முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாத சாரம்:
சூரியன்: அஸ்தம்- 3.
செவ்வாய்: புனர்பூசம்- 1.
புதன்: அஸ்தம்- 4.
குரு: மிருகசீரிடம்- 2.
சுக்கிரன்: விசாகம்- 1.
சனி: சதயம்- 4 (வ).
ராகு: உத்திரட்டாதி- 3.
கேது: அஸ்தம்- 1.
கிரக மாற்றம்:
9-10-2024 குரு (வ) ஆரம்பம் பகல் 12.34 மணிக்கு
10-10-2024 துலா புதன் பகல் 11.19 மணிக்கு
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- துலாம்
6-10-2024 மாலை 5.33 மணிக்கு விருச்சிகம்.
9-10-2024 அதிகாலை 4.08 மணிக்கு தனுசு.
11-10-2024 பகல் 11.40 மணிக்கு மகரம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், கேது, 7-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக் கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்து கொண்டு உங்களுடன் நட்புடன் பழகுவார்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட் களுக்கு நல்ல வேலை கிடைப்பதால் லாபகரமான பலன் களை அடைவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் வாடிக்கையாளர் களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்யக்கூடிய வாய்ப்புண்டு. செவ்வாய் 3-ல் இருப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிட்டும். ஒருசிலருக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய நேரமாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 11, 12.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், பஞ்சம ஸ்தானமான 5-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால்தான் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெண்கள்வழியில் தேவையில்லாத நெருக்கடி கள் ஏற்படும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகி மனக்கவலையை ஏற்படுத்தும். தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உங்கள் உழைப்புக்கான பலனை அடைய தேவையில்லாத இடையூறுகள் ஏற்படும். மறைமுக எதிர்ப்புகள் மனக் கவலையை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள்மூலமாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்பட்டு நிம்மதி குறையலாம் என்பதால் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் சற்று கவனத்தோடு இருப்பது மிகமிக நல்லது. உத்தியோகத் தொடர்பான விஷயங்களை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். மாணவ- மாணவியர்கள் உடன் பழகக்கூடிய நண்பர்களிடம் சற்று எச்சரிக்கையாக இருப்பது தற்போதைக்கு நல்லது. இந்த வாரத்தில் ஒரு வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசி அதிபதி புதன் 4, 5-ல் சஞ்சரிப்பதாலும், சுக்கிரன் 5-ல் சஞ்சரிப்பதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பண வரவுகள் திருப்திகரமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாக கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். ஜென்ம ராசியில் செவ்வாய், 4-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் ஒருசில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு இருப்பது நல்லது. அதிக வேலைப்பளு காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் முனைப் புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான பணியைகூட சுலபமாக செய்து முடிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சின்ன சின்ன நெருக்கடி இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நேரம் ஆகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலை பெறக் கூடிய யோகம் உண்டாகும். இந்த வாரத்தில் மேலும் வளமான பலன்களைப் பெற சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நல்லது.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன், கேது, 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்கள் ஆதரவு மிகச் சிறப்பாக இருக்கும். நண்பர்கள் மூலமாக ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடக் கூடிய நேரமாகும். குழந்தை பாக்கியமில்லை என்று ஏங்கிய தம்பதிகளுக்கு வரும் நாட்களில் நல்ல செய்தி ஒன்று கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய வளர்ச்சி யானது சிறப்பாக இருக்கும். தொழில்ரீதியாக இருந்த சட்ட சிக்கல்கள் எல்லாம் தற்போது விலகி அனுகூல மான பலன்களைப் பெறுவீர்கள். வேலைக்கு செல்பவர் களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படக்கூடிய பலம் ஏற்படும். அதிகாரிகளின் ஆதரவானது சிறப்பாக இருப்பதால் விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மன நிம்மதி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய நேரமாகும். வெளியூர் தொடர்பு கள்மூலமாக ஆதாயங்களைப் பெறுவீர்கள். கால பைரவரை வழிபாடு செய்வது, முருகருக்கு அர்ச்சனை செய்வது வளமான பலனைத் தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசியாதிபதி சூரியன்- கேது சேர்க்கைப் பெற்று 2-ல் சஞ்சரிப்பதாலும், 