முனைவர் முருகுபாலமுருகன்
எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு, வடபழனி,
சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.
அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.
கிரக பாதசாரம்:
சூரியன்: பூராடம்- 1.
செவ்வாய்: மூலம்- 1.
புதன்: கேட்டை- 4 (வ).
குரு: அஸ்வினி- 4 (வ).
சுக்கிரன்: அனுஷம்- 2.
சனி: சதயம்- 1.
ராகு: ரேவதி- 4.
கேது: சித்திரை- 2.
கிரக மாற்றம்:
மார்கழி 15 (31-12-2023) குரு (வ) நிவர்த்தி (காலை 8.35).
மார்கழி 17 (2-1-2024) புதன் (வ) நிவர்த்தி (காலை 8.36).
சந்திரன் மாறுதல்
ஆரம்பம்- சிம்மம்.
2-1-2024 மாலை 6.28 மணிக்கு கன்னி.
5-1-2024 காலை 6.46 மணிக்கு துலாம்.
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)
மாதக் கோளான சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று 9-ல் சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் முழு ஈடுபாட்டோடு செயல்பட்டு வெற்றிமேல் வெற்றி அடைவீர்கள். உங்கள் ராசிக்கு ருண, ரோக ஸ்தானமான 6-ல் கேது சஞ்சரிப்பதும், ஒரு ராசியில் அதிககாலம் தங்கும் கிரகமான சனி 11-ல் சஞ்சரிப்பதும் சிறப்பான அமைப்பு என்பதால் உங்களின் பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து வாழ்க்கைத்தரம் உயரும். குருபார்வை 5, 7-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் திருமண வயது அடைந்த நபர்களுக்கு வரும் நாட்களில் மகிழ்ச்சிதரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பிள்ளைகள்வழியில் ஆதாயங்கள் ஏற்படக்கூடிய வாரமாகும். குடும்பத்துக்கு தேவையான நவீன பொருட்களை வாங்கக்கூடிய யோகம் ஏற்படும். நீண்டநாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வர்களுக்கு வரும் நாட்களில் உடலில் ஒரு நல்ல முன்னேற் றங்கள் ஏற்பட்டு எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் வருவாய் அதிகரிப்பதால் தொழில் வளர்ச்சிக்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு அமையும். அரசு அதிகாரி வழியில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் பெரிய ஆர்டர்களைகூட சிறப்பாக கையாண்டு சமுதாயத்தில் ஒரு நல்லபெயர் எடுக்க முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கி எல்லாம்கூட வரும் நாட்களில் கிடைக்கும். புதிதாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பெரிய நிறுவனத் தில் இருந்து அழைப்புவரும். அதிகாரிகள் ஆதரவு மிகச்சிறப்பாக இருப்பதால் பணியில் உங்களுக்கு இருந்த மன உளைச்சல்கள் குறையும். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். முருகப்பெருமானை வழிபடுவது, துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பழத்தில் தீபமேற்றுவது சிறப்பு.
ரிஷபம்
(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள் ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசி யாதிபதி சுக்கிரன் 7-ல் சஞ்சரிப்பதும், ராகு 11-ல் சஞ்சரிப்பதும் நல்ல அமைப்பு என்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை குறித்த நேரத்தில் காப்பாற்றும் பலம் ஏற்படும். குரு 12-ல் உள்ளதால் பொருளாதாரரீதியாக ஏற்ற- இறக்கமான நிலை இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் சில கிடைத்து நிலைமையை சமாளித்துவிடுவீர்கள். ஜென்ம ராசிக்கு 8-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் சிந்தித்து பேசுவதன்மூலமாக காரியத்தை சாதிக்க முடியும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது, இரவு பயணங்களைத் தவிர்ப்பது நன்று. கணவன்- மனைவி யிடையே விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். சனி 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் நீங்கள் வேலை யாட்களை அனுசரித்துசென்றால் நல்ல ஆதாயத்தை அடைய முடியும். மறைமுகப் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித் திறமையால் அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். வெளி யூர் தொடர்புகள்மூலம் நல்ல ஆதாயங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு எதிலும் திறமையோடு செயல்பட்டு நல்ல பெயர் எடுப்பீர்கள். மேலதிகாரிகளிடம் தேவைற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் நிதானத்துடன் வீண்வாக்கு வாதம் செய்யாமல் உங்கள் பணியில் கவனம் செலுத்தினால் நல்ல பெயர் எடுக்கமுடியும். உடன்வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் ஏற்படும். பணி நிமித்தமாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ளக்கூடிய நிலை உண்டாகும். இவ்வாரம் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் நீங்கள் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் சாதகமான பலனைப் பெறமுடியும். சிவவழிபாடு மேற்கொள்வது, உடல் ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகள் செய்வது சிறப்பு.
