில் செய்பவர் கள் குறிப்பாக கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். வேலையாட்கள் மூலம் வீண் செலவுகள், தேவை யில்லாத நெருக்கடிகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் எந்தப் பணியிலும் நீங்கள் முன்னின்று செயல்படுவது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் வாக்குவாதங் கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்துகொண்டால் இருப்பதைத் தக்க வைத்துக் கொள்ளமுடியும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத் திலிருந்து அழைப்பு வந்தாலும் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு சம்பளம் இருக்காது. சகஊழியர்களை அனுசரித்துச் சென்றால் உங்கள் வேலையை எளிதில் முடிக்கமுடியும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை அடையமுடியும். சிவ வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக் கிழமையன்று அர்ச்சனை செய்வது நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்ப தால் கடந்த கால நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறையும். உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் வேலைப்பளு காரணமாக தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப உறுப்பினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து நல்லமுன்னேற்றங்களை அடைவீர்கள். பணப்புழக்கம் சற்று சாதகமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு பெரிய மனிதரின் தொடர்பால் நீண்டநாளைய பிரச்சினைகள் எல்லாம் சற்று குறைந்து நிம்மதி ஏற்படும். உங்களின் தனித்திறமையால் மற்றவர்கள் தரும் இடையூறுகளை எளிதில் எதிர்கொண்டு அடைய வேண்டிய லாபத்தை அடைவீர்கள். வேலையாட்கள் பொறுப்புடன் நடந்துகொள்வார்கள். உத்தியோகஸ்தர் களுக்கு சக ஊழியர்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருப்பதால் உங்கள் பணிகளில் சிறப்பாக செயல்படுவீர்கள். நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது படிப்படியாக கிடைப்பதால் உங்களின் கஷ்டங்கள் குறையும். பயணங்கள்மூலமாக ஒருசில அனுகூலப் பலன்களை அடைவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முழுமையான வெற்றிகிடைக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, பிரத்தியங்கரா தேவியை தரிசிப்பதன்மூலம் கெடுதிகள் குறையும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய் சஞ்சரிப்பதும், 2-ல் புதன் சஞ்சரிப்பதும் அனுகூலமான அமைப்பு என்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் ஏற்ற- இறக்க மான நிலை இருக்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனமாக இருப்பது நல்லது. சூரியன் 2-ல் இருப்பதால் குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்துச் செல்வதும், சில நேரங்களில் உங்களுடைய முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு பொறுமையுடன் செயல்படுவதும் நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைக்கவும். தொழில், வியாபாரத்தில் எந்தச்செயல் செய்தாலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்தால் அதில் ஆதாயத்தை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்து உங்களுக்குள்ள போட்டிகளை நீங்கள் எளிதில் எதிர்கொள்வீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் ஒருசில அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது பேச்சில் பொறுமையோடு இருப்பது, குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. புதியவேலை தேடிக்கொண்டிருப்பவர்கள் தற்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்ல முன்னேற்றங்களை அடையமுடியும். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத தனச்சேர்க்கைகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிவ வழிபாடு செய்வதும், வியாழக் கிழமையில் குருபகவானுக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்வதும் நல்லது.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால் அலைச்சல் காரணமாக உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் காலமென்பதால் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தடைப்படக்கூடிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. சனி வக்ரகதியில் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நிதானத்தோடு செயல்படுவது, வேலையாட்களை அனுசரித்துச்செல்வது தற்போதைக்கு சிறப்பு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைக்கவும். தொழில் தொடர்பான விஷயங்களை மற்றவரிடம் பேசாமல் இருப்பது நல்லது. ஒருசிலருக்கு அரசு அதிகாரிகள்மூலமாக தொழிலுக்கு தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்திவிட்டு உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்துகொண்டால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். வேலை நிமித்தமாக அடிக்கடி தூரப் பயணங்கள் மேற்கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும் நேரமென்பதால் சிக்கனமாக