முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூசம்- 4.
செவ்வாய்: பரணி- 3.
புதன்: ஆயில்யம்- 4.
குரு: உத்திரட்டாதி- 4.
சுக்கிரன்: புனர்பூசம்- 1.
சனி: அவிட்டம்- 2.
ராகு: பரணி- 4.
கேது: விசாகம்- 2.
கிரக மாற்றம்:
ஆடி 16 (1-8-2022) சிம்ம புதன் (அதிகாலை 3.44).
ஆடி 22 (7-8-2022) கடக சுக்கிரன் (அதிகாலை 5.20).
சந்திரன் மாறுதல்:
ஆரம்பம்- சிம்மம்.
1-8-2022 இரவு 10.30 மணிக்கு கன்னி.
4-8-2022 காலை 6.40 மணிக்கு துலாம்.
6-8-2022 பகல் 12.06 மணிக்கு விருச்சிகம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4, 5-ல் புதன் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு நிலைமையை சமாளித்து இலக்கை அடைவீர் கள். பிரதான கிரகங்களான குரு, சனி வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள் விலகி எதிர்பாராத பணவரவுகள் கிடைக்கும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றும் பலம் ஏற்படும். குடும்பத்தில் தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டு. ஜென்ம ராசியில் செவ்வாய், ராகு, 4-ல் சூரியன் சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. வேலைப்பளு காரணமாக அலைச்சல், உடல் அசதி ஏற்படும். உடனிருப்பவர்களை அனுசரித்துச்சென்றால் வீண் பிரச்சினைகளை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால பொருள் தேக்கங்கள் விலகி உங்களுடைய உழைப்புக்கான பலனை அடையும் வாய்ப்பேற்படும். திறமை வாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவதால் அனைத்து செயலையும் சிறப் பாக செய்துமுடிக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக எதிர் பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். வெளியூர்த் தொடர்புகள்மூலம் ஆதாயங்களை அடைவீர்கள். நவீனகரமான கருவிகளை வாங்கும் வாய்ப்பேற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். பிறரால் முடிக்கமுடியாத காரியங் களைக்கூட நீங்கள் முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பார் கள். இவ்வாரத்தில் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், திங்கட் கிழமைமுதல் 4-ல் புதன் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் ஆதாயங்களை அடைவீர்கள். உங்கள் செயல்களுக்கு உடனிருப்பவர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை திருப்திகரமாக இருக்கும். ராசியாதிபதி சுக்கிரன் 2-ல் சிறப் பாக சஞ்சரிப்பதால் பெண்கள்மூலமாக ஆதாயங்களை அடையமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைப்பதால் நீண்டநாட்களாக இருந்த தீர்க்கமுடியாத பிரச்சினைகள் எல்லாம் தற்போது தீர்ந்து குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். தனகாரகன் குரு வக்ரகதியில் சஞ்சரிப்பதால் கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் சற்று சிக்கனத்தோடு செயல்படுவதும், தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொள்வதும் நல்லது. செவ்வாய், ராகு 12-ல் சஞ்சரிப்பதால் உடன்பிறந்த வரிடம் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் முதலீடுசெய்து அதிகப்படியான லாபத்தை ஈட்டமுடியும். கடந்தகால எதிர்ப்புகள் எல்லாம் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து நிம்மதியுடன் செயல்படமுடியும். அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள முடியும். சிலருக்கு வெளியூர் தொடர்புகள்மூலம் நன்மைகள் நடைபெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இவ்வாரத்தில் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் ஒரு புதிய முயற்சியில் ஈடுபட்டால் அதில் பரிபூரணமான வெற்றியடைய முடியும்.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பணவரவு கள் ஏற்பட்டு உங்களின் அனைத்துவித மான தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நீண்டநாள் பிரச்சினைகள் விலகி ஓரளவுக்கு அனுகூலமான பலன்களை அடைவீர்கள். ஒரு ராசி யில் அதிக காலம் தங்கும் கிரகமான குரு, சனி சாதகமற்ற ஸ்தானங் களில் இருந்தாலும், தற்போது வக்ரகதியில் இருப்பதால் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்டவர்களுக்குக்கூட உடல்நிலை சிறப்பாகி மனநிம்மதி உண்டாகும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யுமளவுக்கு அனுகூலமான பலன்களை அடைவீர் கள். தொழில், வியாபாரத்தில் போட்ட முதலீட்டை எளிதில் எடுத்துவிட முடியும். அரசுவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைத்து மகிழ்ச்சி உண்டா கும். வேலையாட்கள் உறுதுணையாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களை சிறப்பாக செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள், பதவி உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டாகும். மற்றவர்களால் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி பணியில் நிம்மதியுடன் செயல்படமுடியும். சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைத்து குடும்பத்துடன் இணையும் வாய்ப்பு ஏற்படும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடைவீர்கள்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
