இந்த வார ராசிபலன் 4-2-2024 முதல் 10-2-2024 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-4-2-2024-10-2-2024

முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532. அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 4.

செவ்வாய்: உத்திராடம்- 1.

புதன்: உத்திராடம்- 3.

குரு: பரணி- 1.

சுக்கிரன்: பூராடம்- 3.

சனி: சதயம்- 2.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

கிரக மாற்றம்:

தை 22 (5-2-2024) மகரச் செவ்வாய் (இரவு (9.43).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- விருச்சிகம்.

6-2-2024 காலை 7.35 மணிக்கு தனுசு.

8-2-2024 காலை 10.04 மணிக்கு மகரம்.

10-2-2024 காலை 10.02 மணிக்கு கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ராசியாதிபதி செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமை முதல் உங்கள் ராசிக்கு 10-ல் உச்சம்பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமானப் பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் மறைமுகப் போட்டிகள் விலகக்கூடிய நேரமாகும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளையும் உத்தரவுகளையும் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இடையூறு தந்த அதிகாரிகள் இடம்மாறி செல்வதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற குழப்பங்கள் சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடியநிலை ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் துணிந்து எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அணுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

rasipalan

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமை முதல் 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் தற்போது இருக்கக்கூடிய உடல் ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சூரியன், புதன் 9-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவால் எந்த நெருக்கடியையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். குரு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் வெளிநபர்களிடம் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துக்கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக பணிச்சுமை காரணமாக உடல் அசதி ஏற்படலாம். உடன் வேலைச் செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். செவ்வாய், புதன், வியாழன் காலை நேரங்களில் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் நேரமென்பதால் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் தீபமேற்றுவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்

முனைவர் முருகுபாலமுருகன் எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா.

தொலைபேசி: 044 24881038, 2483 9532. அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: திருவோணம்- 4.

செவ்வாய்: உத்திராடம்- 1.

புதன்: உத்திராடம்- 3.

குரு: பரணி- 1.

சுக்கிரன்: பூராடம்- 3.

சனி: சதயம்- 2.

ராகு: ரேவதி- 3.

கேது: சித்திரை- 1.

கிரக மாற்றம்:

தை 22 (5-2-2024) மகரச் செவ்வாய் (இரவு (9.43).

சந்திரன் மாறுதல்

ஆரம்பம்- விருச்சிகம்.

6-2-2024 காலை 7.35 மணிக்கு தனுசு.

8-2-2024 காலை 10.04 மணிக்கு மகரம்.

10-2-2024 காலை 10.02 மணிக்கு கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானமான 10-ல் சூரியன், புதன் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். ராசியாதிபதி செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமை முதல் உங்கள் ராசிக்கு 10-ல் உச்சம்பெற்று சஞ்சாரம் செய்ய இருப்பதால் சமுதாயத்தில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். சனிபகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் பணவரவுகள் மிக திருப்திகரமாக இருந்து அனைத்து தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் நவீனகரமானப் பொருட்களை வாங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றமுடியும். குரு பார்வை 5, 7, 9 ஆகிய ஸ்தானங் களுக்கு இருப்பதால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கக்கூடிய அமைப்பு, பூர்வீகச் சொத்துவகையில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் மறைமுகப் போட்டிகள் விலகக்கூடிய நேரமாகும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகளையும் உத்தரவுகளையும் பெறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு இடையூறு தந்த அதிகாரிகள் இடம்மாறி செல்வதால் மனநிம்மதியுடன் பணிபுரிய முடியும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுடைய பாராட்டுதலை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் தேவையற்ற குழப்பங்கள் சுலபமாக முடிய வேண்டிய காரியங்கள் தாமதமாக கூடியநிலை ஏற்படும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் துணிந்து எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் முழுமையான அணுகூலங்களை பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது நன்மை தரும்.

