முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: உத்திரட்டாதி- 4.

செவ்வாய்: சதயம்- 2.

Advertisment

புதன்: அஸ்வனி- 1.

குரு: பரணி- 3.

சுக்கிரன்: பூரட்டாதி- 3.

சனி: சதயம்- 4.

ராகு: ரேவதி- 2.

கேது: அஸ்தம்- 4.

கிரக மாற்றம்:

பங்குனி 18 (31-3-2024)

மீன சுக்கிரன் (மாலை 4.46).

பங்குனி 20 (2-4-2024) புதன் (வ) ஆரம்பம் (அதிகாலை 3.44).

சந்திரன் மாறுதல்

dd

ஆரம்பம்- விருச்சிகம்.

31-3-2024 இரவு 10.56 மணிக்கு தனுசு.

3-4-2024 அதிகாலை 4.37 மணிக்கு மகரம்.

5-4-2024 காலை 7.12 மணிக்கு கும்பம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசி அதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதாலும் ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சாரம் செய்வதாலும் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகக்கூடிய வாய்ப்புகள் உண்டு. பணவரவுகள் தாராளமாக இருந்து அனைத்து தேவைகளும் நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளை எளிதில் காப்பாற்றக்கூடிய பலம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் அதிகப்படியான லாபங்கள் கிடைத்து நீங்கள் வாங்கிய கடன்களை பைசல் செய்யமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி தொழிலை விரிவுபடுத்த நினைக்கும் எண்ணமும் தடையின்றி நிறைவேறும். நவீனகரமான கருவிகள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்லவாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சுக்கிரன், ராகு, சூரியன் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் ஒருசிலருக்கு எதிர்பாராத வீண்செலவுகள் ஏற்படலாம் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்பட்டு நல்லபெயர் எடுக்கமுடியும். உறவினரிடம் பேசுகின்றபொழுது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று தேவையற்ற குழப்பங்கள் ஏற்படும். புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத பணவரவுகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சியும் பூரிப்பும் உண்டாகும். பெருமாள் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 10-ல் செவ்வாய் சஞ்சரிப்பதாலும் லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சுக்கிரன், ராகு, சூரியன் சஞ்சாரம் செய்வதாலும் நல்லவாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். பணவரவுகள் சிறப்பாக இருந்து உங்களுக்கு இருந்துவந்த பொருளாதாரப் பிரச்சினைகள் தற்போது குறையும். உடல் ஆரோக்கியரீதியாக இருந்த பாதிப்புகள் சற்று குறைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பணவிஷயத்தில் சற்று சிக்கனத்தோடு இருப்பது, பிறரை நம்பி வாக்குறுதி கொடுப்பதைத் தற்காலிகமாக தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக்கடிகள் சற்று குறைந்து ஒருசில வளமான பலன்களைப் பெறுவீர்கள். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாமல் இருந்துவந்த பிரச்சினைக்கு தற்போது ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். அரசுவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக ஊழியர்கள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் கடினமான பணிகளைகூட சிறப்பாக செய்து முடிக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். புதியவாய்ப்பு எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து அழைப்பு வரக்கூடிய நேரமாகும். மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங்களைத் தவிர்த்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் நல்லமதிப்பெண்களைப் பெறமுடியும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய வளர்ச்சியை தரக்கூடிய நாட்களாக இருக்கும். திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் எதிலும் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குருபகவானுக்கு அர்ச்சனைசெய்வது, காலபைரவரை வழிபாடு செய்வது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசியாதிபதி புதன்- குரு சேர்க்கைப்பெற்று லாப ஸ்தானமான 11-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் குடும்பத்தில் மங்களகரமான சுப காரியங்கள் கைகூடக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் முழுமையான வெற்றியினை பெறுவீர்கள். சுக்கிரன், சூரியன் உங்கள் ராசிக்கு 10-ல் இருப்பதால் இருக்கும் இடத்தில் உங்களுடைய மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நல்லவாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்கள் பொருட்களுக்கு சிறப்பான விலை கிடைக்கும். உங்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். திறமைவாய்ந்த வேலையாட்கள் உங்கள் தொழிலில் இணைவார்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங் கள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு பதவி உயர்வுகள் கிடைக்கக்கூடிய ஒரு அனுகூலமான நிலையும், உடனிருப்பவர்கள் தந்த நெருக்கடி கள் தற்போது குறையக்கூடிய நிலையும் உண்டாகும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் போட்டித் தேர்வுகளில் பங்குபெற்று நல்ல மதிப்பெண்களை எடுக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் உங்கள் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறும். புதன், வியாழக்கிழமைகளில் வீண் அலைச்சல், சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக் கூடிய நிலை ஏற்படும். விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பதன்மூலம் வளமான பலன்களைப் பெறமுடியும்.

