முனைவர் முருகுபாலமுருகன்

எண்: 19/33, வடபழனி ஆண்டவர் கோவில் தெரு,

வடபழனி, சென்னை 600 026. தமிழ்நாடு, இந்தியா. தொலைபேசி: 044 24881038, 2483 9532.

அலைபேசி: 0091 72001 63001, 93837 63001.

Advertisment

கிரக பாதசாரம்:

சூரியன்: சுவாதி- 2.

செவ்வாய்: மிருகசீரிடம்- 3.

Advertisment

புதன்: சித்திரை- 4.

குரு: உத்திரட்டாதி- 1 (வ).

சுக்கிரன்: சுவாதி- 3.

dd

சனி: அவிட்டம்- 1.

ராகு: பரணி- 2.

கேது: சுவாதி- 4.

கிரக மாற்றம்:

ஐப்பசி 13 (30-10-2022) செவ்வாய் வக்ர ஆரம்பம் (மாலை 6.44).

சந்திரன் மாறுதல்:

ஆரம்பம்- தனுசு.

31-10-2022 பகல் 11.23 மணிக்கு மகரம்.

2-11-2022 பகல் 2.15 மணிக்கு கும்பம்.

4-11-2022 மாலை 6.20 மணிக்கு மீனம்.

மேஷம்

(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 7-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும். 12-ல் சஞ்சரிக்கும் குரு வக்ரகதியில் இருப்பதால் மங்களகரமான சுபகாரியங்கள் கைக்கூடி மகிழ்ச்சி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பலமேற்படும். பொருளாதாரநிலை திருப்திகரமாக இருந்து உங்கள் அனைத்து தேவைகளையும் எளிதில் பூர்த்திசெய்ய முடியும். ராசியாதிபதி செவ்வாய் 3-ல் இருப்பதால் சாமர்த்தியமாக செயல்பட்டு கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் வேலையாட்களால் சிறுசிறு நெருக்கடிகள் இருந்தாலும் எடுத்த ஆர்டர்களை வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் டெலிவரி செய்வீர்கள். கூட்டாளிகளைக் கலந்தாலோசித்து செயல்பட்டால் சிறுசிறு இடர்ப்பாடுகளை சமாளிக்கமுடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக நெருக்கடிகள் இருந் தாலும், அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். ஜென்ம ராசியில் ராகு, 7-ல் கேது, சூரியன் சஞ்சரிப்பதால் குடும் பத்தில் ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும் நேரமென்பதால் கணவன்- மனைவி வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, நெருங்கியவர்களை அனுசரித்துச் செல்வது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் எந்த செயலில் ஈடுபட்டாலும் பரிபூரணமான வெற்றி கிடைக்கும். துர்க்கை வழிபாடு, சிவன் தலங் களுக்குச் சென்றுவருவது நன்மை தரும்.

ரிஷபம்

(கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள், ரோகிணி, மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 6-ல் சூரியன், கேது சஞ்சரிப்ப தால் எதிர்நீச்சல் போட்டாவது இலக்கை அடையும் யோகமுண்டாகும். எதிலும் தைரியத்தோடு செயல்பட்டு அனுகூலங்களை அடைவீர்கள். ராசிக்கு 9-ல் சனி சஞ்சரிப்ப தால் வெளியூர் தொடர்புகள்மூலமாக ஆதாயங்களைப் பெறமுடியும். செவ்வாய் 2-ல் சஞ்சரிப்பதால் பேச்சில் சற்று பொறுமையுடன் இருப்பது நன்மை தரும். குடும்பத்திற்குத் தேவையான நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். நீண்டநாட்களாக இருந்த மறைமுக எதிர்ப்புகள் மறைந்து மனமகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுகூலமான செய்தி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நவீன யுக்திகளைக் கையாண்டு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். வேலையாட்களுடைய ஒத்துழைப்பானது திருப்திகரமாக இருக்கும். தொழில்ரீதியாக தற்போதுள்ள சட்டச் சிக்கல்கள் விலகி நிம்மதியுடன் பணிபுரியமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறமைக்கேற்ற நல்ல வாய்ப்பு வரும் நாட்களில் கிடைக்கும். சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பதால் கடினமான பணிகளைக்கூட எளிதில் செய்துமுடிக்க முடியும். நிலுவையிலிருந்த சம்பள பாக்கிகள் தற்போது கிடைக்கப்பெறுவதால் கடந்தகால நெருக்கடிகள் யாவும் விலகி மனமகிழ்ச்சி உண்டாகும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் பல்வேறு வளமான பலன்களை அடையும் யோகமுண்டு. துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் நெய்தீபமேற்றுவது, மகாவிஷ்ணு வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