ஜென்ம ராசியில் சூரியன் சஞ்சரிப்ப தால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது சிறப்பு. உங்கள் ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி ஒருவரையொருவர் அனுசரித் துச் செல்லவேண்டிய நேரமாகும். பாக்கிய ஸ்தானத் தில் சஞ்சரிக்கும் குருபகவான் தற்போது வக்ரகதி யில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய பொருளாதார அனுகூலங்கள் சற்று தாமதமாகும். கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவதில் இடையூறுகள் ஏற்படலாம். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் தற்சமயம் பொறுமை காப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்களின் தனிப்பட்ட திறமை யால் அனுகூலங்களை அடையும் வாய்ப்புண்டு. செவ்வாய், ராகு 10-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை உண்டாகும். உடனிருப்பவர் களால் சிறுசிறு இடையூறுகள் ஏற்பட்டாலும் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடைந்துவிடுவீர்கள். வேலை யாட்களிடம் கவனத்தோடு செயல்பட்டால் அனுகூலமான பலன்களை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரியிடம் வாக்குவாதங் கள் செய்யாமல் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது சிறப்பு. வேலைப்பளு காரணமாக ஓய்வு நேரம் குறைந்தாலும், நீங்கள் எடுத்த பணியைக் குறிப்பிட்ட நேரத்தில் செய்துகொடுத்து நல்ல பெயர் எடுப்பீர்கள். பணி நிமித்தமாகப் பயணங்கள் மேற்கொள்ளக் கூடிய நிலையும் அதன்மூலம் சுபச்செலவுகளும் ஏற்படும். இவ்வாரம் செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் உங்களின் முயற்சிகளுக்கு மிகவும் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களைப் பெறுவீர்கள். நெருங்கியவர்களின் உதவியால் ஏற்றங்களை அடையும் வாய்ப்பு கள் உண்டு. உங்கள் ராசிக்கு சனி 6-ல் சஞ்சரிப் பதால் பண வரவுகள் திருப்திகரமாக இருந்து அனைத்துவிதமான நெருக்கடிகளும் குறையும். குறிப்பாக 8-ல் குருபகவான் தற்போது வக்ரகதியில் சஞ்சரிப்பதால் எதிர்கொண்ட இடையூறுகள் எல்லாம் விலகி நல்ல முன்னேற் றங்களை அடைவீர்கள். சூரியன் 12-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சற்று கட்டுப்பாடோடு செயல் பட்டால் அனைத்துவகை யிலும் அனுகூலமான பலன் கள் கிடைக்கும். தொழில், வியா பாரத்தில் பிறரின் உதவிகளை எதிர்பார்க்காமல் எந்த செயலிலும் நீங்களே முன்நின்று செயல் பட்டால் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். மறைமுக எதிர்ப்புகள் நிலவினாலும் உங்களின் தனித் திறமையால் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். எந்திரங்களைப் பழுதுபார்ப்பதற்காக சுபச் செலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது நீங்கள் இருக்கும் நிலையே ஒரு நல்ல அமைப்பாகும். பிறர் சொல்வ தைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு செயல்பட்டால் விரைவில் ஒரு நல்ல வளர்ச்சியினை அடைய முடியும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, குறிப்பாக உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்கள் அதிகப்படியான ஆதாயங்களைத் தரக்கூடிய நாட்களாக இருக்கும்.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 10-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் பொருளாதாரநிலை சிறப் பாக இருப்பது மட்டுமல்லாமல் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் மறைந்து வளமான பலனை அடைவீர்கள். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் சிக்கனத் தோடு செயல்பட்டால் பொருளாதார நிலையினை சிறப்பாகக் கையாள முடியும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதன்மூலம் முன்னேற்றங்களை அடைய முடியும். ராசிக்கு 8-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவு நேரங்களில் பயணங்கள் மேற்கொள்வ தனைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக வாகனங் களில் செல்லும்பொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் சந்தைநிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் போட்ட முதலீட்டை எடுப்பது மட்டுமல்லாமல் உங்கள் உழைப்புக் கான பலன்களும் கிடைக்கும். அரசுவழியில் அதிகாரியுடைய ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் வங்கிக் கடன்கள்கூட எளிதில் கிடைக்கும். வேலையாட்கள் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றமுடியும். உத்தியோகரீதியாக நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமல்லாமல் ஒரு பெரிய இடத்து நட்பும் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வாய்ப்பு கள் அமையும். குடும்ப விஷயங்களை மற்றவரிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது மிகவும் நல்லது. இவ்வாரத்தில் செவ்வாய், புதன் கிழமைகளில் எந்த செயலில் ஈடுபட்டாலும் எண்ணங்கள் நிறைவேறும்.