dd

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எந்த ஒரு காரியத்திலும் யோசித்து செயல்படவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கிறது. குருபகவான் 10-ல் சஞ்சரிப்பதால் பணவரவில் ஒரு ஏற்ற- இறக்கமான நிலை இருக்கும் என்பதால் உங்களுடைய அன்றாட செயல்களில் சிக்கனத்தோடு செயல்பட்டு எதிலும் கவனத்தோடு இருந்தால்தான் தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு சொல்லிக்கொள்ளும்படி இருக்காது. உங்கள் பொருட்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய விலை கிடைக்காத காரணத்தால் மன அமைதி குறைவு உண்டாகும். தற்போது கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் சில மாற்றங்கள் உண்டாகும். பெரிய எதிர்பார்ப்பு இன்றி தற்போதைக்கு செயல்படுவது புத்திசாலித்தனமான செயலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் மட்டும் நீங்கள் சற்று கவனத்தோடு இருப்பது நல்லது. நீங்கள் வெகுளித்தனமாக பேசினாலும் அதனை மற்றவர்கள் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு நேரமென்பதால் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, முடிந்தவரை அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுது போக்கு விஷயங்களில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் உங்களுக்கு மிகப்பெரிய அளவில் அனுகூலங்களும், நல்ல மாற்றங்களும் ஏற்படக்கூடிய நாட்களாக இருக்கும். வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்கள் செயல்களுக்கு தேவையற்ற இடையூறுகள் ஏற்படக்கூடிய ஒருநிலை உண்டாகும். முருக வழிபாடு மேற்கொள்வது, தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவதன்மூலம் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

சிம்மம்

(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 2, 11-க்கு அதிபதியான புதன்- குரு சேர்க்கைப்பெற்று பாக்கிய ஸ்தனமான 9-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதால் எதிர்பாராத தனவரவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி யும் பூரிப்பும் ஏற்படும். பிறருக்கு தந்த வாக்குறுதிகளைக் குறித்த நேரத்தில் நிறைவேற்றமுடியும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உறவினர்கள்மூலமாக இருந்துவந்த பிரச்சினைகள் எல்லாம் தற்போது குறையும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது, உடன்பிறந்தவரிடம் பேச்சில் பொறுமையோடு இருப்பது மிகவும் நல்லது. வண்டி, வாகனங்களில் வெளியே செல்கின்றபொழுது தற்போதைக்கு பொறுமை கடைபிடிக்க வேண்டிய நேரமாகும். தொழில், வியாபாரத்தில் சந்தை சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். ஒருசிலருக்கு வெளியூர் தொடர்புகள் மூலம் அனுகூலமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. வேலைக்கு செல்பவர்களுக்கு கௌரவமான வாய்ப்பு கள் கிடைக்கும். சக ஊழியர்கள் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நேரமென்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் எதிலும் திறமையாக செயல்பட்டு எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உணவு விஷயத்தில் தற்போதைக்கு கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. இந்த வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை அடையக்கூடிய யோகம் உங்களுக்கு உண்டு. சிவன் ஸ்தலங்களுக்கு சென்று வருவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபமேற்றுவதுமூலம் வீண் பிரச்சினைகள் குறையும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் சிறப் பான வாய்ப்புகளை பெரும் யோகம் உண்டு. எதிலும் தைரியத்தோடு செயல்படுவீர்கள். தற்போது 6-ல் சஞ்சரிக்கக்கூடிய சுக்கிரன் இனி 7-ல் சஞ்சரிக்க இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். புதன், குரு 8-ல் சஞ்சரிப்பதால் பண விஷயத்தில் மட்டும் சற்று சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு இருக்கிறது என்றாலும் எதிலும் சற்று முன்னெச் சரிக்கையுடன் இருப்பது நல்லது. சூரியன், ராகு 7-ல் சஞ்சரிப்பதால் கூட்டாளிகளை அனுசரித்துசெல்வது மிகவும் சிறப்பு. வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபொழுது சற்று கவனத்தோடு இருப்பது உத்தமம். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் சிறப்பாக செயல்படக்கூடிய பலமும் மற்றவர்களால் முடிக்க முடியாத பணிகளைகூட நீங்கள் தலையிட்டு குறித்த நேரத்தில் முடிக்கக்கூடிய திறமையும் உங்களிடம் இருக்கும். பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண்களை எடுக்கக்கூடிய யோகம் இருக்கிறது. இந்த வாரத்தில் ஞாயிறு, வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் நீண்ட நாட்களாக செய்ய நினைத்த காரியத்தை தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது, குருபகவானுக்கு வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற வஸ்திரம் மற்றும் கொண்டகடலை மாலை கொண்டு வழிபாடு மேற்கொள்வது நன்மையைத் தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ஆம் வீட்டில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை அடையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இதுநாள்வரை உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட உங்களின் நல்ல பண்பை புரிந்துகொண்டு உங்களுடன் நட்புடன் பழகக்கூடிய சூழ்நிலை உண்டாகும். குரு, புதன் 7-ல் இணைந்து சஞ்சரிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி, எந்த ஒரு காரியத்திலும் மிகச் சாமர்த்தியமாக செயல்பட்டு அனுகூலங்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. நீண்டநாட்களாக தடைப்பட்ட மங்களகரமான சுப காரியங்கள் தற்போது கைகூடி மனமகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகள்வழியில் இருந்துவந்த மனக் கவலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறையும். தொழில், வியாபாரத்தில் உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைப்பது மட்டுமில்லாமல் தொழில் அபிவிருத்திக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் தற்போது வெற்றியை தரும். தொழில் வளர்ச்சிக்காக நவீனகரமான கருவிகளை வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பது மட்டுமில்லாமல் உங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைக்கும். உங்கள்மீது இருந்த பழிச் சொற்கள் எல்லாம் தற்போது குறையும். மாணவ- மாணவியர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவது மட்டுமில்லாமல் அவர்களுடைய திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய போட்டிகளில் பங்குபெற்று பரிசுகளை வெல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய நாட்கள் உங்களுக்கு நற்பலனை தரக்கூடிய நாட்களாக இருக்கும். மகாலட்சுமி வழிபாடு மேற்கொள்வது, விநாயகர் ஸ்தலங்களில் சூரைத் தேங்காய் உடைப்பது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

