முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532.

Advertisment

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: ரோகிணி- 3.

Advertisment

செவ்வாய்: பூசம்- 4.

புதன்: பரணி- 4.

குரு: அஸ்வினி- 3.

ss

சுக்கிரன்: பூசம்- 1.

சனி: சதயம்- 2.

ராகு: அஸ்வினி- 3.

கேது: சுவாதி- 1.

கிரக மாற்றம்:

வைகாசி 24 (7-6-2023) ரிஷப புதன் (இரவு 7.50).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- விருச்சிகம்.

5-6-2023 அதிகாலை 3.23 மணிக்கு தனுசு.

7-6-2023 அதிகாலை 4.40 மணிக்கு மகரம்.

9-6-2023 காலை 6.02 மணிக்கு கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருந்து அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. குரு பார்வை 7-ஆம் வீட்டுக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய யோகம் வரும் நாட்களில் உண்டு. நெருங்கியவரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், 4-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது, தேவையற்ற பயணங்களைக் குறைத்துக்கொள்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய யோகங்கள் உண்டு. வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகமிக நன்றாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எடுத்த பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். நீண்டநாட்களாக உங்களுக்கு இருந்த தடங்கல்கள் விலகும். இருக்குமிடத்தில் கௌரவமான நிலையினை அடையும் வாய்ப்புண்டாகும். வேலை நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களும் அதன்மூலமாக தகுந்த சன்மானமும் கிடைக்கும். வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் சற்று குறையும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றி கிடைக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நற்பலனைத் தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன்- செவ்வாயுடன் 3-ல் இருப்பதால் எதிலும் துணிவோடு செயல்பட்டு அனைத்து பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். கேது 6-ல் இருப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைக்கும். ஜென்ம ராசியில் சூரியன், 12-ல் குரு சஞ்சரிப்பதால் முன்கோபத்தை சற்று குறைத் துக்கொள்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதும், பணப் பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத் தோடு இருப்பதும் நன்மையைத் தரும். சில விஷயங்களில் நீங்கள் நினைப்பது ஒன்று- நடப்பது ஒன்றாக இருக்கும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காது. எதிர்பாராத வகையில் சில சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், உங்களுடைய தொழில் தொடர்பான கணக்குகளை மிகவும் கவனத் தோடு கையாள்வது நல்லது. ஒருசில நேரங்களில் நீங்கள் பெரிதும் நம்பிய வேலையாட்களே மிகப்பெரிய நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன நிம்மதி குறையும். அதிகாரியிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. பிள்ளைகள்வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைத்து நெருக்கடிகள் சற்று குறையும்.. தட்சிணாமூர்த்தி வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 11-ல் குரு, ராகு சஞ்சரிப்பது சகல விதத்திலும் அனுகூலத்தை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். நீண்டநாளைய கனவுகள் எல்லாம் வரும் நாட்களில் நிறைவேறி மன மகிழ்ச்சி உண்டாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் அனுகூலம், பயணங்களால் மேன்மைகள் ஏற்படும். ராசிக்கு 2-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது மிகவும் நல்லது. ஒருசிலருக்கு தேவையற்ற பயணங்களும் அதன் மூலம் வீண் செலவுகளும் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சியை அடைந்து மன மகிழ்ச்சி பெறுவீர்கள். வேலையாட்கள் ஆதரவாக இருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் எடுத்த ஆர்டர்களை டெலிவரி செய்வீர்கள். உங்களுக்கிருந்த தேவையற்ற நெருக்கடிகள் எல்லாம் முழுமையாகத் குறைந்து நிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல், பிறரால் முடிக்கமுடியாத கடினமான பணிகளைக்கூட நீங்கள் எளிதில் செய்துமுடிப்பீர்கள். பூர்வீக சொத்துவகையில் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும். உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.. முருக வழிபாடு, சிவன்தலங்களுக்குச் சென்றுவருவது வாழ்க்கையை வளமாக்கும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். ஜென்ம ராசிக்கு 10-ல் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத் தில் சிக்கனத்தோடு இருந்தால்தான் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். ஜென்ம ராசியில் செவ்வாய், 8-ல் சனி சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. நெருங்கிய உறவினர்களால் வீண் சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமலிருப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் நீங்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால்தான் போட்ட முதலை எடுக்கமுடியும். கூட்டாளிகள் தேவையற்ற நெருக்கடிகளைத் தருவார்கள். பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைப்பதால் நீண்ட நாட்களாகத் தீர்க்கமுடியாமல் இருந்துவந்த ஒரு சிக்கல் முடிவுக்குவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக் கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. அதிகாரியிடம் ஒற்றுமை சிறப்பாக இருப்பதால் எதையும் எளிதில் சமாளிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் கள் அதிகரிக்கும். சில நேரங் களில் பணியில் சிறப்பாக செயல் பட உங்களது ஆரோக்கியமே இடையூறாக இருக்கும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். சனிபகவானுக்கு சனிக்கிழமையன்று எள்தீபமேற்றுவது, துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது கெடுதியைக் குறைக்கும்.