மிதுனம்
(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசிக்கு பாக்கிய ஸ்தானமான 9-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உண்டாகும். லாப ஸ்தானமான 11-ல் இதுவரை வக்ர கதியில் சஞ்சரித்த குரு இனி வக்ரநிவர்த்தி அடைந்து சஞ்சரிப்பதால் உங்கள் தேவைக்கேற்றவாறு தக்க நேரத்தில் பணவரவுகள் கிடைத்து அனைத்து விதமான பொருளாதார தேவைகளும் பூர்த்தியாகும். உங்கள் ராசிக்கு 4-ல் கேது, 7-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் தேவையில்லாத அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வண்டி, வாகனங்கள்மூலமாக வீண்செலவுகள் ஏற்படும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற கருத்து வேறு பாடுகள் ஏற்படும் நேரம் என்பதால் பேச்சில் பொறுமை யோடு இருப்பது நல்லது. எந்த செய-லும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையோடு செயல்பட்டால்தான் வீண் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். தொழில், வியாபாரத் தில் இருந்த மறைமுக போட்டி கள் விலகி மிகவும் அனுகூல மான பலன்களை பெறுவீர்கள். எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் சாமர்த்தியமாக செயல்பட்டு நிலைமையை சமாளித்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் கலந் தாலோசித்து செயல்பட்டால் ஏற்படும் தேவையற்ற பிரச்சினைகளை எளிதில் சமாளிக்க முடியும். வேலைக்கு செல்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து மனநிம்மதி ஏற்படும். மற்றவர்கள் பணியை இணைத்து செய்ய வேண்டிய ஒருநிலை இருந்தாலும் அதற்கான ஆதாயம் கிடைக்கும். பொதுவாக குடும்ப விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எதிர்பாராத வகையில் திடீர் பணவரவுகள் ஏற்பட்டு உங்களுக்கிருக்கும் நெருக் கடிகள் குறையும். படிக்கும் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கிதருவது, முருக வழிபாடு மேற்கொள்வ தன்மூலம் வளமான பலன்களை அடையமுடியும்.
கடகம்
(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)
உங்கள் ராசிக்கு உபஜெய ஸ்தானமான 6-ல் மாதக் கோளான சூரியன்- செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் பல்வேறு வளமான பலன்களை அடையும் வாய்ப்பு உண்டு. ஜென்ம ராசிக்கு 3-ல் கேது, 5-ல் சுக்கிரன் சஞ்சரிப்ப தால் பொருளாதாரரீதியாக அனுகூலங்கள் ஏற்படும். எடுத்த பணியை குறிப்பிட்ட நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 9-ல் ராகு இருப்ப தால் உங்களின் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். பெரிய மனிதர்களுடைய ஆதரவானது தக்க நேரத்தில் கிடைத்து கடந்த கால பிரச்சினைகள் எல்லாம் முடிவுக்கு வரும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு குடும்பத் தில் மங்களகரமான சுப காரியங்கள் சிறு தடைக்கு பின்பு கைகூடும். தொழில், வியாபார முன்னேற்றத் திற்காக நவீன கருவிகளை வாங்கும் வாய்ப்பு ஏற்படும். சந்தை சூழ்நிலை மிகவும் சாதக மாக இருப்பதால் உங்களது பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்து சிறப்பான லாபங்களை பெறுவீர்கள். கடந்த காலங்களில் வெளிநபர்களால் ஏற்பட்ட இடையூறுகள் எல்லாம் முழுமையாக விலகி நிம்மதியுடன் தொழில் செய்யமுடியும். வேலையாட்கள் உங்கள் சொல்படி கேட்டு சிறப்பாக செயல்படுவதால் பல்வேறு அனுகூலங் களை அடைவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு உங்கள் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். விரும்பிய இடம் மாற்றங்கள் கிடைத்து நிம்மதியுடன் பணிபுரியமுடியும். உங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகள் தற்போது கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வரும் புதன், வியாழன் ஆகிய நாட்களில் சந்திரன் சஞ்சாரம் சிறப்பாக இருப்பதால் அசையும்- அசையா சொத்துகள் வாங்கும் முயற்சிகளை மேற்கொண்டால் அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். மகாலட்சுமிக்கு நெய் தீபமேற்றி தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது, லட்சுமி நரசிம்மரை தரிசிப்பது மேன்மையை தரும்.
