இந்த வார ராசிபலன் 6-8-2023 முதல் 12-8-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-6-8-2023-12-8-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1.

செவ்வாய்: பூரம்- 3.

புதன்: பூரம்- 1.

குரு: பரணி- 2.

சுக்கிரன்: மகம்- 1 (வ).

சனி: சதயம்- 2 (வ).

ராகு: அஸ்வினி- 2.

கேது: சித்திரை- 4.

கிரக மாற்றம்:

ஆடி 22 (7-8-2023)

கடகம், சுக்கிரன் (வ) (பகல் 11.01).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மீனம்

tt

7-8-2023 அதிகாலை 1.43 மணிக்கு மேஷம்.

9-8-2023 காலை 7.42 மணிக்கு ரிஷபம்.

11-8-2023 மாலை 4.58 மணிக்கு

மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலிலும் யோசித்து செயல்படுவது கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ராசியாதிபதி செவ்வாய் புதனுடன் 5-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்வழியில் தேவையில்லாத வீண்செலவு கள் ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்துவகையில் இருந்து வந்த பிரச்சினைகள் தற்போது விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். காலநேரம் பார்க்காமல் ஒவ்வொரு காரியத்திலும் கவனத் தோடு செயல்பட்டால் போட்ட முதலில் எடுக்கமுடியும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளை ஏற்படுத்தினா லும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உடல்அசதி ஏற்படும் என்றாலும் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன். ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்ப தால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணபரிமாற்ற விஷயங்களில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் புதன் 4-ல் சஞ்சரிப்பதால் தகுந்த நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு உள்ள தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் சற்று குறைந்து தொழில், வியாபாரத்தில் வளமான பலன்களை பெறமுடியும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதன்மூலம் தொழிலில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக போட்டிகள் சற்று குறைவதால் நீங்கள்போட்ட முதலை எடுக்கமுடியும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும்- அசையா சொத்துவகையில் சுபச் செலவுகள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சக ஊழியர் களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒருநிலை இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. வரும் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சி களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி தீபமேற்றுவது நன்று.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- செவ்வாயுடன் 3-ல் சஞ்ச

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: ஆயில்யம்- 1.

செவ்வாய்: பூரம்- 3.

புதன்: பூரம்- 1.

குரு: பரணி- 2.

சுக்கிரன்: மகம்- 1 (வ).

சனி: சதயம்- 2 (வ).

ராகு: அஸ்வினி- 2.

கேது: சித்திரை- 4.

கிரக மாற்றம்:

ஆடி 22 (7-8-2023)

கடகம், சுக்கிரன் (வ) (பகல் 11.01).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- மீனம்

tt

7-8-2023 அதிகாலை 1.43 மணிக்கு மேஷம்.

9-8-2023 காலை 7.42 மணிக்கு ரிஷபம்.