ராசியாதிபதி செவ்வாய்- சனி சேர்க்கைப்பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும். சுலபமாக முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும். இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் உண்டாகும். சூரியன், ராகு 5-ல் சஞ்சரிப்பதால் நெருங்கியவரிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடிய நேரம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடும் நிதானத்தோடும் இருப்பது நல்லது. உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இயற்கை உணவுகளை உட்கொள்வது நன்மை தரும். தொழில், வியாபாரத்தில் மிகவும் கவனத்தோடு செயல்படவேண்டிய நேரம் ஆகும். குரு, புதன் 6-ல் இருப்பதால் நீங்கள் நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றாக இருக்கும். எதிர்பார்க்கின்ற லாபங்கள் கிடைக்க இடையூறுகள் ஏற்படும். வேலையாட்களால் வீண் பிரச்சினைகள் உண்டாகலாம். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பது மட்டுமில்லாமல் ஓய்வுநேரம் குறையும். அலைச்சல் காரணமாக வீட்டில் மனைவி, பிள்ளைகளிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் நிதானத்தோடு செயல்படுவது, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. மாணவ- மாணவியர்கள் தேவையற்ற நட்புகளை தற்போதைக்கு குறைத்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நல்ல பெயர் எடுக்கமுடியும். உடனிருப்பவர்கள் உங்கள் மனதை மாற்ற முயற்சிப்பார்கள். கவனமாக இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளைத் தொடங்குவது, அசையும்- அசையா சொத்துகள் வாங்குவது போன்றவற்றில் அனுகூலம் உண்டாகும். உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வது முருகருக்கு அர்ச்சனை செய்வது நன்மை தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதி குரு- புதன் சேர்க்கை பெற்று பஞ்சம ஸ்தானமான 5-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக ஒரு சிறப்பான நிலையினை அடைவீர்கள். மற்றவர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எளிதில் நிறைவேற்றக்கூடிய பலமும் வலிமையும் உண்டாகும். பிள்ளைகள்வழியில் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடக்கும். உங்கள் வளர்ச்சிக்காக நீங்கள் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் தற்போது வெற்றியைத் தரும். உங்கள் ராசிக்கு 3-ல் சனி, செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சாமர்த்தியமாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான லாபங்கள் கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் தொழில்ரீதியாக இருக்கக்கூடிய போட்டிகளை எளிதில் சமாளிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு பணியில் ஒரு கௌரவமான நிலை உண்டாகும். அதிகாரியிடம் சற்று கவனத்தோடு நடந்துகொண்டால் வளமான பலன்களைப் பெறலாம். சூரியன், ராகு 4-ல் இருப்பதால் அலைச்சல்கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங்களைப் பெறுவீர்கள். வயது மூத்தவர்களிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையைக் கடைப்பிடிப்பது மிகமிக நல்லது. மாணவ- மாணவியர்கள் நல்ல மதிப் பெண்களைப் பெற்று பெற்றோர் மற்றும் ஆசிரியரிடம் நல்லபெயர் எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் நீண்டநாட்களாக செய்ய நினைத்த காரியத்தைத் தற்போது மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை அடைவீர்கள். காலபைரவரை வழிபாடு செய்வது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி சனி, செவ்வாய் சேர்க்கைபெற்று 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று கவனத்தோடும் பொறுமையோடும் இருக்கவேண்டிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, சிறு பாதிப்பு என்றாலும் அதற்கு முக்கியத்துவம் தருவது மிகவும் நல்லது. முடிந்தவரை தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ஆம் வீட்டில் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் ஒருசில அனுகூல மான பலன்கள் ஏற்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். இக்கட்டான நேரத்தில் தக்க உதவிகள் கிடைத்து உங்களின் பொருளாதார நெருக்கடி களை சமாளிக்கமுடியும். தொழில், வியாபாரத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கவனத்தோடு நடந்து கொண்டால்தான் நிலைமையை சமாளிக்கமுடியும். வேலையாட்களை நம்பாமல் சில நேரங்களில் நீங்களே நேரடியாக செயல்பட்டால்தான் இருக்கக் கூடிய பிரச்சினைகளைச் சமாளித்து அடையவேண்டிய லாபத்தை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு கூடுதலாக இருப்பதால் உடல் அசதி, ஓய்வுநேரம் குறையக்கூடிய சூழ்நிலை உண்டாகும். நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் அதிகாரி யிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் என்பதால் பேச்சில் சற்று பொறுமையோடு இருப்பது நல்லது. மாணவ- மாணவியர்கள் பொழுதுபோக்கு விஷயங் களைத் தவிர்த்துவிட்டு தற்போதைக்கு படிப்பில் கவனம் செலுத்தவேண்டிய நேரமாகும். இந்த வாரத்தில் ஞாயிறு, புதன், வியாழன் ஆகிய நாட்களில் நீங்கள் எதிலும் உற்சாகத்துடன் செயல்பட்டு நற்பலனை அடைவீர்கள். முருகப்பெருமானுக்கு அர்ச்சனைசெய்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச்செய்வது நன்மை தரும்

