இந்த வார ராசிபலன் 4-12-2022 முதல் 10-12-2022 வரை

/idhalgal/balajothidam/horoscope-week-4-12-2022-10-12-2022

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 1.

செவ்வாய்: மிருகசீரிடம்- 1 (வ).

புதன்: மூலம்- 1.

குரு: உத்திரட்டாதி- 1.

சுக்கிரன்: கேட்டை- 4.

சனி: அவிட்டம்- 1.

ராகு: பரணி- 2.

கேது: சுவாதி- 4.

கிரக மாற்றம்:

கார்த்திகை 19 (5-12-2022) தனுசு சுக்கிரன் (மாலை 5.57).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

16-12-2022 பகல் 3.02 மணிக்கு ரிஷபம்.

9-12-2022 அதிகாலை 1.43 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப் பென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, உடனிருப்ப வர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது நன்று. புதன் 9-ல் சஞ்சரிப்பதாலும், 5-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பதும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும், உங்கள் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். வேலையாட்கள் பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். சிலர் செய்யும் செயல்களால் அனா வசிய செலவுகள் ஏற்படும். ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அமைதி குறையும். அதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீகச் சொத்துவகையில் வம்பு வழக்குகள் ஏற்படக்கூடிய நேரமாகும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனு கூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. புதன், சுக்கிரன் 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். அனாவசிய செலவுகள் காரண மாக உங்களது கையிருப்பு குறையும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் அனுகூல மான அமைப்பென்பதால் பொருளா தாரநிலை திருப்திகரமாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடமுடியும். குரு பார்வை 5, 7 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் இல்லத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியிலிருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்குமென்றா லும், சட்டரீதியாக ஏற்படும் சிறுசிறு சிக்கல்களால் மன அமைதி குறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் தொழில்ரீதியாக ஏற்படும் போட்டிகளை சமாளித்து அடையவேண்டிய இலக்கை எட்டமுடியும். வேலையாட்களுக்கு, உடன் வேலை செய்பவர்களால் சில நெருக்கடி இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்படமுடியும். ஒருசிலருக்கு பணிரீதியாக பயணங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஆதரவுகள் கிடைத்து கடந்தகால சோதனைகள் குறையும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை அடையமுடியும்.

மிது

முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

கிரக பாதசாரம்:

சூரியன்: கேட்டை- 1.

செவ்வாய்: மிருகசீரிடம்- 1 (வ).

புதன்: மூலம்- 1.

குரு: உத்திரட்டாதி- 1.

சுக்கிரன்: கேட்டை- 4.

சனி: அவிட்டம்- 1.

ராகு: பரணி- 2.

கேது: சுவாதி- 4.

கிரக மாற்றம்:

கார்த்திகை 19 (5-12-2022) தனுசு சுக்கிரன் (மாலை 5.57).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- மேஷம்.

16-12-2022 பகல் 3.02 மணிக்கு ரிஷபம்.