சிம்மம்
(மகம், பூரம். உத்திரம் 1-ஆம் பாதம்)
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதும் இதுவரை வக்ரகதியில் சஞ்சரித்த குரு இனி வக்ர நிவர்த்தி பெற்று 9-ல் சஞ்சரிப்பதும் அற்புதமான அமைப்பு என்பதால் மகிழ்ச்சிதரக்கூடிய இனிய நிகழ்வுகள் அரங் கேறும். ராசியாதிபதி சூரியன், புதனுடன் பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். உங்களின் நீண்டநாளைய முயற்சிகளுக்கு வரும் நாட்களில் அனுகூலமான செய்தி கிடைக்கும். மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடுவது மட்டுமில்லாமல் பிள்ளைகள்வழியில் இருந்த மனக் கவலைகள் எல்லாம் மறைந்து மன மகிழ்ச்சி ஏற்படும். உங்கள் ராசிக்கு 7-ல் சனி, 8-ல் ராகு சஞ்சரிப்ப தால் உடல்நலத்தில் கவனம் செலுத்து வது, இரவு பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்த்தை அடைவது மட்டு மில்லாமல் நீங்கள்போட்ட முதலீட்டைவிட அதிகப் படியான லாபங்களை அடைவீர்கள். அரசாங்கவழியில் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை வரும் நாட்களில் பெறமுடியும். தொழிலில் உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த வர்கள்கூட தற்போது உங்களின் நல்லபண்பை புரிந்து கொண்டு நட்பாக பழகும் சூழல் உண்டாகும். உத்தியோகஸ் தர்களுக்கு மிகவும் சிறப்பான காலம் என்று கூறினால் மிகையாகாது. அதிகாரிகள் ஆதரவு சிறப்பாக இருப்பதால் நல்லபெயர் எடுக்கமுடியும். நீண்டநாட்களாக வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்குகூட தற்போது திறமைக்கேற்ற உயர்வான இடத்திலிருந்து அழைப்பு வரும். பெண்கள் வழியில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மறக்க முடியாத மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய இனிய நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. முருகப்பெருமானை தரிசிப்பது, கந்த சஷ்டி கவசம் படிப்பது, ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
கன்னி
(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)
ஜென்ம ராசியில் கேது, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டிய நேரமாகும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையாக செயல்பட்டால்தான் தற்போது இருக்கக்கூடிய நிலையை சமாளிக்க முடியும். மாதக்கோளான சூரியன்- செவ்வாய் சேர்க்கை பெற்று 4-ல் சஞ்சரிப்பதால் இருப்பதை அனுபவிக்க இடையூறுகள் ஏற்படும். குரு 8-ல் சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 6-ல் சனி சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் பலம் உண்டாகும். தக்க நேரத்தில் உதவிகள் கிடைத்து உங்களது தேவைகள் பூர்த்தியாகும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் கவனமாக இருந்தால் ஆதாயம் அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்காது. சில விஷயங்களில் நீங்கள் சற்று கவனத்தோடு இருந்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். போட்டிகள் இருந்தாலும் உங்கள் தனி திறமையால் எதையும் எதிர்கொண்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். அதிக முதலீடுகளை ஈடுபடுத்தி செய்யும் செயல்களில் அவசரம் காட்டாமல் சற்று நிதானத் துடன் யோசித்து செயல்படுவது நல்லது. தொழில் விஷயங்களை வெளிநபர்களிடம் பேசாமல் இருப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலைப்பளு காரணமாக அலைச்சல், உடல் அசதி, ஓய்வு நேரம் குறையும் சூழல் ஏற்படும். அதிகாரியிடம் வீண்வாக்குவாதங்கள் செய்யாமல் உங்கள் பணியில் மட்டும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டால் நல்லபெயர் எடுக்கமுடியும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது, உடனிருப்பவர்களை அனுசரித்துசெல்வது நல்லது. இவ்வாரத்தில் புதன், வியாழன் ஆகிய நாட்களில் வளமான பலன்களை அடையக்கூடிய அதிர்ஷ்டங்கள் உண்டு. உங்கள் விருப்பங்கள் எளிதில் நிறைவேறும். சர்பேஸ்வரர் வழிபாடு மேற்கொள்வது, சிவன் ஸ்தலங்களுக்கு சென்றுவருவது நன்று.
