முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: உத்திரம்- 1.
செவ்வாய்: அஸ்தம்- 3.
புதன்: பூரம்- 1.
குரு: பரணி- 3 (வ).
சுக்கிரன்: ஆயில்யம்- 2.
சனி: சதயம்- 1 (வ).
ராகு: அஸ்வினி- 1.
கேது: சித்திரை- 3.
கிரக மாற்றம்:
ஆவணி 31 (17-9-2023) கன்னி சூரியன் (பகல் 1.31).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கன்னி 17-9-2023 இரவு 11.08 மணிக்கு துலாம்.
20-9-2023 காலை 8.45 மணிக்கு விருச்சிகம்.
22-9-2023 மாலை 3.35 மணிக்கு தனுசு.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சாரம் செய்வதால் உங்களது பலமும், வலிமையும் அதிகரிக் கும். 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்ப தால் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. பணவரவுகள் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கி யங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் இருக்கி றது. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்பு கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் வரும் நாட்களில் மறையும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் முன்னேற்றத் திற்காக வெளிநபரிடம் நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். அரசு அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். வயது மூத்தவர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு தற்போது தீர்வு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு வெளியூர்மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்குவழி வகுக்கக் கூடிய நாட்களாக இருக்கும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் வீண் குழப்பங்கள், சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய ஒரு சூழல் இருப்பதால் கவனத்தோடு இருப்பது நல்லது. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுகஸ்தானமான 4-ல் புதன், ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் இருந்தாலும் குரு, சனி வக்ரகதியில் இருப்ப தால் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களுடைய அனைத்து தேவைகளும் பூர்த்தியாகக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடி மனமகிழ்ச்சி ஏற்படும். உறவினரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது விலகி சுமூகநிலை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து படிப்படி யான வளர்ச்சியை அடைவீர்கள். உங்களுக்கு இருந்த போட்டிகள் குறைந்து நல்ல லாபத்தை ஈட்டக் கூடிய வாய்ப்புகள் உண்டு. திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்ப தால் கடினமான பணிகளைகூட சுலபமாக செய்துமுடிக்கக்கூடிய பலம் உண்டாகும். நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்கள் தற்போது கைகூடி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து முயற்சிகளும் வெற்றியினை தரும். வெள்ளி பிற்பகல், சனி ஆகிய நாட்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் மிகவும் நிதானத்தோடு இருப்பது நல்லது. மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது, பிரத்தியங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது கெடுதிரியைக் குறைக்கும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் மாதகோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாயுடன் இணைந்து சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடனிருப்பவர் களே உங்களுடைய அமைதியைக் குறைப்பார்கள். இந்த தருணத்தில் குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் எதிர்பார்த்த பணவரவுகள் கிடைப்பதில் தேவையற்ற தடங்கல்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். தொழில், வியா பாரத்தில் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத்தோடு இருந்தால் இருக்கும் நெருக்கடிகளை சமாளித்து அடையவேண்டிய இலக்கை அடையமுடியும். வேலை யாட்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஒருசில ஆதாயங்கள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் கள் உங்கள் பணியில் மட்டும் நிதானத்தோடு செயல்பட்டால் நற்பலனை அடையமுடியும். மேலதிகாரிகள் சொல்லும் வார்த் தைக்கு கட்டுப்பட்டு நடந்தால் தற்போதைய நிலையினை சமாளிக்கமுடியும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் நீங்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு மிகவும் அனுகூலமான பலன்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்ப தால் உங்களது செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் மேலோங்கக் கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிறருக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் நிறைவேற்றமுடியும். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் இருப்ப தால் உங்களுக்கு இருந்துவந்த வீண் மருத்துவச் செலவுகள் எல்லாம் குறைந்து சேமிக்கும் அளவிற்கு சாதகமான பலன்கள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறைந்து ஒற்றுமை நன்றாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் தேக்கநிலை விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய எண்ணங்களை பூர்த்திசெய்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுக்கு இருந்த வேலைப்பளு குறைவதுடன் எதிர்பார்த்த உயர்வு களும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பொன், பொருள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன், 3-ல் கேது சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பெண்கள் மூலமாககூட எதிர்பாராத உதவிகளை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ராசியாதிபதி சூரியன், செவ்வாயுடன் இணைந்து 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. நீங்க நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு இருப்பது நல்லது. 