rasipalan

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் ராகு சஞ்சாரம் செய்வதால் ஒரு சில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு தற்போது 8-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமை முதல் 9-ஆம் வீட்டுக்கு மாறுதலாக இருப்பதால் தற்போது இருக்கக்கூடிய உடல் ஆரோக்கிய பாதிப்புகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சூரியன், புதன் 9-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் ஆதரவால் எந்த நெருக்கடியையும் சமாளிக்கக் கூடிய பலம் உண்டாகும். குரு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் சிந்தித்துச் செயல்பட வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும் என்பதால் கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் வெளிநபர்களிடம் சூழலுக்கு ஏற்றவாறு நடந்துக்கொள்வது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிக பணிச்சுமை காரணமாக உடல் அசதி ஏற்படலாம். உடன் வேலைச் செய்பவர்கள் உங்கள்மீது வீண் பழிச்சொற்களைச் சொல்லக்கூடிய நேரமென்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது தற்போதைக்கு நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கக்கூடிய நாட்களாக இருக்கும். செவ்வாய், புதன், வியாழன் காலை நேரங்களில் தேவையற்ற அலைச்சல் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும் நேரமென்பதால் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமைகளில் தீபமேற்றுவது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு சம சப்தம ஸ்தானமான 7-ல் சுக்கிரன் சாதகமாக சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சனி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். குரு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. நீங்கள் வாங்கிய கடன்களை குறைத் துக்கொள்ள முடியும். குடும்பத்துக்கு தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உடல்ரீதியாக இருந்த பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு விலகுவதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ல் சூரியன் சஞ்சரிப்பதாலும் செவ்வாய்க்கிழமை முதல் 8-ல் செவ்வாய் சஞ்சாரம் செய்ய இருப்பதாலும் நெருங்கியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை சிறப்பாக இருப்பதால் நல்ல லாபத்தை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாம-ருந்தால் வளமான பலன்களைபெற முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கக்கூடிய ஒரு நேரமாகும். அதிகாரியிடம் வீண் வாக்குவாதங்கள் செய்யாம-ருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் போட்டித்தேர்வுகளில் பங்கேற்று பரிசுகளைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்படக்கூடிய நேரமாக இருக்கும். வியாழன், வெள்ளி, சனி காலை காலங்களில் மனகுழப்பங்கள் ஏற்படும் என்பதால் புதியமுயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு சமசப்தம ஸ்தானமான 7-ல் சூரியன் சஞ்சாரம் செய்வதாலும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் செவ்வாய் 7-ல் சஞ்சாரம் செய்வதாலும் எதிலும் நிதானத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். உங்களது முன்கோபத்தை குறைத் துக் கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். சனி 8-ல் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. குரு 10-ல் சஞ்சரிக்க கூடிய நேரமென்பதால் தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தள்ளிவைக்க வேண்டிய நேரம் ஆகும். ஒரு சிலருக்கு கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். புதன் 7-ல் சஞ்சரிப்பதால் எவ்வளவு நெருக்கடி இருந்தாலும் உங்கள் தனித்திறமையால் எதையும் சமாளிக்கக்கூடிய பலம் உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு தேவையற்ற பழிச்சொற்களை எதிர்கொள்ளக்கூடிய ஒரு நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தை செலுத்துவது மிகமிக நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் உத்தமம். மாணவ- மாணவியர்கள் நண்பர்களிடம் பேசுகின்ற பொழுது மிகவும் கவனத்தோடு இருக்கவேண்டிய நேரமாகும். குறிப்பாக நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை தரக்கூடிய நாட்களாக இருக்கும். சனிக்கிழமை அன்று புதிய முயற்சிகளை தவிர்ப்பது மிகமிக நல்லது. இந்த வாரத்தில் ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்று விடுவது நல்லது.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசியாதிபதி சூரியன் ருண, ரோக ஸ்தானமான 6-ல் சஞ்சாரம் செய்வது மட்டுமில்லாமல் வரும் 6-ம் தேதிமுதல் செவ்வாயும் 6-ல் சஞ்சாரம் செய்வதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். இருக்குமிடத்தில் ஒரு கௌரவமான நிலையினை அடைவீர்கள். உங்களுக்கு இருந்துவந்த வம்பு, வழக்குகள் எல்லாமிருந்த இடம் தெரியாமல் மறையும். சுக்கிரன் பஞ்சமஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் மனைவி, பிள்ளைகள் விரும்பியதை வாங்கித்தரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, நேரத்துக்கு சாப்பிடுவது நல்லது. குருபகவான் பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருப்பது மட்டுமில்லாமல் மங்களகரமான சுப காரியங்கள் எளிதில் கைகூடும். தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு ஒரு கௌரவமான நிலையை அடைவீர்கள். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிட்டும். வேலையாட்கள் சிறப்பாக செயல்படுவதால் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் குறையும். எடுத்தப் பணியை குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப்பெண் பெற்று பெற்றோர் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராதவகையில் பணவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, காலபைரவரை வழிபாடு செய்வதன்மூலம் உங்கள் சங்கடங்கள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். சுக ஸ்தானமான 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் ராசிக்கு சனி 6-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். எந்த ஒரு காரியத்திலும் தைரியத்தோடு செயல்பட்டு அனுகூலங்களைப் பெறமுடியும். தொழில், வியாபாரத்தில் உங்கள் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் குறையும். வேலையாட்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நீங்கள் நிம்மதியுடன் செயல்பட முடியும். கடந்தகால சட்ட சிக்கல்கள் எல்லாம் விலகி மனநிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் அதிகாரிகள் ஆதரவு மிகமிக நன்றாக இருக்கும். ஒருசிலருக்கு விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைக்கும். உங்கள் ராசிக்கு 7-ல் ராகு இருப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது மிகமிக நல்லது. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டு சற்று சிக்கனத்தோடு செயல்படு வதும் உத்தமம். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் உயர்படிப்புக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் வெற்றிபெறக் கூடிய ஒரு அனுகூலங்களும் உண்டாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்கள் நீங்கள் எந்த செய-ல் ஈடுபட்டாலும் அதில் நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 5-ல் சனி, 6-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். குருபகவான் 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து உங்களது குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டும் இல்லாமல் குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைக்கூடும். உங்கள் ராசிக்கு 4-ல் சூரியனும், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் செவ்வாய் 4-ல் சஞ்சரிப்பதால் அலைச்சல்கள் அதிகரிக்கும், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் தற்போது குறைவதால் போட்ட முதலை எளிதில் எடுக்கமுடியும். வெளியூர் தொடர்புகள்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைகூட உங்கள் தனித்திறனால் சிறப்பாக செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு பெருமை சேர்ப்பீர்கள். உடன் பிறந்தவரிடம் பேசுகின்றபொழுது சற்று பொறுமையோடு பேசுவது நல்லது. சிலருக்கு ஆலயங்களுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்பு உண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதற்கு முழுமையான ஆதரவு கிடைக்கும். காலபைரவரை வழிபாடு செய்வது, முருகன் தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் சூரியன் சஞ்சரிப்பதும், தற்போது 2-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 3-ல் சஞ்சாரம் செய்யவிருப்பதும் நல்ல அமைப்பு என்பதால் நீங்கள் மேற்கொள்ளக்கூடிய அனைத்து செயல்களுக்கும் உடனிருப்பவர்கள் ஆதரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் எல்லாம் விலகி ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களது அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். 2-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் பெண்கள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் ராசிக்கு 6-ல் குரு சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. தொழில் தொடர்பான விஷயங்களை வெளிநபர்களிடம் பகிர்ந்துகொள்ளாம -ருந்தால் தொழி-ல் அனுகூலமான பலன்களை பெறமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்காது என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் நீங்கள் நேரடியாக செயல்பட்டால் போட்ட முதலை எடுக்கமுடியும். வேலைக் குச் செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகளும் அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கக்கூடிய நிலையும் தற்போதைக்கு நிலவும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் கவனம் செலுத்தாமல் படிப்பில் அதிக கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் புதியமுயற்சிகளை மேற்கொண்டால் அதில் நீங்கள் எதிர்பார்த்த நற்பலனை அடையமுடியும். தட்சிணாமூர்த்தி வழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசியில் சுக்கிரன், 3-ல் சனி சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். குருபகவான் பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் அமோகமாக இருந்து சகல சௌபாக்கியங்களையும் அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மற்றவர்களுக்குத் தந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது மட்டுமில்லாமல் உங்களுக்கு இருந்துவந்த கடன் பிரச்சினைகளைக் குறைத்துக்கொள்ளமுடியும். நீங்கள் நீண்டநாட்களாக எதிர்பார்த்த கௌரவமான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், வரும் செவ்வாய்க்கிழமைமுதல் 2-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது முடிந்தவரை