மிதுனம்

(மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள், திருவாதிரை, புனர் பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சுக்கிரனுடன் 5-ல் சஞ்சரிப்பதால் பணவரவுகள் மிகச்சிறப்பாக இருந்து மனநிம்மதி உண்டாகும். ராகு லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாராத உதவிகள் கிடைத்து குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றும் பலமுண்டாகும். ராசிக்கு 8-ல் சனி, 5-ல் சூரியன், கேது சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது நல்லது. முடிந்தவரை இரவுப் பயணங்களைத் தள்ளிவைப்பது உத்தமம். தொழில், வியாபாரத்தில் பிறர் பார்த்து வியக்குமளவிற்கு சிறப்பாக செயல்பட்டு நல்ல லாபத்தை அடைவீர்கள். குரு வக்ரகதியில் இருப்பதால் கொடுக்கல்- வாங்கல்ரீதியாக கடந்தகால சங்கடங்கள் விலகி லாபகரமான பலன்களைப் பெறுவீர்கள். வேலையாட்கள் நெருக்கடிகளை ஏற்படுத்தி னாலும் கூட்டாளிகள் உறுதுணையாக இருப்பதால் எதையும் எதிர்கொள்ளமுடியும். ஜென்ம ராசியில் செவ்வாய் சஞ்சரிப்பதால், சில நேரங்களில் உங்களது முன்கோபத்தைக் குறைத் துக்கொண்டால் அனுகூல மான பலன்களை அடைய லாம். வேலைக்குச் செல்பவர் களுக்கு பணியில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களால் முடிக்கமுடியாத பணிகளைக்கூட நீங்கள் சிறப் பாக செய்துமுடித்து நல்லபெயரை எடுக்க முடியும். ஞாயிறு, சனி ஆகிய நாட்களில் எந்த செயலில் ஈடுபட்டாலும் சிறப்பான பலன்களை அடையமுடியும். முருக வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவி களைச் செய்வது நன்மை தரும்.

tt

கடகம்

(புனர்பூசம் 4-ஆம் பாதம், பூசம், ஆயில்யம்)

ராசிக்கு 4-ல் சூரியன், கேது, 12-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. தேவையற்ற அலைச்சல், இருப்பதை அனுபவிக்க இடையூறுகள், வரவுக்குமீறிய செலவுகள் ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத் தோடு செயல்படவேண்டிய நேரமாகும். ராசிக்கு 7-ல் சனி சஞ்சரிப்பதால் கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், மன நிம்மதிக் குறைவுகள் உண்டாகும். விட்டுக் கொடுத்துச் செல்வதன்மூலம் தேவையற்ற நெருக்கடி களைக் குறைக்கலாம். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், இவ்வாரத்தில் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்ப தால் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து எதையும் சமாளிக்கும் பலமுண்டாகும். தொழில், வியாபாரத்தில் காலநேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும். கூட்டாளிகளால் தேவை யற்ற நெருக்கடிகள் ஏற்படலாமென்பதால் முக்கிய விஷயங்களை அவர்களிடம் கலந் தாலோசித்துச் செய்வது நல்லது. அதிக முதலீடுகள்கொண்ட செயல்களில் எச்சரிக்கையுடன் செயல் பட்டால்தான் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக ஓய்வுநேரம் குறையும். உங்கள் உழைப்புக்கான பலனை அடைவதில் தடங்கல்கள் ஏற்படும். ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, முருக வழிபாடு மேற்கொள்வது நன்மை தரும்.

