முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: பூராடம்- 3.

செவ்வாய்: ரோகிணி- 2 (வ).

Advertisment

புதன்: பூராடம்- 3.

குரு: உத்திரட்டாதி- 2.

சுக்கிரன்: திருவோணம்- 1.

சனி: அவிட்டம்- 2.

ராகு: பரணி- 1.

கேது: சுவாதி- 3.

கிரக மாற்றம்:

மார்கழி 28 (12-1-2023) செவ்வாய் வக்ர முடிவு (இரவு 2.35).

மார்கழி 30 (14-1-2023) மகர சூரியன் (இரவு 8.45).

dd

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- கடகம்.

10-1-2023 காலை 9.00 மணிக்கு சிம்மம்.

12-1-2023 இரவு 9.00 மணிக்கு கன்னி.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

சூரியன், புதன் சேர்க்கைபெற்று 9-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொண்டு ஏற்றம்மிகுந்த பலன்களையடைவீர்கள். ராசிக்கு 2, 7-க்கு அதிபதியான சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர் கள். எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு ஏற்றங்களை அடையும் வாய்ப்புகளுண்டு. ஜென்ம ராசியில் ராகு, 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டு பொறுமையோடு செயல் படுவது நல்லது. உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது, பேச்சில் நிதானத் தைக் கடைப் பிடிப்பதன்மூலம் தேவை யற்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். குரு பகவான் 12-ல் இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயத்தில் சிக்கனத் தோடு இருப்பது நல்லது. தொழில், வியா பாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக உள்ள நெருக்கடிகள் குறையும். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களைத் தற்போதைக்குத் தவிர்ப்பது நல்லது. வேலையாட்கள் ஒத்துழைப்பாக செயல்படுவதால் நீங்கள் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெ-வரி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரி களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். சக ஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூல மாக சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்பு கள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறு வதற்கான வாய்ப்புகள் அதிகம். துர்க்கை யம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், சனி சேர்க்கைபெற்று 9-ல் சஞ்சரிப்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருப்பதால் பொருளாதார நிலை மிகச்சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாவதுடன், உங்களுக்கிருந்த கடந்தகால நெருக்கடிகள் விலகி குடும்பத் தில் மகிழ்ச்சி ஏற்படும். மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். பிள்ளை கள்வழியில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சூரியன் இருப்பதால் எந்தவொரு விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய லாம். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. தொழில், வியாபாரத் தில் வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன் கள் கிடைக்கும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர் பார்த்த உதவிகள் கிடைக்கும். சட்டரீதியாக இருக்கக்கூடிய சிக்கல்களை சற்று பொறுமை யோடு கையாள்வது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப் பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் நிம்மதியுடன் செயல்படுவீர்கள் என் றாலும், சக ஊழியரிடம் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு எதிர்பார்த்ததைவிட அதிகப் படியான அனுகூலங்கள் கிடைக்கும். சூரிய நமஸ்காரம் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன், சனி சஞ்சரிப்பதால் வரவுக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படும். அத்தியாவசியத் தேவைக்கே உங்கள் கையிருப் பைக்கொண்டு செலவுசெய்ய நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் உண்டாகும். நம்பியவர்களே நெருக்கடிகளைத் தருவார்கள். எதிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நியாயப்படி கிடைக்கவேண்டிய வாய்ப்பு கள் தாமதப்படுமென்பதால், கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கமுறையில் பயன் படுத்திக் கொள்வதன்மூலம் நிலைமையை ஓரளவு சமாளிக்கமுடியும். முக்கிய முடிவுகள் எடுக்கும் பொழுது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து செயல்பட்டால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்க முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணியில் சற்று கவனத்தோடு செயல்பட்டால் விரைவில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். புதன், வியாழன், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு ஒருசில அனுகூலங்களும், பண உதவிகளும் கிடைத்து நெருக்கடிகள் குறையக்கூடிய சூழல் உண்டாகும். மகாலட்சுமி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். செவ்வாய் லாப ஸ்தானத் தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைத் ததை சாதிக்கமுடியும். நவீனகரமான பொருட்களைத் தொழில் வளர்ச்சிக்காக வாங்கு வீர்கள். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடையும் வாய்ப்புகளுண்டு. அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைத் தற்போது பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக இருந்த தடங்கல்கள் விலகி, ஒரு கௌரவமான நிலையினை அடையும் வாய்ப்புண்டாகும்.உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் முழுமையாக விலகும். பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். உறவினர்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்ப தால், வாகனம் வாங்கும் முயற்சிகளில் சிறப் பான பலன்கள் கிடைக்கும். பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, முடிந்தால் ஒருமுறை திருப்பதி சென்றுவருவது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் பரிபூரண வெற்றியைப் பெற்று சகலவிதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். நினைத்ததை நிறைவேற்றமுடியும். எந்தவித கடினமான நெருக்கடியையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்கள் ராசிக்கு 5-ல் புதன், 10-ல் செவ்வாய் இருப்பதால் உங்களுடைய பெயர், புகழ் மேலோங்கும். நல்ல நட்புகள் கிடைத்து அதன்மூலம் அனுகூலங் களை அடைவீர்கள். வீண் செலவுகள் குறைந்து சேமிக்கக் கூடிய அளவுக்கு உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் மகிழ்ச்சிதரக்கூடிய செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். கூட்டாளிகள் ஆதரவு மிகச் சிறப்பாக இருப்பதால் பெரிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிட முடியும். உத்தியோக ரீதியாக உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். நீண்டநாட் களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்குத் தற்போது அனுகூலமான செய்தி கிடைக்கும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் சிறுசிறு வயிறு பாதிப்புகளை சமாளிக்கமுடியும். சந்திரன்- செவ்வாய், புதன், வியாழக்கிழமைகளில் சாதகமாக சஞ்சரிப்பதால்- குறிப்பாக இந்த நாட்களில் எதிர்பாராதவகையில் வெளியி-ருந்து வரவேண்டிய தொகை கிடைக்கப்பெற்று தேவைகள் யாவும் பூர்த்தியாகும். தட்சிணா மூர்த்தி வழிபாடு, அஷ்ட லட்சுமிக்கு அர்ச்சனை செய்வது மிகவும் நல்லது.