11-8-2023 மாலை 4.58 மணிக்கு

மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலிலும் யோசித்து செயல்படுவது கோபத்தை குறைத்துக்கொண்டு பொறுமையோடு இருப்பது நல்லது. அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். ராசியாதிபதி செவ்வாய் புதனுடன் 5-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன் மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பெண்கள்வழியில் தேவையில்லாத வீண்செலவு கள் ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்துவகையில் இருந்து வந்த பிரச்சினைகள் தற்போது விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை தற்போது பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல நிலையினை அடையமுடியும். காலநேரம் பார்க்காமல் ஒவ்வொரு காரியத்திலும் கவனத் தோடு செயல்பட்டால் போட்ட முதலில் எடுக்கமுடியும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளை ஏற்படுத்தினா லும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக உடல்அசதி ஏற்படும் என்றாலும் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் எவ்வளவுதான் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் சிறுசிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம் என்பதால் வீண்வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், சனி ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன். ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்ப தால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குரு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணபரிமாற்ற விஷயங்களில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் புதன் 4-ல் சஞ்சரிப்பதால் தகுந்த நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். சனி வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு உள்ள தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் சற்று குறைந்து தொழில், வியாபாரத்தில் வளமான பலன்களை பெறமுடியும். புதிய ஆர்டர்கள் கிடைப்பதன்மூலம் தொழிலில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உங்களுக்கு இருந்துவந்த மறைமுக போட்டிகள் சற்று குறைவதால் நீங்கள்போட்ட முதலை எடுக்கமுடியும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். ஒருசிலருக்கு வெளியூர்மூலமாக ஆதாயங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அசையும்- அசையா சொத்துவகையில் சுபச் செலவுகள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு சக ஊழியர் களுடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒருநிலை இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு சிறப்பாக இருப்பதால் உங்கள் பணியில் நீங்கள் நிம்மதியுடன் செயல்படமுடியும். ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. வரும் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சி களுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி தீபமேற்றுவது நன்று.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- செவ்வாயுடன் 3-ல் சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறக்கூடிய இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு, ராகு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் நீங்கள் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி, குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக்கூடிய யோகங்கள் வரும் நாட்களில் உண்டு. உறவினர் களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். வீடு, மனை போன்றவை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்களை தற்போது செயல்படுத்த முயற்சித்தால் அதற்கு பரிபூரண ஆதரவும் மகிழ்ச்சிதரக்கூடிய ஒரு செய்தியும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் ஒரு கௌரவமான நிலையை எட்டமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியுடன் செயல்படக்கூடிய ஒரு அமைப்பும், கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் தற்போது பிரதிபலன் அடையக்கூடிய வாய்ப்புகளும் வரும் நாட்களில் உண்டு. ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்று.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் சூரியன், 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் பேச்சில் பொறுமையோடு செயல்படுவதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள் ஏற்படலாம் என்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 8-ல் சனி, 10-ல் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிக்கனத் தோடு இருப்பது ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவதும் முடிந்தவரை அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தவிர்ப்பதும் நல்லது. பொதுவாக வெளிநபர் களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பொறுமையோடு நடந்து கொள்வதும் கிடைக்கும் சிறுவாய்ப்பையும் தவற விடாமல் பயன்படுத்திக் கொள்வதும் நன்மையை தரும். கூட்டாளிகளை கலந்து ஆலோசித்து செயல்பட்டால் அவர்கள்மூலமாக கிடைக் கக்கூடிய உதவிகள் காரண மாக ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். புதன் 2-ல் சஞ்சரிப்பதால் நெருக்கடி யான நேரத்தில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத் தோடு இருந்துவிட்டு சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்ப தால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலம் உங்கள் பிரச்சினைகள் குறையும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது உத்தமம்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் புதன், பாக்கிய ஸ்தானமான 9-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களின் வாழ்க்கை தரம் சிறப்பாக இருக்கும். தாராள தன வரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் உண்டாகும். கணவன்- மனைவியிடையே அன்னோன்யம் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்துவகையில் நீங்கள் எதிர்பார்த்த ஒரு பொருளாதார உதவிகள் தற்போது கிடைக்கும். இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை சற்று குறைத்துக்கொண்டு ஒருசில நேரங்களில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. குறிப்பாக உடன் பிறந்தவர்களையும் வயது மூத்தவர்களிடமும் பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையை நீங்கள் எட்டுவீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பொருளாதார உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். திறமைவாய்ந்த வேலையாட் கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். உத்தியோகத் தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக் கூடிய ஒரு வாய்ப்புகளும் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட ஒரு நல்ல சந்தர்ப்பமும் கிடைக்கும். உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் நல்ல பெயர் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயல் ஈடுபட்டாலும் அதில் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டு. ஞாயிற்றுக்கிழமை அன்று தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. முருக வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்