7-ல் சனி, 8-ல் ராகு இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித் துச்செல்வது நல்லது. நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படக்கூடிய நேரமென்பதால் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வதும், இரவு நேரப் பயணங்களைத் தவிர்ப்பதும் தற்போதைக்கு உத்தமம். தொழில், வியாபாரத்தில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முக்கிய விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் ஒருசில ஆதாயத்தை அடைய முடியும். வேலைக்குச் செல்பவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்களுக்கு ஒதுக்கப் பட்ட பணியில் மட்டும் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். வண்டி, வாகனங்கள்மூலமாக சுபச்செலவு கள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடனிருப்பவர்கள் உங்களை வேற்றுப்பாதைக்கு அழைத்து செல்லக்கூடிய நேரம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவர் வழிபாடு மேற்கொள்வதன் மூலம் வளமான பலன்களை அடைய முடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 11, 12.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதும், 2-ல் சுக்கிரன், 9-ல் குரு சஞ்சரிப்ப தும் சிறப்பான அமைப்பு என்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதை யும் அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மிகச்சிறப்பாக இருக்கும். பண வரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பொருளாதார உதவிகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். உத்தியோகரீதியாக பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அதிகாரியிடம் நல்ல பெயர் எடுக்கக் கூடிய நேரமாகும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்பும் அதன் மூலம் ஆதாயமும் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறக் கூடிய நேரமாகும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற் கொள்வதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன், 6-ல் ராகு சஞ்சரிப்ப தால் இக்கட்டான நேரத்தில் எதிர்பாராதவகையில் பண உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகக் கூடிய நேரமாகும். குரு 8-ல் சஞ்சரிப்பதாலும், மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன்- கேது சேர்க்கைப்பெற்று 12-ல் சஞ்சரிப்பதாலும் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு தேவையில்லாத பயணங்கள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். குறிப்பாக நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய பொருளாதார அனுகூலங்கள் கிடைப்பதில் சில தடைகள் ஏற்படலாம். நீங்க சற்று பொறுமையோடு இருப்பது மிகமிக நல்லது. வேலையாட்களை அனுசரித்துச் செல்வது தற்போதைக்கு நல்லது. குறிப்பாக உங்களது முன்கோபத்தை குறைத்துக் கொள்வது, தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர் களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். வேலைக்கு செல்பவர்களுக்கு மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருப்பது மட்டுமில்லாமல் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சற்று கவனத் தோடு இருக்கவேண்டும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைப்பது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசியை குரு பார்ப்பதாலும், லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சூரியன், புதன், கேது சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். பணவரவுகள் தாராளமாக இருந்து நீங்கள் மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதி களை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உறவினர்கள்மூலமாக ஒருசில ஆதாயங்களை பெறுவீர்கள். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது மட்டுமில்லாமல் சட்டரீதியாக இருந்த சிக்கல்களுக்கு எல்லாம் இப்பொழுது முடிவு கிடைத்து மன நிம்மதி உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சாமர்த்தியமாக செயல்பட்டு வாடிக்கையாளரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் விரும்பிய உயர்வைப் பெற்று மகிழ்ச்சி அடையக்கூடிய நேரமாகும். நல்ல நட்புகள் கிடைக்கும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லமுடியும். முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு தீபமேற்றுவது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 11, 12.