முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: ரேவதி- 3.
செவ்வாய்: சதயம்- 4.
புதன்: அஸ்வனி- 1(வ).
குரு: பரணி- 4.
சுக்கிரன்: உத்திரட்டாதி- 2.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: ரேவதி- 2.
கேது: அஸ்தம்- 4.
கிரக மாற்றம்:
பங்குனி 27 9-4-2024
மீன புதன் (இரவு 9.41).
பங்குனி 31 13-4-2024
மேஷ சூரியன் (இரவு 9.04).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- கும்பம்.
7-4-2024 காலை 7.39 மணிக்கு
மீனம்.
9-4-2024 காலை 7.32 மணிக்கு மேஷம்.
11-4-2024 காலை 8.40 மணிக்கு ரிஷபம்.
13-4-2024 பகல் 12.44 மணிக்கு மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைபெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் உங்களின் நீண்டநாளைய கனவுகள் எல்லாம் வருகின்ற நாட்களில் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பணவரவுகள் திருப்திகரமாக இருந்து பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். நல்ல நட்புகள் உங்களை நாடிவரும். உடனிருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடையமுடியும். சூரியன், ராகு 12-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத்தோடு இருப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்களை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் மதிப்புமிகுந்த வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் தற்போது விலகுவதால் மன நிம்மதியுடன் பணிபுரியமுடியும். குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நவீனகரமான பொருட்களை வாங்குவீர்கள். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனிக்கிழமைகளில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உங்களுக்கு இருக்கிறது. வரும் நாட்களில் ஏற்றமிகுந்த பலன்களைப்பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது அனுகூலத்தை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- சூரியன், ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் நல்லவாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் ஏற்படும். பெரிய மனிதர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைப்பதால் நீண்ட நாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைகளைத் தற்போது தீர்க்கமுடியும். செவ்வாய் 10-ல் சஞ்சரிப்பதால் மதிப்புமிகுந்த பதவி உங்களைத் தேடிவரும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குருபகவான் 12-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் தேவையற்ற வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத் தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத் துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சூழலுக்கு ஏற்றவாறு நீங்கள் சற்று கவனத்தோடு செயல்பட்டால் வளமான பலன்களை நீங்கள் பெறமுடியும். சில நேரங்களில் வேலையாட்களை நம்பாமல் நீங்களே நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். அதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைவதால் மனக்கவலைகள் விலகி பணியில் ஈடுபாடுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெரியோர்களிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது மிகவும் நல்லது.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குருபகவான் வலுவாக சஞ்சரிப்பதாலும் தொழில் ஸ்தானமான 10-ஆம் வீட்டில் சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதாலும் மதிப்புமிகுந்த வாய்ப்பு கள் உங்களுக்கு கிடைக்கும். பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். எடுத்த காரியத்தை குறித்த நேரத்தில் செய்துமுடித்து மனநிம்மதி ஏற்படும். வெளியூர், வெளிநாடுகள்மூலமாக மகிழ்ச்சி தரக்கூடிய செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மங்கள கரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்லவிலை உங்கள் பொருட்களுக்கு கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். கூட்டாளிகள் மூலமாக அனுகூலமான செய்தி கிடைக்கும். கணவன்- மனைவியிடையே அன் யோன்யம் அதிகரிக்கும். வெளிநபர் களால் இருந்துவந்த பிரச்சினைகள் தற்போது குறைந்து சுமூகமானநிலை ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும், நீண்டநாட்களாக நீங்கள் எதிர் பார்த்த பதவி உயர்வுகளும் தற்போது உங்களுக்கு கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று வெற்றிபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். முருக வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நற்பலனை உங்களுக்குத் தரும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் 2, 4-க்கு அதிபதியான சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகளைப் பெற்று இருக்கக்கூடிய நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு அஷ்டம ஸ்தானமான 8-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முடிந்தவரை இரவுநேர பயணங்களைத் தவிர்ப்பது மிகவும் உத்தமம். உடன்பிறந்தவரிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்துடன் இருப்பது, பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்பட்டு நியாயப்படி உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப் புகள்கூட தடைப்படும். வேலையாட்கள் தேவையற்ற நெருக்கடிகளை உங்களுக்கு ஏற்படுத்துவார்கள். பிள்ளைகள்வழியில் ஒருமகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக உடல்அசதி, நிம்மதியில்லாத நிலை ஏற்படும். தொழில்தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்த்துவிட்டு உங்களு டைய அன்றாட செயல்பாடுகள் மற்றும் படிப்பில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது மிகவும் நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களை அடைய காலபைரவரை வழிபாடு செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது மிகவும் உத்தமம்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு பகவான் அமையப்பெற்று ஜென்ம ராசியை பார்வை செய்வ தால் பொருளாதாரரீதியாக அனுகூலமான பலன்களை பெற்று உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தி யாகும். சம சப்தம ஸ்தானமான 7-ல் செவ்வாய், சனி சஞ்சரிப் பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஒன்றுமே இல்லாத விஷயத்திற்குகூட குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். ராசியாதிபதி சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் முடிந்தவரை வெளிநபர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் வளமான பலன்களை பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. நல்ல லாபத்தை ஈட்டமுடியும் என்றாலும் வேலையாட்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரணமாக உங்களுக்கு சில நெருக்கடிகள் ஏற்பட்டாலும் நீங்கள் எதிலும் தனித்திறமை யோடு செயல்பட்டு எதையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. முடிந்தவரை அதிகாரியிடம் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் கல்வியில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண் களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் உங்களுக்கு சுலப மாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக் கூடிய அனைத்து முயற்சிகளும் முழுமையான வெற்றியைத் தரும். சிவன் வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பது மிகச்சிறப் பான அமைப்பு என்ற காரணத்தால் நீங்கள் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் மிகவும் சாதகமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. எந்தவித பிரச்சினையையும் உங்கள் தனித்திறமையால் சிறப்பாக கையாண்டு வெற்றி அடையக்கூடிய பலம் கொண்டவர்களாக நீங்கள் இருப்பீர்கள். சூரியன், ராகு சேர்க்கைப்பெற்று 7-ல் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுக்கிரன் 7-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் பெண்கள்வழியில் அனுகூலமான பலன்களைப் பெறமுடியும். குருபகவான் 8-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று கவனத் தோடு செயல்படுவது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய அதிர்ஷ் டங்கள் உங்களுக்கு உண்டு. வேலை யாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபரிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய மனிதருடைய நட்பு கிடைப்பதால் இருக்கக்கூடிய பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளைத் தவிர்த் தால் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் உங்களுக்கு மனக் குழப்பம், தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் கவனத்தோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் மிகவும் அனுகூலமான பலன்களை பெரும் யோகம் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற் கொள்வது, லட்சுமிநரசிம்மரை தரிசிப்பது நன்மை தரும்.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன் 6-ல் உச்சம்பெற்று சஞ்சரிப்பதாலும், மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- ராகு சேர்க்கைப்பெற்று 6-ல் இருப்பதாலும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் பணவரவுகள் மிக மிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். கணவன்- மனைவியிடையே கடந்த காலங்களில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் கூட்டாளிகள்மூலமாக அதிகப்படியான அனுகூலங்களை பெறமுடியும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் பரிபூரண வெற்றியைத் தந்து மன நிம்மதியை ஏற்படுத்தும். வேலையாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யமுடியும். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தக்க சன்மானத்தை தற்போது பெறுவீர்கள். நீங்கள் வாங்கிய கடன்களை குறைத்துக்கொள்ள முடியும். மாணவ- மாணவியர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டு ஆசிரியர் களுடைய பாராட்டுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் வாய்ப்புகளும். அசையா சொத்துகள்வகையில் அனுகூலங்களும் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், உங்கள் முயற்சிகள் தடைப்படக்கூடிய நிலை ஏற்படும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு சுக ஸ்தானம் என வர்ணிக்கப் படக்கூடிய 4-ஆம் வீட்டில் ராசியாதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைபெற்று சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் யோசித்து செயல்படவேண்டிய நேரமாகும். சில விஷயங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். நெருங்கியவர்களே உங்களுக்கு தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். வண்டி, வாகனங்கள்மூலமாக வீண் செலவுகள் உண்டாகும். சூரியன், ராகு 5-ல் இருப்பதால் ஒருசிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நன்மையைத் தரும். குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் சில நல்லமாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக விரைவில் ஏற்படக்கூடிய குரு மாற்றம் உங்கள் வாழ்வில் நல்ல ஒரு முன்னேற்றத்தை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக உடல் அசதி, மன நிம்மதி குறைவு ஏற்படும். சக ஊழியர்களால் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் முடிந்தவரை மற்றவரிடம் பேச்சை குறைப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். தேவையற்ற நட்புகளைக் குறைத்துக்கொண்டு சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொறுமையோடு நடந்துகொள்வது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் நீண்டநாள் எதிர்பார்த்த சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். சனிக்கிழமையன்று உங்களுக்கு நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நாள் என்பதால் நீங்கள் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு கேந்திர ஸ்தானமான 4-ல் சுக்கிரன் உச்சம்பெற்று சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். முயற்சி ஸ்தானமான 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் அதிகப்படியான அனுகூலங் களை பெறுவீர்கள். