இந்த வார ராசிபலன் 5-11-2023 முதல் 11-11-2023 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-5-11-2023-11-11-2023

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: சுவாதி- 4.

செவ்வாய்: விசாகம்- 1.

புதன்: விசாகம்- 3.

குரு: பரணி- 1 (வ).

dd

சுக்கிரன்: உத்திரம்- 2.

சனி: அவிட்டம்- 4.

ராகு: ரேவதி- 4.

கேது: சித்திரை- 2.

கிரக மாற்றம்:

ஐப்பசி 20 (6-11-2023) விருச்சிக- புதன் (மாலை 4.25).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கடகம்

6-11-2023 பகல் 1.22 மணிக்கு சிம்மம்.

9-11-2023 அதிகாலை 2.00 மணிக்கு கன்னி.

11-11-2023 பகல் 1.00 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்ப தால் எதிலும் துணிவோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். வக்ர நிவர்த்தி அடைந்து சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பொருளா தார நெருக்கடிகள் எல்லாம் விலகி சேமிக்கும் அளவிற்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிலும் சற்று பொறுமை யோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை நீங்கள் அடைவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசாங்க வழியில் இருந்து வந்த இடையூறுகள் எல்லாம்கூட தற்போது விலகி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கேற்ற நல்லவாய்ப்புகள் தற்போது கிடைக்கும். சகஊழியரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு செயல்பட்டால் அவர்களால் ஆதாயம் அடையலாம். இடமாற்றத்தை எதிர் பார்த்தவர்களுக்கு ஒரு இனிய செய்தி வந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இவ்வாரத் தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட் களில் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் முழுவெற்றியினை பெறமுடியும். நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள்வழியில் பூரிப்பு ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் பகலவனை கண்ட பனிபோல முழுமையாக குறைந்து நீங்கள் எதிலும் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பதால் நிம்மதி அடைவீர்கள். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் உயர்வான நிலையினை எட்டும் காலமாக தற்போதைய நாட்கள் இருக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் புதிய ஆர்டர்களை துணிந்துபெற்று குறித்த நேரத்தில் செய்துமுடித்து லாபத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் காரியங்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு இருக்குமிடத்தில் நல்லபெயர் எடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானத்தை தற்போது பெற்று உங்களுடைய கடன்களை எளிதில் பைசல் செய்யமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், ஊர்மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, அஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 9-ல் சனி சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உற்றார்- உறவினர் களின்

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: சுவாதி- 4.

செவ்வாய்: விசாகம்- 1.

புதன்: விசாகம்- 3.

குரு: பரணி- 1 (வ).

dd

சுக்கிரன்: உத்திரம்- 2.

சனி: அவிட்டம்- 4.

ராகு: ரேவதி- 4.

கேது: சித்திரை- 2.

கிரக மாற்றம்:

ஐப்பசி 20 (6-11-2023) விருச்சிக- புதன் (மாலை 4.25).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- கடகம்

6-11-2023 பகல் 1.22 மணிக்கு சிம்மம்.

9-11-2023 அதிகாலை 2.00 மணிக்கு கன்னி.

