முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 2.
செவ்வாய்: கிருத்திகை- 1.
புதன்: மகம்- 4.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: புனர்பூசம்- 4.
சனி: அவிட்டம்- 2.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆடி 25 (10-8-2022) ரிஷபச் செவ்வாய் (இரவு 9.10).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
8-8-2022 பகல் 2.37 மணிக்கு தனுசு.
10-8-2022 பகல் 2.58 மணிக்கு மகரம்.
12-8-2022 பகல் 2.50 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவரின் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் குறைந்து சகலவிதத்திலும் முன்னேற்றங்கள் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு எதிலும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தை ஈட்ட முடியும். கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலில் அபிவிருத்தி செய்யமுடியும். கடந்தகால பொருட் தேக்கங்கள் விலகி சந்தைச் சூழ்நிலையும் ஆதரவாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் கிடைத்து நிம்மதி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்கள்மூலமாக அனுகூலங்களைப் பெறுவீர்கள். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றுவது உத்தமம்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிலும் சுறுசுறுப்பு டன் செயல்பட்டு பொருளாதார அனுகூலங் களைப் பெறுவீர்கள். 4-ல் புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லா மல் வேலையாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவு களைப் பெறமுடியும். போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான லாபங் களை ஈட்டமுடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் தொழில்ரீதியாக நல்ல செய்தி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு சிறப்பான வாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமல்லா மல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப் பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத் திலிருந்து அழைப்புவரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஆதாயங் களைப் பெறுவீர்கள். சரபேஸ்வரர் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி களைச் செய்வது சிறப்பு.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகுவுடன் வார முற்பாதி
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ஆயில்யம்- 2.
செவ்வாய்: கிருத்திகை- 1.
புதன்: மகம்- 4.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: புனர்பூசம்- 4.
சனி: அவிட்டம்- 2.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆடி 25 (10-8-2022) ரிஷபச் செவ்வாய் (இரவு 9.10).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- விருச்சிகம்.
8-8-2022 பகல் 2.37 மணிக்கு தனுசு.
10-8-2022 பகல் 2.58 மணிக்கு மகரம்.
12-8-2022 பகல் 2.50 மணிக்கு கும்பம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப் பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நெருங்கியவரின் உதவியால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். நீண்டநாட்களாக இருந்த நெருக்கடிகள் குறைந்து சகலவிதத்திலும் முன்னேற்றங்கள் உண்டாகும். ஜென்ம ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 2-ல் சஞ்சரிக்க இருப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு எதிலும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தை ஈட்ட முடியும். கூட்டாளிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலில் அபிவிருத்தி செய்யமுடியும். கடந்தகால பொருட் தேக்கங்கள் விலகி சந்தைச் சூழ்நிலையும் ஆதரவாக அமையும். நீங்கள் எதிர்பார்த்த வெளி உதவிகள் கிடைத்து நிம்மதி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் திறம்பட செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பது மட்டுமல்லாமல் அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருக்கும். பயணங்கள்மூலமாக அனுகூலங்களைப் பெறுவீர்கள். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய்தீபம் ஏற்றுவது உத்தமம்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 3-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நினைத்ததெல்லாம் நடக்கும். எதிலும் சுறுசுறுப்பு டன் செயல்பட்டு பொருளாதார அனுகூலங் களைப் பெறுவீர்கள். 4-ல் புதன் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். லாப ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. கேது 6-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் சமாளித்து ஏற்றங்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லா மல் வேலையாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவு களைப் பெறமுடியும். போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமல்லாமல் அதிகப்படியான லாபங் களை ஈட்டமுடியும். வெளியூர் தொடர்புகள் மூலம் தொழில்ரீதியாக நல்ல செய்தி கிடைக்கும். வேலைக்குச் செல்பவர் களுக்கு சிறப்பான வாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமல்லா மல் மற்றவர்களால் முடிக்க முடியாத பணியைக்கூட நீங்கள் சிறப்பாக செய்து முடித்து நல்ல பெயர் எடுப் பீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு பெரிய நிறுவனத் திலிருந்து அழைப்புவரும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி ஏற்படும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் ஆதாயங் களைப் பெறுவீர்கள். சரபேஸ்வரர் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி களைச் செய்வது சிறப்பு.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகுவுடன் வார முற்பாதியில் சஞ்சரிப்பதால் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கடந்த காலங் களிலிருந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். உடல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் ஓரளவுக்குக் குறைந்து நிம்மதி ஏற்படும். ராசிக்கு 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது சிறப்பு. பெண்கள்மூலமாக ஒருசில அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்களுக் கிருந்த அரசுவழி நெருக் கடிகள் குறைந்து தொழிலில் நிம்மதியுடன் பணியாற்று வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உட னிருப்பவர்கள் உதவிகரமாக இருப்பதால் கடினமான பணியைக்கூட சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானத் தைத் தற்போது பெற்று பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்கமுடியும். சிலருக்கு வேலை நிமித்தமாக பயணங்கள் மேற் கொள்ளக்கூடிய வாய்ப்பும், அதன்மூலம் பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும். பூர்வீக சொத்துரீதியாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வந்து நிம்மதி ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் நினைத்ததை நிறைவேற்றமுடியும். அஷ்டலட்சுமி வழிபாடு, சனி பகவானுக்கு எள்தீபமேற்றி வழிபடுவது சிறப்பு.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு 10, 11-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கௌரவ மான நிலை ஏற்படும். இருக்குமிடத்தில் உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். ஜென்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருந்து அனைத்து விதமான தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். சூரியன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதாலும், 7-ல் சனி சஞ்சரிப்பதாலும் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் யோசித்து செயல்படுவது நன்று. தொழில், வியா பாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகள் எல்லாம் வரும் நாட்களில் சாதகமாக முடிவுக்கு வந்து மன அமைதி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் வேலை செய்பவர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும், நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தற்போது கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் பேச்சுத் திறமையால் பணிபுரியும் இடத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்களின் முயற்சிகள் பரிபூரணமாக வெற்றி தந்து மகிழ்ச்சி உண்டாகும். தட்சிணாமூர்த்தி வழிபாடு, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்கும அபிஷேகம், நெய்தீபமேற்றுவது நன்று.
சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் புதன் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். ராசிக்கு 3-ல் கேது, 6-ல் சனி சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களை அடையமுடியும். சூரியன் 12-ல் மறைந்திருப்பதால் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. குரு 8-ல் இருந்தாலும் வக்ரகதியில் இருப்பதால் பணவரவில் இருந்த தேக்கநிலை மாறி தாராள பணவரவு ஏற்பட்டு உங்களின் அனைத்துவிதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். தடைப்பட்ட மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவதற் கான நல்ல சந்தர்ப்பங்கள் ஏற்படும். வயதில் மூத்தவரிடம் வாக்குவாதம் செய்யாமல் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தைநிலை சாதகமாக இருப்பதால் போட்ட முதலீட்டை எளிதில் எடுக்கமுடியும். கூட்டாளிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் எதிர்பாராத அனுகூலங் களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிலிருந்த நெருக்கடியான நிலைமாறி சுமூகமான சூழ்நிலை உண்டாகும். உடன்பணிபுரிபவர்கள் உதவியாக இருப்பதால் கடந்தகால கவலைகள் மறையும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்று.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ராசிக்கு 11-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் அதிகரிக்கும். பண வரவுகள் தேவைக்கேற்றவாறு இருந்து மன நிம்மதி உண்டாகும். 8-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்குள்ள உடல்ரீதியான சிறுசிறு பாதிப்புகள் விலகும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். வண்டி, வாகனங்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் கவனத்தோடு செயல்படுவது நல்லது. பிறருக்கு பணரீதியாக வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாகத் தள்ளிவைப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் புதிய யுத்திகளைப் பயன்படுத்தி லாபத்தை அடைவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளும் உத்தரவுகளும் தற்போது கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் தொழிலில் இணைவதால் வேலைப்பளு குறையும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சுமூகமான நிலை நீடித்தாலும் உடன் வேலை செய்பவர்கள் சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்துவார்கள். அதிகாரியிடம் சுமூகமான உறவிருப்பதால் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக்கூடிய பலம் ஏற்படும். தூரப் பயணங்களில் பொறுமையோடு செல்வது நல்லது. ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் புதிய முயற்சியில் ஈடுபட்டால் முழுமையான வெற்றி கிடைக்கும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, மகாவிஷ்ணு தலங்களுக்குச் சென்றுவருவது நல்லது.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன், சூரியனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். புதன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகவும் சிறப்பாக இருந்து கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் படிப்படியாகக் குறையும். நீங்கள் வாங்கிய கடன்களைத் தற்போது பைசல் செய்யுமளவுக்கு பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்குள்ள பிரச்சினைகள் எல்லாம் பகலவனைக் கண்ட பனிபோல படிப்படியாகக் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் புது தெம்புடன் செயல்படுவீர்கள். ராசிக்கு 7-ல் ராகு, 7, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல்நலத்தில் அக்கறை செலுத்துவதும், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு சற்று முக்கியத்துவம் தருவதும் சிறப்பு. தொழில், வியாபாரத்தில் பொருள் தேக்கங்கள் விலகி நல்ல லாபகரமான நிலை ஏற்படும். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்களுடைய எண்ணங்களைத் தற்போது நிறைவேற்றிக் கொள்ளமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு தற்போது மிகவும் அனுகூலமான காலமென்றால் மிகையாகாது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கிருந்த வேலைப்பளு குறையும். நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு ஒரு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்கள் நடக்கும். கந்தசஷ்டி கவசம் படிப்பது, முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் பூஜை மேற்கொள்வது சிறப்பு.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் புதன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சுபிட்சம், பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். ராசியாதிபதி செவ்வாய் வார முற்பாதியில் 6-ல் சஞ்சரிப்ப தால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். பணவரவு சிறப்பாக இருப்பதால் தேவைகள் பூர்த்தியாவதுடன் உங்களின் கடன் பிரச்சினைகளும் குறையும். குரு வக்ரகதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வது, கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாமல் இருப்பது நல்லது. ராசிக்கு 3-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பான அமைப் பென்பதால் தொழில், வியாபாரத்தில் பல்வேறு அனுகூலமான பலன்களைப் பெறுவதுடன் நல்ல லாபங்களை அடையமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவதால் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகள் தற்போது முடிவுக்குவந்து நிம்மதி உண்டாகும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். கடந்தகாலங்களில் நிலவிய மனக் குழப்பங்கள் ஓரளவுக்கு விலகி எதிலும் தெளிவுடன் செயல்படமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். நீங்கள் எடுத்த பணியில் சிறப் பாக செயல்பட்டு நல்லபெயர் எடுப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது மிகவும் நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களுடைய கஷ்டங்கள் குறையும். குறிப்பாக பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் பணவரவுகள் சிறப் பாக அமையப்பெற்று பொருளாதாரரீதியாக அனுகூலங்களைப் பெறுவீர்கள். ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் செவ்வாய், புதன்கிழமைமுதல் 6-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை அதிகரிக்ககூடிய அமைப்பாகும். ஜென்ம ராசிக்கு 5-ல் ராகு, 8-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நல்லது. இரவுப் பயணங்களைத் தள்ளிவைக்கவும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் குறைந்து உங்கள் உழைப்புக்கான பலனை அடைவீர்கள். சந்தை சூழ்நிலை சாதகமாக மாறுவதால் நீங்கள் போட்ட முதலீட்டைவிட அதிகப்படியான லாபத்தை அடையமுடியும். புதிய ஆர்டர்களை தைரியத்தோடு எடுத்து குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். தொழில் முன்னேற் றத்திற்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நெருக்கடி இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். அதிகாரியிடம் வாக்குவாதங்களைத் தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர் பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் குறையும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, கணவன்- மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நன்று. பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மன அமைதி குறையும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படும். எந்த செயல் செய்வதென்றாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. ராசிக்கு 4-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 5-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் வாரப் பிற்பாதியில் ஒருசில அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான சுக்கிரன் கேந்திர ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பது சாதகமான அமைப்பென்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும். பெண்கள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போட்டால் மட்டுமே இலக்கை அடைய முடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இல்லாத நேரமென்பதால் எந்த வேலையிலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறையும். அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதால் நீங்கள் எடுத்த பணிக்கு எந்த பிரச்சினையும் இல்லாமல் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். ஞாயிறு, வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் நற்பலன் கிட்டும். புதன்கிழமை மகாவிஷ்ணுவிற்கு துளசிமாலை சாற்றி வழிபடுவது, ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச்செய்வது சிறப்பு.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன் வலுவாக சஞ்சரிப்பதாலும், 7-ல் புதன் சஞ்சரிப்பதாலும் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். 3-ல் வார முற்பாதியில் செவ்வாய், ராகுவுடன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவு மிகவும் திருப்திகரமாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான செய்திகள் கிடைக்கும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மட்டும் சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடையமுடியும். உங்களிடம் பகைமை பாராட்டியவர்கள்கூட தற்போது ஆதரவாக செயல்படுவார்கள். கடந்தகால வம்பு வழக்குகள் முழுமையாக மறைந்து தொழிலில் நிம்மதியுடன் செயல்படமுடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி பெரிய அளவில் செய்ய நினைக்கும் செயல்களைத் தற்போதைக்கு தள்ளிவைப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்பட்டால் பெரிய இழப்புகளைத் தவிர்க்கலாம். வேலைக்குச் செல்பவர்கள் உழைப்புக்கான ஆதாயங்களை அடைவீர்கள். நீண்டநாட்களாக முடிக்கமுடியாத பணிகளைக்கூட தற்போது எளிதில் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய வாய்ப்புண்டு. விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாற்றி வழிபடுவது, வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பு.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பணவரவுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாமல் அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். கடந்தகால நெருக்கடிகள் முழுமையாக விலகி சேமிக்குமளவுக்கு பொருளாதார நிலையா னது சிறப்பாக இருக்கும். தற்போது 2-ல் சஞ்சரிக்கும் செவ்வாய் 10-ஆம் தேதிமுதல் 3-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். கணவன்- மனைவி வாக்குவாதங்களைத் தவிர்த்து விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பலம் ஏற்படும். சனி லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடியான நிலை விலகி நற்பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்குமென்பதால் தொழில், வியாபாரத்தில் புதுத் தெம்புடன் செயல்பட்டு சந்தைச் சூழ்நிலையை சிறப் பாக சமாளித்து நல்ல லாபத்தை அடையமுடியும். அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெருக்கடியான நிலைமாறி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். பயணங்கள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உக்ர தெய்வங்களை வழிபடுவது நன்று.