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருப்பது மட்டுமில்லாமல் நீண்டநாளைய பிரச்சினைகளுக்கு எல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். அசையும், அசையா சொத்துகளில் முதலீடு செய்யக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உங்களுக்கு உண்டு. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் ஏற்றமிகுந்த பலன்களை அடைவதுடன் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய திட்டங்களும் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மதிப்புமிகுந்த பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் செல்லக்கூடிய அதிர்ஷ்டங்களும் ஏற்படும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை பெறக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக எதிர்பாராத அனுகூலங்கள், உங்கள் செயல்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கைம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. குடும்ப ஒற்றுமை பாதிக்கும். முடிந்தவரை பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- ராகுவுடன் 3-ல் இருப்பது சாதகமான அமைப்பு என்பதால் எதிர் பாராத பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு இருக்கக் கூடிய நெருக்கடிகள் குறையும். தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். வேலையாட்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் சிந்தித்து செயல் படுவது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை வெளியாட்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள் ஏற்படலாம் என்பதால் மிகவும் கவனத்தோடு இருப்பது, தேவையற்ற பயணங் களைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் நீங்கள் இணைத்து செய்ய வேண்டிய ஒரு நெருக்கடியான நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர் கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். பெண்களுடைய ஆதரவு சிறப்பாக இருப்பதால் ஒருசில பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கமுடியும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களில் கவனம் செலுத்துவதைத் தற்போது தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்கள் விருப்பங்கள் நிறைவேறக் கூடிய யோகம் உண்டாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செய-லும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். சூரியன், ராகு 2-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். வயது மூத்தவர் களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நாட்கள் என்பதால் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பணவிஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது உத்தமம். பிள்ளைகள்வழியில் தேவையற்ற கவலைகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் மிகவும் கவனத்தோடு இருந்தால்தான் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும். நீங்கள் எவ்வளவுதான் கடினமாக வேலை செய்தாலும் ஒருசிலர் செய்யக்கூடிய செயல்கள் காரண மாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய லாபங்கள் தடை படக்கூடிய அமைப்புகள், குறிப்பாக நல்லவாய்ப்புகள்கூட தாமதமாகக்கூடிய ஒருநிலை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளில் கவனம் செலுத்தி குறிப்பிட்ட நேரத்தில் அதனை முடிக்க முயற்சிப்பது நல்லது. நீங்கள் தற்போது இருக்கக்கூடிய நிலையே ஒரு சாதகமான நிலை தான். மாணவ- மாணவியர்கள் விளை யாட்டுப் போட்டி களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கண்ணும் கண்ணும் கருத்துமாக இருந்தால் நல்ல மதிப்பெண்களை எடுக்க முடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன்கிழமை களில் சந்திரன் உங்கள் ராசிக்கு சாதகமாக சஞ்சரிப்ப தால் எதிர்பாராத வகையில் வெளியி-ருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைத்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது நற்பலனை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் சுக்கிரன் உச்சம்பெற்று சஞ்சரிப்பதும் 2-ல் குரு சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக தடைப்பட்ட சுப காரியங்கள் தற்போது கைகூடி மன நிம்மதி உண்டாகும். சூரியன், ராகு ஜென்ம ராசியில் இருப்பதால் நீங்கள் எதிலும் சற்று பொறுமையோடு இருப்பது, முன்கோபத் தைக் குறைத்துக்கொள்வது நல்லது. பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறிப்பிட்ட நேரத்தில் காப்பாற்றி நல்லபெயர் எடுக்கமுடியும். சனி, செவ்வாய் 12-ல் இருப்பதால் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படக்கூடிய நேர மென்பதால் முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலை யிடாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் தற்போது கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் மதிப்புமிகுந்த வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள்மீது இருந்த பழிச்சொற்கள் எல்லாம் விலகக்கூடிய நேரமாகும். சக ஊழியர்களை முடிந்தவரை அனுசரித்து செல்வது நல்லது. உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் ஓரளவுக்கு விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாவதுடன் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் பெரியவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சகல விதத்தி லும் மேன்மை உண்டாகும். கடந்தகால வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.