சிம்மம்

(மகம், பூரம், உத்திரம் 1-ஆம் பாதம்)

ராசியாதிபதியான சூரியன் 3-ல் சஞ்சரிப்பதும், ராசியில் சனி 6-ல் வலுவாக சஞ்சரிப்பதும், லாப ஸ்தானத் தில் செவ்வாய் சஞ்சரிப்பதும் மிகவும் அற்புத மான அமைப்பென்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். உங்கள் வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்வுகள் அரங்கேறும். பொருளாதாரரீதியாக மிகச்சிறப்பான பலன்கள் ஏற்பட்டு நவீனகரமான பொருட்களை வாங்கக்கூடிய வாய்ப் புண்டாகும். ஒரு சிலருக்கு வீடு, மனை வாங்கும் நீண்டநாளைய ஆசைகள்கூட தற்போது கைகூடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. தொழில், வியாபாரத்தில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படுமளவுக்கு உயர்வான நிலையை எட்டுவீர்கள். அரசுவழியில் எதிர்பார்த்த உத்தரவுகள் கிடைத்து தொழிலை அபிவிருத்தி செய்யும் யோகமுண்டாகும். கடந்த காலங்களில் நீங்கள் செய்த பணிக்கான சன்மானங் கள் தற்போது கிடைத்து, உங்களுக்குள்ள கடன் பிரச்சினைகள் குறையக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள்கூட தற்போது உங்களின் நல்ல பண்பைப் புரிந்துகொண்டு நட்போடு பழகும் நிலை உண்டாகும். வேலைக்குச் செல்பவர்களுக்கு மிக உயரிய பதவி உயர்வை எட்டக்கூடிய யோகமும், கடந்தகால வேலைப்பளு குறையக்கூடிய அதிர்ஷ்டமும் வரும் நாட்களில் உண்டு. குடும்பத்தில் மங்களகரமான சுபகாரியங்கள் கைகூடும் வாய்ப்புண்டாகும். திங்கள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்கள் மிகவும் சாதகமான பலன்களை ஏற்படுத்தக்கூடிய நாட்களாக இருக்கும். அஷ்டலட்சுமி வழிபாடு, தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றுவது நன்மை தரும்.

கன்னி

(உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்)

ராசியாதிபதி புதன், சுக்கிரன் சேர்க்கை பெற்று தன ஸ்தானமான 2-ல் வலுவாக சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். செவ்வாய் 10-ல் இருப்பதால் இருக்குமிடத்தில் கௌரவமான நிலை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக ஒருசில ஆதாயங்களைப் பெறமுடியும். ராசிக்கு 2-ல் சூரியன், கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் குடும்பத்தில் சிறுசிறு ஒற்றுமைக் குறைவுகள் ஏற்படும். கணவன்- மனைவி பேச்சில் பொறுமையோடு இருப்பது, உடனிருப்பவர்களை அனுசரித்துச்செல்வது நல்லது. குரு 7-ல் சஞ்சரித்தாலும் வக்ரகதியில் இருப்பதால் பணவிஷயத்தில் சிக்கனத்தோடு இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் ஒவ்வொரு செயலிலும் பொறுமையாக செயல்பட்டால் இலக்கை அடையமுடியும். வேலையாட்கள்மூலமாக சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளித்து எடுத்த பணியை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். எந்திரங்களை பழுது பார்ப்பதன் காரணமாக செலவுகள் ஏற்படலாம். பணப் பரிமாற்ற விஷயங்களில் கவனத்தோடு செயல்பட்டால் சிறப்பான ஆதாயத்தை அடையமுடியும். உத்தியோகரீதியாக நீங்கள் சிறப்பாக செயல்பட்டாலும் உடன் வேலைசெய்பவர்கள் உங்கள்மீது பழிச்சொற்களைச் சொல்வார்கள். பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது, அதிகாரியிடம் வாக்குவாதங்கள் செய்யாமலிருப்பது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப் பாக இருப்பதற்கு உணவு விஷயத்தில் கட்டுப்பாடோடு இருப்பது உத்தமம். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் சந்திரன் சாதகமாக சஞ்சரிப்பதால் நீங்கள் நினைத்த தெல்லாம் நடக்கும். துர்க்கையம்மனுக்கு ராகு காலத்தில் குங்குமத்தால் அர்ச்சனைசெய்வது, சூரிய நமஸ்காரம் மேற்கொள்வது நன்மை தரும்.