11-11-2023 பகல் 1.00 மணிக்கு துலாம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 6-ல் கேது சஞ்சரிப்ப தால் எதிலும் துணிவோடு செயல்பட்டு பல்வேறு வளமான பலன்களை பெறுவீர்கள். வக்ர நிவர்த்தி அடைந்து சனி லாப ஸ்தானமான 11-ல் சஞ்சரிப்ப தால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பொருளா தார நெருக்கடிகள் எல்லாம் விலகி சேமிக்கும் அளவிற்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். சிலருக்கு பூமி, மனை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் ராசிக்கு சூரியன், செவ்வாய் 7-ல் சஞ்சரிப்பதால் வசதி வாய்ப்புகள் இருந்தாலும் அதனை அனுபவிக்க இடையூறுகள், குடும்பத்தில் ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். எதிலும் சற்று பொறுமை யோடு செயல்பட்டால் வளமான பலன்களை அடையும் வாய்ப்புண்டு. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்களை நீங்கள் அடைவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அரசாங்க வழியில் இருந்து வந்த இடையூறுகள் எல்லாம்கூட தற்போது விலகி தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் தகுதிக்கேற்ற நல்லவாய்ப்புகள் தற்போது கிடைக்கும். சகஊழியரிடம் பேசுகின்ற பொழுது சற்று பொறுமையோடு செயல்பட்டால் அவர்களால் ஆதாயம் அடையலாம். இடமாற்றத்தை எதிர் பார்த்தவர்களுக்கு ஒரு இனிய செய்தி வந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். இவ்வாரத் தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட் களில் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் முழுவெற்றியினை பெறமுடியும். நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது, படிக்கும் மாணவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது நல்லது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களை பெறுவீர்கள். குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி, பிள்ளைகள்வழியில் பூரிப்பு ஏற்படும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் பகலவனை கண்ட பனிபோல முழுமையாக குறைந்து நீங்கள் எதிலும் மனநிம்மதியுடன் செயல்படமுடியும். உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் வரும் நாட்களில் கைகூடி மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. எடுக்கும் முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பதால் நிம்மதி அடைவீர்கள். கேது 5-ல் சஞ்சரிப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடு இருந்தால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ராகு 11-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் உயர்வான நிலையினை எட்டும் காலமாக தற்போதைய நாட்கள் இருக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவதால் புதிய ஆர்டர்களை துணிந்துபெற்று குறித்த நேரத்தில் செய்துமுடித்து லாபத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எடுக்கும் காரியங்களில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு இருக்குமிடத்தில் நல்லபெயர் எடுக்கும் வாய்ப்பு ஏற்படும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானத்தை தற்போது பெற்று உங்களுடைய கடன்களை எளிதில் பைசல் செய்யமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம், ஊர்மாற்றம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் ஏற்பட்டு உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, அஞ்சனேயரை வழிபடுவது நல்லது.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 9-ல் சனி சஞ்சரிப்பதால் எந்தவித நெருக்கடியையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உற்றார்- உறவினர் களின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரரீதியாக ஆதாயங்களை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு 11-ல் உள்ள குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது. சுபகாரியங்கள் கைகூட கூடிய நேரத்தில் நெருங்கியவர்கள் செய்யும் செயலால் இடையூறுகள் ஏற்படும். 5-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது நன்று. நேரத்திற்கு சாப்பிடுவது உத்தமம். கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வதன்மூலம் பெரிய பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால்தான் ஒருசில ஆதாயங்களை அடையமுடியும். 4-ல் கேது, 10-ல் ராகு சஞ்சரிப்பதால் வேலையாட்கள்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை கலந்தாலோசித்து செயல்பட்டால் நல்ல லாபத்தை அடையமுடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை அதிகப்படியாக இருக்கும் நிலை, வீண்பழிகளை சுமக்கும் சூழல் ஏற்படும். அதிகாரிகள் ஆதரவு சற்று சாதகமாக இருப்பதால் நிலைமையை சமாளித்து அனுகூலங்களை அடைவீர்கள். உங்கள் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் முடிந்தவரை பேச்சைக் குறைத்துக்கொள்வது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங்களை அடையும் யோகம் உண்டு. முருக வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றுவது நல்லது.