9-12-2022 அதிகாலை 1.43 மணிக்கு மிதுனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதும், 8-ல் சூரியன் சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப் பென்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது, உடனிருப்ப வர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். வெளியூர்ப் பயணங்களைத் தள்ளிவைப்பது நன்று. புதன் 9-ல் சஞ்சரிப்பதாலும், 5-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 9-ல் சஞ்சரிக்க இருப்பதாலும் எதிர்பாராத பணவரவுகள் ஏற்பட்டு தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பதும், ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. தொழில், வியாபாரத்தில் தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும், உங்கள் தனித் திறமையால் எதையும் எதிர்கொள்ளும் பலமுண்டாகும். வேலையாட்கள் பிரச்சினைகளை உண்டாக்குவார்கள். சிலர் செய்யும் செயல்களால் அனா வசிய செலவுகள் ஏற்படும். ஒவ்வொரு விஷயத்திலும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் எதையும் சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக மன அமைதி குறையும். அதிகாரியிடம் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும் நேரமென்பதால் பேச்சில் பொறுமையோடு இருப்பது, உங்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பூர்வீகச் சொத்துவகையில் வம்பு வழக்குகள் ஏற்படக்கூடிய நேரமாகும். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனு கூலமாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஒரு பெரிய மனிதரின் நட்புமூலம் அனுகூலம் அடையும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் செவ்வாய், 7-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. புதன், சுக்கிரன் 8-ல் சஞ்சரிக்க இருப்பதால் எதிலும் எதிர்நீச்சல் போடவேண்டிய நேரமாகும். எளிதில் முடியவேண்டிய காரியங்கள் சற்று தாமதமாகும். அனாவசிய செலவுகள் காரண மாக உங்களது கையிருப்பு குறையும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால் பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பதும் அனுகூல மான அமைப்பென்பதால் பொருளா தாரநிலை திருப்திகரமாக இருந்து அனைத் துத் தேவைகளும் பூர்த்தியாகும். கொடுத்த வாக்குறுதிகளை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடமுடியும். குரு பார்வை 5, 7 ஆகிய ஸ்தானங்களுக்கு இருப்பதால் இல்லத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடும். பிள்ளைகள் வழியிலிருந்த கவலைகள் மறைந்து மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்குமென்றா லும், சட்டரீதியாக ஏற்படும் சிறுசிறு சிக்கல்களால் மன அமைதி குறையும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் தொழில்ரீதியாக ஏற்படும் போட்டிகளை சமாளித்து அடையவேண்டிய இலக்கை எட்டமுடியும். வேலையாட்களுக்கு, உடன் வேலை செய்பவர்களால் சில நெருக்கடி இருந்தாலும் பணியில் சிறப்பாக செயல்படமுடியும். ஒருசிலருக்கு பணிரீதியாக பயணங்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் பொருளாதார அனுகூலங்கள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய ஆதரவுகள் கிடைத்து கடந்தகால சோதனைகள் குறையும். புதன், வியாழன் ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றியினை அடையமுடியும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் 7-ல் சஞ்சரிப்பதாலும், 6-ல் சூரியன், 11-ல் ராகு சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகி மனநிம்மதி ஏற்படும். ஒரு பெரிய மனிதரின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். குரு, சனி சாதகமற்று இருப்பதால் பணப்பரிமாற்ற விஷயங்களில் சற்று சிக்கனத் தோடு இருப்பது, உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. முடிந்தவரை இரவு நேரங்களில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதையும் எதிர்கொண்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். மறைமுகப் போட்டிகள் அதிகப்படியாக இருப்பதாலும், வேலையாட்களுடைய ஒத்துழைப்பு சாதகமற்று இருப்பதாலும் சிறுசிறு நெருக்கடிகள் இருக்குமென்றாலும் எதையும் சமாளித்துவிடுவீர்கள். 5-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை, பெண்கள்வழியில் அனுகூலங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய திறமை களை வெளிக்காட்டுவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். உங்கள் பணியில் மட்டும் தற்போதைக்கு கவனமாக இருந்தால் விரைவில் நல்ல முன்னேற்றத்தை அடையமுடியும். ஞாயிறு, திங்கள், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதற்கு ஒரு நல்ல ஆதரவு கிடைக்கும்.