sf

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி சூரியன் 10-ல் சிறப் பாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். குரு, ராகு 9-ல் இருப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் விலகி மன மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை, பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் வரும் நாட்களில் ஏற்படும். உங்கள் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாவது மட்டு மல்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை எளிதில் பைசல் செய்யமுடியும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படும். தொழில், வியாபாரத் தில் நல்ல வளர்ச்சி யினைப் பெறக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தொழிலை அபிவிருத்தி செய்யவேண்டும் என்ற எண்ணங்கள் வரும் நாட்களில் நிறைவேறும். ஒருசிலருக்கு புதிய பொருட்களை வாங்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. தன லாபாதிபதியான புதன் இந்த வாரத்தில் 9, 10-ல் சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைக் குவிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, உங்கள்மீதிருந்த பழிச் சொற்கள் எல்லாம் விலகி நல்லபெயர் எடுக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு தற்போது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகி வீண்செலவுகள் குறையும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். முருக வழிபாடு, மகாலட்சுமியை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சுக்கிரன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் வரும் நாட்களில் உண்டு. சனி 6-ல் பலமாக இருப்பதால் எதையும் எதிர்கொண்டு சகல விதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நற்பண்பை புரிந்துகொண்டு நட்புடன் பழகுவார்கள். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் புதன் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் வீட்டில் சஞ்சரிக்கவிருப்பதால் சின்னச்சின்ன பிரச்சினைகள் எல்லாம்கூட முழுமையாக முடிவுக்கு வந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகளைப் பெறுவது மட்டுமல்லாமல் நீண்டநாட்களாக நீங்கள் நினைத்ததெல்லாம் தற்போது நடக்கும் வாய்ப்புகள் உண்டு. மறைமுக எதிர்ப்புகள் விலகும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வெளியூர் தொடர்புகள்மூலமாக அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் விரும்பிய இடமாற்றங்கள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் வரும் நாட்களில் உண்டு. அதிகாரிகள் ஒத்துழைப்பு மிகச் சிறப்பாக இருப்பதால் கடினமான செயல்களைக்கூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி கிடைக்கக்கூடிய நாட்களாக இருக்கும். குறிப்பாக இந்த நாட்களில் முக்கியமான முடிவுகளை எடுப்பதன்மூலம் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும். தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் கொண்டைக்கடலை மாலை சாற்றி, நெய்தீபம் ஏற்றுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது கெடுதியைக் குறைக்கும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சுக்கிரன், செவ்வாயுடன் 10-ல் சஞ்சரிப்பதால் உங்களது மதிப்பும், மரியாதையும் மேலோங்கக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் உங்களது உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் குறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உறவினர் களுடைய ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். சமுதாயத்தில் கௌரவமான நிலையினை எட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி, பொறாமைகள் விலகி லாபங்கள் அதிகரிக்கும். உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பதால் போட்ட முதலை எடுப்பது மட்டுமல்லாமல் நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்ய முடியும். சூரியன் இந்த வாரத்தில் 8-ல் சஞ்சரிப்பதால் வயது மூத்தவர்களிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்கள் பணியில் மட்டும் நீங்கள் கவனத்தோடு செயல்பட்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். உடன்வேலை செய்பவர்கள் சில இடையூறுகளைச் செய்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள். உத்தியோகரீதியாக அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களி னால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப் பலன்களும் உண்டாகும். திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப் பாக இருப்பதால் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து செயல்களுக்கும் நல்ல ஆதரவு கிடைக்கும். உங்கள் எதிர்பார்ப்புகள் இந்த நாட்களில் எளிதில் நிறைவேறும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு செயல்படுவது நல்லது. சனி, குரு தற்போது சாதகமற்று சஞ்சரிப்ப தால் பணப்பரிமாற்ற விஷயங்களில் உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக தேவையற்ற இடையூறுகள் உண்டாகும். பிறருக்குத் தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்ற முடியாது. ராகு 6-ல் இருப்பதாலும், சுக்கிரன், செவ்வாய் 9-ல் சஞ்சரிப்பதாலும் எதிர்பாராத சில உதவிகள் கிடைத்து அதன்மூலம் உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சிலருக்கு வெளியூர்மூலமாக மகிழ்ச்சிதரக்கூடிய இனிய செய்திகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் காலநேரம் பார்க்காமல் உழைத்தால் மட்டுமே போட்ட முதலை எடுக்கமுடியும். ஒருசில வாய்ப்புக்காக சில விஷயங்களை விட்டுக்கொடுத்து செல்லவேண்டிய சூழல் நிலவும். உங்களுக்குள்ள நெருக்கடிகளை புரிந்துகொள்ளாமல் வேலையாட்களே சில நேரங்களில் இடையூறுகளை ஏற்படுத்து வார்கள். தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமல்லாமல் அதிகாரியிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சில நேரங்களில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் தக்கநேரத்தில் கிடைப்பதால் நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவிகளை செய்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள்நிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது கெடுதியைக் குறைக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு 5-ல் வலுவாக சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச் சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உடனிருப்பவர் கள் உறுதுணையாக இருப்பார்கள். பண வரவுகள் சிறப்பாக இருந்து தேவைகள் பூர்த்தியாவதுடன், மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் எளிதில் காப்பாற்றமுடியும். சனி 3-லும், சூரியன் 6-லும் சஞ்சரிப்பதால் நீங்கள் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் பரிபூரண வெற்றி கிடைப்பது மட்டுமல்லாமல் கடந்தகால சட்டச் சிக்கல்கள் முழுமையாக விலகி மன நிம்மதி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவுக்கு மிக உயரிய நிலையை எட்டக்கூடிய அமைப்புண்டு. நீண்டநாட்களாக எதிர்பார்த்த நல்ல வாய்ப்புகள் கிடைத்து நிம்மதி ஏற்படும். சமுதாயத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நல்ல அந்தஸ்தைப் பெறுவீர்கள். ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் விலகுவது மட்டுமல்லாமல் மனைவி, பிள்ளைகளுடைய ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நீண்டநாளைய சிக்கல்கள் முழுமையாக விலகி, உங்களது மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமல்லாமல், உங்களுக்கிருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து பொருளாதாரரீதியாக சிறப்பான நிலையினை எட்டுவீர்கள். திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்கள் கிடைக்கும். உங்கள் முயற்சிகள் வெற்றிபெறும். முருக வழிபாடு, மகாலட்சுமியை தரிசிப்பது கெடுதியைக் குறைக்கும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குரு, ராகு 4-ல் சஞ்சரிப்பதால் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு அதன்மூலம் பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும். சில நேரங்களில் அத்தியாவசிய செலவுகளை கையாள்வதற்கே அரும்பாடுபட வேண்டியிருக்கும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு குடும்பத்தில் நிம்மதிக் குறைவு ஏற்படும். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, பேச்சில் நிதானத்துடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நீங்கள் கடினமாக உழைத்தாலும் ஒருசிலரின் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள் தடைப்படும். வேலையாட்கள் வீண் பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருப்பது நல்லது. முடிந்தவரை தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது, உடல்நலத்தில் கவனம் செலுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒவ்வொரு செயலிலும் சற்று கவனத் தோடு இருந்தால்தான் தற்போதிருக்கும் வாய்ப்புகளைத் தக்கவைத்துக்கொள்ள முடியும். உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்கள் சொல்வதற்கு வாய்ப்புகள் உண்டு. நீங்கள் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதகமற்றிருந்தாலும் சந்திரன் அனுகூலமாக இருப்பதால் ஒருசில உதவிகள் கிடைத்து, நெருக்கடிகள் குறைந்து மனமகிழ்ச்சி உண்டாகும். முருக வழிபாடு, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது நன்று.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதாலும், 4-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்பட்டு இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, மனைவி, பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது உத்தமம். தன காரகன் குருபகவான் 3-ல் சஞ்சரிப்பது சாதகமற்ற அமைப்பென்பதால் பண விஷயத்தில் மிகவும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நெருங்கிய உறவினர்களே நெருக்கடியை ஏற்படுத்தும் நேரமென்பதால், பொதுவாக வெளி நபர்களிடம் எதைப் பற்றியும் பேசாமலிருப்பது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. தொழில்ரீதியாக மறைமுக போட்டிகள் காரணமாக உங்கள் உழைப்புக்கான பலனை அடைய இடையூறுகள் உண்டாகும். எந்திரங்கள் பழுதாவதால் வீண் விரயங்களை எதிர்கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிசுமை காரணமாக குடும்பத்தில் மனைவி, பிள்ளைகளிடம் கருத்து வேற்றுமை உண்டாகும். ராகு 3-ல், செவ்வாய் 6-ல் இருப்பதால் தக்க நேரத்தில் உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் பணியில் தற்போதைக்கு பொறுமையோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல நிலையை எட்டமுடியும். பொதுவாக எந்த செயலிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவது பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். பிரதான கிரகங்கள் அனுகூலமற்றிருந்தாலும், ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். வியாழக்கிழமை குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றி அர்ச்சனை செய்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது நல்லது.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பிறருக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றுவீர்கள். குருபகவான் தன ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் வாங்கிய கடன்களைப் படிப்படியாகக் குறைத் துக்கொள்வீர்கள். பெற்றோர்களுடைய ஆதரவானது சிறப்பாக இருப்பதால் குடும்பத்தில் நிலவிய நிம்மதியற்ற நிலை விலகி மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள் வழியில் இருந்துவந்த கவலைகள் முழுமை யாக குறையும். தொழில், வியாபாரத்தில் படிப் படியான முன்னேற்றங்களைப் பெறுவது மட்டுமல்லாமல் தொழில்ரீதியாக நீங்கள் எதிர்பார்த்த அரசாங்க உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். வேலையாட்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். ஒவ்வொரு செயலிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சமுதாயத்தில் நல்ல நிலையை எட்டுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லா மல் சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார் கள். பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருந்தால் தேவையற்ற கருத்து வேறுபாடு களைத் தவிர்க்கமுடியும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மிகவும் அனுகூலமான பலன்களை ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும். இந்த நாட்களில் நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் துலங்கும். தடைப்பட்ட சுபகாரிய முயற்சி களை மேற்கொண்டால் சாதகமாக முடியும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது நல்லது.