துலாம்
(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன், செவ்வாய், 6-ல் ராகு சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கக்கூடிய உன்னதமான நேரமாகும். உங்கள் செயல்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதுடன் நீண்டநாட்களாக நீங்கள் எண்ணிய காரியங்களை வரும் நாட்களில் நிறைவேற்றமுடியும். கடந்த நான்கு மாதமாக வக்ரகதியில் சஞ்சரித்த குரு தற்போது வக்ரநிவர்த்தி அடைந்து 7-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிக மிக சிறப்பாக இருந்து உங்கள் கடன்களை அடைப்பது மட்டுமில்லாமல் சேமிக்கும் அளவிற்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். கடந்தகால மறைமுக எதிர்ப்புகள் குறையும் அமைப்பு, உங்களுக்கு இருந்த சிறுசிறு உடம்பு பாதிப்புகள் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படும் யோகம் ஏற்படும். குறிப்பாக உங்களுக்கு இருந்த மருத்துவச் செலவுகள் அனைத்தும் வரும் நாட்களில் குறையும். வெளியூர், வெளிமாநிலங்கள்மூலமாக எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுவீர்கள். சுக்கிரன் 2-ல் சஞ்சரிப்பதால் பெண்கள் வழியில் அனுகூலமான பலன்களை அடையமுடியும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றங்கள் இருப்பதுடன் தொழில் வளர்ச்சிக்காக நீங்கள் எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கக்கூடியநிலை, நவீன கருவிகளை வாங்கும் யோகம் ஏற்படும். சந்தை சூழ்நிலை சாதகமாக இருப்பதால் உங்களின் நீண்டநாளைய திட்டங்கள் எல்லாம் தற்போது நிறைவேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைப்பது மட்டுமில்லாமல் மனநிம்மதியுடன் பணிபுரியமுடியும். உடன்வேலை செய்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் விலகி சுமூகநிலை உண்டாகும். ஒருசிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைத்து மகிழ்ச்சி ஏற்படும். வரும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் உங்கள் எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் வாய்ப்புகளும், அசையா சொத்துகள்வகையில் அனுகூலங்களும் உண்டாகும். மகாவிஷ்ணுவை தரிசிப்பது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது ஏற்றத் தைத் தரும்.
விருச்சிகம்
(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)
உங்கள் ராசிக்கு 2-ல் சூரியன், செவ்வாய், சுகஸ்தானமான 4-ல் சனி சஞ்சரிப்பதால் தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும். உடல் உபாதைகள், பொருளாதார நெருக்கடிகள் நிலவும். குடும்பத்தில் நிம்மதி குறைவு, உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும் நேரமென்பதால் எதிலும் பொறுமையோடு செயல்படுவது உத்தமம். குரு உங்கள் ராசிக்கு 6-ல் சஞ்சரிப்பதால் எதிலும் எதிர்நீச்சல்போட வேண்டிய நேரமாகும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக மிகவும் கவனமாக செயல்படவேண்டும். பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது போன்றவற்றை தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. அசையா சொத்துவகையில் வீண்செலவுகளை எதிர்கொள்ள நேரிடும். தொழில், வியாபாரத்தில் மிகவும் நிதானத் தோடு செயல்படுவது நல்லது. பொருள் தேக்கங்கள் ஏற்பட்டு உங்களுக்கு வரவேண்டிய பணவரவில் தடங்கல்கள் உண்டாகும். வேலையாட்கள் வீண் இடையூறுகளை ஏற்படுத்துவதால் மன அமைதி குறையும். தொழில்ரீதியாக உங்களுடைய புதிய திட்டங்களைத் தற்காலிகமாக தள்ளிவைப்பது நல்லது. சில நேரங்களில் நீங்கள் நேரடியாக செயல்பட்டால்தான் தொழிலில் அனுகூலங்கள் ஏற்படும். வேலைக்கு செல்பவர்களுக்கு அதிகப்படியான வேலைப்பளு காரணமாக அலைச்சல், மன அமைதி குறைவு ஏற்படும். நீங்கள் கடினமாக வேலை செய்தாலும் நல்ல பெயர் எடுப்பதில் தடங்கல்கள், அதிகாரியிடம் தேவையற்ற மனஸ்தாபம் உண்டாக கூடிய நேரமாகும். எதிலும் சற்று பொறுமையோடு யோசித்து செயல்படுவது நல்லது. இவ்வாரம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் பிரதான கிரக சஞ்சாரம் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். சனிபகவானுக்கு எள் தீபமேற்றுவது, முருக வழிபாடு மேற்கொள்வது நல்லது.
தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)
வக்ரகதியில் சஞ்சரித்த ராசியாதிபதி குரு இனி வக்ரநிவர்த்தி பெற்று உங்கள் ராசிக்கு 5-ல் சஞ்சரிப்பதால் எந்த செயலிலும் சாமர்த்திய மாக செயல்பட்டு அடையவேண்டிய இலக்கை அடைவீர்கள். பணவரவுகள் மிகமிக நன்றாக இருந்து உங்களுடைய தேவைகள் பூர்த்தியாவது மட்டுமில்லாமல் வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம், நவீனப் பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். சனி 3-ல் சஞ்சரிப்பதால் இருக்கும் இடத்தில் உங்களது மதிப்பும், மரியாதையும் மேலோங்கும். நீங்கள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். சூரியன், செவ்வாய் ஜென்ம ராசியில் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக இருப்பது, கணவன்- மனைவியிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்துசெல்வது சிறப்பு. தொழில், வியாபாரத்தில் சந்தைநிலை மிகவும் சாதகமாக இருப்பதால் நீங்கள்போட்ட முதலீட்டை எடுத்துவிடமுடியும். தொழில் முன்னேற் றத்திற்காக நீங்கள் எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் தற்போது இருப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். வேலையாட்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பதால் புதிய ஆர்டர்களை எடுத்துக் குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்ய முடியும். அரசு அதிகாரிகளின் உதவியுடன் நீங்கள் எதிர்பார்த்த உத்தரவுகளை அடையமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பதவி ஒன்று கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் இவ்வாரத்தில் உண்டு. அதிகாரியிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் மறைந்து சுமூகமானநிலை ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வரும் புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் பொருளாதாரரீதியாக எதிர்பாராத அனுகூலங்கள், உங்கள் செயல்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது, சிவவழிபாடு மேற்கொள்வது சிறப்பு.
மகரம்
(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12-ஆம் வீட்டில் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதாலும், சனி 2-ல் சஞ்சரித்து ஏழரைச்சனி நடப்பதாலும் எதிலும் சிந்தித்து செயல்படவேண்டிய நேரமாகும். உடல் ஆரோக்கியரீதியாக பாதிப்புகள், உடனிருப்பவர்களே உங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தக்கூடிய நிலை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் மற்றவர்கள் தவறாக எடுத்துக்கொள்வார்கள். உடன் பிறந்த வர்களை அனுசரித்துச் செல்வது, பொதுவாக முன்கோபத்தை குறைத்துக் கொள்வது தற்போதைக்கு நல்லது. பொருளாதாரரீதியாக நெருக்கடிகள் ஏற்படும். ஆடம்பரச் செலவுகளை குறைக்காவிட்டால் கடன்வாங்க நேரிடும். உங்கள் கையிருப்புகொண்டு செலவுசெய்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தேவையற்ற இடையூறுகள் ஏற்படும். சில இடைத்தரகர்கள் செய்யக்கூடிய செயல்களால் உங்களுக்கு கிடைக்கவேண்டிய நல்லவாய்ப்புகள்கூட தட்டிப்போகும். 11-ல் சுக்கிரன் சஞ்சரிப்பதால் கிடைக்கும் சிறுவாய்ப்பாக இருந்தாலும் தற்போதைக்கு பயன்படுத்திக்கொண்டால் விரைவில் நல்லநிலையை அடையமுடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்காலிகமாக தள்ளிவைக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக ஓய்வுநேரம் குறையும் நிலை, உடல் அசதி ஏற்படும். உங்கள் பணியில் மட்டும் கவனமாக இருந்துவிட்டு மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. இந்த வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் தேவையற்ற அலைச்சல், வீண் மனகுழப்பம் ஏற்படும். வரும் வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பிரதான கிரகங்கள் சாதகமற்று இருந்தாலும் சந்திரன் அனுகூலமாக சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் மேன்மை உண்டாகும். பூர்வீக சொத்து ரீதியாக உள்ள வம்பு, வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிந்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். சூரிய நமஸ்காரம் செய்வது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
கும்பம்