ds

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 4-லும், சுக்கிரன் 5-லும் சஞ்சரிப்பதால் பணப்புழக்கம் மிகச்சிறப் பாக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். குரு பகவான் 7-ல் சஞ்சரிப்பதால் அனைத்திலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றமுடியும். சூரியன் 4-ல் சஞ்சரிப்பதால் வேலைப்பளு காரணமாக அலைச்சல்கள் சற்று அதிகப்படியாக இருக்கும். உற்றார்- உறவினர்களிடம் பேச்சில் பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. வாகனங் களில் செல்லும்பொழுது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல், புதிய வாடிக்கையாளர்களை அடையும் வாய்ப்புண்டாகும். தொழிலை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதுடன், எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கப்பெற்று உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் கௌரவப் பதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய இடமாற்றங்களைப் பெறமுடியும். எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால், நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தைத் தற்போது மேற் கொண்டால் அனுகூலமான பலன்களையடை வீர்கள். சூரிய நமஸ்காரம் செய்வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்று வது நன்று.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன் 4-ல் சஞ்சரிப்ப தாலும், சூரியன் 3-ல் சஞ்சரிப்பதாலும் எதிர் நீச்சல் போட்டாவது இலக்கை அடைவீர் கள். தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படுமென் றாலும், உங்கள் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்வீர்கள். ராசிக்கு 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத் திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் வீண் வாக்குவாதங்களைத் தவிர்த்து, விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்க மான நிலை இருக்குமென்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பதன்மூலம் தேவையற்ற கடன்கள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகி மனக்கவலையைத் தரும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாகத் தள்ளிவைப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கவனத்தோடு செயல்பட்டால்தான் உங்கள் முதலை எடுக்கமுடியும். அரசு அதிகாரிகள் சற்று ஆதரவாக இருப்பது மன அமைதியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்கள் பணியும் நீங்கள் சேர்த்துச் செய்யவேண்டிய நெருக்கடியான நிலை உண்டாகும். பிறர் பேச்சைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் விரைவில் கௌரவமான நிலையை எட்டமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் எதிர்பாராத பண வரவுகள் ஏற்பட்டு உங்களுக்குள்ள நெருக்கடிகள் குறையும். அம்மன் வழிபாடு, முருக வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு, 6-ல் ராகு சஞ்சரிப்பது அற்புதமான அமைப் பென்பதால் உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பண வரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்துவிதமான சிக்கல்களும் குறையும். உங்களுடைய தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சியுண்டாகும். ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது மிகவும் நல்லது. குறிப்பாக முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது மிகவும் உத்தமம். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி அதிகப்படியான லாபங்களைப் பெறுவீர்கள். வேலையாட்களின் கோரிக்கை களை எளிதில் நிறைவேற்றமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். வரவேண்டிய சம்பள நிலுவைத் தொகைகள் தற்போது வந்தடைந்து, வாங்கிய கடன்களை பைசல் செய்வீர்கள். பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த சட்டச் சிக்கல்கள் தற்போது விலகி ஒரு சாதகமான செய்தி கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதில் ஈடுபட்டாலும் அனுகூலமான பலன்களை அடைவதுடன், ஒருசில ஆதாயங்களையும் அடையமுடியும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருகனுக்கு அர்ச்சனைசெய்வது, ஒருமுறை குலதெய்வத் தலத்திற்குச் சென்றுவருவது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சூரியன், 4-ல் குரு சஞ்சரிப்பதால் பணப் பற்றாக்குறை ஏற்பட்டு மன அமைதி குறையும். ராசிக்கு 2-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் பேச்சால் வீண் பிரச் சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள்கூட தாமதம் ஏற்பட்டு மனக் கவலையைத் தரும். கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொண்டு சிக்கனமாக செயல்படவேண்டும். தொழில், வியாபாரத்தில் சில நெருக்கடிகள் இருந்தாலும் உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 11-ல் கேது சஞ்சரிப்பதால் உங்களின் தனித் திறமையால் எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். வேலையாட்கள்மூலமாக வீண் பிரச்சினைகள் அதிகரிக்கும் நேர மென்பதால் ஒவ்வொரு செய-லும் நீங்கள் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. கூட்டாளிகளை கலந்தாலோசித்து சில விஷயங்களில் செயல்படுகின்றபொழுது ஆதாயங்களை அடையமுடியும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப் பாக செயல்பட உங்கள் ஆரோக்கியமே இடையூறாக இருக்கும். உணவு விஷயத் தில் கட்டுப்பாடுடன் இருப்பது, வீண் பயணங் களைத் தவிர்ப்பது நல்லது. முடிந்தவரை அதிகாரியிடம் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது உத்தமம். வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் பண வரவுகள் சிறப்பாக இருந்து பிரச்சினைகள் குறையும். தட்சிணா மூர்த்தி வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