இருப்பது நல்லது. பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும், வரும் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைத்து ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். பைரவர் வழிபாடு, முருக வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியில் செவ்வாய், 7-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் அதனை தவறாக புரிந்துகொள்ளக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிந்தித்து பேசுவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்பட்டு பொருளாதாரரீதியாக சற்று தேக்கநிலை காணப்படும். எதிலும் சிக்கனமாக செயல்பட்டால் இருக்கும் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். சுக்கிரன் 11-ல் இருப்பதால் கணவன்- மனைவியிடையே பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமை சிறப்பாக இருக்கும் நிலை, பிள்ளைகள் வழியில் ஒருசில அனுகூலங்கள் ஏற்படும். உடல்நலத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது, வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். மறைமுகப்போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சிறப்பாக கையாண்டு நல்லநிலையை அடைவீர்கள். வண்டி, வாகனங்களில் செல்கின்றபொழுது பொறுமையைக் கடைபிடிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் வேலைப்பளு குறைவாக இருக்கும். பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். நீங்கள் எடுக்கும் பணிகளை சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். துர்க்கையம்மனை தரிசிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்று.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடகூடிய வாய்ப்பு, சிறப்பான பணவரவுகள் ஏற்படும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்ச்சிகள் நடக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கடந்தகால தேக்கநிலை மாறி வாழ்வில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடையும் அமைப்பாகும். ராசியாதிபதி செவ்வாய்- கேது சேர்க்கைப்பெற்று 12-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக உள்ள பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து வளமான பலன்களை வரும் நாட்களில் எட்டமுடியும். உங்களுக்கு இருந்த கடன் தொல்லைகள் எல்லாம் விலகி தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும். வேலையாட்கள் உங்களிடம் வைத்த கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உயர்வான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய தகுதியை நீங்கள் உயர்த்திக்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படும். சிலருக்கு பெரிய நிறுவனத்திலிருந்து அழைப்புவருவதால் உங்களின் கனவுகள் எல்லாம் நிறைவேறும். எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கமுடியும். வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் ஏதாவது ஒரு புதுசெயலில் ஈடுபட்டால் அதில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். முருகருக்கு அர்ச்சனைசெய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் குரு அமைந்து ஜென்ம ராசியைப் பார்ப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மாதக்கோளான சூரியன், புதன் சேர்க்கைப்பெற்று 10-ல் சஞ்சரிப்பதால் கடந்த கால மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறைந்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடையமுடியும். உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் யோகம் உண்டாகும். சிலருக்கு புதிய வண்டி, வாகனங்களை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் மனநிம்மதி நிலவும். உங்களுக்குத் தேவையற்ற பயணங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை வரும் நாட்களில் நிறைவேற்றி நிம்மதி அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் வாய்ப்பு உண்டு. தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் எளிதில் நிறைவேறும். வம்பு, வழக்குகளில் இருந்த சிக்கல்கள் விலகி தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக அமையும். வேலைக்குச் செல்பவர்கள் மனநிம்மதியுடன் பணிபுரிவதுடன் எதிர்பாராத பதவி உயர்வினை அடையும் யோகமானது வரும் நாட்களில் உண்டு. சக ஊழியர்கள் உதவியாக இருப்பதால் உங்களின் வேலைப்பளு சற்றுக் குறையும். வெளியிடங்களில் பணிபுரிந்து இடமாற்றத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு ஏற்படும். ஞாயிறு, திங்கட்கிழமைகளில் வீண் அலைச்சல், எளிதில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலை உண்டாகும். வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் திடீர் உதவிகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் மறையும். துர்க்கை வழிபாடு மேற்கொள்வது, ஏழை மாணவர்களின் படிப்புக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது உத்தமம்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங் கள் ஏற்படும். சூரியன், புதன் 9-ல் இருப்பதால் உங்கள் பெயர், புகழ் அதிகரிக்கும். கௌரவ பதவிகள் உங்களை தேடிவரும். குரு வக்ரகதியில் இருப்பதால் கடந்தகால பொருளாதார தடைகள் எல்லாம் விலகி குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல், மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். தூரப் பயணங்கள் மேற்கொள்கின்ற பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவிற்கு உயர்வான நிலையினை அடைவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைத்து மனநிறைவு ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் பணியிலிருந்த நெருக்கடிகள் விலகி நல்லவாய்ப்பை அடைவீர்கள். உங்கள்மீதிருந்த பழிச்சொல் எல்லாம் விலகி நல்லபெயர் எடுக்கமுடியும். நீண்டநாட்களாக வெளியூர் செல்லவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு வருகின்ற நாட்களில் வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் உங்களுடைய நீண்டநாள் எண்ணங்கள் எதிர்பாராத வகையில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் தேவையற்ற நெருக்கடி, மன அமைதி குறைவுகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையோடு இருப்பது, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. துர்க்கையம்மனை தரிசிப்பது, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது வளமான பலன்களைத் தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெற்றாலும் 3-ல் ராகு சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். சுக்கிரன் 7-ல், செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாள் கனவுகளெல்லாம் விரைவில் நிறைவேறக்கூடிய யோகமுண்டு. குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். உங்களின் நீண்டநாளைய கடன்கள் எல்லாம் படிப்படியாக குறைந்து சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். நெருங்கியவர்கள் வழியில் உதவிகள் மிகச்சிறப்பாக இருக்கும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் பேசும்போது சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருந்து நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் வெற்றிபெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு இடையூறு தரும் நேரம் என்பதால் முக்கிய விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. நீங்கள் எதிர்பார்த்த புதிய ஆர்டர்கள் வரும் நாட்களில் கிடைக்கும். கூட்டாளிகள்மூலம் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை அடைவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் ஏற்படும். உங்களுக்கிருந்த வேலைப்பளு எல்லாம் குறைந்து தற்போது நிம்மதியுடன் பணியாற்றமுடியும். உங்கள் திறமைகளை அதிகாரிகள் புரிந்துகொள்வதால் வரும் நாட்களில் நீங்கள் ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்க்காத வகையில் திடீர் உதவிகள் கிடைத்து உங்கள் கஷ்டங்கள் மறையும். வெள்ளி, சனிக்கிழமைகளில் வீண் பிரச்சினைகள், மன அமைதி குறைவுகள் ஏற்படும். மேலும் நீங்கள் நற்பலன்களைப்பெற சிவனையும், பெருமாளையும் வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். குடும்பத்தில் நிம்மதி குறையும் நிகழ்வுகள் நடக்கும். குரு வக்ரகதியில் இருப்பதால் பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். 8-ல் செவ்வாய், கேது சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், உடல் அசதி, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களே உங்கள் அமைதியைக் குறைப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, சிறு பாதிப்பு என்றாலும் அதற்கு உடனே மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்வது சிறப்பு. உங்கள் ராசிக்கு 12-ல் சஞ்சரிக்கும் சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள தற்போதைய பிரச்சினைகள் எல்லாம்கூட இவ்வாரத்தில் குறைந்து மனநிம்மதி ஏற்படும். அசையாச் சொத்து வழியில் எதிர்பாராத வீண் செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். பொருளாதார நெருக்கடியால் உங்களின் நீண்டநாளைய கையிருப்புகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானமாக செயல்பட்டால்தான் ஒருசில ஆதாயங்களை பெறமுடியும். வேலையாட்கள்மூலமாக தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். கிடைக்கும் வாய்ப்புகளைத் தற்போதைக்கு பயன்படுத்திக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருக்கும் நிலை, அதன் காரணமாக ஓய்வு நேரம் குறையும் சூழ்நிலை உண்டாகும். அதிகாரியிடம் பேசுகின்ற பொழுது வாக்குவாதங்கள் செய்யாமல் அவர்கள் சொல்படி நடந்துகொண்டால் ஒருசில அனுகூலங்கள் கிடைக்கும். வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் உங்களுடைய நீண்டநாள் எண்ணங்கள் எதிர்பாராதவகையில் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படும். விநாயகரை தரிசிப்பது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.