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ராசியாதிபதி சுக்கிரன் பாக்கிய ஸ்தானமான 9-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் சகல சௌபாக்கியங்களையும் அடையும் யோகம் இவ்வாரத்தில் உண்டு. சூரியன் 10-ல் சஞ்சரிப்பதால் இருக்குமிடத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல் வரும் திங்கட்கிழமை முதல் புதன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத பொருளாதார அனுகூலங்களைப்பெற்று, கடந்தகால அனைத்துவிதமான சோதனைகளும் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குரு, சனி வக்ரகதியில் இருப்பதால் நீண்டநாட்களாக உங்களுக்கிருந்த தடங்கல்கள் தற்போது விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு மங்களகரமான சுப காரியங்கள் கைகூடுவதற்கான நல்ல செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு தற்போது அதற்கான பிரதி பலன்களை அடையவுள்ளீர்கள். உங்களுக்கிருந்த மறைமுக எதிர்ப்புகள் எல்லாம் விலகி எதிரிகள்கூட உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்புடன் பழகும் நிலை ஏற்படும். தொழில் முன்னேற்றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிம்மதியுடன் பணிபுரிவது மட்டுமல்லாமல் கௌரவ மான நிலையினை எட்ட முடியும். மேலதிகாரியிடம் இருந்துவந்த கருத்து வேற்றுமைகள் விலகி சுமூகமான சூழ்நிலை ஏற்படும். செவ்வாய், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவி விட்டுக் கொடுத்துச் செல்வது நன்று. இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று, நீண்டநாளைய தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
ராசியாதிபதி செவ்வாய், ராகுவுடன் 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடைவீர்கள். சனிபகவான் 3-ல் சஞ்சரிப்பதால் உங்களது வலிமை அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாவது மட்டுமல்லாமல் சேமிக்குமளவுக்கு பொருளாதாரநிலை சிறப் பாக இருக்கும். திங்கட்கிழமைமுதல் புதன் 10-ல் சஞ்சரிப்பதால் சூழலுக்குத் தக்கவாறு சாமர்த்தியமாக செயல்பட்டு தொழில், வியாபாரத்தில் பிறர் வியக்குமளவுக்கு உயர்வான நிலையை எட்டுவீர்கள். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி லாபகரமான பலன்களை அடையமுடியும். வேலையாட் கள் ஒத்துழைப்பும் சிறப்பாக இருப்பதால் சந்தையில் உங்களின் ஆதிக்கம் சிறப் பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல ஆதரவு கிடைப்பதால் அனுகூல மான பலன்களை அடைவீர்கள். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் காப்பாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையிலிருந்த நெருக்கடிகள் குறைந்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். அதிகாரிகள் உறுதுணையாக இருப்பதால், கொடுத்த வேலையை சிறப்பாகச் செய்துமுடித்து நல்லபெயர் எடுப்பீர்கள். வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சம்பள பாக்கிகள் எல்லாம் தற்போது கிடைத்து அனைத்துவிதமான தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். உடல்நிலையும் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும்.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், 11-ல் கேது சஞ்சரிப்பதால் எதிர்நீச்சல் போட்டாவது அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துவரும் உங்களுக்கு தற்போது குரு, சனி வக்ரம் பெற்றிருப்பதால் பிரச்சினைகள் எல்லாம் ஓரளவுக்கு குறைந்து நிம்மதி ஏற்படும். தற்போது 8-ல் சஞ்சரிக்கும் புதன் திங்கட்கிழமைமுதல் 9-ல் சஞ்சரிக்கவிருப்ப தால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு அனைத்துவிதமான குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை அதிகரிக்கும். உங்கள் பேச்சால் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம் என்பதால் பிறர் விஷயத்தில் தலையிடாமல் பொறுமை காப்பது மிகவும் நல்லது. தொழில், வியாபாரத்தில் நீண்டநாட்களாக நிலவிய நெருக்கடிகள் விலகி லாபங்களை அடைய முடியும். உடனிருப்பவர்கள் ஏற்படுத்திய இடையூறுகள் தற்போது குறைவதால் நிம்மதியுடன் செயல்படமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட விஷயங்களில் மட்டும் சற்று கவனத்தோடு செயல்படுவது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணியில் மட்டும் கவனமாக செயல்படுவது, அதிகாரிகள் சொல்படி நடந்துகொள்வது பிரச்சினைகளைக் குறைக்க உதவும். பணி நிமித்தமாக பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலையும், அதனால் அலைச்சலையும் எதிர்கொள்ள நேரிடும். தற்போதைக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் பல வளமான பலன்களை எட்ட