tt

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன்- செவ்வாயுடன் விரைய ஸ்தானமான 12-ல் சஞ்சரிப்பதால் பணவிஷயத்தில் நீங்கள் சற்று சிக்கனத்தோடு இருப்பது, ஒவ்வொரு காரியத்திலும் யோசித்து செயல்படுவது நல்லது. பொதுவாக 6-ல் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பு என்றாலும் தற்போது சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதாலும், குரு, ராகு 8-ல் இருப்பதாலும் எந்த ஒரு காரியத்திலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள்கூட தற்போது தாமதமாகும். எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் எந்தவித பிரச்சினையும் எதிர்கொள்ள கூடிய ஒரு திறமை உங்களிடம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களுடைய உதவியை எதிர்பார்க்காமல் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலில் எடுக்கமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண்பழிச் சொற்களை சொல்வார்கள். மற்றவர்களிடம் வீண் பேச்சை குறைத்துவிட்டு உங்களுடைய பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. வரும் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல் மன அமைதி குறைவு ஏற்படலாம் என்பதால் கவனத்தோடு இருப்பது உத்தமம். வரும் ஞாயிறு, சனிக்கிழமைகளில் ஒருசில அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பாகும். மாத கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நீண்டநாட்களாக உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து கௌரவமான நிலையினை அடையமுடியும். குருபார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சித்தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் முன்னேற்றத்திற்காக நவீன கருவிகளை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் உங்களுக்கு ஆதாயங்கள் கிடைக்கும். ஒவ்வொரு செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அதிகப்படியான அனுகூலங்களை அடைவீர்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் நிம்மதியான நிலை, விரும்பி இடமாற்றங்கள் கிடைக்கும். சக ஊழியர்களால் இருந்துவந்த இடையூறுகள் எல்லாம் தற்போது முழுமையாக குறைந்து சுமூகமான சூழ்நிலை ஏற்படும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் நீங்கள் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் என்பதால் எந்த ஒரு காரியத்திலும் சற்று யோசித்து செயல்படுவது நல்லது. பிரத்திங்கரா தேவி வழிபாடு மேற்கொள்வது, விநாயகருக்கு சூரத் தேங்காய் உடைப்பது நற்பலனை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய்- புதனுடன் 10-ல் சஞ்சரிப்பதால் எதிலும் துணிவோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்தோடு செயல்பட்டால் இருக்கும் நெருக்கடிகளை சமாளித்து அடைய வேண்டியதை அடையமுடியும். சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நிலவிய அலைச்சல்கள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். ஒருசிலருக்கு நவீனகரமான வண்டி, வாகனங்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்பதால் உறவினர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்களை பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு போட்ட முதலில் எடுத்துவிடுவீர்கள். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் வாடிக்கையாளர்களுடைய தேவையை குறித்த நேரத்தில் பூர்த்தி செய்யமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவ வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும் வேலைப்பளு சற்று கூடுதலாக இருக்கும். சகஊழியர்கள் உடைய வேலையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். புதியவாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு மகிழ்ச்சித்தரக்கூடிய செய்தி ஒன்று கிடைக்கும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைக்கும். வெள்ளி பிற்பகல், சனி ஆகிய நாட்களில் வீண் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் எதிலும் சற்று நிதானத் தோடு செயல்படுவது நல்லது. தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குருபகவான் ஜென்ம ராசியை பார்வை செய்வதாலும், உங்கள் ராசிக்கு 5, 10-க்கு அதிபதியான செவ்வாய், புதன் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் சகல சௌபாக்கியங்களையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்தது அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகள் நடக்கும். நீங்கள் எதிர்பார்த்த கௌரவ பதவிகள் உங்களைத்தேடி வரும். சூரியன் 8-ல் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று அக்கறை எடுத்துக்கொள்வது பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பதுமூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். தொழில், வியாபாரத்தில் பிற பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டமுடியும். நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். அன்றாட செயல்களில் சூழ்நிலைக்கு தகுந்தவாறு சிறப்பாக முடிவெடுத்து நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீண்டநாட்களாக நீங்கள் கண்ட கனவுகள் எல்லாம் தற்போது நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. சக ஊழியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் நீண்டநாட்களாக முடிக்க முடியாமல் இருந்த பணிகளை எல்லாம் தற்போது சுலபமாக முடித்துவிடுவீர்கள். இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு பெரிய அளவில் பொருளாதாரம் அனுகூலங்கள் ஏற்படக்கூடிய நாட்களாக இருக்கும். இந்த வாரத்தில் சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன், 8-ல் செவ்வாய், புதன் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் சற்று பொறுமையோடு நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். குரு, ராகு 4-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். நீங்கள் பெரிதும் நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது, எதிலும் யோசித்து செயல்படுவது உத்தமம். தொழில், வியாபாரத்தில் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய வாய்ப்புகள்கூட தடைப்படும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இருக்காது. ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். பிறருக்கு வாக்குறுதி கொடுக்கும் விஷயங்களில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வெளியூர் பயணங்களைத் தற்போதைக்கு தவிர்ப்பது மிகவும் நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு கூடுதல் வேலை காரணமாக உடல் அசதி, நெருங்கியவரிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். குறிப்பாக வெளிநபர்களிடம் பேசுகின்றபொழுது பொறுமையோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். முருக வழிபாடு மேற்கொள்வது சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சஞ்சரிக்கக்கூடிய சனி தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலத்தை நீங்கள் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் ராகு, 6-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்து அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குருபகவான் 3-ல் இருப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற இறக்கமான நிலை இருந்தாலும் தகுந்த நேரத்தில் பணவரவுகள் கிடைத்து உங்களின் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். புதன் சமசப்தம ஸ்தானமான 7-ல் சஞ்சரிப்பதால் ஒவ்வொரு காரியத்திலும் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நிதானத்தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுப்பது மட்டுமில்லாமல் நல்ல லாபத்தை அடையமுடியும். வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலமாக அடையவேண்டிய ஆதாயத்தை அடையலாம். வெளியூர் தொடர்புகள்மூலமாக உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வண்டி, வாகனங் களில் செல்கின்றபொழுது சற்று பொறுமையோடு செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உங்கள்மீது உடன் வேலை செய்பவர்கள் ஏதாவது பழிச்சொற்கள் சொன்னாலும் அதனை பொருட்படுத்தாமல் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால் நல்லபெயர் எடுக்கமுடியும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய்கிழமையில் சிறப்பான பலன்களை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, முருக வழிபாடு செய்வது கெடுதியைக் குறைக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசியாதிபதி குருபகவான் 2-ல் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்களது பலமும் வலிமையும் கூறக்கூடிய ஒரு இனிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகக்கூடியநிலை உண்டாகும். சனிபகவான் வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு இருந்த தேவையற்ற பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து அனைத்திலும் அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியினை அடையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக தொழில் முன்னேற்றம் உண்டாகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். தொழிலில் நவீன யுக்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். அரசாங்க வழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் இருக்கிறது. வேலைக்குச் செல்பவர்களுக்கு பணியில் ஒரு நிம்மதியான நிலையும் நல்ல வாய்ப்புகளும் உங்களுக்கு கிடைக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

bala110823
இதையும் படியுங்கள்
Subscribe