(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள் சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)
உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11-ல் சூரியன், செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் உங்கள் சக்திக்கு மீறிய வீண்செலவுகள் ஏற்படும் என்பதால் ஆடம்பரத்தை சற்று குறைத்துக்கொண்டு சிக்கனத் தோடு செயல்படுவது நல்லது. ராகு 2-லும், ஆண்டு கோளான குரு 3-லும் சஞ்சரிப்பதால் எந்த ஒரு செயலிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, குடும்ப உறுப்பினர்களின் ஆரோக் கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது நல்லது. புதன், சுக்கிரன் 10-ல் சஞ்சரிப்பதால் தொழில், வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் போட்ட முதலீட்டை எடுக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை தக்கமுறையில் பயன்படுத்திக் கொண்டால் தற்போதைய நிலையினை சமாளித்துவிட முடியும். அதிக முதலீடுகள்கொண்ட செயல்களைத் தற்சமயத்துக்கு தள்ளிவைப்பது உத்தமம். தொழில் தொடர்பாக அரசு அதிகாரியிடம் பேசுகின்றபொழுது சிந்தித்துப் பேசுவது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு கூடுதல் வேலை பளுவுடன் அலைச்சல் காரணமாக இருப்பதை அனுபவிக்க இடைஞ்சல்கள் ஏற்படும். உங்கள் பணியில் நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் தேவையில்லாத அவப்பெயர்களை எதிர்கொள்வீர்கள். பிறர் சொல்வதைக் கேட்காமல் உங்கள் பணியில் மட்டும் ஜாக்கிரதையாக செயல்படுவது நல்லது. வரும் ஞாயிறு, திங்கள் ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்ப தால் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடந்து அதன் மூலம் உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வரும் செவ்வாய் மாலை, புதன், வியாழன் ஆகிய நாட்களில் தேவையற்ற நெருக்கடிகள், எதிலும் நிம்மதியற்ற நிலை ஏற்படும். தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபமேற்றுவது, துர்க்கையம்மனுக்கு அர்ச்சனை, அபிஷேகம் செய்துவருவது நல்லது.
மீனம்
(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)
உங்கள் ராசியாதிபதி குரு வக்ர நிவர்த்தி பெற்று 2-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் சாதகமாக இருந்து அனைத்துவிதமான தேவைகளும் பூர்த்தியாகும். சூழ்நிலைக்கு தக்கவாறு சிறப்பாக செயல்பட்டு எதையும் எதிர்கொள்ளக்கூடிய பலம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் ராசிக்கு ஜீவன ஸ்தானத்தில் மாத கோளான சூரியன், செவ்வாய் சேர்க்கைப்பெற்று சஞ்சரிப்பதால் எதிர்பாராதவகையில் ஆதாயங்களை அடையும் யோகம் உண்டு. தொழில், வியாபாரத்தில் சிறப்பாக செயல்பட்டு அடைய வேண்டிய இலக்கை அடையமுடியும். கடந்த காலங்களில் உங்களுக்கு இருந்த பொருள் தேக்கங்கள் எல்லாம் தற்போது விலகி சந்தைநிலை சாதகமாக மாறி லாபங்களை ஈட்டுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பது மட்டுமில்லாமல் உடன் வேலை செய்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக செயல்படுவார்கள். நீண்டநாட்களாக வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு தற்போது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும். இவ்வாரம் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் உங்கள் ராசியில் ராகு சஞ்சரிப்பதால் முன்கோபத்தைக் குறைத்துகொண்டு பேச்சில் பொறுமையோடு இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கான முயற்சிகளைத் தற்போது மேற்கொண்டால் நல்லசெய்தி கிடைக்கும். பிள்ளைகள்வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய நேரமாகும். உங்களுக்கு இருந்த கடந்தகால உடல் உபாதைகள் எல்லாம் விலகி எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இவ்வாரத்தில் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் உங்கள் வாழ்வில் புதிய மாற்றங்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் அதிகம். வரும் வெள்ளி, சனிக்கிழமைகளில் உங்களுக்கு வீண்குழப்பங்கள், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகும் நிலை நிலவும். துர்க்கையம்மனை வழிபடுவது, விநாயகர் வழிபாடு மேற்கொள்வது, பாம்பு புற்றுக்கு பால்விடுவது சிறப்பு.