dd

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் உங்களது உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது, தேவையற்ற பயணங்களை குறைத் துக்கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. பொருளாதாரரீதியாக கடுமையான நெருக்கடிகள் இருக்கும் என்றாலும் குரு பகவான் 10-ல் வக்ரகதியில் இருப்பதாலும் வரும் திங்கட்கிழமை முதல் உங்கள் ராசிக்கு புதன் 5-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் விலகும். அஷ்டமச்சனி நடப்பதால் சூழ்நிலைக்குத் தக்கவாறு எதிலும் சற்று பொறுமையோடு செயல்பட்டால் நிலைமையை சமாளித்து ஏற்றங் களை பெறமுடியும். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் அனைத்து விஷயத்திலும் கவனமாகக் கையாண்டால் இருக்கும் நிலைமையை சமாளிக்கமுடியும். மறைமுகப் போட்டிகள் அதிகப்படியாக இருந்தாலும் வேலையாட்களின் உதவியால் ஒருசில ஆதாயங்களை அடைவீர்கள். அரசு அதிகாரிகள் தரும் நெருக்கடிகளால் தொழில்ரீதியாக உங்களின் மன அமைதி குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். வேலைப்பளு காரணமாக அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், உடல் அசதி ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக செயல்பட்டால் சூழ்நிலையை சமாளிக்கமுடியும். வரும் ஞாயிறு, வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் மற்ற கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத ஆதாயங்களைப் பெறுவீர்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, பிரதோஷ நாளில் சிவ வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், திங்கட் கிழமைமுதல் 4-ல் புதன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும், எடுக்கும் முயற்சிகளில் பல்வேறு வெற்றிகளை குவிக்கும் யோகமும் உண்டு. ராசியாதிபதி சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் எந்த எதிர்ப்பையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 7-ல் சனி சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. வயது மூத்தவர்களின் ஆதரவால் சில ஆதாயம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சியை அடைவது மட்டுமில்லாமல் உங்களுக்கிருந்த நீண்ட நாளைய சோதனைகள் எல்லாம் விலகி கௌரவமான நிலையினை எட்டமுடியும். வேலையாட்கள் சில நெருக்கடிகளை ஏற்படுத்தினாலும் உங்கள் தனித் திறமையால் எதையும் சிறப்பாக கையாண்டு ஏற்றம்மிகுந்த பலன்களை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக அசையா சொத்துக்களில் முதலீடு செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் உதவியால் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்ச்சி ஒன்று அரங்கேறும். வேலைக்கு செல்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சக ஊழியர்கள் ஏற்படுத்திய இடையூறுகள் எல்லாம் தற்போது விலகி வேலைப்பளு குறையும். இவ்வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் எதிர்பாராத வகையில் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அமையும். சனிக்கிழமையன்று சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவது, துர்க்கையம்மனை வழிபாடு செய்வது நல்லது.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் சனி சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுக்கு உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். உங்களுக்கு இருந்த மறைமுக நெருக்கடிகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். ஜென்ம ராசியில் கேது, 2-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறைவு, தேவையில்லாத பிரச்சினைகள் உங்களைத் தேடி வரக்கூடிய நிலை ஏற்படலாம். வீண் வம்பு, நெருங்கியவர்களே உங்கள் நிம்மதியை குறைக்கும் நிலை நிலவும். எந்த விஷயத்திலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத் தோடு செயல்பட்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். பேச்சில் கவனமாக இருப்பது நல்லது. குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது, ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. சுக்கிரன் ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் தைரியத்தோடு செயல்பட்டு எடுத்த ஆர்டர்களை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பால் போட்ட முதலீட்டை எடுக்கும் வாய்ப்பு உண்டு. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் மட்டும் சற்று பொறுமை காப்பது நல்லது. வேலைக்கு செல்பவர்களுக்கு பணிச்சுமை சற்று அதிகப்படியாக இருந்தாலும் உடன் வேலை செய்பவர்களுடைய உதவியானது சிறப்பாக இருப்பதால் கடினமான பணியைகூட சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமாக தூரப்பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை, அதிக அலைச்சல், உடல் அசதி ஏற்படும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் நாட்களாக இருக்கும். சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது நல்லது.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். உங்கள் ராசிக்கு வரும் திங்கட்கிழமைமுதல் 2-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார உதவிகள் கிடைத்து எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். குறிப்பாக நண்பர்கள்வழியில் உங்களுக்கு அனுகூலங்கள் ஏற்படும். உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். குரு வக்ரகதியில் இருப்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்துகொள்வது நல்லது. ஜென்ம ராசியில் சூரியன், செவ்வாய் சேர்க்கைப் பெற்று சஞ்சரிப்பதால் சில நேரங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். முன்கோபத்தை குறைத்துகொள்வது, பிறர் பேச்சை கேட்டு குழப்பிக்கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையமுடியும். உடனிருப்பவர்களின் உதவியால் நீங்கள் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். மறைமுக எதிர்ப்பால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படும். அரசு அதிகாரிகளிடம் பேச்சில் பொறுமையோடு இருந்தால் அவர்கள்மூலம் ஒருசில அனுகூலங்களை அடைய முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு உழைப்பு அதிகமாக இருந்தாலும் அதற்கான சன்மானம் கிடைக்கும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருந்தால் நல்ல பெயர் எடுக்கமுடியும். பிறர் சொல்லும் ஆசை வார்த்தையை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்வது உத்தமம். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு பரிபூரண வெற்றி கிடைப்பதுடன் அதற்கான ஆதாயங்களும் கிடைக்கும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, சிவன் தலங்களுக்கு சென்றுவருவது சிறப்பு.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ஜென்ம ராசிக்கு 4-ல் சனி, 5-ல் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. சூரியன், செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். பொருளாதாரரீதியாக ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும் சுக்கிரன், கேது 11-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து நிலைமையை எதிர்கொள்ளமுடியும். நெருங்கிய உறவினர் கள் உதவியால் ஒரு சில அனுகூலங்கள் நடக்கும். குரு 6-ல் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று எச்சரிக்கையாக செயல்படுவது, மற்றவர்களை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். குடும்பத்தில் கணவன்- மனைவியிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் நேரம் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. ஒருசில நெருக்கடி இருந்தாலும் மங்களகரமான சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் மகிழ்ச்சியான செய்தியானது கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் ஏற்படும் சிறுசிறு நெருக்கடிகளை சமாளித்து போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வேலையாட்கள் தரும் நெருக்கடிகளால் உங்களுக்கு மன அமைதி குறையும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல் அசதி, ஓய்வு நேரம் குறையும் நிலை, இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான சன்மானம் கிடைத்தாலும் தற்போது நீங்கள் சற்று பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்ட முடியும். குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. வரும் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத சில அனுகூலங்களைப்பெற்று உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் குறையும். முருக வழிபாடு மேற்கொள்வது, ராகு காலத்தில் துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நல்லது.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