உணர்ச்சிவசப்படாமல் குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடந்தகால பிரச்சினைகள் எல்லாம் குறைந்து சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக மாறி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் எல்லாம் தற்போது குறைவதால் மனநிம்மதி உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு கௌரவமான இடத்தி-ருந்து நல்லவாய்ப்புகள் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. மனைவி, பிள்ளைகள் விரும்பிய பொருட்களை வாங்கித்தரக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படக்கூடிய காலமாகும். ஒருசிலர் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, லட்சுமி நரசிம்மர் வழிபாடு மேற்கொள்வது வளமானப் பலனை ஏற்படுத்தும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்களுக்கு ஏழரைச்சனி நடப்பதாலும் ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்பதாலும் எதிலும் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். குருபகவான் 4-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது, பிறர் விஷயத்தில் தலையிடாம-ருப்பது நல்லது. தற்போது 12-ல் சஞ்சரிக்கக்கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு காரியத்திலும் கவனத்தோடு இருக்கவேண்டும். ஒருசிலர் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தடைப்படும். போட்டிகள் காரணமாக உங்கள் பொருட்களுக்கு நல்லவேலை கிடைக்காது. தற்போது கிடைக்கக்கூடிய சிறு வாய்ப்பையும் தவறவிடாமல் இருப்பது நல்லது. வேலைக்குச் செல்பவர்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் கவனத்தோடு இருந்துவிட்டு சக ஊழியர்களிடம் பேசுகின்றபோது பொறுமையோடு இருக்க வேண்டும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். தூரப் பயணங்களைத் தற்கா-கமாக தள்ளிவைப்பது உத்தமம். இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். சிவன் தலங்களுக்கு சென்றுவருவது, மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வதன்மூலம் ஆதாயங்களை அடையமுடியும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 2-ல் ராகு, 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்படவேண்டிய நேரமாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். தற்போது 11-ல் சஞ்சரிக்கக் கூடிய செவ்வாய் வரும் செவ்வாய்க்கிழமைமுதல் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால் உங்கள் சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படக்கூடிய நேரமாகும். குருபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய பணவரவுகள் தற்போது கிடைக்காது. மற்றவர்களுக்கு வாக்குறுதி கொடுப்பதைத் தற்கா-கமாக தள்ளிவைக்கவும். உடன்பிறந்தவர்கள்மூலமாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படலாம் என்பதால் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகளால் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்காது. சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் தொடர்பான கணக்கு வழக்குகளை சரிவர பராமரிப்பது உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக அதிக அலைச்சல், உடல் அசதி உண்டாகும். உங்கள் உழைப்புக்கான பலனை மற்றவர்கள் அடையக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்படும். மாணவ- மாணவியர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் தான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, தூரப் பயணங்களைத் தள்ளிவைப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் மற்ற கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் ஒருசில ஆதாயங்களை பெற்று உங்களுக்குள்ள நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசியாதிபதி குரு 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். உடல்ரீதியாக இருந்த பாதிப்புகள் எல்லாம் தற்போது விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். கணவன்- மனைவியிடையே அன்யோன்யம் சிறப்பாக இருக்கும். உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன், 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெற்று நீண்டநாளைய கனவுகள் எல்லாம் தற்போது நிறைவேறக் கூடிய வாய்ப்புகள் உண்டு. வரும் செவ்வாய்க்கிழமைமுதல் செவ்வாய் 11-ல் சஞ்சரிக்க இருப்பது உங்கள் பலத்தை மேலும் அதிகரிக்ககூடிய அமைப்பாகும். நவீனகரமானப் பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைப்பது மட்டுமில்லாமல் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் மனநிம்மதி ஏற்படும். மறைமுக போட்டிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழி-ல் இணைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிக்காட்ட நல்ல சந்தர்ப்பமும், கடந்தகாலங்களில் நீங்கள்பட்ட கஷ்டத்துக்கெல்லாம் தற்போது ஒரு விடிவுகாலம் ஏற்படக்கூடிய வாய்ப்பும் ஏற்படும். நீண்டநாட்களாக உங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவி உயர்வுகள் தற்போது கிடைத்து மகிழ்ச்சி உண்டாகும். மாணவ- மாணவியர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். இந்த வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களுக்கு மிகவும் அனுகூலமான நாட்களாக இருக்கும். துர்க்கையம்மனுக்கு தீபமேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதன்மூலம் அனுகூலங்களை அடையமுடியும்.

bala090224
இதையும் படியுங்கள்
Subscribe