முடியும். செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதால் எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். ஜென்ம ராசியில் சனி, 7-ல் சூரியன் இருப்பதால் உடல் நலத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் தருவது நன்று. பொருளாதார ரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை நிலவும். சக்திக்குமீறிய வீண் செலவுகள் ஏற்படக் கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனமாக இருப்பது, கையிருப்பைக்கொண்டு செலவுசெய்வது நல்லது. பிறருக்கு ஜாமின் அளிப்பது, வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றைத் தற்காலிகமாகத் தவிர்க்கவும். வாகனங்கள்மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனமாக செயல்படவேண்டிய நேரமாகும். வேலையாட்கள்மூலம் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். சில இடைத்தரகர்களின் செயல்களால் உங்களுக்குக் கிடைக்கவேண்டிய நியாயமான வாய்ப்புகள்கூட தட்டிப்போகும். கிடைக்கும் சிறு வாய்ப்புகளையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை மட்டுமல்லாமல் அதிகாரியினுடைய கெடுபிடி சற்று கூடுதலாக இருக்கும். எடுத்த பணியில் மட்டும் கவனத்தோடு இருந்துவிட்டு பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது மிகவும் நல்லது. பொதுவாக ஏதாவதொரு முக்கிய செயல் செய்யவேண்டும் என்றால் அதில் நீங்கள் நேரடியாகத் தலையிடாமல் நம்பிக்கையுடைய நபர்கள்மூலம் அதனை செயல்படுத்துவது நல்லது. வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகளில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும், எதிர்பாராத உதவிகள் சில கிடைப்பதால் நிலைமையை சமாளிக்கமுடியும்.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், திங்கட்கிழமைமுதல் புதன் 7-ல் சஞ்சரிப்பதாலும் நீங்கள் நினைப் பதெல்லாம் நடக்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருப்பது மட்டுமல்லாமல் நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புகள் ஏற்படும். ஜென்ம ராசிக்கு உபஜெய ஸ்தானமான 3-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்பதும், 6-ல் சூரியன் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புதமான அமைப்பென்பதால் எதிலும் உற்சாகத்தோடு செயல்பட்டு பல்வேறு வெற்றிகளைப் பெறுவீர்கள். உங்களுக்கு இருந்த வம்பு, வழக்குகள் எல்லாம் முடிவுக்கு வரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத் தில் பிள்ளைகள்வழியில் அனுகூலங்களும், திருமண வயதை அடைந்தவர்களுக்கு மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் யோகங்களும் வரும் நாட்களில் உண்டு. பூர்வீக சொத்துவகையில் நீண்டநாட்களாக இருந்த பிரச்சினைகள் தற்போது முடிவுக்கு வந்து மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நினைத்ததை சாதிக்கும் பலம் ஏற்படும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகள் தற்போது கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். உங்களுக்குள்ள கடன்கள் எல்லாம் படிப்படியாகக் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவப் பதவிகள் தேடிவருவதுடன், பிறரால் முடிக்கமுடியாத செயல்களையும் நீங்கள் தலையிட்டு சிறப்பாக செய்துமுடிப்பீர்கள். வெளியூர், வெளிநாடுகள்மூலம் அனுகூலமான செய்தி கிடைக்கும். ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படும்.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதாலும், லாப ஸ்தானத் தில் சனி சஞ்சரிப்பதாலும் பண வரவுக்கு எந்தவிதத்திலும் குறைவில்லாமல் தகுந்த நேரத்தில் உங்களது தேவைகள் பூர்த்தி யாகும். எதிர்பாராத உதவிகள் கிடைப்ப தால் கடந்தகால நெருக்கடிகள் குறையும். குருபகவான் வக்ரகதியில் சஞ்சரிப்பதால் ஆடம்பர செலவுகளைக் குறைத்துக்கொண்டு சிக்கனத்தோடு செயல்படுவது நல்லது. ராசிக்கு 2-ல் செவ்வாய், ராகு சஞ்சரிப்ப தால் சிந்தித்துப் பேசுவது நல்லது. பேச்சால் வீண் பிரச்சினைகள், நெருங்கியவர்கள் பகை ஏற்படலாம். கணவன்- மனைவியிடையே ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய காலமென்பதால் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உடல்நலத்திலும் கவனம் செலுத்துவது, 5-ல் சூரியன் இருப்பதால் உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் சற்று முனைப்புடன் செயல்பட்டால் போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப் பாக இருக்கக்கூடிய நேரமென்பதால் எடுத்த ஆர்டர்களை சிறப்பாகக் கையாள முடியும். வேலைக்குச் செல்பவர்கள் பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். உடன்வேலை செய்பவர்களிடம் வீண் பேச்சைக் குறைத்துவிட்டு உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்தினால் நல்லபெயர் எடுக்கமுடியும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு அதிகப்படியான ஆதாயங்களை ஏற்படுத்தும் நாட்களாக இருக்கும்.