மாதக்கோளான சூரியன், செவ்வாய் 11-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். கடந்த 4 மாதமாக வக்ரகதியில் இருந்த சனி வக்ரநிவர்த்தி பெற்று 3-ல் சஞ்சரிப்பதால் நீண்ட நாட்களாக உங்களுக்கு இருக்கக்கூடிய சோதனைகள் எல்லாம் விலகி நல்ல வளர்ச்சியை அடைவீர்கள். பொருளாதாரரீதியாக ஏற்றம்மிகுந்த பலன்கள் ஏற்பட்டு உங்களின் கடன்கள் குறையும். சமுதாயத்தில் மற்றவர்கள் உங்களை மதிக்கும் அளவிற்கு ஒரு உயர்வான நிலையினை அடைவீர்கள். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றும் பலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரித்து மன நிம்மதி நிலவும். சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களின் நீண்டநாள் ஆசைகள் எல்லாம் எளிதில் நிறைவேறக்கூடிய ஒரு வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் எல்லாம் விலகி நல்லவாய்ப்புகளை பெறுவீர்கள். கொடுக்கல்- வாங்கல் ரீதியாக திறமையாக செயல்பட்டு அதிக லாபத்தை ஈட்டும் வாய்ப்பு உண்டு. வேலையாட்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவதால் கடந்த காலங்களி-ருந்துவந்த அலைச்சல்கள் எல்லாம் குறையும். வெளியூர், வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டுமென்ற உங்களுடைய எண்ணங்கள் தற்போது செயல்வடிவம் பெறும். உங்கள் ராசிக்கு 4-ல் ராகு சஞ்சரிப்பதால் அஜீரணக் கோளாறு, உடல் உபாதைகள் ஏற்படும் நேரம் என்பதால் எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. வரும் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மனம் மகிழும் இனிய செய்திகள் உங்களுக்கு கிடைக்கும். ஞாயிறு, திங்கள் முற்பகல் நேரங்களில் அலைச்சல்கள் அதிகப்படியாக இருக்கும். உக்ர தெய்வங்களை வழிபடுவது, ஏழைகளுக்கு உங்களால் முடிந்த உதவியைச்செய்வது சிறப்பு.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 3-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்றம் மிகுந்த பலன்களை அடைவீர்கள். ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். குரு வக்ர கதியில் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். சனி 2-ல் சஞ்சரிப்பதால் குடும்ப ஒற்றுமை சுமாராக இருக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உங்களுக்கு இருந்த நீண்டநாள் பிரச்சினைகள், வம்பு, வழக்குகள் யாவும் வரும் நாட்களில் முடிவுக்கு வரும். உற்றார்- உறவினரிடம் விட்டு கொடுத்துசெல்வது நல்லது. வீடு, மனை வாங்க வேண்டும் என்ற உங்களுடைய எண்ணங்களை பூர்த்தி செய்துகொள்ளமுடியும். பிள்ளைகள்வழியில் ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமில்லாமல் தொழில் விருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகளும் கிடைக்கும். தகுதிவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலுக்கு கிடைப்பதால் எதிலும் புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல பதவி உயர்வு கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான பலனை வரும் நாட்களில் அடையமுடியும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல நிறுவனத்தி-ருந்து அழைப்புவரும். இவ்வாரத்தில் ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் உங்களுக்கு மறக்கமுடியாத இனிய நிகழ்ச்சிகள் நடக்கும். திங்கள் மதியம், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் தேவையில்லாத குழப்பங்கள் ஏற்படும். சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்களுக்கு ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடைபெறுவதாலும், குரு பகவான் முயற்சி ஸ்தானமான 3-ல் சஞ்சரிப்பதாலும் பொருளாதார ரீதியாக நெருக்கடிகள், அலைச்சல், டென்ஷன் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் சற்று சிக்கனத்தோடு சூழ்நிலையை புரிந்துகொண்டு நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. இவ்வாரத்தில் சூரியன், செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பது, வரும் திங்கட்கிழமைமுதல் புதன் 10-ல் சஞ்சரிப்பது சற்று அனுகூலமான அமைப்பு என்பதால் எதிர்பாராத உதவிகள் உடனிருப்பவர்கள் மூலம் பெற்று நிலைமையைச் சமாளிப்பீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களை நம்பாமல் எந்த செய-லும் நீங்கள் நேரடியாக ஈடுபட்டால் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். வெளிநபர்கள் தரும் இடையூறுகளால் தொழி-ல் உங்கள் மன அமைதி குறையும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்போதைக்கு தள்ளிவைப்பது நல்லது. நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக புரிந்துகொள்வார்கள் என்பதால் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்களுடைய வேலையையும் நீங்கள் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை ஏற்படும். அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுக்கொண்டு எதிலும் அவசரப்படாமல் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. இவ்வாரத்தில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன்கிழமைகளில் உங்களுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் நடக்கும். வியாழன் வெள்ளி, சனி முற்பகல் நாட்களில் தேவையற்ற குழப்பங்கள் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலை ஏற்படும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது சிறப்பு.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ஜென்ம ராசியில் ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தைச் சற்று குறைத்துக்கொண்டு பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, கணவன்- மனைவியிடையே விட்டுக் கொடுத்துச் செல்வது உத்தமம். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் பண பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத் தோடு இருப்பது, அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்கா-கமாக தவிர்ப்பது நல்லது. பங்காளிவகையில் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் சூழ்நிலைக்கு தக்கவாறு பொறுமையாக நடந்துக்கொள்வது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் கூறும் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் கிடைக்கும் சிறுசிறு வாய்ப்புகளையும் தக்கமுறையில் பயன்படுத்திக் கொண்டால் விரைவில் உங்கள் தொழி-ல் நல்லமுன்னேற்றங்கள் உண்டாகும். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருப்பதால் மனநிம்மதி குறைவுகள், ஓய்வு இல்லாத நிலை ஏற்படும். அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமல் தற்போதைக்கு சற்று பொறுமையோடு இருந்துவிட்டால் விரைவில் உங்கள் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மாற்றங்கள் உண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் குறையும். சனிக்கிழமை மதியம் வீண் நிம்மதிக்குறைவு ஏற்படலாம் என்பதால் நிதானமாக இருப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்குச் சென்றுவருவது, குலதெய்வ வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

bala101123
இதையும் படியுங்கள்
Subscribe