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். புதன் இந்த வாரத்தில் 10, 11 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் குறையும். எந்தவித நெருக்கடியையும் உங்களின் தனித்திறமையால் எளிதில் சமாளித்து ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். குருபகவான் 6-ல் சஞ்சரிப்பதால் ஆடம்பரச் செலவுகளை சற்று குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் சற்று கவனத் தோடு செயல்பட்டால் போட்ட முதலை எடுக்க முடியும். கூட்டாளிகள்மூலமாக ஒரு சில ஆதாயத்தை அடையக்கூடிய நேரமாக வருகின்ற நாட்கள் இருக்கும். வெளியூர்மூலமாக அனுகூலமான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த இக்கட்டான நிலை எல்லாம் மாறி தற்போது எதிலும் சுறுசுறுப்பாக செயல்படமுடியும். சக ஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது குறைந்து சுமூக நிலை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் உங்களுக்கு இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை குறைத் துக் கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் காலபைரவரை வழிபாடு செய்வது, துர்கையம்மனுக்கு நெய் தீபம் ஏற்றுவதன்மூலம் நன்மை கிடைக்கும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 9, 10.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியை குரு பார்ப்பதாலும், 6-ல் செவ்வாய், 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும் உங்களின் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருக்கும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. புதன் உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய ஸ்தானங்களில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடைய வேண்டிய லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. புதிய யுத்திகளை பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய அதிர்ஷ்ட மானது வரும் நாட்களில் உங்களுக்கு இருக்கிறது. அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உத்தரவுகளை பெரும் வாய்ப்பு உங்களுக்கு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமை களை வெளிக்காட்டகூடிய சந்தர்ப்பமும் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய யோகமும் வரும் நாட்களில் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்கள் எடுப்பது மட்டுமில்லாமல் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். வரும் நாட்களில் வளமான பலன்களைப் பெற காலபைரவரை வழிபாடு செய்வது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 6, 7, 8, 11, 12.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 8-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வதும் உணவு விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு இருப்பதும் உத்தமம். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் ஆடம்பரச் செலவுகளை குறைத்துக்கொண்டு எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் குரு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களால் நிம்மதி குறைவுகள், உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் யோசித்து செயல்படவேண்டும். சுக்கிரன் 9-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் மூலமாக ஒருசில ஆதாயத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் சில மாற்றங்கள் ஏற்படக்கூடிய அமைப்பு இருக்கிறது. வேலையாட்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் முன்னெச்சரிக் கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு செயல்படவேண்டும். மாணவ- மாணவியர்கள் தேவையற்ற பழிச் சொற்களை எதிர்கொள்ளக்கூடிய நேரமென்பதால் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 7, 8, 9, 10.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ராசியாதிபதி குரு 3-ல் சஞ்சரிப்பதும், 4-ல் செவ்வாய், 7-ல் சூரியன், கேது சஞ்சரிப்ப தும் தேவையற்ற அலைச்சலை ஏற்படுத்தக் கூடிய அமைப்பு என்பதால் எதிலும் சற்று கவனத் தோடு இருப்பது நல்லது. வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதை அனுபவிப்பதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். ஒரு சில நேரங்களில் உணர்ச்சிவசப்படாமல் பொறுமை யோடு செயல்படவேண்டிய நேரமாகும். ஒருசிலருக்கு தேவையற்ற சட்ட சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரியான முறையில் பராமரித்துவருவது நல்லது. வண்டி, வாகனங்கள் மூலமாக எதிர்பாராத வகையில் வீண்செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். குறிப்பாக நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக மன நிம்மதி குறைவுகள், ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்கள் உண்டாகும். மேலதிகாரியிடம் பேசுகின்றபொழுது ஒருமுறைக்கு பலமுறை யோசித்து பேசுவது நல்லது. மாணவ- மாணவிகள் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் பழகக்கூடிய நண்பர்கள்மூலமாக வீண் பிரச்சினைகளை எதிர்க்கொள்ளக்கூடிய சூழ்நிலை உண்டாகலாம். தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது தற்போதைக்கு நல்லது. லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது வளமான பலனை தரும்.
வெற்றி தரும் நாட்கள்: 9, 10, 11, 12.