முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பரணி- 3.
செவ்வாய்: உத்திரட்டாதி- 2.
புதன்: ரேவதி- 3.
குரு: கிருத்திகை- 2.
சுக்கிரன்: அஸ்வினி- 4.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: ரேவதி- 2.
கேது: அஸ்தம்- 4.
கிரக மாற்றம்:
சித்திரை 27 10-5-2024 மேஷ புதன் (மாலை 6.52).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மீனம்.
6-5-2024 மாலை 5.42 மணிக்கு மேஷம்.
8-5-2024 இரவு 7.06 மணிக்கு ரிஷபம்.
10-5-2024 இரவு 10.25 மணிக்கு மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து குடும்பத் தில் மகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். செவ்வாய், ராகு 12-ல் இணைந்து சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத் தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையலாம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். வேலை யாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக் கும். தொழில் முன்னேற்றத்திற் காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். புதிய யுத்திகளைப் பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். அதிகாரி யிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தங்களது தேர்வுகளில் நல்ல மதிப் பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியரின் பாராட்டு தலை பெறமுடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த கடன்கள் எல்லாம் தற்போது படிப்படியாக குறையும். உங்களுக்கு இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மேலும் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நற்பலனை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- ராகு, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். தற்போது குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் நீங்கள் உங்கள் தனித்திறமையால் எடுத்த பணியை குறித்து நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர் களை அனுசரித்துச்செல்வது, வயது மூத்தவரிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அதனைப்பற்றி கண்டுகொள்ளாமல் உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருந்தால் நல்லபெயர் எடுக்கமுடியும். தேவையற்ற பயணங்களை முடிந்த வரை தள்ளிவைப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன்- செவ்வாய், ராகு சேர்க்கைப்பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தும் சிறப்பான அமைப்பு என்பதால்
முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,
வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பரணி- 3.
செவ்வாய்: உத்திரட்டாதி- 2.
புதன்: ரேவதி- 3.
குரு: கிருத்திகை- 2.
சுக்கிரன்: அஸ்வினி- 4.
சனி: பூரட்டாதி- 1.
ராகு: ரேவதி- 2.
கேது: அஸ்தம்- 4.
கிரக மாற்றம்:
சித்திரை 27 10-5-2024 மேஷ புதன் (மாலை 6.52).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- மீனம்.
6-5-2024 மாலை 5.42 மணிக்கு மேஷம்.
8-5-2024 இரவு 7.06 மணிக்கு ரிஷபம்.
10-5-2024 இரவு 10.25 மணிக்கு மிதுனம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
ஜென்ம ராசியில் சூரியன், சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 11-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். உங்களின் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து குடும்பத் தில் மகிழ்ச்சி ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். செவ்வாய், ராகு 12-ல் இணைந்து சஞ்சரிப்பதால் முன்கோபத்தை குறைத்துக் கொண்டு எதிலும் நிதானத் தோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையலாம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர் பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். வேலை யாட்கள் ஆதரவு மிகச்சிறப்பாக இருக் கும். தொழில் முன்னேற்றத்திற் காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். புதிய யுத்திகளைப் பயன்படுத்தி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்டநாட்களாக இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறைந்து ஒரு கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். அதிகாரி யிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது மறைந்து சுமூகநிலை உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தங்களது தேர்வுகளில் நல்ல மதிப் பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியரின் பாராட்டு தலை பெறமுடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்துவந்த கடன்கள் எல்லாம் தற்போது படிப்படியாக குறையும். உங்களுக்கு இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். மேலும் வளமான பலன்களைப்பெற முருக வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நற்பலனை தரும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி சுக்கிரன்- ராகு, புதன் சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவில் ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் பிறருக்கு தந்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். தற்போது குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்து 7-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலை எளிதில் எடுக்கக்கூடிய பலம் உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லாவிட்டாலும் நீங்கள் உங்கள் தனித்திறமையால் எடுத்த பணியை குறித்து நேரத்தில் செய்து முடிக்கக்கூடிய பலம் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்புகள் மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன், சுக்கிரன் 12-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர் களை அனுசரித்துச்செல்வது, வயது மூத்தவரிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் சில இடையூறுகளை ஏற்படுத்தினாலும் அதனைப்பற்றி கண்டுகொள்ளாமல் உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருந்தால் நல்லபெயர் எடுக்கமுடியும். தேவையற்ற பயணங்களை முடிந்த வரை தள்ளிவைப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழி வகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நற்பலனை தரும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன்- செவ்வாய், ராகு சேர்க்கைப்பெற்று 10-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதும், சூரியன், சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்ப தும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களுடைய எண்ணங்கள் எல்லாம் நிறைவேறி மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடைவீர்கள். உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து குறிப்பாக வாங்கிய கடன்களைக் குறித்த நேரத்தில் திருப்பி தரக்கூடிய பலம் உண்டாகும். இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரிய மனிதர்களுடைய நட்பு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்க முடியாமல் இருந்த பிரச்சினைக்கெல்லாம் தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும் என்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்க முடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது நீங்கி நல்ல மாற்றம் ஏற்படும். உங்களின் பேச்சுத் திறமையால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் உழைப்புக்கான பலன் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரிகள் ஆதரவு சிறப் பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட எளிதில் செய்து முடிக்கமுடியும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் எந்த ஒரு விஷயத்தில் ஈடுபட்டாலும் அதில் அனு கூலமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் வழிபடுவதன்மூலம் வாழ்வில் ஏற்றங்கள் ஏற்படும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் குருபகவான் சஞ்சரிப்பது அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்ற முடியும். பாக்கிய ஸ்தானமான 9-ல் புதன், ராகு சஞ்சரிப்பதால் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சூரியன், சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்கக்கூடிய இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் தற்போது படிப்படியாக குறைந்து ஒரு சமூக நிலை உண்டாகும். உறவினர்கள்மூலமாக அனுகூல மான பலன்களை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டு மில்லாமல் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய பொருள் தேக்கங்கள் எல்லாம் தற்போது விலகி ஒரு சமூக மான நிலை உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றியைத் தந்து மனமகிழ்ச்சி ஏற்படும். ஒரு சிலருக்கு வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக மன மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். சனிபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் எடுத்துக்கொள்வது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக் கூடிய பலம் உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனை தற்போது அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. அதிகாரியுடைய பாராட்டுதலை பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
ராசியாதிபதி சூரியன்- சுக்கிரன் சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தானமான 9-ல் சஞ்சரிப்ப தால் எதிர்பாராத ஆதரவுகளை பெற்று எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குருபகவான் தற்போது 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, கூட்டாளிகளை அனுசரித் துச் செல்வது அனுகூலமான பலனை தரும். உங்களது முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது மிகவும் சிறப்பு. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று யோசித்து செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளிகளால் சில மனக் கவலைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களிடம் பேசுகின்றபோது சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. ஒருசிலருக்கு தேவையற்ற பயணங் கள் அதன்மூலம் வீண்செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமை யோடு இருப்பது நல்லது. உத்தி யோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் இருப்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களை சொல்வார்கள். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத வளர்ச்சியினை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது கெடுதியைக் குறைக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசியாதிபதி புதன் 7-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்கள் ராசிக்கு 6-ல் சனி, 9-ல் குரு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பணவரவுகள் மிகமிக தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் கடினமான காரியத்தைகூட எளிதில் செய்து முடிப்பீர்கள். ஆரோக் கியரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு உயர்வான நிலையினை எட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக சிறப்பாக இருக்கும். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழில் தொடர்பான விஷயங்களை முடிந்தவரை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் உங்கள் திறமை களை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பங்களும் ஏற்படும். அதிகாரியிடம் மட்டும் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு முன்னேற்றத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். திங்கள் மாலை, செவ்வாய், புதன் ஆகிய கிழமைகளில் எந்த ஒரு விஷயத்திலும் சற்று நிதானத்தோடு இருப்பது, புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, விநாயகர் வழிபாடு செய்வது நல்லது.
.துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்படக்கூடிய பலம் உண்டாகும். சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவு சற்று சாதகமாக இருந்து வளமான பலன்களைப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப் பாக இருப்பதால் மகிழ்ச்சி ஏற்படும். குருபகவான் 8-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற- இறக்கமாக இருக்கும் என்ற காரணத்தால் எதிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் சற்று கவனத்தோடு செயல்பட்டால்தான் அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். வேலையாட்கள் ஆதரவு மிகமிக சிறப்பாக இருந்தாலும் மறைமுக போட்டிகள் காரணமாக மன அமைதி குறைவு ஏற்படும். தொழிலில் அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தவிர்ப்பது மிகமிக நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை முடிந்தவரை பொதுவெளியில் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. உடல்நலத்தில் சற்று கவனம் செலுத்துவது மிகவும் சிறப்பு. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத தனச் சேர்க்கை ஏற்பட்டு உங்கள் விருப்பங்கள் நிறைவேறக்கூடிய யோகம் உண்டாகும். வியாழன், வெள்ளிக்கிழமைகளில் சுலபமாக முடிய வேண்டிய விஷயங்கள் சற்று தாமதமாகும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தட்சிணா மூர்த்தி வழிபாடு மேற்கொள்வதும் உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதும் நற்பலனை தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் மாதக் கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் உச்சம்பெற்று சஞ்சரிப்பதும், சம சப்தம ஸ்தானமான 7-ல் குரு வலுவாக சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். பொருளாதாரரீதியாக உங்களுக்கு இருந்துவந்த தேக்கங்கள் எல்லாம் தற்போது குறைந்து ஏற்ற மிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு நிலவிய மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது விலகி சுமூகமானநிலை ஏற்படும். மற்றவர்களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக் கூடிய பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மிக மிக நன்றாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகளில் ஒரு சுமூகமான தீர்வு கிடைக்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் பொருட்களுக்கு அதிகப்படியான விலை கிடைப்பதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் ஒரு வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய அமைப்பும் கடந்த காலங்களில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையக்கூடிய நிலையும் வரும் நாட்களில் உண்டு. மாணவ- மாணவியர்கள் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல மதிப்பெண்களைப் பெற்று பெற்றோர், ஆசிரியர்களின் பாராட்டுதலைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் ஒரு பெரிய இடத்து நட்பு கிடைத்து உங்களுக்கு இருக்கக்கூடிய சிக்கல்கள் குறையக்கூடிய ஒரு அதிர்ஷ்டங்கள் உண்டு. சனிக்கிழமையன்று வீண் குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது மிக மிக நல்லது. இந்த வாரத்தில் ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, முருகன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு பஞ்சம ஸ்தானமான 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் குடும்பத்தில் நடக்கும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஒரு வளமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் மிகச் சிறப்பாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் மற்றவர் களுக்கு நீங்கள் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலம் உண்டாகும். புதன் 4-ல் சஞ்சரிப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை எளிதில் அடையமுடியும். சின்ன சின்ன எதிர்ப்புகள் இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளித்துவிடுவீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய உதவிகளை பெறக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் மனநிம்மதியும், அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும் உண்டு. பணி நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்களால் உங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல நட்புகள் கிடைப்பதால் உங்களுக்கு இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் விலகி எதிலும் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். மாணவ- மாணவியர்கள் திறனை வெளிப்படுத்தும் போட்டிகளில் பங்கேற்று நல்லபெயர் எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பூர்வீக சொத்துவகையில் உங்களுக்கு கிடைக்கவேண்டியது தற்போது கிடைத்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத வகையில் வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு கிடைத்து உங்களுக்கிருந்த நெருக்கடிகள் குறையும். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, குரு பகவானுக்கு அர்ச்சனை செய்வது நற்பலனை தரும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எந்த ஒரு விஷயத்திலும் தைரியத்தோடு செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடையக்கூடிய பலம் உண்டாகும். எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடித்து பிறரிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். கடந்த ஒரு வருடகாலமாக 4-ல் சஞ்சரித்த குரு இனி 5-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு பணவரவுகள் மிகமிக சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் தடைப்பட்டுவந்த சுப காரியங்கள் தற்போது கைகூடும். சுக ஸ்தானமான 4-ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். உங்கள் ராசிக்கு 2-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகமிக நல்லது. முடிந்தவரை உங்களது கோபத்தை குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாமல் இருந்தால் ஒரு வளமான பலன்களைப் பெறலாம். தொழில், வியாபாரத்தில் நல்ல ஒரு வளர்ச்சியும், அதிகபடியான லாபங்களை அடையும் யோகமும் உண்டாகும். நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்துவந்த நெருக்கடிகள் எல்லாம் தற்போது குறைந்து மனதளவில் இருக்கக்கூடிய பாரம் எல்லாம் குறைந்து தொழிலில் நிம்மதியுடன் செயல்படமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் எதிலும் சிறப்பாக செயல்படக்கூடிய பலம் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்துரீதியாக உள்ள வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது, காலபைரவரை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு, 4-ல் குரு சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. நீங்கள் வெகுளித்தனமாக பேசினா லும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொண்டு உங்களுக்கு பிரச்சினைகளை உண்டாக்கி விடுவார்கள். முடிந்தவரை மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். ஒருசில விஷயங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். மாதக்கோள் என வர்ணிக்கப்படக்கூடிய சூரியன் 3-ல் சஞ்சரிப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து இருக்கக்கூடிய நெருக்கடிகளைச் சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து செல்வதன்மூலம் எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்துமுடித்து வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெறுவீர்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் அதன்மூலம் இருக்கக்கூடிய சிக்கல்களை சற்று குறைத்துக் கொள்ளமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை சற்று கூடுதலாக இருக்கும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களை தவிர்த்துவிட்டு உங்கள் பணியில் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும், நண்பர்கள்மூலமாக ஒருசில ஆதாயத்தை பெறுவீர்கள். லட்சுமி நரசிம்மரை வழிபாடு செய்வது, படிக்கும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நற்பலனை தரும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 2-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் நிதானத்தோடு செயல்பட வேண்டிய நேரமாகும். எதிர்பார்க்கிற பண வரவுகள் கிடைப்பதில் தேவையில்லாத தடங்கல்கள் ஏற்படும். ஒருசில காரியங்கள் முடியவேண்டிய நேரத்தில் தடைப்படக்கூடிய நேரமாகும். பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டும். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதாலும், சனி 12-ல் சஞ்சரிப்பதாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடன்பிறந்தவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது மிகமிக நல்லது. தொழில், வியாபாரத்தில் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை சரியானமுறையில் பயன்படுத்திக்கொள்வதன்மூலம் பொருளாதார நெருக்கடிகளை சற்று சமாளிக்கமுடியும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் அவர்களை சரியான முறையில் கையாள்வது உத்தமம். பொது இடங்களில் முக்கிய விஷயங்களை பேசாமல் இருப்பதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதால் உடல் அசதி ஏற்படும். அது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளிடம்கூட தேவையில்லாத வாக்குவாதங்கள் ஏற்பட்டு உங்களது மன அமைதி குறையும். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பேசுகின்றபொழுது சற்று முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மிக மிக நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்வில் புதிய மாற்றங் கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.