துலாம்

(சித்திரை 3, 4-ஆம் பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்)

சூரியன், கேது ஜென்ம ராசியில் சஞ்சரிப்பதால் எதிலும் சற்று பொறுமையோடு செயல்படுவது நல்லது. உங்கள் ராசிக்கு 4-ல் சனி, 7-ல் ராகு சஞ்சரிப்பதால் பொருளாதார நெருக்கடிகள், எளிதில் முடியவேண்டிய காரியங்கள் தாமதமாகக்கூடிய நிலை உண்டாகும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது, பிறர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம். உடனிருப்பவர்களே உங்களது மன அமைதியைக் குறைப்பார்கள். எதிர்பார்த்த பணவரவுகள் தக்கநேரத்தில் வராத காரணத்தினால் மற்றவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றமுடியாது. உங்கள் ராசியில் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதாலும், 6-ல் சஞ்சரிக்கும் குரு தற்போது வக்ரகதியில் இருப்பதாலும் ஒருசில எதிர்பாராத உதவிகள் கிடைத்து அதன்மூலம் நெருக்கடிகளை எதிர்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத்தில் சற்று கவனத் தோடு செயல்பட்டால் ஆதாயங்களை அடையமுடியும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் எடுத்த ஆர்டர்களைக் குறித்த நேரத்தில் டெலிவரி செய்யமுடியும். வேலைக்குச் செல்பவர்களுக்கு வேலைப்பளு அதிகப்படியாக இருக்கும் நேரமாகும். வீண் பேச்சைக் குறைத்துக்கொண்டு உங்கள் பணியில் மட்டும் கவனத்தோடு இருப்பது நல்லது. வாகனங்கள் மூலமாக சுபச்செலவு ஏற்படும். ஞாயிறு, திங்கள், சனி ஆகிய நாட்களில் எதிர்பாராத அனுகூலங் கள் ஏற்படும். சனிபகவானுக்கு எள் தீப மேற்றுவது, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, பாம்புப் புற்றுக்குப் பால்விடுவது நன்மை தரும்.

விருச்சிகம்

(விசாகம் 4-ஆம் பாதம், அனுஷம், கேட்டை)

உங்கள் ராசிக்கு சனி 3-ல், ராகு 6-ல் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் மிகவும் அனுகூலமான பலன்களைப் பெறுவீர்கள். பொருளாதாரரீதியாக தாராள தன வரவுகள் ஏற்பட்டு பல்வேறு வளமான பலன்களைப் பெறக்கூடிய யோகமுண்டு. குரு பார்வை ஜென்ம ராசிக்கு இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய நிகழ்வுகள் நடக்கும். பூர்வீகச் சொத்துவழியில் சாதகமான பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது, இரவுப் பயணங்களைத் தவிர்ப்பது நன்மை தரும். வயது மூத்தவர்களிடம் வாக்குவாதங்களைக் குறைப்பது நல்லது. சிலருக்கு உறவினர்கள் மூலமாக தேவையற்ற நெருக்கடிகள் ஏற்படும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் சந்தைச் சூழ்நிலை சாதகமாக இருப்பதால் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். திறமைவாய்ந்த வேலையாட்கள் கிடைப்பதால் தொழிலை அபிவிருத்தி செய்யமுடியும். கடந்தகால வம்பு, வழக்குகள் படிப்படியாகக் குறைந்து மனநிம்மதி உண்டாகும். உத்தியோகரீதியாக சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு பெரிய நிறுவனத் திலிருந்து அழைப்புவரும் நேரமாகும். திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்கள் உங்களுக்கு எதிர்பாராத அனுகூலத்தைத் தரும் இனிய நாட்களாக இருக்கும். சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது, செவ்வாய்க் கிழமை விரதமிருந்து முருக வழிபாடு செய்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற்கொள்வது வளமான பலன்களைத் தரும்.