tsd

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

குருபகவான் உங்கள் ராசிக்கு 9-ல் ஆட்சிபெற்று சஞ்சரிப்பதால் சகல விதத்திலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பணவரவு மிகமிக நன்றாக இருந்து அனைத்து குடும்பத் தேவைகளும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல், இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடக்கும். உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படலாம். எனினும் நெருங்கியவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் வீண் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். செவ்வாய் லாப ஸ்தானத்தில் இருப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பூர்வீகச் சொத்துவகையில் நீண்டநாட்களாக தீராத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல தீர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். வேலையாட்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்க்கும் வெளி உதவிகள் குறித்த நேரத்தில் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் பணியில் நிம்மதியுடன் செயல்பட முடியும். உங்கள்மீதிருந்த பழிச்சொற்கள் விலகுவதால் கவலைகள் நீங்கி மன அமைதி உண்டாகும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்கள் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 5-ல் புதன் சஞ்சரிப்பதும், 6-ல் சனி சஞ்சரிப்பதும் மிகவும் சிறப்பான அமைப்பென்பதால் எல்லாவகையிலும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலை திருப்திகரமாக இருப்பது மட்டுமல்லாமல், எந்தப் பிரச்சினையையும் தைரியத்தோடு கையாளக்கூடிய பலமுண்டாகும். செவ்வாய் ராசிக்கு 10-ல் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் பண்பைப் புரிந்துகொண்டு தற்போது நட்புடன் பழகுவார்கள். சுக்கிரன் ஜென்ம ராசிக்கு 4, 5-ல் சஞ்சரிப்பதால் குடும்பத்தில் நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புண்டாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். 3-ல் கேது, 9-ல் ராகு சஞ்சரிப்பதால் வெளியூர்மூலமாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும் நாட்களில் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைப் பயன்படுத்தி நல்ல லாபத்தை அடைவீர்கள். நீண்டநாட்களாக நீங்கள் எதிர்பார்த்த பெரிய ஆர்டர் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்புமிகு பதவிகள் தேடிவருவது மட்டுமல்லாமல் கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு தற்போது ஒரு விடிவுகாலம் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கவேண்டிய சம்பள பாக்கிகள் கிடைப்பதால் கடன்களை பைசல் செய்யமுடியும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் திடீர் தனவரவுகள் ஏற்பட்டு விருப்பங்கள் நிறைவேறும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன் கேந்திர ஸ்தானத் தில் வலுவாக சஞ்சரிப்பதால் எதிலும் துணிச்சலோடு செயல்படுவீர்கள். முயற்சி ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுடைய அனைத்து செயல்களுக்கும் பரிபூரண வெற்றி கிடைக்கும். குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவது மட்டுமல்லா மல் பணப் பரிமாற்ற விஷயங்களில் அதிகப்படியான அனுகூலங்களையும் லாபங்களையும் பெறுவீர்கள். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றமுடியும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்கு பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும். 5-ஆம் தேதிமுதல் சுக்கிரன் 4-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் ஏற்படும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருந்தால் சிறுசிறு வயிறு பாதிப்புகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற் றங்கள் ஏற்படுவது மட்டுமல்லாமல் அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகளைப் பெறமுடியும். தொழிலுக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பேற்படும். திறமைவாய்ந்த தொழிலாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு சிறப் பாக இருப்பதால் மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் தலையிட்டு எளிதில் செய்துமுடிப்பீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் தேவையற்ற அலைச்சல் களும், மனநிம்மதிக் குறைவும் உண்டாகும். வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்களின் அன்றாட செயல்களில் முழுமையான வெற்றியும், பொருளாதார அனுகூலங்களும் ஏற்படும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசிக்கு 2-ல் சூரியன், 7-ல் ராகு, 8-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால், நீங்கள் நல்லதாகப் பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது உத்தமம். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, நேரத்திற்கு சாப்பிடுவது நல்லது. குரு 6-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை ஏற்ற- இறக்கமாக இருக்குமென்பதால் பண விஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. உற்றார்- உறவினர்கள்மூலமாக நிம்மதிக் குறைவுகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்காததால் நிம்மதிக் குறைவு ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு சிறப் பாக இருக்காது. எல்லா விஷயத்திலும் நீங்களே முன்னின்று செயல்படுவது நல்லது. சில இடைத்தரகர்களின் செயல்களால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். அதிக முதலீடுகொண்ட செயல்களைத் தற்போதைக்குத் தவிர்ப் பது உத்தமம். வேலைக்குச் செல்பவர்களுக்கு பணிச் சுமை அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் உங்களது ஓய்வுநேரம் குறையும். உங்கள் பணியில் கவனம் செலுத்துவது, மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 5-ல் குரு சஞ்சரிப்பதால் பலமும், வலிமை யும் அதிகரிக்கும். நீண்டநாளைய கனவுகள் நிறைவேறி மகிழ்ச்சி உண்டாகும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருந்து உங்களுடைய கடன்கள் பைசலாகும். உங்கள் ராசிக்கு 6-ல் ராகு சஞ்சரிப்பதால் கடந்தகால சிக்கல்கள் குறைவது மட்டுமல்லாமல் வீண் வம்பு, வழக்குகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். புதன், சுக்கிரன் 2-ல் சஞ்சாரம் செய்ய இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் ஏற்படும். சிலருக்கு வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபமும், கடந்த காலங்களில் இருந்துவந்த பொருளாதார நெருக்கடிகள் விலகி அனுகூலமான பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் பொருட்களை டெலிவரி செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். அரசுவழி ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கூட்டாளியிடம் சில நேரங்களில் முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசித்து செயல்படுவது நல்லது. வேலைக்குச் செல்பவர்களுக்கு நெருக்கடிகள் குறைந்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு எடுத்த பணியைக் குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். பணி நிமித்தமாக வெளியூர் செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகியவை உங்கள் வாழ்வில் முன்னேற்றத்தைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ஜென்ம ராசிக்கு 2-ல் சனி, 12-ல் சூரியன் அமையப்பெற்று இருபுறமும் பாவ கிரகங்கள் இருப்பதால், எதிலும் சற்று நிதானத்தோடு செயல்படுவது நல்லது. பிறர் விஷயத்தில் தலையிடாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்படுவதன் மூலம் பிரச்சினைகள் ஏற்படாமல் தவிர்க்கமுடியும். பொருளாதாரரீதியாக ஏற்படும் நெருக்கடிகளால் நிம்மதிக் குறைவு உண்டாகும். உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்ல வாய்ப்புகள்கூட கடைசி நேரத்தில் தடைப்படும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் பேச்சில் பொறுமையுடன் இருப்பது, வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது உத்தமம். சிறுசிறு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. பணப்பரிமாற்ற விஷயங்களில் சிக்கனத்துடன் செயல்படுவது, பெரிய முதலீடுகளைத் தவிர்ப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் நீங்கள் முனைப் புடன் செயல்பட்டால் மட்டுமே போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். வேலையாட்கள் நெருக்கடிகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிப்பது மட்டுமல்லாமல் அலைச்சல் காரணமாக உடல்சோர்வு, மன உளைச்சல் ஏற்படும். பங்காளியிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரமென்ற காரணத்தால், எதிலும் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் புதிய முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, 3-ல் குரு சஞ்சரிப்பதால் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகமிக நல்லது. வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வீண் நெருக்கடிகள் ஏற்படும். நீங்கள் எதிர்பார்த்த பண வரவுகள் தக்கநேரத்தில் வராத காரணத்தினால் மன அமைதி குறையும். சக்திக்கு மீறிய வீண் செலவுகள் ஏற்படும். ராசிக்கு 4-ல் ராகு, 5-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் அலைச்சல், டென்ஷன், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய சூழல் உண்டாகும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், சூரியன் லாப ஸ்தானத் தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து அதன்மூலமாக நெருக்கடிகளை சமாளிக்கமுடியும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். வெளிநபர்களிடம் குடும்ப விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு இருந்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். போட்டிகள் அதிகரிக்கக்கூடிய நிலை, வேலையாட்களால் பிரச்சினைகளை சந்திக்கும் சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு, நீங்கள் சரியாகப் பணிபுரிந்தாலும் மேலதிகாரிகளின் கோபத்திற்க்கு ஆளாவீர்கள். உடன் வேலை செய்பவர்கள் உங்கள்மீது பழிச்சொற்களைக் கூறுவார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து உங்களுடைய நெருக்கடிகள் குறையும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், 11-ல் புதன் சஞ்சரிப்பதால் உங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கான நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்களது மதிப்பு, மரியாதை அதிகரிக்கும் நேரமாகும். 2-ல் குருவும், 3-ல் ராகுவும் வலுவாக இருப்பதால் பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து அனைத்துத் தேவைகளும் நிறைவேறும். கடந்தகால பொருளாதார நெருக்கடிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். திருமண விஷயமாக தற்போது முயற்சித்தால் நல்ல வரன் கிடைக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணங்களைத் தற்போது செயல்படுத்துவதன்மூலம் நற்பலனை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைக்கும். சட்டரீதியாக இருந்த சிக்கல்கள் தற்போது குறைந்து மன அமைதியுடன் செயல்படமுடியும். தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் எதிர்பார்த்த பணஉதவிகள் கிடைப்பது மட்டுமல்லாமல் நல்ல வேலையாட்களும் அமைவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் முன்னேற் றமும், எதிர்பார்த்த இடமாற்றங்களும் கிடைக்கும். ஒருசிலருக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து வாழ்க்கைத் தரம் உயரும். சுக்கிரன் ராசிக்கு 10, 11-ல் சஞ்சரிப்பதால் நவீனகரமான பொருட்களை வாங்கும் யோகமுண்டாகும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்குத் தற்போது உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதற்கான யோகமுண்டு.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், 11-ல் சனி இருப்பதால் எந்த செயலில் ஈடுபட்டாலும் அதில் பரிபூரண வெற்றிகிடைக்கும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றும் வாய்ப்பேற்படும். நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் குறைந்து மனநிம்மதியுடன் இருக்கமுடியும். புதன், சுக்கிரன் 10-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், பூரிப்பும் ஏற்படும். பூர்வீகச் சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தற்போது விலகி அனுகூலமான பலன்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர் கள். பெரியோர்களுடைய ஆதரவு சிறப் பாக இருப்பதால் அனுகூலங்கள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலன் கிடைப்பது மட்டுமல்லாமல் உங்களுக்கிருந்த கடன் பிரச்சினைகளும் குறையும். கூட்டாளியின் ஆதரவு மிகச்சிறப்பாக இருக்கும். பெரிய பணிகளைக்கூட சிறப்பாகக் கையாண்டு நல்லநிலையை அடைவீர்கள். வேலைக்குச் செல்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நீங்கள் எதிர்பார்த்த உயர்வுகள் கிடைக்கும். சக ஊழியரிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் முழுமையாக விலகி சுமூகமான நிலை உண்டாகும். உங்களுடைய கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்வதற்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் பரிபூரண வெற்றி கிடைக்கும். ராகு ராசிக்கு 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் மட்டும் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. புதன், வியாழன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும்.

bala091222
இதையும் படியுங்கள்
Subscribe