சூரியன், புதனுடன் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதாலும், குரு 3-ல் சஞ்சரிப்பதாலும் அலைச்சல்கள் அதிகரிக்கும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். பணப்பரிமாற்ற விஷயங்களில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படும். தேக ஆரோக்கியத் தில் கவனம் செலுத்துவது, மனைவி, பிள்ளை களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. தேவையற்ற பயணங்களால் வீண் செலவுகள் உண்டாகும். உறவினர் களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மன அமைதி குறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் இடையூறுகள் ஏற்படும். உங்கள் பொருட் களுக்கு எதிர்பார்த்த விலை கிடைக்காது. வேலைக்குச் செல்பவர்கள் பணியில் சற்று பொறுமையோடும் நிதானத்தோடும் செயல்படுவது நல்லது. கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். அதிகாரி யிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நன்று. இருப்பதை அனுபவிக்க தேவையில்லாத இடைஞ்சல்கள் ஏற்படும். இந்த வாரத்தில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்றிருந்தாலும், ஞாயிறு, திங்கள் ஆகிய இரு நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 11-ஆம் வீட்டில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. ராசிக்கு 2-ல் குரு, 3-ல் ராகு சஞ்சரிப்ப தால் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகம், பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவை களும் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்பு ஏற்படும். உங்களது செல்வம், செல்வாக்கு மேலோங் கக்கூடிய நேரமாகும். கடந்தகாலங்களில் உங்களுக்கிருந்த உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய யோகம் இருக்கிறது. மறைமுகப் பிரச்சினைகள் விலகி மன நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமல்லாமல் வேலையாட்களும் ஆதரவாக செயல்படுவார்கள். உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை சந்தையில் கிடைத்து போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிடமுடியும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் விலகி நிம்மதியுடன் தொழில்புரிய முடியும். உத்தியோகரீதியாக உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகளும், எதிர்பார்த்த பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மிகவும் சிறப்பாக இருந்து பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். சனி பகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசிக்கு 10-ல் சூரியன், புதன், 11-ல் சனி, சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகமிக சிறப்பாக இருந்து உங்களது வாழ்க்கைத் தரம் உயரும். கௌரவப் பதவிகள் உங்களை நாடிவரும். கடந்தகாலப் பிரச்சினைகள் எல்லாம் முழுமையாக விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகளைத் தற்போது எளிதில் தீர்க்கமுடியும். உங்கள் கடன்களைத் தற்போது குறைத்துக்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபங்கள் கிடைக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கிருந்த சட்டச் சிக்கல்கள் முழுமையாக மறையும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைத்து மன மகிழ்ச்சி ஏற்படும். செவ்வாய் உங்கள் ராசிக்கு 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படுவது மட்டுமல்லாமல் விரும்பிய இடமாற்றங்களைப் பெறுவீர்கள். ராகு 2-ல் இருப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித் துச் செல்வது நல்லது. செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். பிரத்தியங்கரா தேவி வழிபாடு, தட்சிணா மூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி நெய்தீபம் ஏற்றி வழிபடுவது கெடுதியைக் குறைக்கும்.