தனுசு

(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம்)

உங்கள் ராசிக்கு 11-ல் சூரியன், சுக்கிரன், புதன், கேது சஞ்சரிப்பதால் சகலவிதத்திலும் ஏற்றமிகுந்த பலன்களைப் பெறுவீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவிருப்பதால் பல நாட்களாகத் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்குத் தற்போது நல்ல முடிவு கிடைக்கும். நவீனகரமான பொருட்களை வாங்கும் வாய்ப்புண்டாகும். பணவரவுகள் தாராளமாக இருப்பதால் கடன் தொல்லைகளைக் குறைத் துக்கொள்ளமுடியும். தொழில், வியாபாரத் தில் கடந்தகாலங்களில் நிலவிய தேக்கநிலை மாறி, தற்போது லாபகரமான நிலையினை எட்டமுடியும். கொடுக்கல்- வாங்கல்ரீதியாக நல்ல லாபத்தை அடையலாம். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைப்பதால் தொழிலை எளிதில் அபிவிருத்தி செய்யமுடியும். தற்போது மேற்கொள்ளும் தொழில் முயற்சிகள் எதிர் கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடந்தகால வேலைப்பளு குறைந்து சுமூகமான சூழ்நிலை உண்டாகும். நிம்மதியுடன் பணி புரியமுடியும். ராசிக்கு 2-ல் சனி, 7-ல் செவ்வாய் சஞ்சரிப்பதால் பேச்சில் பொறுமை காப்பது, உடனிருப்பவர்களிடம் வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் தேக ஆரோக்கியத்திற்கும், குடும்ப உறுப்பினர் களின் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் தருவது உத்தமம். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் மறக்கமுடியாத இனிய நிகழ்வுகள் நடக்கும். ஆஞ்சனேயர் வழிபாடு, உடல் ஊனமுற்றவர்களுக்கு முடிந்த உதவிசெய்வது, முருகனுக்கு விரத மிருப்பது நல்லது.

மகரம்

(உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்)

உங்கள் ராசிக்கு 6-ல் செவ்வாய், 10-ல் சூரியன் சஞ்சரிப்பதால் உங்களுக்குள்ள நெருக்கடிகள் எல்லாம் பகலவனைக்கண்ட பனிபோல படிப்படியாகக் குறைந்து சிறப் பான பலன்களைப் பெறுவீர்கள். எந்த எதிர்ப்பையும் எதிர்கொண்டு சமுதாயத்தில் கௌரவமான நிலையினை அடைவீர்கள். ராசிக்கு 9, 10-க்கு அதிபதியான புதன், சுக்கிரன் சேர்ந்திருப்பதால் சிறப்பான தர்ம கர்மாதிபதி யோகம் ஏற்பட்டிருப்பதால், பொருளாதாரநிலை சிறப்பாக இருந்து குடும்பத்தேவைகள் அனைத்தும் பூர்த்தி யாகும். ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் குரு தற்போது வக்ரகதியில் இருப்பதால் எதிர்பாராத அனுகூலங்களைப் பெறுவீர்கள். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப் பாக இருக்கும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். பிறருக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றமுடியும். தொழில், வியாபாரத்தில் கடந்தகால நெருக் கடிகள் விலகி நல்ல லாபத்தை ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குறிப்பாக பொருட் தேக்கங்கள் விலகி உங்கள் பொருட்களுக்கு நல்லவிலை கிடைக்கும். ஏழரைச்சனியில் ஜென்மச்சனி நடப்பதால் அதிக முதலீடுகள் கொண்ட செயல்களில் சற்று பொறுமை யோடு இருப்பதும், உடல்நலத்தில் கவனம் செலுத்துவதும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் அதற்கான ஆதாயங்கள் கிடைக்கும். செவ்வாய், புதன், சனிக்கிழமை களில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி களுக்குப் பரிபூரணமான வெற்றி கிடைக்கும். சனிபகவானுக்கு எள்தீபம் ஏற்றுவது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள்வது கெடுதியைக் குறைக்கும்.