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ஜென்ம ராசியில் சனி, செவ்வாய், 2-ல் சூரியன், ராகு சஞ்சரிப்பதால் உங்களது முன்கோபத்தை குறைத் துக்கொண்டு எதிலும் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரமாகும். தேவையில்லாத அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் எதிலும் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. நம்பியவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை உண்டாக்குவார்கள். தொழில், வியாபாரத்தில் தேவையற்ற பிரச்சினைகள் அதிகரித்து மன அமைதி குறைவு உண்டாகும். வேலையாட்களால் வீண் நெருக்கடிகள் ஏற்படலாம். தற்போது கிடைக்கக்கூடிய சின்னசின்ன வாய்ப்பையும் உதாசீனப்படுத்தாமல் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் விரைவில் ஒரு நல்ல மாற்றங்கள் ஏற்படும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிப்பது மட்டுமில்லாமல் உடன்வேலை செய்பவர்களுடைய வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய ஒரு நெருக்கடியான நிலை இருக்கும். தற்போதைக்கு நீங்கள் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. ஒருசிலர் சொல்லக்கூடிய ஆசை வார்த்தைகளை நம்பி இருக்கும் வாய்ப்புகளை இழந்துவிட வேண்டாம். மாணவ- மாணவியர்கள் பெற்றோர் சொல்படி நடந்து கொள்வது, வீண் நட்புகளைக் குறைத்துக்கொள்வது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எந்த ஒரு காரியத்தில் ஈடுபட்டாலும் அதில் எதிர்பாராத அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. சரபேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது நன்மை தரும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

ராசியாதிபதி குருபகவான் புதன் சேர்க்கைபெற்று தன ஸ்தானமான 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் தாராளமாக இருந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அசையும்- அசையா சொத்துகளில் முதலீடு செய்யக் கூடிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள்வழியில் அனுகூல மான பலன்கள் ஏற்படும். சூரியன், ராகு ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் உணர்ச்சிவசப்படாமல் பொறுமையோடு இருப்பது நல்லது. கணவன்- மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்கமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என்றாலும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கவனத் தோடு செயல்படுவது நல்லது. சனி, செவ்வாய் 12-ல் சஞ்சரிப்பதால் வெளியாட்களிடம் பேசுகின்றபோது சற்று பொறுமையோடு இருப்பது, தேவையற்ற பயணங் களைத் தள்ளிவைப்பது மிகவும் நல்லது. உத்தியோகஸ் தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் திறமை களை வெளிக்காட்ட முடியும். புதிய வாய்ப்பு எதிர்பார்த்தவர் களுக்கு பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடிய நாட்களாக வருகின்ற நாட்கள் இருக்கும். மாணவ- மாணவியர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல மதிப்பெண் எடுப்பது மட்டுமில்லாமல் படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்ப்பார்கள். இந்த வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. லட்சுமிநரசிம்மரை வழிபாடு செய்வது, மகாலட்சுமிக்கு அர்ச்சனைசெய்வது நன்மை தரும்.