9-ல் சஞ்சரிக்கக்கூடிய குருபகவான் தற்போது வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் நன்றாக இருந்தாலும் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு பிரச்சினை இருந்தாலும் உங்கள் தனித்திறமை யால் எதையும் சமாளிக்க கூடிய பலம் உண்டாகும். கூட்டாளிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கொடுக்கல்- வாங்கலில் மட்டும் சற்று கவனமுடன் செயல்பட்டால் வீண் இழப்புகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். உங்கள் மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் முழுமையாக விலகி மன நிம்மதியுடன் எதிலும் செயல்படமுடியும். சக ஊழியர் களிடம் பேசுகின்றபொழுது மட்டும் சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, சூரிய நமஸ்காரம் செய்வதன்மூலம் அனுகூலங்களை எட்டமுடியும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்ப தால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உடன் இருப்பவர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருந்தால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். உங்கள் ராசிக்கு 8-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு தற்போது வக்ர கதியில் இருப்பதால் பணவரவில் இருந்துவந்த நெருக்கடி கள் சற்று குறைந்து உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சியில் இருந்துவந்த தடைகள் விலகி நல்லது நடக்கக்கூடிய அனுகூலங்கள் வரும் நாட்களில் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைத்து அதிகப்படியான ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் அமையும். நீண்ட நாட்களாக நீங்கள் செயல்படுத்தவேண்டும் என்று எண்ணிய காரியங்களை தற்போது செயல்படுத்தினால் அனுகூல மான பலன்களைப் பெறமுடியும். உத்தியோகரீதியாக பணியில் நெருக்கடி இருந்தாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். ஒருசிலருக்கு நிலுவையில் இருந்த சம்பள பாக்கிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிகாரியிடம் பேசுகின்ற போது நிதானத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எளிதில் வெற்றிபெறுவதுடன் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான நற்பலன்களை பெறுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணு வழிபாடு செய்வது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் 10-ல் சாதகமாக சஞ்சரிப்ப தாலும், புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதாலும் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். சூரியன், செவ்வாய் 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்ப தால் எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. குரு தற்போது வக்ரகதியில் இருப்பதால் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளி வைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் தொழிலில் ஒரு சில ஆதாயங்களை பெறமுடியும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட தேவையற்ற கருத்து வேறுபாடு கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பான நிலை ஏற்படும். சக ஊழியர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை கூறினாலும் அனைத்துவித சிக்கலையும் எளிதில் சமாளித்து உங்கள் பணியில் நீங்கள் ஒரு உயர்வான நிலையினை எட்டுவீர்கள். உணவு விஷயத்தில் கட்டுப் பாடோடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு செய்வது, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வதுமூலம் வீண் சிக்கல் களைத் தவிர்க்கமுடியும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியாதிபதி செவ்வாய், சூரியன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எல்லாவகையிலும் ஒரு வளமான பலன்களை பெறுவீர்கள். சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்திலும், புதன் 10-லும் சஞ்சரிப்பதால் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் விலகி ஏற்ற மிகுந்த பலன்களை பெறுவீர்கள். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய ஒரு அனுகூலமான நிலை உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். உறவினர்கள்மூலம் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி ஒரு சுமுகமான நிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். சனிபகவான் தற்போது வக்ர கதியில் இருப்பதால் கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த அலைச்சல், டென்ஷன் எல்லாம் தற்போது குறைந்து சுமுகமான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். விரும்பிய இடம் மாற்றங்களை பெற்று மகிழ்ச்சி அடையக்கூடிய யோகம் ஏற்படும். பணியில் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத இனிய மாற்றங்கள் ஏற்படும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் கஷ்டங்கள் குறையும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதும், தொழில் ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதும் உன்னதமான அமைப்பு என்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களை நாடிவரும். பணவரவுகள் சிறப்பாக இருப்பதால் அனைத்து குடும்ப தேவைகளும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் உங்களுக்கு இருந்த கடன் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்தி அடையவேண்டிய லாபத்தை அடைவீர்கள். அரசுமூலம் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்களுடைய ஆதரவானது சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலையும், நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் வரும் நாட்களில் உண்டு. ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குரு வக்ர கதியில் இருப்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்கள் ஆதரவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் மிகவும் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறக்கூடிய வாய்ப்புகளும், குடும்பத்தில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கக்கூடிய அதிர்ஷ்டங்களும் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மையை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், இதுநாள்வரை 8-ல் சஞ்சரித்த சூரியன் இனி 9-ல் செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதாலும் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் எல்லாம் படிப்படியாக குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். குறிப்பாக உங்களுக்கு இருந்த உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் மிக சிறப்பாக இருக்கும். தற்போது குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு பணவரவுகள் திருப்திகரமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக நிலவிய நெருக்கடிகள் சற்றுக்குறைந்து அனுகூலமான பலன்களை பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் இருந்த இக்கட்டான நிலைகள் விலகி தற்போது நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையாட்களால் இருந்துவந்த தொந்தரவுகள் விலகும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகள் எளிதில் வெற்றி அடையும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் செய்து முடித்து அதிகாரியிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகளும் அதன் மூலம் அனுகூலங்களும் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய கிழமைகளில் நீங்கள் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் எளிதில் வெற்றிபெறுவதுடன் அதன்மூலம் லாபகரமான பலன்களை அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். மகாவிஷ்ணுவை வழிபடுவது, பைரவர் வழிபாடு மேற்கொள்வது நன்மையை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி சஞ்சரிப்பதாலும், அஷ்டம ஸ்தானமான 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும் எந்த ஒரு காரியத்திலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள், உறவினர்களிடம் மனஸ்தாபம் ஏற்படும் காலமாகும். ஒவ்வொரு காரியத்திலும் பொறுமையோடு செயல்படவேண்டும். உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கக்கூடிய குரு தற்போது வக்ரகதியில் இருப்பதாலும், 3-ல் ராகு சஞ்சரிப்பதாலும் எந்தவித நெருக்கடிகள் இருந்தாலும் தைரியத்தோடு எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். பணவரவுகள் சரியான நேரத்தில் வந்தடைந்து நீங்கள் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை காப்பாற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் சிறுசிறு மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் சூழ்நிலைக்கு தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு எடுத்த காரியங்களை குறித்த நேரத்தில் செய்துமுடித்து விடுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பதால் மன நிம்மதி உண்டாகும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் உங்கள் உழைப்புக்கான ஆதாயங்கள் கண்டிப்பாக கிடைக்கும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது. வரும் ஞாயிற்றுக்கிழமையன்று தேவையற்ற நிம்மதி குறைவுகள், வீண் குழப்பங்கள் ஏற்படும் என்பதால் கவனத்தோடு இருப்பது உத்தமம். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக இருப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறக்கூடிய யோகம் உண்டு. இந்த வாரத்தில் முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மையை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற நெருக்கடிகள் உண்டாகும். பங்காளியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் சூழலுக்கு தக்கவாறு பொறுமை யோடு செயல்படுவது உத்தமம். உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன், 12-ல் சஞ்சரிக்கக்கூடிய சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய திறமை உங்களிடம் இருக்கும். பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சாதகமாக இருப்பதால் நல்ல வாய்ப்புகளை பெறக் கூடிய யோகங்கள் உண்டு. குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனத்தோடு இருப்பது, அதிக முதலீடுகள் கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோக ரீதியாக பார்க்கின்றபொழுது நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றா லும் சக ஊழியரிடம் பேசுகின்றபொழுது பொறுமை யோடு பேசுவது உத்தமம். ஒருசிலருக்கு தேவையற்ற அவப்பெயர்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் சூழலுக்கு ஏற்றவாறு கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். திங்கள், செவ்வாய் ஆகிய இரு நாட்களில் மிகவும் கவனத்தோடு இருந்து புதிய முயற்சிகளைத் தவிர்ப்பதும், ஆரோக்கியத்தில் சற்று அக்கறை செலுத்துவதும் உத்தமம். விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும், துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவதும் கெடுதிகளைக் குறைக்கும்.