கும்பம்

(அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்)

ராசிக்கு 3-ல் ராகு, 9-ல் சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும். எந்தப் பிரச்சினைகளையும் உங்கள் தனித்திறமையால் எளிதில் சிறப்பாகக் கையாண்டு ஏற்றங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியமானது சிறப்பாக இருப்பதால் எதிலும் சுறு சுறுப்பாக செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட வர்களுக்கு தற்போது உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருந்து தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளமுடியும். குரு பார்வை 10-ஆம் வீட்டிற்கு இருப்பதால் தொழில், வியாபாரத்தில் சற்று கவனத் தோடு செயல்பட்டால் லாபத்தை அடையமுடியும். வேலையாட்கள் சிறுசிறு இடையூறுகளை ஏற்படுத்தினாலும், நீங்கள் சிறப்பாக செயல்பட்டு அனைத்தையும் எளிதில் சமாளித்துவிடுவீர்கள். வெளியூர் தொடர்புகள்மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வாகனங்கள்மூலமாக சுபச்செலவுகள் ஏற்படலாம். வேலைக்குச் செல்பவர்களுக்கு உங்கள் திறனைக் காட்ட நல்ல வாய்ப்புகள் அமையும். பிறரால் முடிக்கமுடியாத பணிகளை நீங்கள் தலையிட்டு குறித்த நேரத்தில் செய்துமுடிப்பீர்கள். ஞாயிறு, புதன், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அதில் எதிர்பார்த்ததைவிட சிறப்பான பலன்களை அடையமுடியும். வேங்கடேசப் பெருமாளை தரிசிப்பது, ஆஞ்சனேயர் வழிபாடு மேற்கொள் வது, சிவன் தலங்களுக்குச் சென்றுவருவது கெடுதியைக் குறைக்கும்.

மீனம்

(பூரட்டாதி 4-ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

உங்கள் ராசிக்கு 4-ல் செவ்வாய், 8-ல் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சரிப்பதால் தேவையில்லாத நெருக்கடிகள் ஏற்படும். அலைச்சல் காரணமாக மன அமைதி குறையும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது, முடிந்தவரை மற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய நேரமாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருந்தால்தான் அஜீரணக் கோளாறு களைத் தவிர்க்கமுடியும். சக்திக்குமீறிய செலவுகள் ஏற்படுவதால் கையிருப்பு குறையும். ஆறுதல் தரக்கூடிய விஷயம் என்னவென்றால், உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனி சஞ்சரிப்பது நல்ல அமைப்பென்பதால், எவ்வளவு நெருக்கடிகள் இருந்தாலும் அவற்றைத் திறமையுடன் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வேலையாட்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருப்பதால் தொழில் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் குறித்த நேரத்தில் செய்துமுடிக்க முடியும். சட்டரீதியாக சிறுசிறு சிக்கல்கள் ஏற்படக்கூடிய நேரமென்பதால் தொழில் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியில் நெருக்கடி கள் இருந்தாலும் அதற்கான ஆதாயங் களைப் பெறுவீர்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பதன்மூலம் அலைச்சல்கள் குறையும். ஞாயிறு, திங்கள், செவ்வாய், சனிக்கிழமை களில் நீங்கள் நினைத் ததை நிறைவேற்றக் கூடிய பலம் உண்டாகும். சூரிய நமஸ்காரம் செய்வது, அஷ்டலட்சுமி வழிபாடு மேற் கொள்வது நன்மை தரும்.